இலங்கைச் செய்திகள்


அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

திருமலை துறைமுகத்தில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்

கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை

தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு


சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்

மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்

தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?


=====================================================================

அடை மழையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

15/05/2013 வடக்கு கிழக்கில் கரையோரப்பகுதிகளை தாக்கியிருந்த மகாசென் சூறாவளியுடன் மலையகத்தில் அடைமழை காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் ஹட்டனில் வௌ்ளத்தில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளதுடன் 1115 குடும்பங்களைச்சேர்ந்த 4 ஆயிரத்து எண்ணூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 700 க்கும் அதிகமானோர் கோவில்கள், பாடசாலைகள் மற்றும் பொதுத்தலங்களிலும் உறவினர்கள் வீடுகளிலும் தற்காலிகமாக தஞ்சம் புகுந்துள்ளனர்.
ஹட்டன் டிக்கோயாவைச்சேர்ந்த அம்ரித்தா (வயது 7), அவரது பாட்டியான சிவபாக்கியம் (வயது 65) லிந்துலை வலகாகொலனியைச்சேர்ந்த போல்ராஜ் ஷெரோ (வயது 4) ஆகியோரும் மாத்தறை மாவட்டத்தின் திகாகொட, பொலநறுவை திபுலகல மற்றும் கண்டி பஸ்பாகே பொரல ஆகிய பகுதியைச் சேர்ந்த தலா ஒவ்வொருவரும் என மொத்தமாக இதுவரையில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை டிக்கோயாவைச் சேர்ந்த கமலேஷ்வரி (வயது 42) என்ற பெண்மணி நீரில் மூழ்கி காணாமற் போயுள்ளார்.
இதில் போல்ராஜ் ஷெரோ என்ற சிறுமி மண்மேடு சரிந்து வீட்டின்மீது விழுந்ததையடுத்து வீட்டின் சுவர் உடைந்து வீழ்ந்ததில் புதையுண்டு இறந்துள்ளார்.


மேற்படி சிறுமியை பராமரித்து வந்த அவரது சித்தி நுவரெலியா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கரச்சி பிரதேசத்தின் நான்கு பேரும், கந்தவவெளியில் ஏழு பேரும், பூநரில் ஏழு பேருமான 18 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை மன்னாரில் 41 பேரும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சங்கானையில் 286 பேரும், தெல்லிப்பளையில் 247 பேரும், ஊர்காவத்துறையில் 133 பேரும், சண்டிலிப்பாயில் 78 பேரும், வேலனை மற்றும் காரைநகர் ஆகியவற்றில் தலா மூன்று பேரும், கோப்பாயில் ஒருவர் என மொத்தமாக 951 வரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் மன்முனைப்பற்றில் 15 பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாத்தறை மாவட்டத்தில் ஐவரும், பதுளையில் 20 பேரும், நுவரெலியாவில் ஹம்பகமுவ பிரதேசத்தில் 428 பேரும், நுவரேலியாவில் 95 பேரும், கொத்மலையில் 80 பேருமாக அம்மாவட்டத்தில் 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கண்டியில் 978 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தில் ஆயிரத்து 571 பேரும் மழை வௌ்ளம் மற்றும் சூறாவளியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரியில்
இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்த கடும்மழை அதனால் ஏற்பட்ட பெரு வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட 299 குடும்பங்களைச்சேர்ந்த 1571 பேர் பாதிக்கப்பட்டு ஆறு முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர். இப்பகுதியிலுள்ள அனைத்து தாழ்நிலப்பகுதியிலும் வெள்ளம் நிறைந்ததால் வீடுகள் வர்த்தக நிலையங்கள், பொதுத்தலங்கள், வீதிகள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளன. ஓப்பநாயக்க பிரதேசத்தில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 76 பேர் மண்சரிவு அபாயத்தினால் தமது இருப்பிடங்களிலிருந்து வெளியேறியுள்ளனர்.. இரத்தினபுரியில் 121 குடும்பங்களைச்சேர்ந்த 755 பேரும், பெல்மதுளையில் 115 குடும்பங்களைச் சேர்ந்த 580 பேரும் எலபாத்தையில் 38 குடும்பங்களைச்சேர்ந்த 151 பேரும் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளை இரத்தினபுரி இடர்முகாமைத்துவ செயலகம் கண்காணித்து வருகின்றது.
நாவலப்பிட்டியில்
நாவலப்பிட்டியில் மழை வௌ்ளத்தினால் பாதிக்கப்பட்ட சுமார் 250 பேர் சமகிகம மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இப்பகுதிகளில் மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் சரிந்துள்ளதால் மின்சார விநியோகமும், போக்குவரத்தும் நேற்றைய தினம் தடைப்பட்டிருந்தது.
அத்துடன் அனர்த்த நிலை காரணமாக பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தும் தடைப்பட்டிருந்தன. மாப்பாகந்த, கெந்தோபிட்டிய மற்றும் வெளிகம்பல ஆகிய பகுதிகளில் வீசிய கடும் காற்றினால் அப்பகுதிலுள்ள வீடுகளின் கூரைகள் காற்றில் அல்லுண்டுள்ளன. அதுமாத்திரமன்றி கிரிவுட் தோட்டத்தில் அமைந்திருந்த தொரவாதெனிய பாலம் உடைந்து வௌ்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.
டிக்கோயாவில்
நுவரெலியா மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக டிக்கோயாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பாட்டியும் பேத்தியும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் அதே குடும்பத்தைச் சேர்ந்த மற்றுமொரு பெண்மணி வௌ்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.
ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் மூன்றாம் தரத்தில் கல்வி பயின்ற அம்ரித்தா என்ற சிறுமி தனது பெரிய தந்தையான பாடசாலைவிட்டு வீடு வந்து சேர்ந்த சிறிது நேரத்திலேயே வீட்டுக்குள் வௌ்ளம் புகுந்தத்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
வீட்டின் கூரையை பிறித்து வீட்டிற்குள் இறங்கியே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. எனினும் வீட்டிலிருந்த கமலேஷ்வரி என்ற பெண்மணி அடித்துச்செல்லப்பட்டுள்ளார். இவரைத்தேடும் பணி தொடர்ந்து கொண்டிருந்த போதிலும் நேற்று மாலை வரை அவர் தொடர்பிலான தகவல்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.
சிறுமி பலி
லிந்துலை பலகாகொலனியில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததில் சித்தியுடன் நித்திரையில் இருந்து நான்கு வயது சிறுமிமண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தயாயார் இல்லாத சிறுமியை பராமரித்து வந்த சித்தி படுகாயமடைந்த நிலையில் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதேவேளை சிறுமியின் சடலம் நேற்று பிற்பகல் வரையில் நுவரெலியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்தது.
698 குடும்பங்கள் பாதிப்பு
கொட்டகல, டிக்கோயா மற்றும் வட்டவளை ஆகிய மூன்று பிரதேசங்களில் 698 குடும்பங்களைச்சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர். இதன்படி கொட்டகலையில் 150 குடும்பங்களும், டிரேட்டனில் 70 குடும்பங்களும், பெய்த்லியில் 6 குடும்பங்களும், பொரஸ்ரிக்கில் 9 குடும்பங்களும், யதன்சைட்டில்19 குடும்பங்களும் அந்தோனிமழையில் 13 குடும்பங்களும் கிறிஸ்பாமில் 24 குடும்பங்களும், சாமஸ்தோட்டத்தில் 47 குடும்பங்களும்,லொக்ஹில் தோட்டத்தில் 140 குடும்பங்களும், ஹரிஸ்டன் தோட்டத்தில் 180 குடும்பங்களும், டிக்கோயா நகரில் 132 குடும்பங்களும், போடைஸில் 54 குடும்பங்களும், நோர்வூட்டில் 74 குடும்பங்களும் தரவளையில் 10 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
கண்டியில்
கண்டி மாவட்டத்தில் பூஜாபிட்டி பிரதேசத்தில் 3 குடும்பங்களைச்சேர்ந்த ஆறு பேரும் கங்கவட்டகொரலை தொழுவ ஆகிய பகுதிகளில் 4 குடும்பங்களைச்சேர்ந்த 14 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் நாடு முழுவதிலும் அனர்த்தங்களினால் ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் கிராமசேவை உத்தியோகத்தர்கள் மட்டத்தில் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.
பாடசாலைகளுக்கு பூட்டு
மழைவௌ்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்கள் தஞ்சம் புகுந்திருந்த 6 பாடசாலைகளுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அட்டன் கல்வி வலயத்தில் விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
அட்டன் கல்வி வலயத்தைச் சேர்ந்த பொகவந்தலாவை சென் மேரிஸ் த.ம.வி, ஹோலி ரோஷரி த.ம.வி, செம்பியன் த.ம.வி, நோர்வூட் த.ம.வி, புளியாவத்தை த.ம.வி, நியூட்டன் த.ம.வி ஆகிய பாடசாலைகளுக்கே விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
விடுமுறை வழங்கப்பட்டிருந்த பாடசாலைகள் சனிக்கிழமைகளில் வகுப்புக்களை நடத்தி மாணவர்களின் விடுபட்ட கற்றல் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்ததப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.   நன்றி வீரகேசரி 







திருமலை துறைமுகத்தில் பாகிஸ்தான் யுத்தக் கப்பல்


15/05/2013 பாகிஸ்தான் கடற்படைக்குச் சொந்தமான யுத்தக் கப்பலொன்று திருகோணமலை துறைமுகத்தை நேற்று வந்தடைந்துள்ளது.
இக்கப்பல் எதிர்வரும் 17 ஆம் திகதி வரையில் இலங்கையின் கடற்பரப்பில் நங்கூரமிட்டிருக்கும்.
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் இராஜதந்திர- கலாசார மற்றும் இராணுவ உறவுகளை மேம்படுத்தும் நோக்கிலேயே இக்கப்பல் இலங்கை வந்துள்ளதாகக் கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சகலவிதமான தாக்குதல்களையும் முறியடிக்கும் திறன் கொண்ட இக்கப்பல் 123 மீற்றர் நீளம் கொண்டது. 2010 ஆம் ஆண்டு சீனா சங்ஹாயில் வெள்ளோட்டம் விடப்பட்டது 
நன்றி வீரகேசரி 



கள்ளத்தொடர்பால் ஏற்பட்ட வினை


15/05/2013 தங்காலை மரியா வத்தை தமிழ்கிராமத்திற்குள் நுழைந்த பெரும்பான்மை இனத்தவர்கள் சிலர் இங்குள்ள தமிழர்களின் உடைமைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
தமிழ் பெண்ணுக்கும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஆணொருவருக்கும் இடையிலான கள்ளத்தொடர்பே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
அக்கிராமத்திற்குள் நுழைந்த சிங்களவர்கள் சிலர், 15 தமிழர்களுடைய வீடுகளையும் ஒரு சிங்களவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக 8 பேரை தங்காலை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
நன்றி வீரகேசரி 



தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த பிக்குகளுக்கு யாழில் சான்றிதழ் வழங்கி வைப்பு


15/05/2013 இலங்கை கல்வி அமைச்சின் பிரிவேனாக் கிளையினால் நடத்தப்பட்ட வெளிக்கள தமிழ் மொழி பயிற்சி நெறியை பூர்த்தி செய்த தென்னிலங்கையைச் சேர்ந்த இருபத்தைந்து பிக்குகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கோப்பாய் கல்வியியற் கல்லூரியில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இந் நிகழ்விற்கு கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி எஸ்.அமிர்தலிங்கம் தலைமை தாங்கினார்.

தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஏற்றி வைக்க, கல்வியியற் கல்லூரி மாணவிகள் தேசிய கீதம் பாடினர்.
இந் நிகழ்வில் அகில இலங்கை பிரிவேனா கல்விப் பிரிவின் தமிழ்மொழி ஆலோசகர் உயங்காவே ஞானரத்னதேரர், பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு கைத்தொழில்கள் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, 51ஆது படைப்பிரிவின் கட்டளை தளபதி கேணல் பர்ணாந்து, விசேட அதிரடிப்படை பொலிசாரின் யாழ். மாவட்ட பொறுப்பதிகாரி வாஸ்பெரெரா, உதவிப் பொலிஸ் அத்தியட்சர் திலகரட்ண, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், முன்னாள் கல்வியியற் கல்லூரி பீடாதிபதி எஸ்.கே.யோகநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
தென்னிலங்கையில் தமிழ் கற்று கடந்த இரண்டு வாரங்களாக களப் பயிற்சியைப் பெறும் நோக்கில் யாழ் வந்த குறித்த பிக்குகளுக்கு தமிழ் மொழி மூலம் கலந்துரையாடுவது சம்பந்தமான பயிற்சிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோத காணி சுவீகரிப்பிற்கு எதிராக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மனுத் தாக்கல்


15/05/2013 மனுவை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ஆவதுடன், யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்தபோது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது.

மனுவை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ஆவதுடன், யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்தபோது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது.

மனுவை தாக்கல் செய்துள்ள அனைவருக்கும் மேற்படி பிரதேசத்தில் குறிப்பிடும் அளவு பரப்பளவுள்ள காணிகள் இருக்கின்றன. இவர்கள் மோதல் சமயத்தில் இப்பகுதியை விட்டு வெளியேறியவர்கள் ஆவதுடன், யுத்தம் முடிவுற்றதைத் தொடர்ந்து தம்முடைய சொந்தக் காணிகளுக்கு வர முயற்சித்தபோது இராணுவம் இவர்களை தடுத்து விட்டுள்ளது.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதி வாய்ந்த அரச அதிகாரி மற்றும் அரச காணி அளவையாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 



மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல் படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனக ஈஸ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம். ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானீ பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் மனுவை ஆவணப்படுத்தினர்.

காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், யாழ்ப்பாணத்தில் காணிகளை சுவீகரிக்கும் தகுதி வாய்ந்த அரச அதிகாரி மற்றும் அரச காணி அளவையாளர் ஆகியோரை பிரதிவாதிகளாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளனர். 

மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல் படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனக ஈஸ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம். ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானீ பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் மனுவை ஆவணப்படுத்தினர்.
மோகன் பாலேந்திரனின் அறிவுறுத்தல் படி ஜனாதிபதி சட்டதரணி கே. கனக ஈஸ்வரன் மற்றும் சட்டதரணிகளான எம். ஏ. சுமந்திரன், விரான் கொரேயா, லக்ஷ்மன் ஜெயக்குமார், பவானீ பொன்சேகா மற்றும் நிரான் அன்கிடெல் ஆகியோர் மனுவை ஆவணப்படுத்தினர்.

யாழ்ப்பாணத்தில் தமக்கு சொந்தமான காணிகளை இழந்துள்ள 1,474 பேர் இன்று மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தமது ரிட் மனுவை தாக்கல் செய்தனர். 
தம்முடைய தனிப்பட்ட சொந்தக் காணிகள் சட்ட விரோதமாக கைப்பற்றப்பட்டுள்ளதாக இவர்கள் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் நாட்களில் மேலும் 2,000 பேர் இதே போன்ற மனுவை தாக்கல் செய்யவுள்ளனர். 
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்புப் படையின் தலைமையகத்தை அமைப்பதற்கென 6,381 ஏக்கர் 38.97 பேர்சஸ் பரப்பளவுள்ள இடத்தை கைப்பற்றவுள்ளதாக காணி சுவீகரித்தல் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் பிரகடனம் செய்யப்பட்டுள்ள அறிவிப்பு மற்றும் பலாலி, காங்கேசன்துறை அதி உயர் பாதுகாப்பு வலையத்தை நிர்மாணிப்பதற்காக அப்பிரதேசத்தை கையளிப்பது பற்றிய அறிவித்தல் ஆகியவற்றிற்கு எதிராகவே இம்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
25.8 சதுர கிலோ மீற்றர் பரப்பளவுள்ள இப்பிரதேசமானது, 37.21 சதுர கிலோ மீற்றர் உள்ள கொழும்பு நகரத்தைப் போன்று 3/2 பரப்பளவு கொண்டதாகும். 
தற்போது இராணுவம் நிலை கொண்டுள்ள இப்பாரிய பிரதேசத்தை சுற்றி கம்பி வேலி இடப்பட்டுள்ளதோடு இராணுவ வீரர்கள் இப்பிரதேசத்தை சுற்றி காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பிரதேசம் ஒரு அதி பாதுகாப்பு வலயம் என எப்போதும் பிரகடனம் செய்யப்படவில்லை என்பதோடு 2011 ஆம் ஆண்டில் அவசர காலச் சட்டம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பிரதேசத்தை அதி பாதுகாப்பு வலையம் என பிரகடனப் படுத்துவதற்கோ அல்லது ஏனயை பொதுத் தேவைக்காக இதை சுவீகரிப்பதற்கான எந்த சட்ட அடிப்படையும் கிடையாது என்பதை மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளனர். 

நன்றி வீரகேசரி 


மடு திருத்தலத்திற்கான புகையிரத சேவை ஆரம்பம்

14/05/2013 சுமார் 27 வருடங்களின் பின்னர் மடு மாதா திருத்தலத்துக்கான ரயில் சேவை இன்று செவ்வாய்க்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

'மஹிந்த சிந்தனை எதிர்கால நோக்கு” என்பதனை நிறைவேற்றும் நோக்குடன் போக்குவரத்தில் காணும் மறுமலர்ச்சியில் இன்னுமோர் மைல்கல்லாக நிர்மாணிக்கப்பட்ட குறித்த புகையிரத சேவை வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மதவாச்சியிலிருந்து மடுவரைக்குமான 43 கிலோமீற்றர் கொண்ட ரயில் பாதை புனரமைப்பிற்கு 81.34 மில்லியன் டொலரை இந்திய நிறுவனமொன்று வழங்கியிருந்தது. 

அநுராதபுரத்திலிருந்து ஆரம்பமான இப்புகையிரத பயணத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம, வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாட் பதியூதீன், பாரம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே.காந்தா ,போக்குவரத்து உதவி அமைச்சர் ரோகன திஸாநாயக்க உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது ஆயிரக்கனக்காண பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.


நன்றி வீரகேசரி 




தமிழினி அடுத்த மாதம் விடுதலை; வடமாகாண தேர்தலிலும் போட்டி?
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இராணுவத்தினரால் வழங்கப்பட்டு வரும் புனர்வாழ்வுப் பயிற்சிகள் நிறைவடைந்த நிலையில் அடுத்த மாதம் விடுதலையாகவுள்ளார். இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். வவுனியாவிலுள்ள பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் தமிழினி, எதிர்வரும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் விடுதலையாகவுள்ளார் என்றும் பிரிகேடியர் குறிப்பிட்டார். தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வரலாம். ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார். நன்றி தேனீ