மக்களின் மனிதன் - ஆர்த்தி வேந்தன்


.
மக்களின் மனிதன்
நாவல்
ஆசிரியர்சீநு ஆச்சுபோ
தமிழில்எஸ்.பொ.
வெளியீடு மித்ரா




மக்களின் மனிதன் நாவல் அல்ல  நடக்கும் இடமும்இடம்பெறும்பெயர்களும் கற்பனைகள் என்ற போதிலும் இது கதை இல்லைஇதில் எந்தஅழகியலும் கற்பனைகளும் இல்லை . இந்தப் புத்தகத்தை பற்றி நாம் இங்கபேசுவதற்கு இரண்டு முக்கிய காரணம் உண்டு. ஒன்று அறிவு பூர்வமானது.மற்ற நாட்டின் அரசியலையும் அவர்களின் இலக்கியத்தைத் தெரிந்துகொள்வதன் அவசியம்மற்றொன்று இந்தப்  புத்தகம் 100 % நம் நாட்டுஅரசியலுடன்அவர்களின் தலைவர்களை நம் தலைவருடனும்அந்த மக்களின் மனநிலையை நம் நாட்டு மக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.இந்தக் கதையை நான்கு வரிகளில் சொல்லிவிடலாம்இந்தக் கதைஆசிரியராகப் பணிபுரியும் ஓடிலி என்பவரால் சொல்ல படுகிறதுதனக்குஆசிரியராக இருந்த நங்கா என்பவர் இப்போது கலாச்சார முதல்வர் ஆகஇருக்கிறார்ஓடிலி க்கு வெளி நாட்டிற்கு போய் பட்டம் பெற்று இங்கு வரவேண்டும் என்று ஆசை. அதை பூர்த்தி செய்வதற்காக நங்கா வுடன்செல்கிறார்நங்காவின் பணமும் பலமும் ஓடிலியின் காதலியைமயக்குகிறதுஓடிலியை ஏமாற்றி நங்கவுடன் செல்கிறாள்நங்காவைவெறுக்க தொடங்கிய ஓடிலி நங்காவுக்கு எதிராக கட்சி தொடங்குகிறார்.தேர்தலில் வெற்றியும் பெறுகிறார்.  பிறகு தங்களுக்குள் நடக்கும் அற்பசண்டைகளை ராணுவம் தனக்குச் சாதகமாக மாற்றி கொண்டு நாட்டைக்கைப்பற்றுகிறது.



இந்தப் புத்தகத்தைப் பற்றி ஒரே பொதுவான கருதுது சீநு ஆச்சுபோ ஒருசிறந்த அரசியல் விஞ்ஞானி என்றுஅவர்  சொன்னதை போல் நைஜீரியாராணுவத்தால் கைப்பற்ற பட்டதுஇந்த புத்தகத்தின் வலிமை கதையில்அல்லஇந்தக் கதையின் ஆழத்தை நமக்கு புரிய வைப்பது கதை சொல்லஅவர் தேர்ந்தெடுத்த உத்தி அங்கதம்   என்ற சொல்லப்படும் '    'நையாண்டித்தாக்குதலால்அழகாக சீநு ஆச்சுபோ கையாண்டு உள்ளார்.நங்கா என்ற கலாச்சாரமுதல்வர் ஓடிலி பணிபுரியும்பள்ளி க்கு வருகைதருவதுலிருந்துதான் கதைதொடங்குகிறதுஅவரைவரவேற்க மாணவர்களும்ஆசியர்களும் வரிசையில்நிற்கச் சொல்லி பள்ளிமுதல்வரால் கட்டாயப் படுத்த படுகின்றனர்அவர்களின் மரியாதையைத்தெரிவிக்கும் வகையில் அறிவற்ற அப்பாவி மக்கள் தங்களை முடமாகும்வரை நடனமாடி கொண்டும் துப்பாக்கி மருந்துகளை வெடிப் பதற்கும் காத்துஇருப்பார்கள்இது தானே நம் ஊரிலும் நடக்கிறதுநம்முடைய நலனுக்காகதான்  போராட வருகிறோம் என்று சொல்லிக்கொண்டு நம்முடன் நின்று ஒருநிமிடம் கூட பேச நேரம் இல்லாத தலைவர்களை வரவேற்க நாம் என்னஎல்லாம் செய்கிறோம்அடுத்த நேரம் சாப்பிடுவதற்கு வழி இல்லை என்றநிலைமையில் கூடதுப்பாக்கி  மருந்தின் விலை  கூட உயர்ந்து இருக்கும்நிலைமையிலும் அவர்கள் தலைவர்களை வரவேற்பது அவசியம் என்றுகருதுகின்றனர்நம் அடிப்படை வசதியை கூட இப்போது குறைத்துக்கொள்ள வேண்டும் என்ற நிலையில் கூட நாம் இன்றும் எதற்கும்உபயோகப் படாத banner களையும் போஸ்டர் களையும் அடித்து கொண்டேதானே இருக்கிறோம்.நங்காதான் இதில் ' மக்களின் மனிதன்'  என்று அழைக்கப் படுகிறார்அவரைஎளிதில் சந்தித்து விடலாம் என்பதால் மக்களின் மனிதன் என்று அழைக்கப்படுகிறார்அன்றைக்கு  அவரின் பேச்சும் வ்வாறே அமைகிறது.அரசியல்வாதி எப்படி  இருக்க வேண்டும் என்ன செய வேண்டும் என்னசெய்க் கூடாது என்பதைச் சொல்கிறார்இப்படி ஒரு அரசியல்வாத யாஎன்று நாம் முழுவதாக வியப்பதற்கு முன்பே அவரின் சுயம் தெரியவருகிறதுதன் சமூகத்தை வளர்பதற்காக ஒதுக்கப்பட்ட  பணத்தில் நான்குமாடி கட்டிடம் காட்டி அதை வாடகைக்கு விடுகிறார்இங்கயும் அது தானேநடக்கிறது நம் வாழ்வை முற்றிலும் மாற்ற போவது போல் வறுமையைமுற்றிலும் ஒழித்துவிடுவது போல்கல்வி நிலையை மேலும் உயர்த்துவதுபோல் பேசிவிட்டு கடைசியில் இருப்பதையும் குறைத்துதானேவிடுகிறார்கள் . மக்கள் நலனுக்காக ஒதுக்கபடுவது எல்லாம் அவர்கள்நலனுக்குத் தானே உபயோகப் படுகிறதுதேர்தலில் வெற்றி பெறுவதற்கானஎல்லா வழியையும் நங்கா கற்றுகொள்கிறார்அவரின் மிகப்பெரிய  ஆயுதம் மக்களின் நம்பிக்கைதான்எதைப் பேசினால் மக்களுக்கு பிடிக்கும் .தற்குஅவர்கள் தவிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டு அதை மட்டுமேமக்களிடம் பேசுகிறார்.மக்களின் பலவீனம் அவருடைய பலம்ஆனால் அது நிலைத்து நிற்கவில்லைமக்கள் ஏமாற்றம் அடைந்த பிறகு அடுத்த தேர்தலில் மற்றொருகட்சியை ஜெயிக்க வைக்கின்றனர்முதலில் தன்னுடைய ஆசிரியரானநங்கா அமைச்சராக தேர்நதேடுக்கும் போது மகிழ்ச்சி அடைகிறார்அவர்ஆசிரியராக இருந்த காலத்தில் அவர் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துஇருந்தார்ஆனால் பதவி ஏற்ற பிறகு அவருடைய குணம் நடவடிக்கைமாறுவதைக் கண்டு  ஏமாற்றம் அடைகிறார்ஆடம்பரச் செலவும்பெண்களுடன் இருப்பதை மட்டுமே முக்கியமாக கருதும் அவருடையஇந்தக் குணமே அவரை அடுத்த தேர்தலில் வீழ்த்த வைக்கிறதுஇவருடையபலவீனம்தான் ஓடிலி தேர்தலில் ஜெயிப்பதற்கு உதவுகிறது.மக்கள் அப்பாவியாக மட்டும் அல்ல. நம்பிக்கை அற்றவர்கள் ஆகவும்தான்இருந்தார்கள்ஓடிலி மீது எந்த எதிர்பார்ப்பும் இல்லை. அவர்கள் வாழ்க்கைமாற போகிறது என்று கண் மூடித்தனமான நம்பிக்கை இல்லை. ஆனால்நங்கா மீது ஏற்பட்ட சலிப்புதான் அவர்களை ஓடிலி நோக்கிச் செல்லதூண்டுகிறதுவேறு வழி இல்லைஇயலாமையின் உச்சகட்டம் தானே இது!இரண்டு கட்சியும் நமக்காக இல்லை என்று தெரிந்த போதிலும் நாம்ஒவ்வொரு முறையும் அவர்களைச் சார்ந்துதானே போகிறோம்நங்காஆங்கிலக்கல்வி முறையை கற்றதால்அவரால் நம்மில் ஒருவராக இருக்கமுடியாது. நம் மக்களின் நிலையைப் புரிந்து கொள்ள முடியாது என்றுசொலுகிறார்இவர் ஆட்சிக்கு வந்தால் இதை எல்லாம் திருத்தம் செய்வார்என்ற நம்புகின்றனர். ஆனால் அவர் வெற்றியாக கருதுவது நங்காவுடன்  இருந்த பெண்ணை தன் பக்கம் திருப்புவதையே கொள்கையாக வைத்துஅதிலும் வெற்றி பெறுகிறார்நாங் வைப் ழி வாங்க வேண்டும்என்பதற்காகதான் பதவி என்று நம்புகிறார்ஆட்ச க்கு வருவதற்கு முன்புஅவருக்கு இருந்த ஏமாற்றங்கள் ஏக்கங்கள் எல்லாம் மறந்து போனது.இதுதானே நமக்கும் ஒருவரை ஒருவர் வீழ்த்துவதும் ழி பேசுவதும் தானேஇங்கு அரசியல்.இதில் ஒரு முக்கிய கதாபாத்திரம் மாக்ஸ்ஓடிலியின் நண்பராய் வருவார்தன்னலம் கருதாமல் தைரியமாகப் போராடும் குணம் உடையவர்நங்காசெய்யும் ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஓடிலியின்கட்சியில் இணைந்து   கொள்வார்கட்சியில் இருந்து விலகுமாறு நங்காஒரு தொகையைத் தருவார்அதை வாங்கிக் கொண்0டு  ஓடிலியின்கட்சியை வளர்ப்பதற்கு பயன்படுத்துவர்பின்பு அவர் நங்காவின் கட்சிஆட்களால் கொல்லபடுவார்இரு கட்சிகளின் சண்டைபலவீனத்தைஆயுதமாக்கிக்கொண்டு ராணுவம் நாட்டைக் கைப்பற்றுகிறதுஆப்ரிக்காநாட்டு அரசியலைத் தாக்கி எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் நம்அரசியலுக்கும் பொருந்தும்இந்தப் புத்தகத்தை படித்த பிறகு நம் மனதில்நிற்பது இதில் வரும் கதாபாத்திரங்கள் அல்ல. இதை எழுதிய சீநு ஆச்சுபோ.தலைவர்களின் சுயநலம் மட்டும் ஒரு நாட்டின் வீழ்ச்சிக்கு காரணம் ஆகமுடியாதுமக்களுக்குத் தெளிவான சிந்தனை யும் ஒற்றுமையும் இல்லாதபட்சத்தில் நிச்சயம் நல்ல நாடாக இயங்க இயலாதுஒரு நாட்டின் நிலையைஅதனின் விளைவுகளையும் இத்தனை வெளிபடையாக எழுத்து புரட்சிசெய்த  சீநு ஆச்சுபோயே உண்மையான மக்களின் மனிதன் ஆவார்.மக்களுடன் வாழ்ந்து அவர்களின்  நிலையை புரிந்து கொண்டுஅவர்களுக்காகவே எழுதியவர்தான் மக்களின் மனிதனாக இருக்க முடியும்.இந்தப் புத்தகம் வெளிவந்த பிறகு அவருடைய குடும்பம் பெரியபிரச்சனைக்கு உள்ளானது.  அவர் எதையும் பொருட்படுத்தவில்லை.வழிகாட்டியாக இருக்க வேண்டிய தலைவர்கள் வழி தவறிப் போவதும்மக்களின் மனிதனாய் இருக்க வேண்டியவர் மக்களை எமற்றுபவராகஇருப்பதும்மக்களின் அறியாமையும் , அறிவற்ற செயலையும் உணர்ந்துகொள்வது அவநம்பிக்கையையையும் வலியையும் தந்தாலும் சீநுஆச்சுபோயின் இந்த முயற்சி நம்பிக்கை தருகிறது.ஒருமுறை நெல்சன் மண்டேலாவிடம் ஒருவர் கேட்டார் 'இன்னும் உங்கள்நாட்டில் இத்தனை அடிமைகள் இருக்கிறார் களே அவர்களுக்கு  நீங்கள்என்ன செய்ய  போகிறிர்கள் என்று. அதற்கு அவர் சொன்னார், தான் அடிமைஎன்று யார் உணர்ந்து இருக்கிறார்களோ அவர்களைத்தான் என்னால்காப்பாற்ற முடியும்அடிமை என்றே உணராதாவனை என்னால் எதுவும்செய் முடியாது என்றுநாம் வாழ்ந்து கொண்டு இருப்பது அடிமைவாழ்க்கை என்பதையும், நம் அரசியல் நிலையையும் , நம் கனவுகளையும்வாழ்க்கையையும் தலைவர்களிடம் ஒப்படைத்து விட்டு நல்லது நடக்கும்என்று எதிர்பார்ப்பது இழிவை நோக்கித்தான் செல்லும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இந்தப் புத்தகம் அவசியமேஇதனின் அவசியத்தைமுழுவதாக உணர்ந்ததால்தான் எஸ் போ அவர்கள் இதைத் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார்தமிழில் இப்படி வெளிப்படையான அரசியல்விமர்சனங்களும் அதனின் விளைவுகளையும் வெளிபடுத்தும் புத்தகம்உள்ளதா என்பது சந்தேகம்தான்நம்முடைய சமூகத்தில் மக்களின் மனிதன்யார் என்பது இன்னும் கேள்விக்குறியாக இருப்பது வருத்தத்துக்கு உரியவிஷயமேஆப்ரிக்காவில் எல்லோருக்கும் இந்தப் புரிதலும் தெளிவும்இருந்ததா என்றால் நிச்சயம் இல்லைதான்எல்லா எழுத்தாளர்களும்இதனை வெளிபடையாக மக்களின் பிரச்னையை முன் வைத்தார்களாஎன்றால் அதுவும் இல்லைதான்ஆனால் சீநு ஆச்சுபோ செய்தார்.
ஒரு புத்தகத்தால் புரிதலும் மாற்றமும் ஏற்படுமா என்றால் நிச்சயம்ஏற்படும் என்றுதான் சொல்ல வேண்டும்ஒரு பெரியார்ஒரு மார்க்ஸ்ஒருமதர் தெரசாதான் இருந்தார்கள்ஒலிம்பிக்ஸில் கூட ஒருவர் கையில்தான்தீப்பந்தம் இருக்கிறதுஆனால் அந்த்த் தீயின் வெளிச்சம் எல்லாருக்கும்தரப்படுகிறதுசீநு ஆச்சுபோ  என்ற ஒருவர் எழுதி புரட்சி செய்து மாற்றத்தைஏற்படுத்தியது போல் நம் மொழியிலும் இப்படி ஒரு புரட்சி ஏற்படும்.நமக்கும் ஒரு மக்களின் மனிதன் கிடைப்பார் என்ற நம்பிக்கையில்புத்தகத்தை மூடுகிறேன்.

nantri:uyirmmai.com

No comments: