நண்பேன்டா படித்துச் சுவைத்தது

யநண்பேன்டா  படித்துச் சுநண்பேன்டா  படித்துச் சுவைத்தது வைத்தது ன்னலூnanடே விரிசல் கண்ட வட்ட நிலவு                                                     அருண் மதுரா


காட்டெருமை சைவம். ஆனால், அது எதிர்ப்படும் மனிதர்களைத் துவம்சம் செய்து விடும் காரணமில்லாமல். வாழ்க்கையில் பல தருணங்களில் காட்டெருமைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலை உண்டு. அவற்றைத் தூரத்தே கண்டு ஓடிவிடுவதே அறிவு, எனினும், மாட்டிக் கொள்வதே விதி.
அப்படி ஒரு தருணத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. துக்கம் தொண்டையை அடைத்தது. துக்கத்தை இன்னும் கொஞ்சம் பிசைந்தால், சந்தோஷமா அழலாம் என்பது சுந்தர ராமசாமியின் அழகிய வரி. அனிச்சையாக பண்பலை வானொலியைச் சொடுக்க, நட்பின் தேசிய கீதமான அப்பாடல் ஒலித்தது.
“உள்ள மட்டும் நானே உசுரக் கூடத் தானே
என் நண்பன் கேட்டா, வாங்கிக்கன்னு சொல்லுவேன்;



ஆனால் என் நண்பன் உயிர் போன போது, என்னால் கொடுக்க முடியவில்லை.
1992 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 7 தேதி காலை, பெங்களூரில் என் பழைய வீட்டு ஓனர் அம்மாள் போன் செய்தார். “சுப்ரமணியவரே.. நமஸ்காரா.. நிம்கு டெலகிராம் பந்திதே, எவ்ரோ செத்தோகிதரந்தெ.. (யாரோ செத்துப் போயிட்டாங்களாம்..). கவஸாக்கி பழைய சதாசிவ நகர் வீடு நோக்கி விரைந்தது..
கைகள் நடுங்கப் பிரித்த தந்தியில் ஒருபோதும் எதிர்பாத்திராத செய்தி.. “Dr.Sekar died in an accident; rush to erode imdtly” இப்போது பைக்கை ஸ்டார்ட் செய்ய இயலாமல் கால்களும் நடுங்கின..
சாங்கி ஏரி சாலையில் பைக் ஓடிய போது சில மாதங்கள் முன்னர் பெங்களூரில் நாங்கள் அடித்த கூத்து நினைவுக்கு வந்தது… முழு மப்பில், கவஸாக்கியைப் புலி போல் விரட்டி கதிகலங்க வைத்த அதே சேகர்..
புதிதாய்த் திருமணம் செய்து கொண்ட தருணம்.. தோழியே மனைவியான ஒரு அழகிய நிகழ்வு.. அதை அருகிலிருந்து பார்த்து மகிழ்ந்த நண்பன்..
என் மனைவி விஜி எனக்குச் சொல்லிக் கொடுத்த பஜகோவிந்தம் பாடல் மனதுள்..
“புனரபி ஜனனம்; புனரபி மரணம்”
1:30 மணிக்கு ஒரு ஃப்ளைட். பிடித்தால், 2.30க்கு கோவை.. 5 மணிக்குள் ஈரோடு போகலாம்.. முகத்தையாவது பார்க்கலாம் என்றொரு நப்பாசை.. ஆனால், காலை 11 மணிக்கே அவனை எரித்து விட்ட உண்மை அப்போது தெரியவில்லை.. தொலைபேசி பெருகாத காலம்.
சங்ககிரி கல்வி மாவட்டத்தில் முதல் மதிப்பெண் என்னும் கவச குண்டலமேந்தி அவன் ஈரோடு நகராட்சிப் பள்ளியின் 11 ஆம் வகுப்பிலும் என் வாழ்விலும் நுழைந்தான். சற்றே மேடிட்ட நெற்றி. வட்டமான முகம். செம்மண் புழுதி படிந்த கால்கள். தலைவாரிப் பூச்சூட்டி உன்னை, பாட சாலைக்குப் போ என்று சொன்னாள் உன் அன்னை என்னும் பழந்தமிழ்ப் பாடலின் எடுத்துக் காட்டு போல் இருந்தான்.
