மரமும் நிழலும் - கவிதை - வ.ஸ்ரீநிவாசன்


.

ற்று முன் பார்த்த
சந்திரன் - அருகில் ஒரு தாரகை -
அவற்றை
நாலு அடி நடந்த பின்
தீர முழுதாய்ப் பார்த்துவிட வேண்டும் எனத்
திரும்பினால்
தெரிவது அவற்றை மறைக்கும்
மரமும், நிழலும்தான்.
மரமும், நிழலும் மட்டும்
மட்டமா என்ன?
Nantri: solvanam.com

No comments: