சைவ உணவின் மகத்துவம்

.

ஹரே கிருஷ்ணா ! மீண்டும் உங்களை இந்த வாரம் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. கடந்த சில இதழ்களில் நான்கு விதிமுறைகளை பற்றி கண்டோம், இன்று அதில் முதன்மையான மாமிசம் உண்ணாமை பற்றியும், சைவ உணவின் முக்கியத்தை பற்றி காண்போம்.


மாமிசம் உண்ணுவதன் மூலம் நமக்கும் நாம் இயற்கைக்கும் எத்தனை கேடு என்பதை பற்றி பார்க்கலாம். இதோ ஒரு சிறு ஆய்வு

நாம் எத்தனை மரங்களை வெட்டுகிறோம் தெரியுமா? எத்தனை மண் அரிப்பு ஏற்படுகிறது தெரியுமா? எவ்வளவு நீரை அசுத்த படுத்துகிறோம் தெரியுமா? இத்தனை பற்றின உண்மைகளை காண்போம்.

1. பாதிக்கு மேல் உள்ள அடர்ந்த மழை காடுகளை மனிதன் மாட்டு மாமிசக் கூடம் கட்ட அழிக்கிறான். ஒரு பௌன்டு (pound) ஹாம் பர்கர் (ham burger) 55 சதுர அடி மழை காடுகளை அழிகிறது. ஒருவர் மாமிசத்தை துறந்தாலும் வருடத்திற்கு ஒரு ஏக்கர் நிலத்தை காப்பாற்றலாம்.

2. பாதிக்கு மேல் தானியங்களை பிராணிகளுக்கு ஊட்டி அதன் மாமிசத்தை அறுத்து திண்ணுவது மனித தன்மை அற்ற செயல். 1 பௌன்டு (pound) மாட்டு மாமிசத்துக்கு , 14 பௌன்டு தானியங்கள், மற்றும் சோயா தீனி போடுகிறான். இது எத்தனை பயன் இல்லாத செயல்?

. அமெரிக்காவில் மட்டும் எல்லா சோயா மற்றும் தானியங்களையும் மனித உணவிற்காக எடுத்து வைத்தால் அது 1.3 பில்லியன் மக்களுக்கு தாராளமாக உணவு கொடுக்க முடியுமாம். 1 அசைவ உணவு உண்ணுபவனுக்கு தேவையான நிலத்தில் 20 பேர்களுக்கு சைவ உணவு கொடுக்கலாம்.
4. ஒரு மாமிச பிரியருக்கு சராசரி 4200 காலன் நீர் தேவை படுகிறது. அதுவே ஒரு சைவ உணவு உண்ணுபவனுக்கு 1200 காலன் மட்டுமே செலவு ஆகிறது. மேலும் வெறும் 25 காலன் நீர் மட்டுமே 1 பவுண்டு கோதுமை தயாரிக்க தேவை, ஆனால் 2500 காலன் நீர் செலவளித்தால் தான் 1 பவுண்டு மாமிசத்தை தயாரிக்க முடியும்.

நாம் சிறு வயதில் நாம் தாய் பால் மட்டுமே அருந்தி வளர்கிறோம், அதே போல் பெரியவர் ஆனா பின் பசுவின் பால் அருந்துகிறோம். பால் கொடுப்பதனால் அந்த கமதேனு தாய்க்கு சமானம் அல்லவா? சற்று சிந்தியுங்கள்.
சிலர் எனக்கு பிற உயிர்களை பற்றி, இயற்கையை பற்றியெல்லாம் கவலை இல்லை, என்று நினைப்பார்கள், சைவ உணவினால் பிறருக்கு மட்டும் பயன் இல்லை, நமக்கும் நாம் சிந்தைக்கும் மிக்க பலன் உள்ளது.

சுடுகாட்டில் போய் நிம்மதி தேட முடியுமா? இறந்த பிராணியின் உடலை உண்டு வயிற்றில் புதைபதனால் நாம் வயிறும் சுடுகாடு ஆகிறது அல்லவா? எப்படி நிம்மதி மற்றும் சாந்தி கிட்டும்? மேலும் இயற்கையில் மனிதனின் உடல் அமைப்பும் மாமிசம் உண்ணுவதற்கு ஏற்றவாறு இல்லை. நமக்கு மிருகங்களை போல் மாமிசத்தை உண்ண கோரை பற்கள் இல்லை. நம் குடல்கள் நீளமானவை, மாமிசத்தை ஜீரணிக்கும் போது வரும் தேவை அற்ற பொருளை இரத்தத்தோடு கலக்கிறது. இதனால் பல விதமான வித்தியாசமான நோய்களும் வருகிறது.

அது மட்டும் இல்லாமல் 3/4 கப் பருப்பு+ 2 கப் அரிசி 1/4 கிலோ ஸ்டீக் சமமான சத்தை தருகிறது. பருப்பில் இரும்பு சத்து மற்றும் விடமின் B உள்ளது. இன்னும் இப்படி நிறைய உதாரணங்கள் உள்ளது.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் இந்த ஸ்லோகத்தின் வாயிலாகக் என்ன கூறுகிறார் என்று பார்ப்போம்.

பத்ரம் புஷ்பம் பழம் தோயம்
யோ மே பக்திய ப்ரயச்சதி
தத் அஹம்́ பக்தி-உபஹ்ர்̣தம்
அஸ்நாமி ப்ரயதத்மநஹ ̣ [9.26]

அர்த்தம்: அன்புடனும், பக்தியுடனும் ஒருவன் எனக்கு ஒரு இலையோ, பூவோ, பழமோ, நீரோ அளித்தல் அதை நான் ஏற்கிறேன்.

ஒருவன் பரமன் அன்புதொண்டில் ஈடுபட வேண்டுமானால் அவை எதை விரும்புகிறார் என்பதை கண்டு கொள்ள வேண்டும். அவர் கேட்காத அல்லது விரும்பாத பொருட்களை தவிர்ப்பான். இவ்வாறாக மாமிசம், மீன், முட்டை இது போன்றவை கிருஷ்ணர் ஏற்க மாட்டார் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நீ என்ன உண்ணுகிறாய் என்று சொல், நான் நீ யார் என்று சொல்லுகிறேன் - அந்தேள்மெ பிரில்லாத் சால்வின்(1826).
நாம் உண்ணும் உணவு 3 வகையாக பிரிக்கப்படுகிறது. சத்துவ, ரஜஸ் மற்றும் தாமச உணவு. அதாவது
சத்வ - நல்ல எண்ணங்களை வளர்க்கும் உணவு.

ரஜஸ் - வெறியை தூண்டும் உணவுகள்

தாமச - அறியாமையை தூண்டும் உணவு.
மீன் மாமிசம், முட்டை எல்லாம் தாமச உணவு வகைகள். இது அறியாமையும் மன இருளையுமே வளர்க்கும். இது பக்திக்கு உகந்தது அல்ல.

ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்
யஹ்நசீஷ்டசின: ஸந்தோ முச்யந்தே சர்வ- கில்பிஷை:
புஞ்சதேதே த்வகம்பாபா யே பஸன்த்யத் மகாரணத் [3.13]

அர்த்தம்: யாகத்திற்க்காக முதலில் படைக்கப்பட்ட உணவை உண்ணுவதால் பக்தர்கள் எல்லா விதமான பாவங்களில் இருந்தும் விடுபடுகிறார். சுய புலனின்பதிற்காக உணவு தயாரிப்பவர்களோ பாவத்தையே உண்ணுகிறார்கள்.

கிரிஷ்ணார்பணம் செய்த உணவு புனிதம் அடைகிறது. அது உடலுக்கும், உள்ளத்துக்கும், பக்திக்கும் உகந்த உணவு ஆகும். ஆகையால் எளிமையான தாவர உணவை தயார் செய்து அவருக்கு நாம் அன்பொடும், பக்தியோடும் நேய்வேதியம் செய்து ஊட்கொள்வது வாழ்வில் முன்னேறுவதற்கும் , உடலை தூய்மை செய்வதற்கும், நல்ல சிந்தனை சக்திக்காக நுண்மையான மூளை திசுக்களை உண்டாக்குவதற்கும் நிச்சியமாக ஒருவனுக்கு உதவுகிறது. அதை கிருஷ்ண பிரசாதம் என்று கூறுவர்.

ஆகையால் இயற்கைக்கும், சமூகத்திற்க்கும் கேடு விளைவிக்காமல் இருக்க ஒருவன் மாமிசம் உண்ணாமல் இருக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

நான் ஒருவன் மாறினால் என்ன பெரிய வித்தியாசம் ஏற்பட போகிறது என்று எண்ணாமல் " சிறு துளியும் பெரு வெள்ளமாக ஆகும் என்ற பழமொழிக்கு ஏற்ப ஒருவர் நாம் ஒவ்வொருவரும் உறுதி பூண்டு ஒரு புரட்சியை ஏற்படுத்தி , கண்ணனின் திரு நாமங்களை வாயால் பாடி மனத்தால் மகிழ வேண்டும் என்று வேண்டி அமைகிறேன்.

ஹரே கிருஷ்ணா, ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா, ஹரே ஹரே!
ஹரே ராமா, ஹரே ராமா, ராமா ராமா, ஹரே ஹரே!!

என்றும் அன்புடன்
கனஷியாம் கோவிந்த தாஸ்

No comments: