அவுஸ்ரேலியாவிலிருந்து கடந்த 36 வருடங்களுக்கும் மேலாக இயங்கிவரும் தன்னார்வத் தொண்டு நிறுவனமான இலங்கை மாணவர் கல்வி நிதியத்தின் உதவி, அண்மையில் மலையக மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.
கல்வி நிதியத்தின் மலையக
தொடர்பாளர் அமைப்பான மலையக சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்
(Plantation Community Development Organization) கண்காணிப்பில் இவ்வுதவி வழங்கப்பட்டுவருகிறது.
நடைபெற்ற இந்நிகழ்வில் உதவிபெறும் மாணவர்கள் மற்றும் மாணவர்களின் தாய்மாரும், கலந்துகொண்டனர்.
அமைப்பின் உறுப்பினர் திரு. மு.துவாகரன் மற்றும் ஆலோசகர்
திரு.ஏ.ஜெயசீலன் பாடசாலைகளின் அதிபர்கள் ,
ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த காலங்களில் இந்நிதியத்தின் நிதியுதவியினை பெற்ற மாணவர் பலர் தரம் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த சாதாரண தர பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் தோற்றி சிறந்த பெறுபேறுகளை பெற்று உயர்கல்வியினை தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment