தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த சிறுமியை கடித்துக் குதறிக் கொன்ற நாய்

.
தனது வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த 4 வயது சிறுமியொருவரை அயல் வீட்டிலிருந்து தப்பி வந்த நாயொன்று கடித்துக் குதறி கொன்ற கொடூர சம்பவம் அவுஸ்திரேலிய மெல்போர்ன் நகருக்கு அண்மையில் இடம்பெற்றுள்ளது.

                                                             
    
                                                                                                                                                               
              
                                      

சூடானிய அகதிக் குடும்பத்தைச் சேர்ந்த அயன் கொல் என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்நாயானது அயன் கொலின் மைத்துனியான 5 வயது சிறுமியொருவரையும் 30 வயது பெண்ணொருவரையும் கடித்துக் காயப்படுத்தியுள்ளது. நாயிடமிருந்து 5 வயது சிறுமியை காப்பாற்ற அயன் கொலின் தாயாரான ஜக்லின் அன்சிடோ முயன்றவேளை நாயின் கவனம் அயன்கொலின் பக்கம் திரும்பியுள்ளது.

அச்சத்தில் தாயாரின் காலைப் பற்றித் தொங்கிய அயன்கொல்லை நாய் பலவந்தமாக இழுத்து கடித்துக் குதறியுள்ளது.

அயன் கொல்லின் குடும்பமானது தென்சூடானிலிருந்து சுபீட்சமான வாழ்க்கை தேடி அவுஸ்திரேலியாவில் குடியேறியமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி



No comments: