மலையகத்தில் தொடர்ந்தும் அடைமழை; காசல்ரீ நீரத்தேக்கத்தின் கதவுகள் திறப்பு
மூவின மக்களும் ஒற்றுமையாக செயற்பட்டால் இலங்கையை சிங்கப்பூராக மாற்றியமைக்கலாம் - சங்கரத்ன தேரர்
13ஆவது திருத்தம் தொடர்பில் தீவிர கரிசனை ,இலங்கையின் செயற்பாடு ஏமாற்றமளிக்கிறது : மன்மோகன் சிங் தெரிவிப்பு
13ஐ ஒழிப்பதற்கான தெரிவுக்குழுவில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது- முபாறக்
13ம் திருத்தச் சட்டம் ஓர் வெள்ளை யானை - லலித் வீரதுங்க
13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்:
=========================================================================
13ஐ ஒழிப்பதற்கான தெரிவுக்குழுவில் முஸ்லிம் கட்சிகள் இடம் பெறக்கூடாது- முபாறக்
19/06/2013 13ஐ ஒழிப்பதற்கான
பாராளுமன்ற தெரிவுக்குழுவில் முஸ்லிம் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் கட்சிகள்
இடம் பெறக்கூடாது என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இது சம்பந்தமாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
இரண்டு
மாகாணங்கள் விரும்பினால் இணையலாம் என்ற ஷரத்தை அமைச்சரவையில் முஸ்லிம்
அமைச்சர்களின் அனுமதியுடன் நீக்கிய அரசாங்கம் ஏனைய திருத்தங்களை பாராளுமன்ற
தெரிவுக்குழுவினூடாக நிறைவேற்றிக்கொள்ளவுள்ளது.
சுதந்திரத்துக்குப்
பின்னரான இந்த நாட்டின் இனப்பிரச்சினைக்குத்; தீர்வாக பல
தெரிவுக்குழுக்கள் அமைக்கப்பட்டும் அவை எவையும் சிறுபான்மை மக்களுக்;கு
எதுவித நன்மையையும் கொண்டு வரவில்லை. இந்த நிலையில் இந்திய தலையீடு காரணமாக
13ஆவது திருத்தச்சட்டம் மூலம் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன.
மாகாணசபை
ஆட்சி முறை மூலம் இனப்பிரச்சினை தீராத போதும் ஓரளவு பெயரளவிலான சில
நன்மைகளாவது கிடைத்தன என்பதை மறப்பதற்கில்லை. இப்போது அவற்றையும்
நீக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதற்கு இந்த பாராளுமன்ற
தெரிவுக்குழு பயன்படுத்தப்படவுள்ளது.
நமது நாட்டின் பாராளுமன்ற
தெரிவுக்குழு எவ்வாறிருக்கும் என்பதை கடந்த காலங்களில் கண்டுள்ளோம் ஹலால்
பிரச்சினையை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட முஸ்லிம் அமைச்சர்களை
அதிகமாகக்கொண்ட அமைச்சர்கள் தெரிவுக்குழு கூட சுதந்திரமாக செயற்பட
முடியாதவாறு மூச்சுத்திணறிக் கொண்டிருக்கும் போது 13ஆவது திருத்த சட்டத்தை
மாற்றுவதற்கான தெரிவுக்குழு நிச்சயம் வடக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு
பாதிப்பையே ஏற்படுத்தும்.
ஆகவே வடக்கு கிழக்கு மக்களின்
வாக்குகளால் சுகம் அனுபவித்துக்கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸ்,
அதாவுள்ளா காங்கிரஸ், ரிசாத் காங்கிரஸ் என்பவை இந்த தெரிவுக்குழுவில்
இடம்பெறுவது என்பது முஸ்லிம்களைக் கொண்டே முஸ்லிம்களின் கண்களைக்
குத்துவதாகவே முடியும். ஆகவே இத்தெரிவுக்குழுவில் இடம்பெறுவதை மேற்படி
கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என முஸ்லிம் மக்கள் கட்சி
கேட்டுக்கொள்கிறது நன்றி வீரகேசரி
13ஐ திருத்தாமல் வடக்கில் தேர்தல் நடந்தால் வீதியில் இறங்குவோம்: விமல்
20/06/2013 அரசியலமைப்பின்
13ஆவது திருத்தச் சட்டத்தை மறுசீரமைத்த பின்பே செப்டெம்பர் மாதத்தில்
வடக்கில் தேர்தல் நடத்த வேண்டும். இந்த நிலைப்பாட்டிலேயே எமது கட்சி
உள்ளது. அதனை மீறியும் அரசாங்கம் செயற்படும் பட்சத்தில் நாட்டில் பல
எதிர்ப்பு அலைகள் தோன்றும். மக்களை இதற்காக வீதியில் இறக்குவோம்' என்று
தேசிய சுதந்திர முன்னணி தலைவரும் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சருமான
விமல் வீரவன்ச தெரவித்தார்.
பத்தரமுல்லையில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியாளார் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் இந்தியா சென்று இந்திரா காந்தியையும் பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தாலும் இந்தியாவின் லோக்சபாவின் கீழான நிர்வாகத்தில் இலங்கை அரசாங்கமும் ஐனாதிபதியும் இல்லை. அப்படி அவர்கள் நினைத்தால் தற்போதைய ஐனாதிபதி அதற்காக அடிபணியப் போவதுமில்லை. யுத்தம் நடைபெறும்போது எவ்வளவோ அச்சுறுத்தல்கள் வந்தபோதும் ஐனாதிபதி அவற்றைக் கணக்கில் எடுக்காமல் யுத்தத்தை வெற்றியீட்டினார். அதே போன்று இந்தியா இவ்விடயத்தில் கையடித்தால் அதனை அவர் கணக்கெடுக்கப் போவதில்லை' என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். 'இந்த நாட்டின் பயங்கரவாதத்தை உருவாக்கியது இந்தியாவே. இந்தியாவின் 'ரோ' அமைப்புடன் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பயிற்சியளித்து அவர்களுக்கு ஆயுதங்களையும் வழங்கினார்கள். அதே விடுதலைப் புலிகளே இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கொலை செய்தனர். இலங்கையில் 30 வருட கொடூர பயங்கரவாதத்தை உருவாக்கியவர்களும் இந்தியர்களே. அந்த கொடிய பயங்கரவாத்தை வெற்றிகொண்டவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தமிழ்த் தேசிய கூட்டமைப்பினரை விடுதலைப் புலிகளின் ஒர் எஜென்சியாகவே நாங்கள் அவர்களை பார்க்கின்றோம்' என விமல் வீரவன்ச தெரிவித்தார். இதன்போது, ஊடகவியலாளர் ஒருவர், '13ஆவது சீர்திருத்தமானது நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாகவே அதுவும் வட மாகாணசபைத் தேர்தலின் பின்னரே மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் நிமல் சிறிபால தெரிவித்துள்ளார். இதில் உங்களது நிலைப்பாடு என்ன?' என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் வீரவன்ச, 'வடக்கு தேர்தலுக்கு முன் பொலிஸ், காணி மற்றும் வடக்கு கிழக்கு இணைப்பு போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும். இதுவே எமது கட்சியின் நிலைப்பாடு. மேல் மாகாணத்தில்கூட முதலமைச்சரின் அனுமதிபெற்ற பின்பே மேல் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவதற்கான அதிகாரம் மாகாணசபைச் சட்டத்தில் உள்ளது. அதேபோன்று வடக்கில் தமிழ் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்பட்டால் அவர் வடக்கில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றும்படி உத்தரவிடுவார்' என்றார். இதேவேளை, '13ஆவது திருத்தத்தில் உள்ள காணி, பொலிஸ் அதிகாரங்களில் அரசு திருத்தம் கொண்டுவந்தால் முஸ்லீம் காங்கிரஸ் கட்சி, அரசாங்கத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. அவ்வாறு நடந்தால் கிழக்கு மாகாண சபையிலும் விரிசல் ஏற்படுமே?' என்று மற்றுமொரு ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார். அந்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'முஸ்லீம் காங்கிரஸ் கட்சி அரசின் எந்த விடயத்திலும் ஆதரவு அளித்த கட்சி அல்ல. கிழக்கில் தனித்து கேட்டார்கள். அங்கு மஹிந்தவின் ஆட்சியில்தான் பள்ளிவாசல்கள் உடைக்கப்படுகின்றன என தெரிவிப்பார்கள். அரசுக்குள் வந்தபின் அவ்வாறு பள்ளிகள் உடைக்கப்படவில்லை எனத் தெரிவிப்பார்கள். மறைந்த அமைச்சர் முஸ்லீம் காங்கிரஸை ஆரம்பித்ததே வட கிழக்கு இணைந்தபோது தான். அவர் கிழக்குடன் தெற்கு மக்கள் இணைந்து செயலாற்றவே அரசியலமைப்பை மாற்ற வேண்டும் எனத் தெரிவித்திருந்தார். தற்பொழுது உள்ள தலைமைத்துவம் இலங்கையில் உள்ள தூதுவராலயங்;கள் நிகழ்ச்சி நிரல்களுக்கு செயல்படுகின்றார்' எனத் தெரிவித்தார். நன்றி தேனீ |