உலகச் செய்திகள்



சிரிய விமான நிலையத்தின் மீது 'ஐ.எஸ்' போராளிகள் தாக்குதல் : 20 பேர் பலி

23/12/2014 கிழக்கு சிரி­யா­வி­லுள்ள விமான நிலை நிலை­ய­மொன்றின் மீது ஐ.எஸ். போரா­ளி­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பிந்­திய தாக்­குதல் நட­வ­டிக்­கையின் போது குறைந்­தது 20 போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலையம் தெரி­வித்­தது.
ஐ.எஸ். போரா­ளிகள் அந்த விமான நிலை­யத்தின் மீதான தாக்­கு­தலை சனிக்­கி­ழமை பின்­னி­ரவு ஆரம்­பித்­தி­ருந்­தனர்.இத­னை­ய­டுத்து அவர்­க­ளுக்கும் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற மோதலில் 20 ஐ. எஸ் போரா­ளிகள் பலி­யா­கி­யுள்­ளனர்.
உயி­ரி­ழந்த போரா­ளி­களில் 19 பேர் சிரி­யாவைச் சேர்ந்­த­வர்­க­ளாவர் ஒருவர் மொரோக்கோ பிர­ஜை­யாவார்.இந்த மோதலின் போது இரா­ணு­வத்­தினர் கடும் ஷெல் தாக்­கு­தல்­களை நடத்­தி­யுள்­ளனர்.
அதேசமயம் அங்­கி­ருந்து பின் வாங்­கிச் சென்ற ஏனைய போரா­ளிகள் தம்­முடன் விமான எதிர்ப்பு ஏவு­க­ணைகள் பல­வற்றை எடுத்துச் சென்­றுள்­ள­தாக சிரிய மனித உரி­மைகள் அவ­தான நிலை­யத்தின் பணிப்­பாளர் ரமி அப்டெல் ரஹ்மான் தெரி­வித்தார்.
இது டெயிர் எஸோர் இரா­ணுவ விமா­னத்­த­ளத்­தினைக் கைப்­பற்ற ஐ.எஸ். போரா­ளி­களால் ஒரு மாத காலத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட இரண்­டா­வது முயற்­சி­யாகும்.
ஈராக்­கிய எல்­லையில் ஐ.எஸ் போராளிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேசங்களுக்கு அண்மையில் டெயிர் எஸோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 
 

No comments: