தமிழ் எழுத்தாளர் விழா - 2011

.
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கியகலைச்சங்கத்தின் பதினொராவது தமிழ் எழுத்தாளர் விழா இம்முறை விக்ரோரியா மாநிலத்தில் மெல்பனில் எதிர்வரும் ஜூன் மாதம் 04 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் இரவு 9 மணி வரையில் பிரஸ்டன் நகர மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் கலைவளன் சிசு. நாகேந்திரன் தலைமையில் நடைபெறவுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக அவுஸ்திரேலியாவில் எழுத்தாளர் விழாவை நடத்திவரும் கலை, இலக்கியச்சங்கம் இம்முறை பல்சுவை அரங்கு என்ற தலைப்பில் இலக்கிய கருத்தரங்கு, மாணவர் அரங்கு, விவாத அரங்கு, கவியரங்கு, ஆகியனவற்றுடன் குறும்படக்காட்சிகளையும் நடத்தவிருக்கிறது.

நிகழ்ச்சியின் இறுதியில் இராப்போசன விருந்தும் இடம்பெறவுள்ளது.

1 comment:

kalaisangam said...

தமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :

தமிழ் தெரிந்தவர்கள் நூலாசிரியராக வாய்ப்பு :
சங்க கால மக்களின் வாழ்க்கை முறையை விளக்கும் புற நானூறு நூல் போன்று இந்திய சுதந்திரத்திற்குப் பின் இந்தியரின் வாழ்க்கைமுறையை விளக்கும் நூல் ஒன்றினை கீதம் பப்ளிகேசன்ஸ் மூலம் தென்னிந்தியாவில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியான சென்னைப் புத்தகக் கண்காட்சியில் பிரபல சிறப்பு விருந்தினர் ஒருவரால் வெளியிட உள்ளோம். இந்த நூலில் ஆசிரியராக இணைய தமிழ் தெரிந்தவர்களுக்கு வாய்ப்பு

more details : http://www.vahai.myewebsite.com/