தமிழ் முரசு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது 15.03.2015

.
இன்று தமிழ் முரசு ஆறாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது 15.03.2015.

தமிழ்முரசின் ஆறாவது பிறந்தநாளான March 15ம்  தேதியில் தமிழ்முரசை  வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்களது நன்றிகள். அனைத்து வாழ்த்துகளையும் ஏற்றுக்கொள்கின்றோம். உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும் வரை தொடர்வோம்.
தொடங்கும் போது குறிப்பிட்டதுபோல் பக்கச் சார்பு இல்லாமல் தொடர்கின்றோம் என்பதை மகிழ்வோடு அறியத்தருகின்றோம்.
வாசகர்கள் மற்றும் படைப்பாளிகள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. கடந்த வருடம் பல புதிய படைப்பாளிகளை அறிமுகம் செய்துள்ளோம். இந்த ஆண்டும் புதியவர்கள் தொடர்வீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
ஆறாம்  ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கும் இந்த வேளையில் புதிய பகுதிகள், புதிய முயற்சிகள் பலவற்றை செய்யவுள்ளோம். நீங்களும் உங்களுக்கு பிடித்தவைகளை பட்டியலிடுங்கள். ஆதரவுக்கு நன்றிகள் பல.

அசிரியர் குழு 

No comments: