காலத்தால் அழியாத கலை ..! -கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.


சேனைப் பயிரைத் திருடவரும் கிளியினத்தை

தேன்னிய குரல் காட்டித் திரத்துகின்ற -மானைப்

பெண்ணெற்று சொல்லின் பெரும் பிழையே தேவதையின்

கண்ணிரண்டும் காதற் கயல் !

சோலைக் கிளியைச் சூவென்று நானோட்டும்

சேலையுடுத்த கிளி செவ்வந்தி -ஆளை

மயக்கும் மாறனவன் ! மலரம்பே விழி மலர்கள்

நயந்தொழுகும் அவை நின்று நரை !

சோளன் கதிரோ ! சுவையான மாதுளையோ !

வாளென்ன நிற்கும் வடிவமது ?- காளை

இதயத்தைக் கண் மூடிக் கண்ட படி குத்துவது

எது வென்று புரிய வில்லை ஏம !


வெண்டை விரல் வடிவம் !வேல்வடிவம் உள்ளங்கை

கொண்டை சிறு பூசனிக்காய் !கோலையிதழ் தண்டுக்

கரங்கள் :காலிரண்டும் செங்கதலி ! ,கன்னியவள்

அருங்காதல் நெஞ்சத்து அலை !

வெடித்த வெள்ளரியின் விதை போன்ற பற்சிரிப்பு !

கடித்துண்ணத் தூண்டும் கன்னங்கள் - இடித்த

ஏலக்காய் போலே !இவள் பேச்சு தமிழ் மணக்கும்

காலத்தால் அழியாத கலை ..!


கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை 

No comments: