கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மறைந்துவிடடார் - தமிழ்முரசு அவுஸ்திரேலியாவின் கண்ணீர் அஞ்சலி

.



சகோதரி கலைமகள் ஹிதாயா ரிஸ்வி மறைந்துவிடடார். தமிழ்முரசில் பல கவிதைகளை எழுதிய ஒரு அட்புதமான கவிஞர் கலையுலகில் கலைமகள்  கவிதாயினி அவர்களின் மறைவு நமக்கு கவலை தருகிறது. அவருக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். 

அவரின் கவிதைகளை தமிழ் முரசில் பார்ப்பதட்கு தேடுதல் பெட்டியில் ( Search) 
ஹிதாயா ரிஸ்வி என்ற பெயரை கொப்பி பண்ணி போட்டு தேடினால் அனைத்து கவிதைகளையும் பார்க்கலாம். 


.
தாகம் தீர்(க்)கின்ற 
சிவப்புத் துளி 
நீரில் ஒரு தாமரை போல !
நோண்ட 
நோண்ட 
வளர்கிறது ,
மகிழ்கிறது 
என் கரத்தின் நகம் !

உன் நிறை சுமை தான் 
அதனால் 
விண்ணைத்  தொடாத மண்ணாய் 
மண்ணைத் தொடாத விண்ணாய் 
என் 
நாட்டில் பொருட்களின் விலை வாசி






அழிவுப் பாதை செல்வதா ? - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.
சாதி மத  பேத மின்றி
சரி  சமமாய்  மனிதர் நாம் 
மேதினியில்  ஒரு குடியாய் 
மிடுக்காய்  நிமிர்ந்து  வாழ்வோம் !

சிறிய  குருவிக் கூட்டமெல்லாம் 
  சேர்ந்தே இனிதாய் வாழ்கையில்
அறிவிற்  சிறந்த மனிதர் நாமும் 
அழிவுப் பாதை செல்வதா ?

உலகில் வாழும்  மனிதர்க்கெல்லாம் 
ஓடும் குருதி  ஒரே நிறம் 
கலகம் பண்ணிக் கடிந்து வாழ்தல் 
காட்டு விலங்கின் இழி குணம் 
பிறப்பில் மனிதர்  எவரு மிங்குப் 
பெரியர் சிறியர்  இல்லையே 
சிறக்கும் வாழ்வில் செயலில் நேசச் 
சிந்தை  யாலே  உயருவர் !
   
பழிகள் செய்து பாவியாகிப் 
பாரில் வாழ்வோர் சிறியவர் !
தெளிந்த அறிவு அன்பினோடு 
.சேர்ந்து வாழ்வோம் இனிமையாய்.!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

காலத்தால் அழியாத கலை ..! -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.


சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை

தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப்

பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின்

கண்ணிரண்டும் காதற் கயல் !

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்

சேலையுடுத்த கிளி செவ்வந்தி -ஆளை

மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள்

நயந்தொழுகும் அவை நின்று நரை !

சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !

வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை

இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது

எது வென்று புரிய வில்லை ஏம !


No comments: