பில்லா -2 இருத்தலியல் -சின்னப்பயல்

.

.

































அடக்க நினைக்கும் கூட்டத்திலிருந்து தப்பித்து அகதியாக ஒதுங்கும்  ஒரு மனிதனின் கதை. "அங்கிருக்கப்பவேநீ ஒழுங்கா இருந்ததில்லஇப்பவும் அப்டியே தான் இருக்கியாடா"ன்னுஅக்கா கேட்கிறார்.தவறி விழுந்த  துப்பாக்கியைத் தடவி எடுத்து  அஜித் தன் பேண்ட் பாக்கெட்டில் வைக்கும்போது. 
சீண்டப்படுதல்,ஒதுக்கிவைத்தல்மிருகம் போல நடத்தப்படுதல்,முழுக்க அங்கீகாரம் கிடைக்கவிடாது  தள்ளிவைத்திருத்தல்தாம் நினைத்த அமைதி வாழ்க்கையைஎல்லோரும் போல வாழ நினைப்பவனை வாழ விடாது தடுத்தல்இதெல்லாம் தொடர்ந்தும் நடந்தால் ஒருவன் என்னதான் செய்வான் இதற்கும் மேலாக சொந்த நாட்டிலேயே அகதி போல நடத்தப்படுதல் என்பன அவனின் அடையாளங்கள்"அடங்க மறு அத்து மீறு"என்றே களம் இறங்கியிருக்கிறார் தல’ அஜித். 
இதுபோல பல படங்கள் ஆங்கிலத்தில் வந்திருந்தாலும் எனக்கு உடனே ஞாபகத்திற்கு வருவது First Blood தான்சொந்த நாட்டின் ராணுவ வீரனை யார் எதிரி என்றே தெரியாத வியட்நாம் காட்டில் கொண்டுபோய் விட்டு அவனின் அமைதி வாழ்க்கையைச் சீரழித்து அதில் அவனுக்கு வரும் முறையான கோபத்தை மிகுந்த வன்முறையோடு  வெறியாட்டமாகஆடியிருப்பதைக்காட்டிய படம் அது.ஒரு புழுவைத் தொடர்ந்தும் சீண்டினால் அது தன் கோபத்தைக் காட்டத்தான் செய்யும்இவனாலும்பொறுத்துக்கொள்ளத்தான் முடியவில்லை. அவனுடைய எண்ணமெல்லாம் தான் ஒரு கேங்க்ஸ்டராக மாற வேண்டும் என்று முடிவெடுத்து செய்யவில்லை. தான் உயிருடன் இருக்கவும் தன்னையும் ஒரு சக மனிதன் என்று நினைக்கவும் வேண்டுமென்ற வெறி கொண்டவனின் இலக்கில்லாமல்பயணிக்கும் வாழ்க்கை வரலாறு இது. 
Prequal , Sequal என்பதிலெல்லாம் எனக்கு உடன்பாடில்லைஇதை ஒரு தனிப்படமாகவே பார்க்கலாம்என்ன அவரின் டேவிட் பில்லா என்ற பெயர் மட்டும் ஒத்துப்போவதால் அப்படிச் சொல்லிக்கொள்ளலாம்ஏதிலியாக வந்தவர்கள் , எவ்வளவுதான் தகுதியுள்ளவராயிருப்பினும் , படிப்பிலும், அனுபவத்திலும் உயர்ந்தவராயிருப்பினும் வாழ்க்கை நாமெல்லாம் வாழ்வது போன்று அவர்களுக்குக் கிடைப்பதில்லைதான். 
மீன்களை அனுப்பிவைக்கும் சம்பவத்தில் அவர்களை மாட்டவைப்பதில்இருந்து தொடங்குகிறது வலை. அருமையாகச் சிக்கிக்கொள்கிறார் அஜித்.ஒவ்வொரு தடவை சிக்கியபோதிலும்  தனக்கிருக்கும் இயல்பான கோபத்தினாலும்திருப்பியடிக்கும்  திறமை இருப்பதாலும் லாவகமாத் தப்பிக்கிறார். " என் வாழ்க்கைல ஒவ்வொரு நிமிஷமும்ஏன் ஒவ்வொரு நொடியும் நானாச்செதுக்கினதுடான்னு அடிபட்ட புலி போலச் சீறுகிறார்.எத்தன பேருக்கு அப்படி ஒரு வாழ்க்கை அமையும் ? , நாமெல்லாம் வாழ்க்கைல பயணிக்கறதில்லஅடித்துத்தான் செல்லப்படுகிறோம்அடித்துச் செல்லப்படும் வாழ்க்கையையும் நம்மளால செதுக்க முடிந்தால்?,,,ஹ்ம்ம்...அதுதான் இந்த டேவிட் பில்லாவின் வாழ்க்கை.
அவனுக்கு பயம்ங்கற ஒண்ணு  இருக்கறதேயில்லதளைகள் இல்லாதஒருவனுக்கு பயம் இருக்கணும்ங்கற அவசியம் இருப்பதில்லை.எதிர்ப்போர்  யாராக இருப்பினும் தம்  வழியை மறைப்பவராயின் அவர்களைப் போட்டுத்தள்ளி விட்டு முன்னேறுகிறான் பில்லா.வகை தொகையில்லாதபடி கொலைகள்தம்மிடம் இருக்கும் அத்தனை ஆயுதங்களையும் அத்தனை சுளுவாக உபயோகிக்கிறான் பில்லா. "மார்க்கெட் சாவுக்குத்தான். ஆயுதங்களுக்கு இல்லசாவுங்கற ஒண்ணு இருக்கிற வரை ஆயுதங்கள் தொடர்ந்து கொண்டேதானிருக்கும்னு நமக்குப்புரிய வைக்கிறான்பில்லாஅத்தனையும் உண்மை.
The Devils புதினத்துல ‘பீட்டர் வெற்கோவென்ஸ்கி’ என்னும் பாத்திரத்தின் மூலம், தம் கருத்துக்களைத் தஸ்தாயெவ்ஸ்கி வெளிப்படுத்துகின்றார் ... "நாம் முழுமனதுடன் அழித்தலுக்கு நம்மை ஆட்படுத்திக்கொள்ள வேண்டும்.  இத்தகைய அழித்தலானது தொடர்ந்து நடைபெற வேண்டும்.  இப்போது இருக்கக் கூடிய நடைமுறைகள் எதுவுமே எஞ்சியிருக்கவில்லை என்னும் நிலை வரும் வரை, அந்த அழித்தல் பணியினை நாம் தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும்.  இந்தப் போரிலே புரட்சியாளர்கள் விஷம், கத்தி, கயிறு போன்றவைகளையும் பயன்படுத்தலாம்." இதேதான் பில்லாவும் செய்கிறான்.
"நீ நினைச்சத சாதிச்சிட்ட"ன்னு (யோக் ஜேப்பிரஞ்சித் சொல்லும்போது , "இல்ல,இதுதான் ஆரம்பம்"னு சொல்லுவான் அகதியான எனினும் அனாதையில்லாத பில்லா.பவளத்துறையிலிருந்து தொடங்கும் அவன் பயணம் ,வைரக்கற்கள் கொண்டு சேர்ப்பதிலிருந்து , பௌடர் வரை சென்று , படிப்படியாக ஆயுதம் கொள்முதல் மற்றும் கலாஷ்னிக்கோவ் கடத்தல் வரை பயணிக்கிறான் பில்லாமுடிவுறா சளைக்காத பயணம் அதுஒருபோதும் உண்ட வீட்டிற்கு ரெண்டகம் நினைக்காத பில்லா.
அஜித் அதிகம் மெனக்கெடாமல்அலட்டிக்கொள்ளாமல் ஒரு கேங்க்ஸ்டருக்கான முகப்பாங்குடன்கொஞ்சம் அதைத்த ,எப்போதும்முந்தினநாள் அடித்த பியரின் மப்பில் இருக்கும் முகத்துடனேயேகாணப்படுகிறார் படம் முழுக்க. எந்தப் பெண்ணிடமும் ஒட்டுதலோ இல்லை உறவோ வைத்துக்கொள்ளாமல்அவள் அக்கா மகளான ("பார்வதி")முறைப்பெண்ணிடம் கூட ஒட்டிக்கொள்ளாமல் தன் போக்கில் பயணிக்கும்எதற்கும் இடம் கொடாத பாங்குடனேயே இருக்கிறார் பில்லாசில இடங்களில் மட்டுமே கோட்அணிந்து வருகிறார்மற்ற காட்சிகளில் சாதாரண Angry Young Man ஆகத்தான் காட்சியளிக்கிறார் தல.
இராமேஸ்வரக்கரையில்  வந்திறங்கியதிலிருந்து அங்கிருக்கும்  சக மனிதர்களிடம் பேசும்போதும்படம் முழுக்கவும் ஈழத்துப் பாணியில்ஒரு சொல் கூடப் பேசாமல் சாதாரண தமிழ்நாட்டுத் தமிழுடனேயே உலா வருகிறார் அஜித்.அவரின் சக தோழரும் அங்கனமே.அது மட்டும் இடிக்கிறது.மேலும் எல்லோரும் அவரிடம் அடி வாங்குவதற்கெனவே ஜனித்தவர் போலக்காணப்படுவதும்போலீஸ்காரர்கள் கூடகொஞ்சம் ரொம்பவே இடிக்கிறது.
ஒரு வில்லன் பபாசி , "து தின் பேதின் தேரா லிமிட் க்ராஸ் கர் ரஹாஹை பில்லா" (நீ நாளுக்கு நாள் உன் எல்லை தாண்டிப்போற பில்லா என்றுஹிந்தியில் வசனம் பேசுகிறார் திப்பு சுல்தான் தாடியுடன். வில்லனுக்கான மிடுக்கு என்ற ஏதுமின்றி. இன்னொரு வில்லன் சின்னதாக French Cutவைத்துக்கொண்டு எப்போதும் ரஷ்யனில் பேசுகிறார், Sorry Chakri Sir, இந்தப் படத்தின் வில்லன்கள் என்னைக் கவரவேயில்லை 
படத்தில்  வரும் பெண்கள் ஜேம்ஸ்பாண்டு படத்தில் வரும் வில்லிகள் போலவும் கதாநாயகிகள் போலவும் ஒல்லியாக தமது ஸீரோ சைஸ் உடலைக் காட்டுவதற்கெனவே வந்தது போல இருப்பது பெரிய குறை.பில்லா லாவது கொஞ்சம் நம்மூர் பெண் போல குண்டாக நமீதா நடித்திருந்தார். இதில் மருந்துக்குக்கூட அப்படி ஒருவரும் இல்லை.மதுரப்பொண்ணு பாடலில் வரும் "மீனாக்ஷி தீக்ஷித்கூட ரஷ்யன் டான்ஸர் போலவே இருப்பது வருத்தமேஅதிலும் அவர் கதம்பத்தை தலையிலணிந்துகொண்டு பாடுவது பார்க்கச் சகிக்கவேயில்லை.
"ஆசையில்ல அண்ணாச்சி ,பசி" , இது பஞ்ச் டயலாக் மாதிரி தோணவேயில்லஅடிமனதில் இருக்கிற விஷயமாத்தான் இருக்கு.இது போல பல விஷயங்கள் பேசறார் அஜித் குரலின் மூலம் இரா.முருகன். ரசிக்கவும் சிந்திக்கவும் அவ்வப்போது தைக்கவும் செய்கிறது வசனம்.
வகைதொகையற்ற கொலைகள் மற்றும் வன்முறைகளால்அளவுக்கதிகமாக தணிக்கையில் வெட்டுகள் வாங்கியது திரைக்கதை பல இடங்களில் நொண்டியடிப்பதுபல காட்சிகளைப் பள்ளிக்கூடப் பிள்ளைகள்கூட யூகிக்கும் வகையில் அமைந்திருப்பது போன்றவைகளால் படம் பல இடங்களில் தாவித் தாவிச்சென்று பார்க்கும் நமக்கு ஆயாசம் வருவது தவிர்க்க இயலவில்லை.
சண்டைக்காட்சிகள்  பற்றிப் பேசவேண்டுமெனில் அந்த சர்ச் காட்சியை மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லலாம்பார்வதி ஓமனக்குட்டனைக் காப்பாற்றமுயற்சிக்கும் காட்சியில் தல பட்டையக்கிளப்புகிறார். இதே காட்சியை வைத்தே திரைப்படம் தொடங்குகிறது.வெறும் கைகளால் தொடங்கி பிறகு சிறு கத்தியை வைத்து அனைவரையும் குத்திச்சாய்ப்பதுகுறிப்பாக கடைசியில் அந்த முகத்தில் வெள்ளைத் தழும்புகளுள்ளவரை நெஞ்சில் குத்திச் சாய்ப்பதுநினைத்தே பார்க்காத இடம், Hats Off தலபின்னர் அந்தக் "கார்னிவல்நடக்கும் சமயத்திலான சண்டைக்காட்சிவெகு இயல்பான காட்சியமைப்புடன் கவர்கிறது. மற்ற சண்டைக்காட்சிகளில் Latest Machine Guns வைத்துக்கொண்டு சண்டையிடுவது Hollywood படங்களில் ஏற்கனவே பார்த்துச் சலித்தவை.
பில்லா 1-  ஒப்பிட்டுப்பார்க்கையில்  யுவனின் பங்களிப்பு பின்னணி இசையில் குறைந்தே காணப்படுகிறது. பில்லா 1-ல் முழுக்க Jazz மற்றும்அவ்வப்போது Rock இசையுமாக 80- களில் வந்த இசை போல வெள்ளம்போலபாய்ந்து வந்ததுஇங்கு   Hip Hop மற்றும் Arabian Style. பல இடங்களில் தெளிவாகத் தெரிகிறது. அந்த டிமிட்ரியின் கோட்டையைத் தகர்த்து விட்டு அஜித் வெளியேறும்போது பின்னணியில் முழுக்க தீ பற்றி எரிவதற்கான பின்னணி இன்னும் மனதில் ரீங்கரித்துக்கொண்டு இருக்கிறது.தீம் ம்யூஸிக்கை பயன்படுத்தியிருக்கிறார். இருப்பினும் பில்லா-ஆல்பமில்இடம்பெறாத அரேபியன் பெல்லி டான்ஸ்-க்கான பாடலில் பின்னியிருக்கிறார்யுவன்ஊது குழல்களும் டபுள் பாஸுமாக பின்னணி இசை நம்மை சீட்டின் விளிம்பிற்குக் கொண்டு செல்கிறதுபார்வதி ஓமனக்குட்டன்அறிமுகக்காட்சியில் "இதயம்பாடலுக்கான Bit ஐ பியானோவின் அழுத்தமான கட்டைகளால் வாசித்திருப்பது நம்மைக்கொள்ளை கொள்ள் வைக்கிறது.கடைசி வரை அந்தப் பாடலை படத்தில் தேடித் தேடிப் பார்த்து அலுத்தேபோனேன்ஹும்..அந்தப்பாடல் படத்தில் இடம்பெறவேயில்லை.
மற்ற அத்தனை பாடல்களும் அதனதன் தேவையான  இடத்தில் கனகச்சிதமாகப்  பொருந்திப்போகிறதுபில்லா 1 –ன் Theme Musicஐ அளவோடு இசைத்திருப்பது படத்தை முன்னையதிலிருந்து வேறுபடுத்திக் காட்டப் பயன்பட்டிருக்கிறது . "ஏதோ ஒரு மயக்கம்பாடல் காட்சியமைப்பு சுற்றும்Focus Lights- களுடன் அப்படியே "விளையாடு மங்காத்தா "பாடலின் காட்சிகளை நினைவுபடுத்துகிறது. "எனக்குள்ளே மிருகம்பாடல் படமாக்கிய விதம்,அந்தப்பாடலுக்கு யுவன் கொடுத்திருந்த முக்கியத்துவத்தைக் காப்பாற்றுவது போல இருப்பது மிகவும் வலுசேர்க்கிறது. படத்தின் கடைசியில் தலக்காக அவர் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பாடும் கேங்ஸ்ட்டர் பாடல் அசத்தல்.
தர்க்கரீதியாக நம்ப இயலாத நிகழ்வுகள் தொடரும்  வகைதொகையில்லாத கொலைகள்  மற்றும் வன்முறைசீராகப் பயணிக்காத திரைக்கதைபல மொழிகள் சர்வசாதாரணமாக படம் முழுக்கஅதுவும் பார்க்கும் தமிழ் மட்டும் கூறும் நல்லுலகத்திற்குப் புரியுமா என்று கிஞ்சித்தும் நினைத்துப் பார்க்காமல் பேசப்படுதல்சப் டைட்டில் பார்த்தே பல விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டியிருப்பது போன்ற விஷயங்கள் எல்லாம் படத்தில்வெட்டவெளிச்சமான குறைகள்.
"தல" அஜித்துக்கு இது இன்னொரு படம், யுவனுக்குத் தன்னுடைய சில புதிய இசை முயற்சிகளை செய்து பார்க்க முடிந்த ஒரு படம். ரசிகர்களுக்கு Hollywood Range-ல் தமிழில் பார்க்க முடிந்த ஒரு படம்,ஒளிப்பதிவாளருக்கு சரியான தீனி கொடுத்த படம் என்றெல்லாம் கூறிக்கொண்டு நம்மை சமாதானப்படுத்திக்கொள்ள வேண்டியதுதான்.
chinnappayal@gmail.com


நன்றி uyirmmai.com/




















No comments: