232 தமிழர்களுடன் கனடாவை நோக்கி கப்பல்

.

232 தமிழ் குடியேற்றவாசிகளுடன் கனடாவை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் கப்பலொன்று மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவுக்கு அருகில் வைத்து  அவதானிக்கப்பட்டுள்ளதாக ஏசியன் ட்ரிபியூன் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. 59 மீற்றர் நீளமான, 'எம்.வி. சன் ஸீ' எனும் இக்கப்பலில் 219 இலங்கைத் தமிழர்களும் 12 இந்திய தமிழர்களும் இருப்பதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தை நோக்கி இக்கப்பல் சென்றுகொண்டிருப்பதாக கருதப்படும் நிலையில் கனேடிய அதிகாரிகள் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ளவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments: