பெண்: சில சந்தேகங்கள், சில கேள்விகள் - மணிமேகலா


    .
     பெண்: சில சந்தேகங்கள்இ சில கேள்விகள் – தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!


இங்குள்ள தொலைக்காட்சியில் சில காலங்களுக்கு முன்னால் ஒரு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பாயிற்று.2,3 வயதளவான பெண் குழந்தை ஒன்று சுயாதீனமாகத் தாயின் அறைக்குச் சென்று முக ஒப்பனைப் பொருட்களைப் பார்த்து தேர்ந்தெடுத்து தன்னை ஒப்பனை செய்து கொள்கிறது.சம வயதான காரை வைத்து விளையாடிக்கொண்டிருந்த பையன் அவளைப் பார்த்து விட்டு இயல்பாக அவனது கார் கைநழுவிப் போக அப்பெண்குழந்தையைப் பார்த்துக் கொண்டு நிற்கிறது.முதல் காதல் என்ற படி முடிகிறது முக ஒப்பனை ஒன்றுக்கான விளம்பரம்.



அது போல கோடியல் ஒன்றுக்கான விளம்பரம் ஒன்று இப்படியாக அமைந்திருந்தது. பிள்ளைகள் வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.தாகம் எடுக்கிறது. எல்லோருமாக சமையலறைக்குள் ஓடி வருகிறார்கள்.எல்லோரும் 10,12 வயது மதிக்கத்தக்க குழந்தைகள். ஆண்பிள்ளை ஓடி வந்து குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து ஒரு குவளையில் கோடியலில் கொஞ்சத்தையும் தண்ணீரையும் கலந்து கலக்கிவிட்டு மட மடவென்று குடித்து விட்டு ஓடி விடுகிறான். பெண்குழந்தை வருகிறது. குளிர்சாதனப் பெட்டியைத் திறக்கிறது. கோடியலை எடுத்து குவளைக்குள் ஊற்றுகிறது. தண்ணீரை விட்டுக் கலக்கிச்  சரி பார்க்கிறது. நிறத்தில்ஃ கலவையில் அதற்கு திருப்தி ஏற்படவில்லை. மீண்டும் சற்றே கோடியலை அதற்குள் கலந்து கரண்டியால் கலக்கி மேசையில் வைத்துக் குனிந்து சரிபார்த்து பின்னர் குடித்து விட்டு விளையாட ஓடுகிறது.

இவ்வேறுபாடு இத்தகைய குண இயல்பு இயற்கையாகவே வடிவமைக்கப் பட்டிருக்கிறதா என்ற கேள்வி எனக்குள் பல காலங்களாக உண்டு. ஆணும் பெண்ணும் தனித்தனியாகத் தாங்கும் சுமைகளும் வலிகளும் புறத்தோற்ற வேறுபாடுகளும் இயல்பு நிலைகளில் இருக்கும் அடிப்படை வேறு பாடுகளும் இயற்கை இரு பாலாருக்கும் கொடுத்திருக்கின்ற பொறுப்புகளும் ஆணையும் பெண்ணையும் இரு வேறு முனைகளிலேயே வைத்திருக்கின்றனவா என்பது தான் அப்படி ஒரு சந்தேகம் ஏற்படக் காரணம்.
சரி அப்படி இருக்கிறதென வைத்துக் கொண்டால் அந்த அடிப்படையில் இருந்து பெண்ணுக்கு வழங்கப் படக்கூடிய உரிமைகள் தகுதிகள் என்ன என்ற கேள்வி அடுத்து எழுகின்றது.குடும்ப அமைப்பும் அது சார்பான வினாக்களும் இன்னொரு தளத்தில் இருந்து பார்க்கப் படவேண்டியவை.வேலைக்குப் போவதா? வீட்டில் இருந்து குழந்தைகளைப் பார்ப்பதா? தன் சுயத்தை அடையாளம் காண்பதா? தன்னை வளர்த்துக் கொள்வதா? எங்கு நாம் நிலை கொள்வது? எதை இழக்கிறோம் எதைப் பெறுகிறோம் என்பதெல்லாம் அவரவர் தேவைகளைஃவிருப்பத்தைப் பொறுத்தது.

ஆனால்இஇவை எல்லாவற்றுக்கும் அப்பால் ஒரு பெண் சுயமரியாதையோடும் கண்னியத்தோடும் உலகத்தால்ஃசமூகத்தால் சகமனிதனால் நடத்தப் படுகிறாளா? அவளுக்கு மனிதனாக வாழக்கூடிய அவளுக்கான கெளரவம் சமூகத்தால் வழங்கப் படுகிறதா என்பது தான் நம் முன்னால் இப்போதுள்ள கேள்வி. ஈழத்துத் தமிழ் பெண்கள் இராணுவத்தால் பெண் என்ற காரணத்தால் அவமானப்படுத்தப்பட்டார்கள்; மானபங்கப்படுத்தப்பட்டார்கள்;தண்டிக்கப் பட்டார்கள்;இறுதியில் சாகடிக்கப்பட்டார்கள்.அது ஒரு புறமாக நிகழஇவிதவைகளாகவும் தனியாகவும் வாழுகின்ற பெண்கள் மீதான சமூக வக்கிரங்கள் இன்னும் தொடர்ந்த வண்ணமாகத் தான் உள்ளன.
பெண் என்ற காரணத்தால் அவளுக்கு கொடுக்க மறுக்கப்பட்டவை எல்லாம் சாதாரண ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சாதாரண மனித உரிமைகள் இல்லையா?
life time living என்றொரு புத்தகம் ’மனைவிகள் கவனிக்க’ என்ற தலைப்பில் மனைவிமாருக்கு கீழ்வரும் அறிவுரையை வழங்கி இருக்கிறது.
ஒவ்வொரு மனைவியும் ஞாபகம் வைத்துக் கொள்ள வேண்டிய ஐந்து விடயங்கள்:
1.கணவரின் எடையை அடிக்கடி கவனியுங்கள்.எடை அளவுக்கு மீறும் போது சமையலைத் தக்கபடி மாற்றுங்கள்.
2.ஒவ்வொரு வருடமும் கணவரின் உடல் நிலையை காலோடு தலைவரை பரிசோதிக்கச் சொல்லுங்கள்.
3.ஏதேனும் கோளாறு தென்பட்டால் டாக்டர் கொடுக்கும் மருந்துகளை வேளை தவறாமல் சாப்பிடும் படி கவனித்துக் கொள்ளுங்கள்.
4.அலுவலகத்தில் தன் வேலையைச் செய்து முன்னேறுவதற்கு ஊக்குவியுங்கள்.ஆனால் முதுகு ஒடிய வேலை செய்யும் படி நச்சரிக்காதீர்கள்.
5.கணவன் வீட்டுக்கு வருவது மன அமைதிக்காகஇ மகிழ்ச்சிக்காகஇ ஓய்வுக்காக.அவற்றை அவருக்குக் கொடுங்கள்.
என்று கூறுகிறது.

பங்களாதேஷ் கவிஞரும் நாவலாசிரியருமான தஸ்லீமா நஸ்ரின் பெண்களுக்கு ஆண்கள் செய்யும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுத்து வருபவர்.அதனால் பழைமை வாதிகளின் கடும் எதிர்ப்பையும் விமர்சனங்களையும் அவர் எதிர்கொண்டு வருகிறார்.’லஜ்ஜை’(வெட்கம்)என்ற அவரது புத்தகத்தில் அவர் இப்படி எழுதி இருக்கிறார்.

“......’அவர்கள்’ தங்கள் காலின் கீழே உனக்கு இடமளித்திருக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னைப் சமையல் அறைக்குத் துரத்துகிறார்கள்.அவர்கள்’ உன்னை படுக்கை அறைக்குத்  தூக்கிச் செல்கிறார்கள்.பிறகு அவர்கள் உன்னை படுக்கையில் இருந்து கீழே தள்ளுகிறார்கள்.’அவர்கள்’ உனக்குப் பாதுகாப்புத் தருகிறார்கள்.அவசியமான போது ‘அவர்கள்’ பாதுகாப்பை அகற்றி விடுகிறார்கள்.’அவர்கள்’ உன்னைக் காலால் உதைக்கிறார்கள்.’அவர்கள்’ உன்னை அடிக்கிறார்கள். ‘அவர்கள்’ மனிதப் பிறவிகள் அல்ல; ஆண்கள்” என்று அவர் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார்.



சரிஇ இதனால் இதிலிருந்து விடுபட பெண்ணுக்குக் கல்வி அறிவு அவசியம் என்ற கருத்து மேலோங்கியது.அவளுக்குத் தன்னுடய பலம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்ற குரல்கள் உரத்து ஒலிக்க ஆரம்பித்தன. அதன் ஒரு குரலாக ஒரு முறை தந்தை பெரியார் கூறியது இச் சந்தர்ப்பத்தில் நினைவுக்கு வருகிறது.ஆறு முழம் சேலையையும் மூன்று மணி நேரச் சமையலையும் அவர்களிடம்(பெண்களிடம்) இருந்து அப்புறப்படுத்துங்கள். கறண்டிக்குப் பதிலாக ஒவ்வொரு பெண்களின் கைகளிலும் புத்தகங்களையும் ஆறு முழச் சேலைக்குப் பதிலாக இலகுவாக அணியத்தக்க ஆடைகளையும் கொடுங்கள் என்றார்.

நம்முடய பண்பாட்டுப் பின்னணியிலோ எனில் அது இன்னும் சற்றே வேறுபட்டுக் காணப்படுகிறது என்றே எண்ணத் தோன்றுகிறது.போர் தொடுத்து வைத்த ஆண்களின் இழப்புஃபற்றாக்குறைஇதிருமணமான ஆண்களின் இழப்பினால் ஏற்பட்ட இளம் விதவைகளின் அதிகரிப்பு என்பவற்றுக்கப்பாலும் பெண்கள் படிக்கவே செய்தனர்.நல்ல உத்தியோகங்களிலும் அமர்ந்து சுய பொருளாதார மேம்பாட்டை அடைந்தும் விட்டனர்.அவ்வாறு இருக்கின்ற பட்சத்திலும் இவ்வாறு ‘வளர்ந்திருக்கிற’ பெண்ணை மணமுடிக்கத் ஆண்கள் தயங்குகின்றனர்.

இவ்வாறான பெண் ஒன்று மிக அதிக அளவு சீதனம் கொடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகிறாள்.இரண்டு ஆணுக்கு சாதாரண - வீட்டையும் குடும்பத்தையும் பார்க்கிற பெண் - மேலும் ‘அடங்கி’ நடக்கிற பெண் தான் அவர்களின் விருப்பத் தேவையாக இருக்கிறாள். இன்னும் ஆண்களுக்கு சுயத்தோடு கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிற பெண் தம் வாழ்வை ‘பயமுறுத்துகிற’ ஒருத்தியாகவே தெரிகிறாள்.

இந்த விதத்தில் நம் நாட்டுப் பெண்கள் பல பக்கங்களாலும் சவால்களையும் பிரச்சினைகளையும் எதிர் கொள்கிறாள் என்றே தோன்றுகிறது. மேலும் அது எதிர்காலத்தில் ஒரு பெரும் சமூகப் பிரச்சினையாக அது வடிவெடுக்கும் அபாயமும் உள்ளது என்பது என் அனுமானம்.இதற்கு இப்போதிருந்தே சமூக ஆர்வலர்கள் ஏதேனும் செய்தாக வேண்டும்.

ஆனால் வெளி நாடுகளைப் பொறுத்தவரை குறிப்பாக அவுஸ்திரேலியாவைப் பொறுத்தவரை அத்தகைய நாகரிகமும் பண்பாடும் வந்தாயிற்று. கல்வியறிவும் உரிமைகள் பலவும் வழங்கப்பட்டாயிற்று என்பதையும் ஒத்துக் கொள்ளவே வேண்டும்.அரசாங்கம் பல சலுகைகளைப் பெண்களுக்குச் சட்டப்படி வழங்குகிறது.என்றாலும் 8ம் திகதி பெண்கள் தினத்தன்று காலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 40 நெருங்கிக் கொண்டிருக்கின்ற தொழில் மற்றும் கல்வி ரீதியாக வெற்றிகளை ஈட்டிய அவுஸ்திரேலியப் பெண்ணிடம் பெண்கள் தினம் பற்றிக் கேட்கப் பட்ட போது அவர்களது பதில் குழந்தை பெற்றுக் கொள்ளும் வயதெல்லை இயற்கையால் பெண்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டிருப்பதால் ஒரு வித மன நெருக்கடிக்குத் தான் ஆளாகி இருப்பதாகவும்;வெளியே ஆண்கள் பலர் இருக்கிறார்கள். ஆனால் பொருத்தமான பநவெடந அநn வெளியே இல்லை என்பது அவரது பதிலாக இருந்தது.
கூடவே பொருத்தமான சோடியை இனம் கண்டு திருமணமாகி பிள்ளைகளைப் பெற்ற தம்பதியினர் பலர் - தோழிகள் - தற்போது விவாக ரத்தாகி இன்னும் சவாலான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் அவர் கூறிய மேலதிக தகவலாகும்.
எங்கு தவறு நேர்கிறது? குடும்ப அமைப்பிலா? ஆண்பெண் உறவிலா? மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நியதியை மறந்து அல்லது அதற்கேற்ப இசைந்து கொடுக்கமுடியாது போனதாலா? பெண் வளர்ந்ததற்கேற்ப ஆண் வளராமல் அல்லது மாறாமல் போன காரணமா? அல்லது அன்பென்ற இழை அறுந்து பணமும் பதவியும் சுயநலமும் மேலோங்கிப் போன காரணமா?
அண்மையில் இணைய தேடலில் ஒரு  பதிவில் ஒரு குழந்தைக்கான முதற்பெயரில் ஏன் தந்தையினுடய பெயர் மட்டும் பொறிக்கப் படுகிறது? தாயாருடய பெயரின் முதல் எழுத்தினையும் சேர்க்கலாமே என்று ஒரு சகோதரி கேட்டிருந்தார்.
அதனைப் பார்த்ததும் உடனே எனக்கு இன்னொன்று நினைவுக்கு வந்தது.திருமணத்தின் போது பெண்ணுக்கு திலகமிடுகிறார்கள். தாலி கட்டுகிறார்கள்.திருமணமானவள் என அடையாளப்படுத்துகிறார்கள்.ஆனால்இஆணுக்கு தெரியத்தக்கதாக - திருமணமானவர் எனப் புரிந்து கொள்ளத் தக்கதாக - என்ன இருக்கிறது? இருந்ததென்றால் எவ்வாறு அது இல்லாமல் போயிற்று?

தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன்!

ஆக்கம் மணிமேகலா

2 comments:

Ramesh said...

அருமையான கட்டரையும் அதனோடு இணைந்த குறும்படமும் நன்றாக இருந்தது. உங்கள் கேள்வி ஏன் தந்தையின் முதல் எழுத்தை குழந்தைகளுக்கு போடுவது என்பது சிம்பிள் தாயின் பெயரைப் போட எந்த தந்தையும் ஒத்துக்கொள்ளமாட்டார்கள். அப்படி போட அனுமதிக்கும் தந்தைமார் இருந்தால் எனக்கும் சொல்லுங்கோ.

ஆசிரியருக்கு ஒரு குறிப்பு: இந்த குறும்படத்தை வெளியே தெரியும்படியாக போட்டால் பலர் பார்ப்பார்கள் நல்ல ஆழமான கருத்துள்ள படம்

Anonymous said...

நல்ல கட்டுரை, பெண்ணியம் பற்றி பேசப்படவேண்டும் அதுவும் பெண்களே பேசவேண்டும் அந்தவகையில் மணிமேகலா பேசியது மிக்க நன்று. குறும்படம் அருமை.

ரவிராஜ்