சிறந்த முன்னுதாரணமாகும் ஆவுஸ்திரேலியத் தமிழர்கள்.

                                                                                                                 நடேசன்

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு 346 முன்னாள் புலி உறுப்பினாகளுக்கு அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கை மாணவர் நிதியம் உதவுகிறது . அவுஸ்திரேலியாவில் உள்ள டாக்டர் நடேசன் சமீபத்தில் இலங்கை சென்றபோது புனர்வாழ்வு நிலையங்களுக்குப் பொறுப்பான ஆணையாளர் பிரிகேடியர் சுதந்த ரணசிங்கவை பத்தாருமுல்லைலையில் உள்ள அவரது கரியாலயத்தில் சந்தித்த போது அடுத்த மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாவூள்ள க.பொ.த உயர்தர பரீட்சைக்கு இம்முறை புனர்வாழ்வு நிலையங்களிலுள்ள 346 முன்னாள் புலி உறுப்பினர்கள் தோறற உள்ளார்கள் எனவும் அவர்களுக்கு அவசரமான பறிற்சி வகுப்புகளை (Private Tuition).. ஆரம்பிக்க முடிடியுமா என கேட்டு;கொண்டதற்கிணங்க நடேசன் அவர்கள் மெல்பேணில் எழுத்தாளர் முருகபூபதியின் ஒருங்கமைப்பில் 20 வருடங்களுக்கு மேலாக இயங்கிவரும் இலங்கை மாணவர் நிதித்தை தொடர்புகொண்டார். அதற்கிணங்க தற்போது இந்த நிதியத்தால இதற்காண ஒழுங்குகள் செய்யப்ப்ட்டு தற்போது வகுப்புகள வவுனியாவில் நடைபெறுகியது.

இதற்காக மெல்பேன் தமிழ் அன்பர்கள் கடந்த இரண்டுவாரமாக இரண்டு கூட்டங்களை மெல்பேனில் வைத்து இதற்கான பணத்தை பெற்றுக் கொண்டார்கள். இந்த விடயத்தில ஒற்றுமையாக அரசியலை மறந்து பல விடுதலைப்புலி ஆதரவாள்களும் முன்னாள எதிர்ப்பாளர்களும் கலந்து கொண்டது மிகவும் பாராட்டுக்குரிய விடயம என அங்குள்ளவர்கள் கருத்து தெரிவித்தனர். ஆவுஸ்திரேலயாவில உள்ள இலங்கை மாணவர நிதியம் தொடர்சியாக க.பொ.த சாதாரண வகுப்பு மாணவர்களுக்கும் உதவுவதற்கு எண்ணியுள்ளது.

சின்ன மாமியே நித்தி கனகரட்னம் இறைசேவகராக இலங்கை செலகிறார்

மெல்பேனில் வதியும் விவசாய விஞ்ஞானியும் பொப்பிசைப்பாடகருமாகிய நித்திகனகரடனம் அஸ்திரேலிய திருச்சபையால்; இறைசேவகராக சத்தியபிரமாணம் எடுத்துக்கொண்டு வட மாகாண மக்களுக்கு சேவை செய்வதற்காக இரு கிழமைகளில் இலங்கை செல்கிறார். இவரது சத்திய பிரமாணம எடுக்கும் நிகழ்சி கடந்த ஞாயிறுக்கிழiமை செயிட் ஜோச் தேவாலயத்தில் நடந்தது; இவர் தென்இந்திய திருச்சபையின் கீழ வடமாகாணத்தில் பணியாற்றுவார். இவர் வடமாணத்தில பிற்நதாகவும தற்போது அங்கு உள்ள நலிவுற்றமக்களுக்கு உதவி செய்வது தனது கடமையாக நிபை;பதாகவும் கூறினார். இந்த நிகழ்சியில் பல சமய பிரமுகர்களும் பல தமிழ் ஆவுஸ்திரேலயர்களும கலந்து சிறப்பித்து பண உதவியும் அளித்தார்கள்

 uthayam@optusnet.com.au

2 comments:

Anonymous said...

திரு நடேசன் என்பவரை சிட்னியில் உள்ள வானொலியாளர் ஒருவர் திட்டிக்கொண்டே இருப்பார். நானும் அதை நம்பியவர்களில் ஒருவன்.புலிக்கு எதிராக வேலை செய்கிறான் என்ற கோபம் கூட இருந்தது. ஆனா புலித்தலம தன்ர தலையில மட்டுமில்லாம மக்களின்ர தலையிலயும் மண் அள்ளிப் போட்டுட்டு அரைவாசிப்பேர் சரணடைந்து தப்பபார்க்க மற்ர அரவாசிப்பேர் மாண்டு போச்சினம். இப்ப நடேசன் செய்யிறத பார்க்கிறபோது அவர் புலித்தலைமை ஏமாற்றுது எண்டு சொன்னது எவ்வளவு சரியாய்ப் போச்சுது. கீழ இருந்த பிள்ளையள் உண்மையான விடுதலை விரும்பி போனதுகள். தலைமை விட்ட பிழைக்கு அந்த பிள்ளையள் என்ன செய்யிறது. அதுகளப் படிபிக்க வேணும் எண்டு முயற்சி எடுக்கிற நடேசன் இந்த றேடியோகாறனும் இங்க புலிக்கு அமைப்புக்கட்டினவையளை யும் விட எவ்வளவோ மேல். சேத்த காசெல்லாத்தையும் பதுக்கி வைச்சுக்கொண்டு வீடும் சொத்தும் வாங்கி அனுபவிச்சுக்கொண்டு இருக்கிறவ. அங்க துன்ப படுகிற மக்களுக்கு இங்கஉள்ள புலியின்ர சொத்த வித்து குடுக்கலாம் தானே அது செய்யாம செய்யிறவனப் பார்த்து குலைக்கினம். தாங்கள் இனி என்னசொல்லி ஊர்ப்பணத்த கொள்ளயடிக்கலாம் எண்டு திட்டம் போடினம்.

குட்டி

kirrukan said...

அப்ப இனிமேல் நடேசனுக்கு பின்னால புலம் பெயர் டமிழ்ஸ் போக வேண்டும் என்றுசொல்லுறீயள்,காசு கொடுக்கிர என்டாலும் நடேசன் மூலம் கொடுங்கோ என்று சொல்லுறீயள் ....நடேசன் எப்படி நம்புகிறதாம்? அவரும் அவையளை போல செய்து போட்டா?
எதற்க்கும் மகிந்தாநானா வோட நேரடியாக டீல் பன்னினால் நல்லம்


வாசிக்கிறவன் கேணயன் என்றால் எருமை மாடும் எரோப்பிளேன் ஒடுமாம் ....