கிட்டத்தட்ட அதே போல் இருந்த என்னுடன் முதல் பெஞ்சில் அமர்ந்தான். மேல் காகிதம் பிரிந்ததும் ஒட்டும் self adhesive tape போல இருவரும் ஒட்டிக் கொண்டோம். 200 மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வேன் என்னும் வீம்பு கொண்ட விடலைப் பருவம். பின்னே எம் குலப் பெண்டிருக்கு முன்னே கால்நடையாகச் செல்வது இழுக்கல்லவா? நேர்மையான போலீஸ் ஆபிஸர் என்னும் சினிமா வசனம் போல் அக்காலத்தில் எங்களூரில் புழங்கிய வசனம் “நல்லா படிச்சு டாக்டராவோனும். இல்லீன்னா இஞ்சினீராவது ஆயிரோனும்”. அம்முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தர்களாக நாங்கள் ட்யூஷன் போனோம். கணக்கு மற்றும் வேதியியலுக்கு. கணக்கு நூறு சதவீத மார்க் வாங்குவதற்கு. வேதியியல், ப்ராக்டிக்கல் தேர்வில் கை வைப்பேன் என்று மறைமுகமாகப் பயமுறுத்திய ஆசிரியருக்குப் பயந்து.
கணக்கு ட்யூஷன் வாத்தியார் வீட்டுக்கு எதிரில் ஒரு +2 பெண் இருந்தாள். அங்கே படித்த அனைவருமே அப்பெண்ணை ஒரு சோஷலிச நோக்கில் சைட் அடித்து வந்தோம்.. அப்பெண்ணும், எங்கள் முயற்சியில் தோள் கொடுக்க, காலையில் மொட்டை மாடியில் நடை பயில்வாள். இது போன்ற வாலிப விஷயங்களில் ஒற்றுமை இருந்தாலும், தமிழகத்தின் தலையாயப் பிரச்சினை ஒன்றில் மிகப் பெரும் வேற்றுமை நிலவியது. அவன் ரஜினி ரசிகன். ஒரு இளங்கவிஞனாகவும், அறிவாளியாகவும் என்னை நானே எண்ணிக் கொண்டிருந்ததால், எனக்கு இது மிகப் பெரும் அவமானமாக இருந்தது. ஆனால், சேகர் என்னைப் போல் pretentious இல்லை. அவனுக்கு ரஜினியைப் பிடிக்கும். Period.
+2 முடிந்த அந்தக் காலம் என் வாழ்வின் ஒரு சோகக் காலம். 91 சதவீதம் பெற்றும் இஞ்சினீரிங் கிடைக்கவில்லை. உயிரியலில் 87 சதவீதமாகிப் போனதால் மருத்துவமும் கிடைக்க வில்லை. சேகர் என்னை விட அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தான். நான் எந்தக் கல்லூரியிலும் சேராமல் வீட்டில் இருந்தேன். நட்பு கடிதங்களில் தொடர்ந்தது. சோகப்பட்டதற்குச் செலவழித்த சக்தியை படிக்கச் செலவழித்திருந்தால், உருப்பட்டிருக்கலாம். ஆனால், லேசாக சோகமாக இருப்பது (காதல் தோல்வி, வேலையின்மை) அந்தக் காலத்தில் ஃபேஷனாக இருந்ததால் அப்படியே விட்டு விட்டேன்.
beach-friendsபின்னர் வேளாண்மை (குலத் தொழில்) படித்து, மேலாண்மையும் படித்து பெங்களூரில் வேலை சேர்ந்தது என் லௌகீக வாழ்வின் பொற்காலம். அப்போதுதான். ஐ ஏ எஸ் தேர்வு எழுதும் ஆர்வம் வந்தது.. தேர்வுக்காக என்னைத் தயார் செய்து கொள்ளது துவங்கினேன். சேகர் மேலே எம்.டி படிக்கத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்தான். வார இறுதியில் ஈரோடு சென்று இருவரும் ஒரு பழைய கல்யாண மண்டபத்தில் உட்கார்ந்து படிக்கத் துவங்குவோம். அவன் ராட்சஸன். எனக்கு 10 மணிக்கு தலை சுற்றும். அவனருகே அமர்ந்து படிப்பது ஒரு சவாலாக இருந்தது. தேர்வுக்கான தயாரிப்பை அவன் ஒரு அறிவியல் பூர்வமான விஷயமாக மாற்றியிருந்தான்.. ஒரு குறிக்கோளை எடுத்துக் கொண்டு, அதை அடையும் வழியை மிக நுட்பமாகத் திட்டமிடுவான். பரிட்சை ஆறு மாதெமெனில், இத்தனை நாள், தினம் இத்தனை மணி நேரம் உழைப்பு என்பதை துல்லியமாகத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், அதை நிறைவேற்றும் மன உறுதியையும் அவனிடமிருந்து கற்றுக் கொண்டது இன்று வரை உதவுகிறது. அவனுடைய தீவிரத்தில் பாதிதான் பின்பற்ற முடிந்ததென்றாலும், அதுவே ஐ.ஏ.எஸ் இறுதி வரை அழைத்துச் சென்றது.
1991 ஆம் ஆண்டுத் தீபாவளி மறக்க முடியாத ஒன்று. குணாவும், தளபதியும் அந்த ஆண்டு வெளியான படங்கள். தொல் தமிழர் வழக்கப் படி, காலைத் தொலைக் காட்சியில் “ராக்கம்மா” பாடலையும், “கண்மணி’ பாடலையும் பார்த்துப் புல்லரித்து வெடி வெடித்தோம்.. பின்னர் தளபதி படம் பார்த்து விட்டு, மப்படித்த ஒரு இரவில் மிகத் தீவிரமாக “மவனே, இன்னும் ஒரு பத்து வருஷத்துக்கு ரஜினி நடிப்பப் பத்தி எவனும் பேசக் கூடாது” என்று சலம்பியது இன்னும் கண்ணில்.
என் திருமணத்துக்கு வந்த தடைகளில் பாதியைத் தாங்கியவன். திருமணத்துக்கு இரு நாட்களுக்கு முன்பு, பேச்சிலர்ஸ் பார்ட்டியில் ‘ஆட்டமா.. தேரோட்டமா?” பாட்டுக்கு நடனமாடுகிறேன் பேர்வழி என்ற பெயரில், நண்பர் பாரியின் டேபிள் ஃபேனை உடைத்தவன். திருமணம் முடிந்த அன்று திடீரென்று காணாமல் போனான்.. அதன் பின் இரண்டு நாட்கள் வந்து எங்களுடன் பெங்களூரில் தங்கியிருந்தான்.. அதுதான் அவனுடன் நாங்கள் செலவிட்ட கடைசி நாட்கள் என்று எங்களுக்கு அப்போது தெரியவில்லை.
தனது பைக்குக்கு, எங்கள் தோழியின் மீது கொண்ட அன்பில் “பூக்குட்டி” என்று பெயர் வைத்திருந்தான். அந்தப் பூக்குட்டியின் மீது பயணித்து ஒரு நாள் சிற்றுலா செல்லும் வழியில், சாலையில் மணல் வழுக்கி ஒரு மரத்தின் மீது மோதி, ஈரல் சிதறி இறந்து போனான். அது நடந்த காலம் விம்பிள்டன் போட்டிகள் நடக்கும் மாதம்.. அவனுக்கும் டென்னிஸுக்கும் சம்பந்தமில்லை. ஆனால் விம்பிள்டன் போட்டிகள் எனக்கும் விஜிக்கும் அவன் நினைவுகளை மீண்டும் கொண்டு வருகின்றன.
எங்கோ ஒரு சிறு கிராமத்தில் பிறந்து, முட்டி மோதி பயணிக்கும் இந்த வாழ்க்கையின் இனிமையான கணங்களிலெல்லாம் “இல்லாமல் போயிட்டியே பாவி” என்று தோன்றும். இன்றிருந்தால், ஈரோட்டிலோ அல்லது சென்னை போன்ற ஒரு பெரு நகரிலோ ஒரு மிக நல்ல மருத்துவனாகவோ இருந்திருப்பான். போட் கிளப்பில், வார இறுதி மாலைகள்.. சத்யம் தியேட்டரில் சினிமா.. சந்தோஷமாக இருக்க எத்தனை தருணங்கள்.. சினிமாக்கள்.. கிசுகிசுக்கள்.. அரசியல்.. கல்யாணம்.. ஒன்றையுமே பார்க்காமல், 91 ஆம் ஆண்டு ஜூன் மாதம் காவேரிக் கரையில் எரிந்து போனான்.
பண்பலை வானொலி இப்போது “நிற்பதுவே” பாடலை ஒலிபரப்பத் துவங்கியிருந்தது.. அதற்குள் நான் கிழக்குக் கடற்கரைச் சாலை தாண்டி, ஓ.எம்.ஆர் என்றழைக்கப் படும் பழைய மகாபலிபுரச் சாலையை அடைந்து. மத்ய கைலாஸ் கோவில் திருப்பத்துக்கு வந்து விட்டிருந்தேன். “காண்பதெல்லாம் மறையுமென்றால், மறைந்ததெல்லாம் காண்பமன்றோ” வரிகள் கேட்கையில் கண்களில் நீர் வழிந்தது.. ஐ.ஐ.டி கேட் நெருங்குகையில், மேற்கில் மாலைச் சூரியன் இறங்கிய மஞ்சள் நிற வானத்தில் ஒரு ஒற்றைப் பறவை தொலைவில் பறந்து மறைந்ததுகும் நிலவுக்குமிடையில் உள்ள விரிசல் நீக்க விடுவதேயில்லை
தாள்களொட்டிய கண்ணாடி யன்னலில் காத்துக் கிடக்கும்
நனபெண்ட குளிர்
விடியும் வரை காத்திருந்தேன்;
வெளிச்சத்தில் பார்க்க முடியவில்லை
அது கோரம் தப்புவதற்கு மீண்டும்
இருட்டும் வரை காத்திருக்கிறேன்
தனியிருட்சிறை; எனக்குத் துணை
விரிசலூடே விழும் சூரியனின் ஒளிவட்ட நிழல்.
அது நகர்ந்து சுவரேறி மறையும் வரை

யன்னலூடே விரிசல் கண்ட வட்ட நிலவு.
எனக்கும் நிலவுக்குமிடையில் உள்ள விரிசல் நீக்க விடுவதேயில்லை
தாள்களொட்டிய கண்ணாடி யன்னலில் காத்துக் கிடக்கும்
குளிர்
விடியும் வரை காத்திருந்தேன்;
வெளிச்சத்தில் பார்க்க முடியவில்லை
அது கோரம் தப்புவதற்கு மீண்டும்
இருட்டும் வரை காத்திருக்கிறேன்
தனியிருட்சிறை; எனக்குத் துணை
விரிசலூடே விழும் சூரியனின் ஒளிவட்ட நிழல்.
அது நகர்ந்து சுவரேறி மறையும் வரை பகல்;
இரவுகள் நீண்டவை நிழலின் துணையற்று
குளிர் ஊடுருவுமனைத்துப் பாதைகளையும் அடைத்தாகிவிட்டது.
சப்பாத்துக்களினோசை நெருங்கி வருகிறது.
முள்ளந்தண்டிலிருந்து மீண்டும் சில்லிடத் தொடங்குகிறது
மின்மினிபோல் விளக்கொளிரும் இரவுகளில், இருள் விலகா
ஓரங்களூடே ஒண்டுக் குடிசை எல்லையற்ற காடாய் விரிகிறது
பகல் எழ வெளிசுருங்கி நசிகிறது இருப்பு
மனம் வெறுமையிலூறி வெளி எங்கும் கசிந்து கிடக்கிறது.
உலகம் தட்டைப் பிம்பமாகி
ஊடே
அப்பாலுள்ளவைகளிலும்
அது
வெண்
உப்புப்
போல
படர்ந்து
கசகச
வென்றி

பகல்;
இரவுகள் நீண்டவை நிழலின் துணையற்று
குளிர் ஊடுருவுமனைத்துப் பாதைகளையும் அடைத்தாகிவிட்டது.
சப்பாத்துக்களினோசை நெருங்கி வருகிறது.
முள்ளந்தண்டிலிருந்து மீண்டும் சில்லிடத் தொடங்குகிறது
மின்மினிபோல் விளக்கொளிரும் இரவுகளில், இருள் விலகா
..gggஓரங்களூடே ஒண்டுக் குடிசை எல்லையற்ற காடாய் விரிகிறது
பகல் எழ வெளிசுருங்கி நசிகிறது இருப்பு
மனம் வெறுமையிலூறி வெளி எங்கும் கசிந்து கிடக்கிறது.
உலகம் தட்டைப் பிம்பமாகி
ஊடே
அப்பாலுள்ளவைகளிலும்
அது
வெண்
உப்புப்
போல
படர்ந்து
கசகச
வென்றி

No comments: