.
உலகெல்லாம் ஒளிவெள்ளம்
மணியொலியும் மின்விளக்கும்
தரணியெலாம் ஒளிகொள்ள
பாலன் யேசு பிறக்கின்றான்
வெள்ளிப் பனிமலையில் மேற்குலகு
உறைபனியில் மூழ்கிக் கிடக்க
தூய்மையெனும் அடையாளம் காட்டி
பார்தனிலே பாலன் வருகின்றான்
மக்களுக்கு வழிகாட்டும் மேய்ப்பனாய்
துன்பத்தில் கிடப்பவர்க்கு பெருமருந்தாய்
இருளில் இருப்போர்க்கு ஒளிக்கீற்றாய்
கொடுமைகளை பொசுக்குகின்ற பெருநெருப்பாய்
யேசுபிரான்........
தரணியினை வாழவழிகாட்டும்
வெள்ளொளியாய்
இன்று பாலன் பிறக்கின்றான்.
25.12.2011
No comments:
Post a Comment