.
தாகம் தீர்(க்)கின்ற
சிவப்புத் துளி
நீரில் ஒரு தாமரை போல !
நோண்ட
நோண்ட
வளர்கிறது ,
மகிழ்கிறது
என் கரத்தின் நகம் !
உன் நிறை சுமை தான்
அதனால்
விண்ணைத் தொடாத மண்ணாய்
மண்ணைத் தொடாத விண்ணாய்
என்
நாட்டில் பொருட்களின் விலை வாசி
கோடி,
கோடி
செல்வத்தை
கோடி
செல்வத்தை
தேடி ,
தேடித் தந்து
நாட்டின்
வருமானத்தை கூட்டிச் செல்லும்
கொழுந்து கூடைகள்
நீயென .-
கவிதைகள் பாடுகிறது
உறிஞ்சி துளைக்கும் அட்டைகளின் அக்கரமிப்பு
என்னை
தேனீ ராக மாற்றி,
உன்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம்
வரண்ட நாவுகளுக்கு
சிவப்பைக் கொடுக்கலாம்
இனி -
குருதி துளிகளும்
தேயிலையாய் மாறலாம் .!
கலைமகள் ஹிதாயா ரிஸ்வி
No comments:
Post a Comment