திருமுறை முற்றோதல் (67வது மாதாந்த தொடர்நிகழ்ச்சி) 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை


.
உலக சைவப் பேரவை அவுஸ்திரேலியா விடுத்துள்ள அறிவித்தல்

உலக சைவப் பேரவை அவுஸ்த்திரேலியாக் கிளையின் மாதாந்த திருமுறை முற்றோதல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 01.01.2012 காலை 10.30 மணி முதல் 12.30 மணிவரை நடைபெறவுள்ளது. அன்று காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மறவன்புலவு திரு க. சச்சிதானந்தன் அவர்கள்; சுந்தரமூர்த்தி சுவாமிகள் அருளிய ஏழாம் திருமுறையில் “திருத்தொண்டர்கள்” எனும் தலைப்பில் சொற்பொழிவாற்றவுள்ளார். தொடர்ந்து ஏழாம் திருமுறையில் ஐம்பத்தியாறாம் பதிகம் (திருநீடூர் பதிகம்) தொடக்கம் திருமுறைப்பாடல்கள் கூட்டுவழிபாட்டு முறையில் பாராயணம் செய்யப்படவுள்ளன.


சிவநேயச்செல்வர்கள் அனைவரையும் இவ்வழிபாட்டில் கலந்து எமது வாழ்நாளில் பன்னிரு திருமுறைகளிலும் உள்ள 18இ000 இற்கு மேற்பட்ட பாடல்களையும் ஓதி வழிபட்டு திருவருள் பெறுமாறு உலக சைவப் பேரவையின் அவுஸ்திரேலியாக் கிளை கேட்டுக்கொள்கின்றது.

இடம்: ஹோம்புஷ் ஆரம்ப பாடசாலை
(Cnr Burlington Rd &
Rochester St
), Homebush
நேரம்: 01.01.2012 ஞாயிற்றுக்கிழமை

காலை 9.15 முதல் 10.15 வரை

சொற்பொழிவு

“திருத்தொண்டர்கள்”

(மறவன்புலவு திரு க. சச்சிதானந்தன் அவர்கள்)

காலை 10.30 முதல் 12.30 வரை

திருமுறை முற்றோதல்


மேலதிக விபரங்களுக்கு:

திரு சி சிவஞானசுந்தரம் Tel: 96425406
திரு க சபாநாதன் Tel: 96427767
திரு மா அருச்சுனமணி Tel: 87460635

No comments: