சிட்னியில் தமிழ் எழுத்தாளர் விழா 2013




அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச் சங்கம் வருடாந்தம் நடாத்தும் தமிழ் எழுத்தாளர் விழா அடுத்த ஆண்டு சிட்னியில் நடைபெறவிருக்கிறது.
எழுத்தாளர் விழா தொடர்பான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு சங்கத்தின் தலைவர் திரு. பாடும்மீன் சு. சிறீகந்தராசா அவர்கள் தலைமையில் நடைபெறும்.  தமிழ் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள் அனைவரையும் இக்கலந்துரையாடலில் கலந்துகொள்ளுமாறு அன்புரிமையோடு வேண்டுகிறோம்.
இடம்: ஹோம்புஷ் ஆண்கள் பாடசாலை – Bridge Road, Homebush
காலம்: 09.12.2012 ஞாயிறு காலை 10.00 மணி முதல் 12 மணி வரை.
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கியக் கலைச்சங்கம்.

No comments: