உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

.
திருமுறை முற்றோதல்   (70வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி)

 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 01.04.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை சைவசித்தாந்த கலாநிதி க கணேசலிங்கம் அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “நூறாவது பதிகம் - திருக்கயிலாயம் (நொடித்தான்மலை);” நந்தமர் ஊரன் தலைப்பில் உரையாற்றவுள்ளார். தொடர்ந்து ஏழாம் திருமுறையில் என்பத்திமூன்றாம் (திரு ஆரூர்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.


சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(
Cnr Burlington Rd
&
Rochester St
), Homebush

நேரம்: 01.04.2012 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

ஏழாம் திருமுறை 100வது பதிகம் “நொடித்தான்மலை;”
“நந்தமர் ஊரன்”
                   (சைவசித்தாந்த கலாநிதி க கணேசலிங்கம் அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை
திருமுறை முற்றோதல்;;
மேலதிக விபரங்களுக்கு:

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு க சபாநாதன்  Tel: 96427767
திரு மா அருச்சுனமணி Tel: 87460635

No comments: