உலகச் செய்திகள்


பாகிஸ்தானில் தலிபன்களின்களின் தற்கொலை தாக்குதலில் மாணவர்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்டோர் பலி


மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு பழிதீர்க்க பாடசாலையில் தலிபான்கள் தாக்குதல்? 

பாகிஸ்தானில் தலிபன்களின்களின் தற்கொலை தாக்குதலில் மாணவர்கள் உட்பட 100 ற்கும் மேற்பட்டோர் பலி

16/12/2014 பாகிஸ்தான் - பெஷாவர் நகரிலுள்ள பாடசாலையொன்றில் தலிபான் இயக்கத்தினர் மேற்கொண்ட தற்கொலை  தாக்குதலில்  80 மாணவர்கள் உட்பட 100ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்த தாக்குதலில் 40 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு பொறுப்பேற்றுள்ளமை குறிப்பித்தக்கது.







நன்றி வீரகேசரி 






மலாலாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டதற்கு பழிதீர்க்க பாடசாலையில் தலிபான்கள் தாக்குதல்?

பாகிஸ்­தானின் பெஷாவர் நக­ரி­லுள்ள இரா­ணுவ பொது பாட­சாலை மீது தாக்­குதல் நடத்­திய தெக்ரீக் – ஈ- தலிபான் போரா­ளிகள், தமது போராளி குழு­விற்கு எதி­ரான அர­சாங்கப் படை­யி­னரின் தாக்­கு­தல்­க­ளுக்கு பழி தீர்க்கும் முக­மா­கவே அந்த தாக்­கு­தலை நடத்­தி­ய­தாக தெரி­வித்திருந்­த­னர்.
இந்­நி­லையில் தலிபான் போரா­ளிகள் தொடர்­பாக நிபு­ணத்­துவம் பெற்ற அஹ்மெட் ரஷீட் என்ற கல்­வி­யி­ய­லாளர், போரா­ளிகள் அந்தப் பாட­சா­லையின் மீது தாக்­கு­தலை மேற்­கொண்­ட­தற்கு பல கார­ணங்கள் உள்­ள­தா­கவும், அவற்றில் ஒன்­றாக பாகிஸ்­தா­னிய சிறுமிமலாலா­வுக்கு சமா­தா­னத்­துக்­கான நோபல் பரிசு வழங்­கப்­பட்டமை உள்­ள­தா­கவும் கூறு­கிறார்.
பாகிஸ்­தானில் பெண்­களின் கல்­வியை வலி­யு­றுத்தி பிர­சார நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­ட­தற்­காக 2012 ஆம் ஆண்டு பாட­சாலை பஸ்ஸில் வைத்து மலாலா தலிபான் போரா­ளி­களால் சுடப்­பட்­டி­ருந்தார்.
இந்த தாக்­கு­தலில் படு­காயம் அடைந்த நிலையில் உயிர்தப்­பிய மலாலா­வுக்கு, அவர் பெண்கள் கல்­விக்கு ஆற்­றிய பணிக்­காக அண்­மையில் நோபல் பரிசு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இதனையடுத்து மலாலாவை மேற்­கு­லக சாத்தான் படை­க­ளுடன் இணைந்து செயற்­படும் ஒருவர் என குற்றம் சாட்­டி அவ­ரது ஆத­ர­வா­ளர்­க­ளுக்கு தலி­பான்கள் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தனர்.
இந்­நி­லையில் பெஷாவர் பாட­சாலை மீது மேற்­கொள்­ளப்­பட்ட ஈவி­ரக்­க­மற்ற தாக்­கு­தலால் தான் மன­மு­டைந்து போயுள்­ள­தாக மலாலா தெரி­வித்தார்.
அப்­பாவி சிறு­வர்­களை அவர்­க­ளது பாட­சா­லையில் வைத்து கொல்வது போன்ற கொடூர செயல் வேறெ­துவும் கிடையாது என மலாலா (17 வய­து) குறிப்பிட்டிருந்தார்.  நன்றி வீரகேசரி 



No comments: