நீரில் ஒரு தாமரை..! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.

தாகம் தீர்(க்)கின்ற 
சிவப்புத் துளி 
நீரில் ஒரு தாமரை போல !

நோண்ட 
நோண்ட 
வளர்கிறது ,
மகிழ்கிறது 
என் கரத்தின் நகம் !

உன் நிறை சுமை தான் 
அதனால் 
விண்ணைத்  தொடாத மண்ணாய் 
மண்ணைத் தொடாத விண்ணாய் 
என் 
நாட்டில் பொருட்களின் விலை வாசி


கோடி,
கோடி
செல்வத்தை 
தேடி ,
தேடித் தந்து 
நாட்டின் 
வருமானத்தை கூட்டிச் செல்லும் 
கொழுந்து கூடைகள் 
நீயென .-
கவிதைகள் பாடுகிறது 

உறிஞ்சி துளைக்கும் அட்டைகளின் அக்கரமிப்பு
என்னை
தேனீ ராக மாற்றி,  
உன்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம் 

இனி -
குருதி துளிகளும் 
தேயிலையாய் மாறலாம்  .!

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments: