நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம்

.
நீர்கொழும்பில் தமிழ் குடும்பத்தில் கணவனும் மனைவியும் அடுத்தடுத்து மரணம் பிள்ளைகள் வெளிநாடுகளில் சமகால கொரோனோ தொற்றினால் ஒரு வார காலத்தில் கணவனும் மனைவியும் இறந்துள்ள துயரச் சம்பவம் கம்பகா மாவட்டத்தில் நீர்கொழும்பில் நடந்துள்ளது. நடராஜா கருணாலிங்கம் ( வயது 75 ) என்னும் மின்சார தொழில் நுட்பவியலாளர் கடந்த 11 ஆம் திகதி கொரோனோ தொற்றினால் மரணமடைந்ததையடுத்து, அவரது மனைவி ஜெயலக்‌ஷ்மி ( வயது 75 ) நேற்று 17 ஆம் திகதி மரணமடைந்துள்ளார். இவர்களது ஒரு மகன் அவுஸ்திரேலியாவிலும் ஒரு மகள் இங்கிலாந்திலும் வசிக்கின்றனர். இந்த அடுத்தடுத்த மரணங்களினால் இவர்களது குடும்பத்தினரும் உறவினர்களும் ஆழ்ந்த சோகத்திற்குள்ளாகியுள்ளனர். சமூக இடைவெளிபேணவேண்டிய சூழலில் இறுதி நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

No comments: