திரைக்கதை, வசனம் நானில்லை...

.




கிராமத்தில் சொந்தமாக செக்கு ஓட்டு தொழில் செய்து வருபவன் அய்யாவு. அம்சாயா என்ற தன் தங்கையைத் தவிர அவனுக்கு வேறு சொந்தபந்தம் இல்லை. கொஞ்சம் போல் பழகும் விசுவாசமான பணியாள் சன்னாசி மட்டும் உண்டு.

தன் தங்கை அம்சாயாவுக்கு ஒரு நல்ல மாப்பிள்ளை தேடிக் கொண்டிருக்கும் வேளை, அய்யாவின் கிராமத்திற்கு அஞ்சலை என்ற ஒரு இளம் வயதுப் பெண் பெட்டிக்கடை குருவம்மா வீட்டிற்கு உறவுக்காரியாக வருகிறாள். முதலில் அஞ்சலையுடன் சின்னச் சின்ன சண்டைகள் பிடிக்கும் அய்யாவு, பின்னாளில் அஞ்சலை தாய்தந்தையற்ற அனாதை... வேறு போக்கிடம் இன்றி பெட்டிக்கடைக்காரியிடம் தஞ்சம் புகுந்ததை அறிந்து அவள்பால் அனுதாபம் கொண்டு அது காதலாக மலர, அதை தங்கை அம்சாயா கவனித்து விடுகிறாள். அவளுக்கும் அஞ்சலையின் குணா பாவங்கள் பிடித்துப் போகவே அவளே தன் அண்ணியாக வர ஆசைப்படுகிறாள்.

அஞ்சலை சீடை முறுக்கு போன்ற கைப்பதாங்கள் போடுவதில் கைதேர்ந்தவள் என்பதை புரிந்து கொண்ட அய்யாவு அவள் தொழிலுக்கு ஆரம்ப உதவிகள் செய்ய தொழில் நல்லபடி வளர அஞ்சலை அய்யாவை நன்றியுடன் பார்க்கிறாள்.

இடையிடையே தன் தங்கைக்கு பல மாப்பிள்ளைகளை நேரடியாக பார்த்து யாரும் சரியில்லாததால் அதிர்ச்சியுறும் அய்யாவை சன்னாசி சமாதானப்படுத்துகிறான்.

பெட்டிக்கடை குருவம்மாவிடம் இருக்கும் அஞ்சலை மேல் அந்த ஊர் பெரிய தனத்தின் பார்வை விழுகிறது. அஞ்சலை அதை நாசூக்காக தவிர்த்து வரும் வேளை திடீரென குருவம்மா இறந்துவிட, வயதுப் பெண் அஞ்சலை அந்த வீட்டில் தனிமையில் இருக்க நேரிடுகிறது. அதை சாதகமாக நினைத்து பெரியதனம் இரவு வேளை அஞ்சலையைத் தூக்கிவர ஆள் அனுப்ப அய்யாவு அதை தடுத்து சண்டையிட அதன் காரணமாய் பஞ்சாயத்து கூடுகிறது. பஞ்சாயத்தில் அஞ்சலைக்கும் அய்யாவுக்கும் தொடர்பு உண்டென பெரியதனம் பழிசுமத்த, தங்கை அம்சாயா, ‘‘ஆம் உண்மைதான்! அஞ்சலையே எனக்கு அண்ணியா வரப்போறவள். இப்போதே வீட்டிற்கு அழைத்துச் செல்கிறேன்’’ என்று கூட்டிச் செல்ல, அனைவரும் திகைப்பு. அஞ்சலை அம்சாயாவிடம் தனக்கும் அய்யாவு மேல் விருப்பம் இருப்பதை ஒப்புக் கொண்டு வீட்டோடு இருக்கிறாள்.
இந்நிலையில் பக்கத்து டவுன் கடை வீதியில் வைத்து ஒரு நல்ல மாப்பிள்ளையை அய்யாவு தானே பார்த்து தேர்வு செய்ய புரோக்கரை அணுகினான். புரோக்கர் அய்யாவிடம் அவளது தங்கையின் போட்டோ கேட்க, அய்யாவு அப்போது தன் கைவசம் தானும் தன் தங்கையும் சேர்ந்து எடுத்துக் கொண்ட போட்டோவைத் தந்து அனுப்புகிறான். 30 சவரன் வரை அய்யாவு சீர் செய்வதாக வாக்களித்து நிச்சயதார்த்தம் நடக்கிறது. திருமணம் நெருங்கும் வேளை.

தங்கைக்கு நகை செய்ய அய்யாவு தான் பணம் டெபாசிட் செய்து வைத்திருந்த நிதி நிறுவனத்தைத் தேடிப் போக அது மூடப்பட்டது கண்டு அதிர்கிறான். திருமணம் நெருங்கிய நிலையில் பரிதவித்து நிற்க விஷயமறிந்த அஞ்சலை தான் சிறுவயது முதல் சேர்த்து வைத்த பணம், நகைகள் தனது அம்மாவின் பூர்வீக நகைகள் என இருந்த மொத்தத்தையும் அய்யாவுவின் கையில் கொடுத்து சந்தோஷமாக திருமணத்தை நடத்தும்படி கூறுகிறான். அய்யாவும் நன்றியுடன் கண்கலங்க... திருமணம் நடக்கிறது.

திருமணம் முடிந்து அய்யாவு புறப்படும் வேளை. சம்பந்தி வீட்டினர் ஒருநாள்  இருந்து போகலாம் என்று கூற அஞ்சலை சன்னாசி புறப்பட அய்யாவு மட்டும் அங்கு தங்குகிறான். அன்று இரவு தங்கைக்கு சாந்தி முகூர்த்தம் நடக்கிறது. மறுநாள் காலை அய்யாவு குளித்து புறப்படும் வேளை. சம்பந்தி வீட்டினர் அய்யாவை வீட்டின் ஒரு ஹாலுக்கு அழைத்துச் செல்ல அங்கே பரிசத் தட்டுகள் இரண்டு வைக்கப்பட்டுள்ளன.

‘‘உட்காருங்க சம்பந்தி தட்டு மாத்திக்குவோம்’’ என்று மாப்பிள்ளை வீட்டார் கூற, அய்யாவு, ‘‘எதுக்கு?’’ என்று குழம்ப, ‘‘பொண்ணு எடுத்து பொண்ணு கொடுக்கறதுதானே நம்ம பேச்சு. உங்க தங்கச்சிய எங்க பையன் கட்டிட்டான். அடுத்தது எங்க வீட்டுப் பொண்ணை அதாவது மாப்பிள்ளை தங்கச்சியை நீங்க கட்டிக்கோங்க’’ என்று கூற, அய்யாவு அதிர்ந்து, தான் அப்படிப் பேசவில்லை என்கிறான்.

‘‘நீங்க பொண்ணோட இருக்கற போட்டோவும் சேர்த்து அனுப்பிட்டு இப்ப இப்படி அடம்பிடிச்சா எப்படி?’’ என்று சண்டையிட, அய்யாவு தான் ஏற்கனவே ஊரில் அஞ்சலைக்கு வாக்குத் தந்த விதம் கூற, ‘‘அவ முக்கியமா? உங்க தங்கை முக்கியமா? ம்.. இப்ப தட்டு மாத்தலேன்னா சாந்தி முகூர்த்தம் முடிஞ்ச உங்க பொண்ணோட நீங்க ஊர் போகலாம்’’ என்று உறுதியுடன் மிரட்ட, அய்யாவு தங்கை வாழ்க்கை பறிபோய்விடும் என்ற பயத்தில் தட்டு மாற்றப் போக, அதைத் தட்டிவிட்டு தங்கை அம்சாயா, ‘‘எனக்கு அண்ணி அஞ்சலைதான். எனக்கு சாந்தி முகூர்த்தம் நடத்தி நயவஞ்சகமாக இப்படி நாடகமாடுவதை நான் எந்தக் காரணம் கொண்டும் ஏற்கமாட்டேன். நான் தேவையென்றால் என் கணவன் என்னை வந்து கூப்பிட்டுக் கொள்ளட்டும். நான் அண்ணனுடன் ஊர் போகிறேன்’’ என்று புறப்பட, மாப்பிள்ளை வீட்டார், ‘‘நீ மறுபடி உள்ளே வர முடியாது’’ என்று கூற, அய்யாவு, ‘‘அவசரப்படாதே’’ என்று கூறியும் தங்கை அம்சாயா அண்ணனுடன் வண்டி ஏறி ஊருக்கு புறப்பட்டு விட, மாப்பிள்ளை வீட்டார் வன்மத்துடன் முறைத்து நோக்குகின்றனர்.

தங்கையுடன் ஊர் திரும்பிய அய்யாவைக் கண்டு அதிர்ச்சியுற்ற அஞ்சலை நடந்தவைகளைக் கேள்விப்ட்டு தான் இடையூறாக இருக்க விரும்பவில்லை என்று வீட்டை விட்டு வெளியேற அம்சாயா தடுத்து விடுகிறாள்.
‘‘ஆயிரம் இருந்தாலும் நீ உன் கணவன் வீட்டில் இல்லாத நேரம் நடந்த சண்டையில் வீட்டை விட்டு வந்திருக்கக் கூடாது’’ என்று அஞ்சலை அம்சாயாவிடம் கூற, அம்சாயா, ‘‘அவர் அந்த நேரத்தில் இல்லாதது எனக்கு அவர் மீதும் சந்தேகத்தை உண்டு பண்ணியது’’ என்று கூறுகிறாள். உடனே அஞ்சலை அய்யாவிடம், ‘‘இவள் விபரம் புரியாது பேசுகிறாள். நீங்கள் தயவு செய்து மீண்டும் சென்று உங்கள் தங்கை கணவனை சந்தித்துப் பேசிவாருங்கள்’’ என்று அனுப்பி வைக்கிறாள்.

அய்யாவு மாப்பிள்ளையை சந்தித்து பேச மாப்பிள்ளை அய்யாவை வீட்டிற்கு அழைத்து காப்பி கொடுத்து, ‘‘என் வீட்டார் என்னிடமே பொய் சொல்லி விட்டனர். ஏற்கனவே என் தங்கை திருமண மேடை வரை வந்து மாப்பிள்ளை மாரடைப்பால் இறந்ததால் திருமணம் தடைபட்டு விட்டது. அன்றிலிருந்து இதுவரை திருமணம் நடக்கவில்லை. எனவே நான் என் தங்கைக்காக எந்த வரதட்சணையுமின்றி நான் பெண் எடுத்து பெண் கொடுக்கும் எண்ணத்தில் இருந்தேன்.

நான் பெண் எடுத்து பெண் கொடுக்கும் எண்ணத்தில் இருந்தேன். உங்கள் தங்கை போட்டோவுடன் உங்கள் போட்டோவும் இணைத்து நீங்கள் தந்ததால் நீங்கள் சம்மதித்ததாய் நினைத்தேன். இரண்டு திருமணங்களையும் ஒன்றாக நடத்த நான் முடிவெடுத்தபோது, ‘‘உங்கள் வீட்டில் உங்களைத் தவிர பெரியவர்கள் யாரும் இல்லாததால் இரண்டு திருமண வேலைகளை ஒரே நேரத்தில் தங்களால் கவனிக்க முடியாதென்றும் முதலில் உங்கள் தங்கை திருமணத்தை முடித்து பின் உங்களது திருமணத்தை வைத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கேட்டுக் கொண்டதாய் என்னிடம் கூறினார்கள். நான் அதை நம்பினேன். ஆனால் இப்போதுதான் எனக்கே தெரிய வருகிறது. என் தங்கைக்கு நீண்ட காலமாக வரன் அமையாததால் உங்களை மட்டுமல்ல என்னையும் சேர்த்து எங்கள் தாய் தந்தையர் ஏமாற்றி விட்டனர் என்று’’ என்று உருக்கமாகக் கூறி நிறுத்த அய்யாவுக்கு மாப்பிள்ளை நல்லவராக இருக்கிறார் என்று சின்ன நிம்மதி வந்தது.

தொடர்ந்து மாப்பிள்ளை, ‘‘சரிங்க! என்னைப் பெத்தவங்க தப்பு பண்ணிட்டாங்க. அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கறேன். இப்ப உங்ககிட்ட நான் பிச்சையா கேட்கறேன். என் தங்கைக்கு நீங்க ஏன் வாழ்வு தரக் கூடாது?’’என்று இடியை இறக்க ஆடிப்போன அய்யாவு அஞ்சலை பற்றிக் கூறுகிறான்.

அதற்கு மாப்பிள்ளை, ‘‘நாம ஒன்னுக்குள்ள ஒண்ணு. அது மூனாம் மனுஷி. இருந்தாலும் நீங்க வார்த்தை கொடுத்ததாலே என் சித்தப்பா பையனுக்கு எல்லா செலவும் பண்ணி நானை அந்தப் பொண்ணு கல்யாணத்தை நடத்தறேன். நீங்க என் தங்கைக்கு வாழ்வு கொடுங்க’’ என்கிறான்.

‘‘அந்தப் பொண்ணு என்னை ரொம்ப நம்பிட்டிருக்கா மச்சான்’’
‘‘உங்க தங்கச்சி கூட காலம் பூராம் வாழப்போற என்னைவிட உங்களுக்கு அந்தப் பொண்ணுதான் உசத்தியா?’’
‘‘அப்படியி¢ல்லீங்க’’

‘‘மச்சான். என் தங்கச்சி மணமேடை வரைக்கும் வந்து அது நின்னு போனதாலே அவ ராசியில்லாதவன்னு எவனுமே சீந்த மாட்டேங்கறான்.  அப்படி ஒரு அவஸ்தையும் பிரச்சனையும் இந்த வீட்டோட நிம¢மதியையே கெடுத்துட்டிருக்கு மச்சான்’’

‘‘புரியுது மச்சான். நான் இல்லேங்கலை. அதுக்காக உங்க வீட்டுப் பிரச்சனைய மூனாம் மனுஷந் தலையில உங்கப்பா அம்மா ஏத்த நினைக்கறது நியாயமில்லே’’

‘‘மூனாம் மனுஷனா?’’ டக்கென எழுந்த மாப்பிள்ளை, ‘‘தப்புதாய்யா கட்னதாலே உங்கிட்ட மூனாம் மனுஷன் உங்கிட்ட பிச்சை கேட்டது என் தப்புதான். புறப்படு...’’என்று கத்த, அய்யாவு அதிர்ச்சியுடன் ‘மச்சான்‘ என்று எழ, ‘‘யோவ்! உன் தங்கச்சி எங்கிட்ட ஒரு வார்த்தை கூட சொல்லாம சாந்தி முகூர்த்தம் முடிஞ்ச மறுநாளே உங்கூட புறப்பட்டுப் போயிட்டாளே. ஊர்காரர் எல்லாம் என்னை முன்னால விட்டு பின்னால என்ன பேசனாங்க தெரியுமா? இவன் சரியான ஆம்பளை இல்லை போல இருக்கு. மறுநாளே இவன் சம்சாரம் சொல்லாம கொள்ளாம போயிட்டான்னு காரித்துப்பனாங்க. எனக்கு நாண்டுக்கிட்டு சாகற மாதிரி  இருந்துச்சு. இதுவரைக்கும் அதைப்பத்தி உங்கிட்ட ஒரு வார்த்தை கேட்டனா? இல்லை... ஆனா நீ எவ்வளவு ஈஸியா உன்னை மூனாம் மனுஷன்டே? போ வெளியே போ’’ ‘‘மச்சான்’’ ‘‘பேசாதே! போயிடு ஆனா ஒன்னு நீ என் தங்கச்சிய கட்டுலேங்கறதுக்காக ஒரு ராத்திரி எங்கூட குடுத்தனம் பண்ண உன் தங்கச்சிய வேண்டான்னு ஒதுக்க மாட்டேன். என்னைக்கும் அவதான் என் பொண்டாட்டி....புறப்படு’’ என்று திட்டவட்டமாகக் கூறிவிட அய்யாவு செய்வதறியாது ஊர் திரும்புகிறான்.

நடந்தவைகளை அறிந்த அஞ்சலை அம்சாயாவைத்திட்டு முதலில உன் கணவனைப் பார்த்து மன்னிப்பு கேட்டு நீ அவருடன் வீட்டோடு தங்கி, உன் அண்ணன் விவகாரம் பிறகு பார்க்கலாம் என்று அனுப்பி வைக்கிறாள். அதன்படியே அம்சயா ஊரில் நுழைய வழியிலேயே தன் கணவனை சந்திக்க நேருகிறது. கண்கலங்கி தான் சொல்லாமல் போனதற்கு மன்னிப்பு கேட்கிறாள். கணவன் ‘‘ பரவாயில்லை நீ வீட்டில் போய் இரு. நான் சாயந்திரம் வருகிறேன்’’ என்று கூறிபோக அம்சயா புருஷன் வீட்டை அடைகிறாள்.
அங்கே வாசலிலேயே அவளை மடக்கிய மாமியார் மாமனார் மற்றும் மாமன் கூட்டம் வாய்க்கு வந்தபடி ஏசி ‘மறுபடி ஏன் திரும்பி வந்தே’ என்று கேட்க ஒரு உறவினர் ஆள், ‘‘¢அட! பூனை ஒருநாள் ரூசி கண்டிருச்சி திரும்பி வராம என்ன பண்ணும்?’’ என்று கொச்சையாகப் பேச இன்னொருவன் ‘‘அந்த ரூசிக்கு அவங்க ஊர்லயே யாரையாவது பார்க்கச் சொல்லு’’ என்றதும் பொறுக்க முடியாத அம்சாயா மாமியாரைப் பார்த்து த்தூ! உன் புள்ளை தாலிகட்ன ஒரு பொண்ணை வாசல்ல வச்சி எவ எவனோ பொறம்போக்குக பச்சை பச்சையா பேசறாங்க. அதை கேட்டு ரசிக்கறயே நீயெல்லாம் ஒரு பொம்பளை? இனி நான் இந்த வீட்டு வாசல் மிதிக்கமாட்டேன். என் கூட ஒருநாள் குடித்தனம் பண்ணபின் நான் வேண்னா என்னைக் கூட்டிவந்து தனிக் குடித்தனம் வைக்கட்டும் நான் போறேன்’’ என்று வெளியேறி விடுகிறாள்.

இதற்கிடையே அஞ்சலை தன்னால் தானே பிரச்சனை என்று ஊரைவிட்டு வெளியேற அவளை மடக்கிய அம்சாயா ‘‘சத்தியம் செய். இன்னொரு முறை நீ புறப்பட்டால் நான் தற்கொலை செய்வேன்’’ என்று தடுத்து விடுகிறாள்.

சில நாட்களில் அம்சாயா வாந்தி எடுத்து கர்ப்பமானது தெரிகிறது. நல்ல செய்தியை சொல்ல அய்யாவு மாப்பிள்ளை வீட்டுக்கு வர மாப்பிள்ளை அங்கு இல்லை. ஆனால் சந்தோஷமாக விஷயத்தை சொன்னதும் சில உறவினர்கள், ‘‘ யாருக்கு உண்டாச்சு?’’ என்று கேட்க அய்யாவு அனைவரையும் அடித்து உதைத்து வந்து விடுகிறான்.

மறுநாள் மாப்பிள்ளை அய்யாவு ஊருக்கு வர தன் கணவனை வரவேற்க அம்சாயா வாசலுக்கு ஓட அய்யாவு வாங்க மாப்பிள்ளை என்று அழைக்க, வந்த மாப்பிள்ளை வாசலிலேயே நின்று ‘‘என் சொந்தபந்தம் உங்கண்ணகிட்ட தப்பா பேசிட்டாங்கன்னு கேள்விப்பட்டேன். என்னை மன்னிச்சிடு. ஊர் உலகம் ஆயிரம் சொன்னாலும் உன் வயித்துல வளர்றது என் குழந்தைங்கறது எனக்கு சாமி சத்தியமாத் தெரியும். கர்ப்பமா இருக்கற நீ மனக்கஷ்டத்தோட இருந்தா உனக்கும் குழந்தைக்கு ரெண்டு பேருக்கும் நல்லதில்லை. அதான் சொல்லிட்டுப் போலாம்னு வந்தேன்’’ என்கிறான். அனைவரும் மகிழ்ந்து வீட்டினுள் அழைக்க ‘‘இல்லை! மூனாம் மனுஷன் வீட்டுக்குள்ளே நான் வரலை. என் தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயமாயிடுச்சு. அதை முடிச்சுட்டு வேறே வீடு பார்த்துட்டு உன்னை வந்து கூட்டுப் போறேன்’’ என்று சென்றுவிட அனைவரும் மனம் வருந்துகின்றனர்’’ எப்படியோ அவரது தங்கை திருமணம் முடிந்ததும் தனக்கும் வாழ்க்கை கிடைக்கும் அண்ணன் அஞ்சலைக்கும் திருமணம் நடக்குமென அம்சாயா சற்று நிம்மதியடைகிறாள்.
சில நாட்கள் கழித்து மாப்பிள்ளையிடமிருந்து அய்யாவுக்கு திருமணப் பத்திரிக்கை வருகிறது. திருமணம் நடக்கும் ஒரு நாள் முன்பு,  முன்பொருநாள் அஞ்சலையின் மீது கை வைத்து அய்யாவால் அடிபட்ட, பெரியதளம் திடீரென ஆள் விட்டு அய்யாவை அழைக்கிறான்.

அய்யாவு பெரியதளத்தை சந்தித்தபோது பெரியதளம், ‘‘உன் மச்சானின் தங்கைக்கு நிச்சயமான மாப்பிள்ளை என் ஆள்தான் ஏற்பாடும் என்னோடத்தான். இந்தக் கல்யாணம் நல்லா நடக்கணும்னா அஞ்சலைய நீ இப்பவே எங்கிட்ட அனுப்பு. இல்லே கல்யாண மாப்பிள்ளைய நான் ஊரை விட்டே அனுப்பிடுவேன். ரெண்டாவதாவும் கல்யாணம் தடைப்பட்டா அதுக்கப்புறம் ஆயுசுக்கும் கல்யாணம் நடக்காது என்ன சொல்றே?’’ என்று மிரட்ட அய்யாவு, ‘‘ ஒரு பொண்ணை உங்கிட்ட அனுப்பி அவ மானத்தை உங்கிட்ட அடகு வைக்கறதை விட உன் கையக்காலை ஒடிச்சு அவ மானத்தைக் காப்பாத்திட்டு கல்யாணப் பொண்ணுக்கு நான் தாலியக்கட்றேன்’’ என்று கூறி பெரியதளத்தையும் ஆட்களையும் பந்தாடிவிட்டு மாப்பிள்ளையிடம் விபரம் கூற அவரது ஊர் நோக்கிச் செல்கிறான். ஆனால் வீட்டில் யாரும் இல்லை. விசாரித்தபோது ‘‘மாப்பிள்ளை போன் செய்து திருமணத்தில் உடன்பாடில்லை என்று கூறியதால் மணப்பெண் தற்கொலைக்கு விஷம் அருந்தி விட்டாள். அனைவரும் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளனர் என்று கூற எல்லோரும் அலறியடித்து ஆஸ்பத்திரிக்குச் செல்ல அவள் உயிர் பிழைத்தாளா? அஞ்சலை என்ன ஆனாள்? என்பது இறுதி முடிவு?

இது ஒரு படத்தோட திரைக்கதை. (கொஞ்சம் பழசான படம்) என்ன படம்னு கண்டுபிடிச்சிட்டிங்களா?

சொக்கத்தங்கம் கதை திரைக்கதை வசனம் கே பாக்யராஜ் 

நன்றி:tamilmyil 

No comments: