உலக சினிமா : Beautiful (2008)

.
‘ஆழகான பெண்ணை நம்பாதே’ என்ற வாசத்தை ஆட்டோவில் எழுதப்பட்டிருப்பதை படித்திருப்போம். உண்மையிலேயே பெண்ணின் அழகு ஆண்களுக்கு ஆபத்தாக இருக்கிறதா ? இல்லை. பெண்ணின் அழகை தேடிப் போகும் ஆண்களுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது. உண்மையில் பெண்ணின் அழகு ஆண்களைவிட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தான் ஆபத்தாக இருக்கிறது.

ஆண்களுக்கு ஆபத்து என்று சொல்வது கூட அந்தப் பெண் தனக்கு வரும் ஆபத்தை அடுத்தவர் மீது திருப்பிவிடுவது மூலம் தன்னை அவள் தற்காத்துக் கொள்கிறாள். 

கிம்-கி-டுக் கதை எழுதியப்படம். அவரின் உதவியாளரும், புது இயக்குனருமான ஜுஹ்ன் ஜெய்-ஹங் இயக்கியிருக்கிறார். படத்தை கிம் கி டுக் இயக்கவில்லை என்ற குறை தவிர, அவரது படத்தில் இருக்கும் அனைத்து அம்சங்களும் இந்தப்படத்தில் இருக்கிறது. அதாவது அவரின் ’உடல் அரசியல்’.

ஒரு வேலை கிம்-கி-டுக் இயக்கி, ஜுஹ்ன் ஜெய்-ஹங் பெயரை இயக்குனராக போட்டுவிட்டாரோ என்று தோன்றும். கதையும், அதன் காட்சியமைப்பும் எல்லாம் கிம்-கி-டுக்கின் சாயல் அதிகமாக இருக்கும்.

ஒரு பெண்ணுக்கு அழகு எவ்வளவு பெரிய சாபம் என்பதை தனது கதையில் யூன்-யியாங் பாத்திரம் மூலம் காட்டுகிறார்.



ஆரம்பக்காட்சியில், யூன்-யியாங்யை பொறாமை கண்களால் அவளது தோழி பார்க்கிறாள். அவளை போல் தான் அழகில்லை என்பதை ஏக்க மூச்சு விடுகிறாள். யூன்-யியாங்யை வெறுப்பேற்ற தனது காதலனை அறிமுகம் செய்கிறாள். ஆனால், அவளுடைய காதலன் ஏற்கனவே யூன்-யியாங்கிடம் காதலை சொல்லி, அவள் ஏற்காமல் மறுத்திருக்கிறாள். 


அவள் எங்கு சென்றாலும் ஆண்களின் கண்ணில் ஒரு காமப்பார்வை பார்ப்பதை அவள் உணர்கிறாள். அதை கடந்து தனது இயல்பு பணிகளை யூன் செய்கிறாள். 

அவளது அப்பார்ட்மெண்ட் காவலாளி யூன் – சீயோல் அவளை ஒரு தலையாய் காதலிக்கிறான். அதேப் போல், யூன்-யியாங்யை இன்னொருவன் அவளுக்கே தெரியாமல் ஒருதலையாய் காதலிக்கிறான். யூன் தோழியின் காதலன் யூன்-யியாங்யிடம் தவறாக நடந்துக் கொள்ள, யூன் – சீயோல் அவனை அடிகிறான். இதனால், யூன்-யியாங்யின் தோழிக்கு அவள் மீது வெறுப்பு அதிகமாகிறது. அவர்களுக்குள் நட்பு முறிகிறது. 

மன வருத்தத்தில் தனது அப்பார்ட்மெண்ட்டுக்கு வரும் யூன், ஒரு தலையாய் காதலித்தவன் அவளுக்கு தொல்லை கொடுக்கிறான். அவனது காதலை அவள் மறுக்க, வெறிக் கொண்டு அவளை கற்பழிக்கிறான். காவலர்கள் அவனை கைது செய்கிறார்கள். 

அப்போது அவளை கற்பழித்தவன், “நான் தவறு செய்ததற்கு காரணமே உன்னுடைய அழகு தான் காரணம்.” என்கிறான். 

தான் கற்பழிக்கப்பட்ட அதிர்ச்சியில் மீள முடியாமல் சாலையில் நடக்கும் போது மயக்கம் போட்டு கீழே விழ, அவளை காப்பாற்ற ஆண்கள் ”நான், நீ” என்று போட்டிப் போடுகிறார்கள். ஆண்கள் தன்னை மொய்ப்பதற்கு காரணம் தன்னுடைய அழகு தான் என்று வெறுப்படைகிறாள். தன் அழகை எப்படியாவது சிதைத்துவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறாள். 

தனது உடல் ஏடையை ஏற்றுக்கொள்வதற்காக வெறித்தனமாக உண்கிறாள். ஏடைப்போடும் உணவு பொருள் வாங்க வழியில்லாத போது திருடி உண்கிறாள். ஆனால், அவள் திருடிய பொருளுக்கு யூன் – சீயோல் பணம் கொடுக்கிறான். திருடிய பொருளை கழிவறையில் வெறித்தனமாக சாப்பிடும் போது வயிற்று வலியில் மயங்கி விழுகிறாள். 

அப்போது, யூன் – சீயோல் வந்து அவளை பார்க்க, தன்னையறியாமல் அவளுக்கு முத்தம் கொடுக்கிறான். தன் தவறை உணர்ந்து, தன்னை தானே கண்ணத்தில் அடித்து அவளை மருத்துவமனையில் சேர்க்கிறான். 

அவளை பரிசோதித்த மருத்துவரும் அவளை பரிசோதிப்பது போல் மார்ப்பகங்களில் கை வைக்கிறான். யூன்-யியாங் சுதாரித்து கொண்டு மருத்துவரை தடுக்க, அவர் அதிகமாக சாப்பிட்டதால் வயிறு வலி வந்தது என்று சொல்லி சமாளிக்கிறான். 

வீட்டுக்கு வரும் யூன்-யியாங் தன்னை ஒல்லியாக்கி கொள்வதில் முடிவு எடுக்கிறாள். அதற்காக மாத்திரை சாப்பிடுகிறாள். உடற்பயிற்சி செய்கிறாள். உணவு குறைத்துக் கொள்கிறாள். அவள் தன்னை வருத்திக் கொண்டு செய்யும் காரியத்தால் தன்னை பலவீனமாக்கிக் கொள்கிறாள். உடற்பயிற்சியின் போது மயங்கிவிழுகிறாள். 

அவளை காப்பாற்றிய யூன் – சீயோல் அவளை போட்டோ எடுக்கிறான். பின்பு தனது அறையில் அவளது புகைப்படங்களை மாட்டி அழகுப் பார்க்கிறான். 

இன்னொரு பக்கம், தனது செய்கையால் யூன்-யியாங் தன்னை பலவீனமாக்கி வருவதை உணர்கிறாள். அவள் சாதாரனமாக உண்ணும் உணவுக்கூட அவளுக்கு செரிக்காமல் வாந்தி வருகிறது. கண்ணாடியில் தனது முகத்தை பார்க்கும் போது, எப்படி தன்னை தானே சிதைத்துக் கொள்ள முயற்சித்திருக்கிறேன் என்பதை புரிந்துக்கொள்கிறாள். 

தன் அழகு கொஞ்சம் கொஞ்சமாக சிதைவதை அவள் தடுக்க நினைக்கிறாள். அதிகமாக மேக்-கப், ஆண்களை கவரும்ப்படியான கவர்ச்சி உடையில் செல்கிறாள். ஒரு ஆண் அவளிடம் சிரித்து பேச, அவளும் அவனுக்கு இனங்கி உறவுக்காக கழிவறைக்கு செல்கிறாள். ஆனால், அங்கு சென்றதும் அவள் மனம் மாறுகிறது. அவனிடம் தப்பிக்க அவனை தாக்குகிறாள். அடிவாங்கியவன் யூன்-யியாங்யை தாக்க முயற்சிக்க, அப்போது யூன் – சீயோல் அங்கு வந்து அவளை காப்பாற்றுகிறான்.

யூன்-யியாங்னுக்கு தன்னை கற்பழித்தவன் பின் தொடர்வது போன்ற பிரம்மை ஏற்படுகிறது. சிறுசிறுக அவள் மன சிதைவு ஏற்படுவதை யூன் – சீயோல் புரிந்துக்கொள்கிறான். அதனால், அவளை நிழல் போல் தொடர்கிறான். மனசிதைவில் அவள் தாக்க நினைக்கும் ஆண்களையும் காக்கிறான். அவள் வீட்டுமுன் நாய் போல் கிடக்கிறான். 

யூன்-சீயோல் யூன்-யியாங் மீது காதல் இருந்தாலும், எல்லா ஆண்களை போல அவள் உடல் மீது ஆசை இருக்கிறது. யூன்-யியாங்க்கு யூன்-சீயோல் மீது பரிவு வருகிறது. ஆனால், அவளின் மனம் யாரையும் ஏற்பதாக இல்லை. சீயோல் அவளை காப்பாற்ற முடியாமல் செயலற்றவனாக இருக்கிறான். அதனால், தனது கை தூப்பாக்கியை அவளது கரத்தில் ஓட்டி வைக்கிறான். மயக்கத்தில் இருக்குன் யூன்-யியாங்னுடன் உடலுறவு கொள்கிறான். 

மயக்கத்தில் இருந்து விழிக்கும் யூன்-யியாங் புன்னகையுடன் அவனை ஏற்றுக்கொள்கிறாள். ஆனால், ஒரு கட்டத்தில் தன் கையில் இருக்கும் தூப்பாக்கியால் அவளை சுட்டுக்கொள்கிறாள். கொஞ்ச நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பும் யூன்-யியாங் இறந்த யூன் – சீயோல் உடலை பார்த்து அலருகிறான். 

கை தூப்பாக்கியோடு வெளியே வரும் யூன்–யியாங் கண்ணில் படும் ஒவ்வொரு ஆண்ணையும் சுட்டுக்கிறாள். அவள் கண்ணுக்கு ஒவ்வொரு ஆண்ணும் அவளை கற்பழித்தவன் போல் தெரிகிறது. யூன்–சீயோல்லை சுட்டதற்கு காரணம் இது தான் என்பது புரிகிறது. அப்போது, அங்கு வரும் காவலர்கள் அவளை சுட, அவள் இறக்கிறாள். 

பிரேதப் பரிசோதனையில் யூன்–யியாங்யின் உடல் நிர்வணமாய் கிடக்க, பரிசோதனை செய்யும் மருத்துவரும் அவளின் உடலை புணர, படம் முடிகிறது. 

அழகான பெண்ணின் உடலுக்கு அவள் இறந்தப்பின்னும் ஆண்களிடம் இருந்து விடுதலை கிடைப்பதில்லை என்பதை படம் நமக்கு காட்டுகிறது. பெண்ணுக்கு எதிராக நடக்கும் வன்முறை, அவளை எந்த அளவுக்கு பாதிக்கிறது, அதனால் தன்னை தானே வெறுக்க தொடங்குகிறாள் என்ற உண்மையை “Beautiful” படம் உணர்த்துகிறது. 

பெண்ணுக்கு இலைக்கப்படும் பாலியல் கொடுமை அவர்களின்  உடலை மட்டுமல்ல. மனதையும் சேர்த்து பாதிக்கிறது. ஆண்ணின் பாலியல் உணர்வுக்காக உயிரை, வாழ்க்கையை இழந்தப் பெண்கள் ஏராளம். அவர்களிடம் தங்களை காப்பாற்றிக் கொள்ள பெண்கள் அழகை ஆயுதமாக பயன்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

செடியில் இருக்கும் அழகிய ரோஜா பார்ப்பது அழகாக இருக்கும். அதை பரிப்பதில் இருந்து அது தனது மரணத்தை நோக்கி பயணிக்கிறது. ஏறக்குறைய பெண் உடல் மீது நடத்தப்படும் வன்முறையும் பூவை பரிப்பதற்கு சமம் தான். வன்கொடுமையில் இருந்து மீண்டு வந்த பெண் இயல்பாக வாழ்ந்தாலும், வாழும் ஒவ்வொரு நாளும் உடலாலும், மனதாலும் நரகத்தையும், மரணத்தின் வலியையும் அனுபவித்து வருகிறாள்.

No comments: