08/10/2019 திரு­கோ­ண­மலை கன்­னியா வெந்நீர் ஊற்று பகு­தியிலுள்ள தொல்­பொருள் திணைக்­களம் உரி­மை ­கோரும் பிள்­ளை யார் கோயில் அமைந்­துள்ள பிர­தே­சத்தில் கோயில் அல்­லது பெளத்த விகாரை அமைப்­ப­தற்கோ அல்­லது திருத்த வேலைகள் செய்­வ­தற்கோ வழக்கின் தீர்ப்பு கிடைக்கும் வரை தடை உத்­த­ரவை திரு­கோ­ண­மலை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி மா.இளஞ்­செ­ழியன் பிறப்­பித்­துள்ளார்.



நேற்று இடம்­பெற்ற வழக்கு விசா­ரணை முடிவில் இந்த உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் வெந்நீர் ஊற்று பகு­திக்கு விஜயம் செய்­ப­வர்­க­ளுக்கு மட்டும் டிக்கட் விற்­பனை செய்­யவும் தொல்­பொருள் திணைக்­க­ளத்­துக்கு அனு­ம­தியும் நீதி­பதி யால் வழங்­கப்­பட்­டது.


மேலும் இம்­மாதம் 22ஆம் திகதி இவ்­வ­ழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி