மேற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் தமிழ் மொழி அறிமுகமாகிறது!


தமிழ், ஹிந்தி மற்றும் கொரியன் ஆகிய மொழிகளையும் பள்ளிகளில் மாணவர்கள் கற்கும்வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேற்கு ஆஸ்திரேலிய மாநில கல்வி மற்றும் பயிற்சிகள் தொடர்பான அமைச்சர் Sue Ellery தெரிவித்துள்ளார்.

Pre-primary முதல் ஆண்டு 12 வரையான மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்துள்ளதாகவும் இதற்கான பணி எதிர்வரும் ஜுலைமாதம் ஆரம்பமாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.தமிழ்மொழிக்கான பாடத்திட்டம் மேற்கு ஆஸ்திரேலியாவிலேயே முற்றுமுழுதாக வடிவமைக்கப்படவுள்ளதாகவும் மாணவர்கள் 2023ம் ஆண்டிலிருந்து மேற்கு ஆஸ்திரேலிய அரசபாடசாலைகளில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கற்கமுடியும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  நன்றி SBC  தமிழ்

No comments: