உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா - திருமுறை முற்றோதல் 05.09.2010 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்
உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 05.09.2010 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை ஐந்தாம் திருமுறையிலுள்ள “மாசில் வீணையும்” எனத் தொடங்கும் பதிகத்திற்கு பொருள் கூறப்பட்டு பின்னர் ஐந்தாம் திருமுறை எண்பத்திமூன்றாவது பதிகம் (திருநாகைக்காரோணம்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.

சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை (Cnr Burlington Rd & Rochester St)

நேரம்: 05.09.10 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

பதிகப் பொருள் விளக்கம்

பொதுப் பதிகம் (90); - திரு மா அருச்சுனமணி அவர்கள்

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்;;

மேலதிக விபரங்களுக்கு:

திரு க சபாநாதன் Tel: 96427767

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406

திரு மா அருச்சுனமணி Tel: 87460635

No comments: