நாங்கள்....! கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

.

கூரையிலே ஆயிரங்கண் கொளுத்தும் வெய்யில்குடியிருக்கும் உல் வீட்டில் மாறி காலம்வாடையிலே உடலுறைந்து போகும் எங்கள்வாழ்க்கையெல்லாம் துன்பமாய் மாறிப் போகும்பாயில்லை படுப்பதற்கு எழுந்து நாங்கள்பசியாற உண்பதற்கு உணவு மில்லை

நோயில்லா வாழ்வெமக்கு அமைய வில்லை

நொடிப் பொழுதும் எமையின்பம் தழுவ  வில்லை

கால் வயிற்ருக் கஞ்சிக்கும் கடும் போராட்டம்
கருணையிலா சமூகத்தில் நாமோர் கூட்டம்
ஏழ்மை நிலை தானெமக்குத் தோழ ராகும்
இம்மையிலே நமது இடம் நரகமாகும்

பசிவரமே மாத்திரிகைகள் உண்போர் வாழும்
பாரினிலே வாழுகிறோம் தனவந்தர்கள்
வசிக்கின்ற வீட்டினிலே நாய் களுண்ணும்
வகையான உணவுகளும் எமக்கு இல்லை

பெற்றெடுத்த செல்வரினைக் கல்வி என்னும்
பெருங் கடலில் நீந்த வைத்துக்கரையில் சேர்க்க
பற்றெமக்கு மிகவுண்டு பணத் துடுப்பு
பகையாகிப் போனதானால் வீணில் வாழ்ந்தோம்

இத்தரையில் எமைப்போன்ற மாந்தர் தம்மை
ஏன் படைத்தான் இறைவனும் உயிரைத் தந்து
நித்தமுமே துயரத்தில் ஆழ்த்தி விட்டு
நித்திரையா செய்கிறான் நம்மைவிட்டு

நித்திரையோ செய்யவில்லை நிமலன் விட்டு
நெறியில்லா மாந்தர்கள் புரியும் சதியால்
இத்தரையில் கிடந்தது நாம் உழலல் எல்லாம்
இனியுந் தான் மாறிடவே வழிகள் காண்போம்

கலைமகள் ஹிதாயா ரிஸ்வி 

No comments: