தண்ணீர்த் தாகம் - சிறுகதை - ஆனந்தன்


.
பங்குனி மாதம் வெயில் மிகவும் காய்தலாக அடித்துக்கொண்டிருந்ததுறோட்டில்அவ்வளவு நடமாட்டமில்லைதூரத்தில் மாத்திரம் ஒருவன் குடை பிடித்துக் கொண்டுவியர்க்க விறுவிறுக்கத் தார் றோட்டில் அவசரமாய்ப் போய்க்கொண்டிருந்தான்.அதற்கப்பால் ஒரு கட்டைவண்டி 'கடா கடாஎன்று ஆடி ஆடி வந்து கொண்டிருந்தது.பன்னிரண்டு மணி வெளியே யாரும் தலை காட்டவில்லைபகல் முழுவதும்வெயிலிலே திரியும்நாய்கூட சுவரோத்தில் கிடந்த சிறு நிழலில் இளைத்துக்கொண்டிருந்ததுஅவ்வளவு உக்கிரமான வெயில்பலர் பகலுறக்கம் போட்டார்கள்.சிலர் புழுக்கம் தாளாமல் தவித்தார்கள்செட்டியார் புதினப் பத்திரிகையோடு தூங்கிவழிந்துகொண்டிருந்தார்.

அந்த அரசமரத்தின் கீழ்த்தான் பகல் முழுவதும் மீனாட்சிக்கு வேலை.நியாயஸ்தலத்துக்குப் போகும் கிளைறோட்டும் பெரிய தெருவும் கோணமாய்ச்சந்திக்கும் சந்தி அதுஅந்த அரசமரத்தைச் சுற்றி வெயில் கடுமைக்கும் உகந்தகுளிர்நிழல்தட்டுச் சுளகிலே சின்னச் சின்னக் கூறாகக் கத்தரிக்காய்பிஞ்சு மிளாகாய்நன்றாக அடுக்கிப் பக்குவமாக வைக்கப்பட்டிருந்தனஅவளுக்குச்சோம்பேறித்தனமோ கொட்டாவியோ இல்லைஅன்றைக்கு வியாபாரம் அவ்வளவுருசியாகவில்லைகோடு கலைந்ததும் பள்ளிக்கூடம் விட்டதும்தான் வியாபாரத்தின்ருசி தெரியும்கொண்டுவந்த பெட்டியை காலி செய்து விட்டேவீடு திரும்புவாள்.அப்பொழுது அவள் உள்ளத்தில் எழுவது ஆனந்தக்கடல்தான்.


தலையைக் கோதிக்கொண்டே பள்ளமான அடியிற் சாய்ந்தாள்அரசமிலைகளைஇடையிடையே அசைக்கும் காற்று அவள் கூந்தலையும் ஆட்டிக்கொண்டிருந்தது.ஒரு காகம் மாத்திரம் கொப்பிலே இருந்து பலத்த தொனி வைத்தது.
அவளைப் பார்த்தால் யாருமே இழிகுலத்தவள் என்று சொல்ல மாட்டார்கள்.அவளுடைய சிவந்த மேனியும் கருவண்டுக் கண்களும் யாரையும் கொள்ளைகொண்டுவிடும்அவள் ஜாதியைப் பற்றி யாருமே கேட்டதில்லை.

அப்படி அவர்கள் அறிந்திருந்தால் எப்பவோ அவள் வியாபாரத்தில் மண்விழுந்திருக்கும்ஊரார் மாத்திரம் அவளிடம் எதுவும் வாங்குவதில்லை.அவர்களுக்குத்தான் விசயம் தெரியுமே?

வெயில் எரிய எரிய அவளுக்குத் தாகம் எடுக்கத் தொடங்கியதுபொறுத்துப்பார்ததாள்நா வறளத் தொடங்கியதுஇனி அவளால் சகிக்க முடியாது மெதுவாகஅவற்றைப் பெட்டியிலே போட்டுக்கொண்டு கிளம்பினாள்பக்கத்தில் வீடுகளில்லை.அவையெல்லாம் காய்கறி விளையும் பூமியும் பற்றைக்காடுகளுந்தான்.

செழித்த கமுகுகளும் வாழைகளும் அங்கே கிணறு இருக்க வேண்டுமென்பதைருசுப்படுத்தினமெல்ல மெல்ல வீட்டின் அருகே வந்தாள்தெருவழியே ஓடியசேற்றுத் தண்ணீர் இன்னும் அந்த எண்ணத்தைப் பலப்படுத்தியதுஉள்ளே பெட்டியைவைத்துவிட்டு அங்கும் இங்கும் பார்த்தாள் யாரையும் காணவில்லை.
கிணற்றைக் காணக்காண மேலும் தாகம் அவளை வாட்டியதுஅடிநாவிலே சொட்டுஜலமில்லால் வறண்டு போயிற்றுஅந்த வெயிலின் அகோரத்திற்கு யாருக்குத்தான்தாகமில்லை!

கிணற்றுக் கட்டிலே விளக்கி வைத்த செம்பிலே நிறைய குளிர்ந்த ஜலத்தைக் காணஅவள் உள்ளமும்வாயும் அதிலே ஆழ்ந்துபோயிற்றுபாவம் அந்த விடாயை அடக்கஇன்னொருவிடாய் உதவியாய் இருந்ததுதான் அந்த விடாயைத் தீர்க்கஅருகதையற்றவள் என்பதை அவள் அறிவாள்இழிகுலத்தில் பிறந்த பெண்கள்எல்லாம் தாகசாந்தி செய்யக்கூடாது என்று கடவுள் கட்டளையிட்டிருக்கிறார் என்பதுஅவள் அபிப்பிராயம்அந்தச் செம்பை மாறி மாறிப்பார்த்தாள்யாரையும்காணவில்லை.

'என்னடி செய்தாய் பாதகிஎன்று மிரட்டல் கேட்டது அதிகார தோரணையில்.

ஏங்கி விலவிலத்துப் போனாள் மீனாட்சிஉடம்பு சொட்ட வியர்த்ததுநெஞ்சு திக்திக்என்று அடித்துக் கொண்டதுகண்கள் மிரள மிரள விழித்தனஅவள் தான் செய்தகளவு பிடிபட்டதை எண்ணிக் கல்லாய் சமைந்து போனாள்.

'உனக்கு அவ்வளவு மமதையா பறைச் சிறுக்கிஎன்று ஆத்திரத்தோடு ஓடிவந்தார்நடேசய்யர்விபூதியைப் பொத்திக்கொண்டே கைகள் ஆத்திரத்தால் அங்குமிங்கும்எதையோ தேடினகோபாக்கினி கண்களிலிருந்து பறந்தது.

'அவ்வளவு நெஞ்சுத் துணிவுகிணற்றுக்குக் கிட்ட வந்து செம்பு சலத்திலும்தொட்டுவிட்டாயேஅனுஷ;டான ஜலத்தில் தொட உனக்கு அவ்வளவு தைரியம்வந்துவிட்டதுபல்லைக் கடித்து ஆத்திரத்தோடு அவளை விழுங்கப்போனார்பாவம்பறைப் பெண் அல்லவாகோயிலுக்குப் போனால் எப்படிப் பிராயச்சித்தம் செய்வதுஎன்று விட்டுவிட்டார் போலும்.

'மூதேவி நாயேஇனி என்னுடைய கிணற்றை நான் என்ன செய்வதுஅனுஷ;டானபாத்திரத்தை வைத்துவிட்டு விபூதி எடுத்து வருவதற்கிடையில் இப்படிச்செய்துவிட்டாயாஇனி இந்தச் செம்பை.....! நீ அந்தக் கதிரவன் மகளல்லவா?என்னுடைய அனுஷடான ஜலத்தைத் தொட்ட நீ கொள்ளையிலே போகமாட்டாயா?சிவன் வதைக்க மாட்டானா?'

ஒரு மின்னல் மன்;னியது போல் இருந்ததுஉலகமே இருண்டு மடமடத்து அவள்தலையில் கவிழ்ந்தது போல் இருந்ததுபூமியே அவள் கால்களிலிருந்து நழுவிவிட்டதுஇரத்தம் நெற்றியிலிருந்து குபீரிட்டதுகளங்கமற்ற பார்வைக் கண்ணீரோடுஇரத்தமும் சேர்ந்து ஓடியதுசெம்பு அலங்கோலமாய் உருண்டு போய்விட்டதுஅதுஅவள் கனிவாயை பற்றப்போய்த் தோல்வியடைந்ததற்காக அழுது கண்ணீர் வடித்துக்கொண்டிருந்தது.

'மூதேவிஇனி இந்தப்பக்கம் தலைகாட்டுஉன் தலையை நுள்ளிஎடுத்துவிடுகிறேனோ இல்லையோ பார்உனக்கு இது போதாது போ நாயே வெளியே,சனியன்கள் வீட்டில் வந்து கூசாமற் கால் வைக்குதுகள்'

தங்கச்சிலைபோல இவ்வளவும் நின்ற உருவம் இரத்த ஆற்றோடு பெயரத்தொடங்கியதுபெட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொண்டு மெதுவாகவெளியே போய்விட்டாள்அவர் எறிந்தபோது வாய்ச்செம்பு அவள் நெற்றியில்நன்றாகக் கணீரிட்டுவிட்டதுதீண்டாமை அசுரனின் அசுரத்தன்மை அவள்பிறைநுதலில் இரத்தத்தை வாங்கி விட்டது.

பாவம் தாகவிடாய் தீர்ந்தபாடில்லைகளவுக்கேற்ற தண்டனை கிடைத்துவிட்டதல்லவாஒரு பிராமணனின் அனுஷ;டானப் பாத்திரத்தைத்தொட்டுவிட்டாளல்லவாஎவ்வளவு பொல்லாத கோரக்களவுஇதற்கு இந்தத்தண்டமை போதுமாசிவனுடைய அனுஷ;டானத்தை முடிக்க விடாமல் தண்ணீரைத்தொட்டு தீட்டாக்கியவளல்லவாபெண்ணைத்திட்டிய திட்டுக்களைப் பார்த்துப்பகவான் சிரித்துக் கொண்டிருந்தார். 'என் பிள்ளையின் கடூர நா வரட்சியைத்தணிக்காத உனக்கு என்மீது அன்பாஉன்னுடைய அனுஷ;டானம் கொடிய நரகிற்குவாயிலல்லவாஎன்று அழுகையோடுதான் அவர் சிரித்துக் கொண்டிருந்தார்.

சந்திரனுக்கும் இவள் முகத்திற்கும் நெடுங்காலம் ஓர் வித்தியாசம்அது இன்றோடுபூர்த்தியாகிவிட்டதுஅவள் மதிவதனத்திலும் மறு ஏற்பட்டுவிட்டது.

ஏழையின் தண்ணீர்விடாய் என்றுதான் திருமோ?

..............................

நடுநிசிஎங்கும் ஒரே நிசப்தம்ஆனால் அறைகளில் இருமும் சப்தமும்குழந்தைகளின் கீச்சுக்குரலும் இன்னும் ஒழிந்தபாடில்லை. 'ஐயோ அம்மாஎன்றுஅடுத்த அறைகளில் வியாதிக்காரர் கஷ;டப்பட்டுக் கொண்டிருப்பது தெரிந்தது.குழந்தைகளைத் தாலாட்டும் தாய்மாரின் பல தினுசான குரல்அங்கங்கே மின்சாரவிளக்குகள் தூங்கிக்கொண்டிருந்தன.

ஒரு கிழவன் பூணுலை இழுத்துவிட்டுக் கொண்டு மூலையிலே செருமிக் கொண்டுநெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்கஷ;டப்பட்டுக் கஷ;டப்பட்டு முக்கிமுனங்கிக்கொண்டு இருந்தான்அவனை யாரும் கவனிப்பார் இல்லைஅவன்சுற்றமெல்லாம் இன்று அவனைக் கைவிட்டுவிட்டனஅவன் அவர்கட்கெல்லாம்என்ன செய்தான்ஒரே ஒரு பிழைவாலிபமாய் இருந்த காலத்திலே தெரியாமல்தூரத்திலே உள்ள வெள்ளாளப் பெண்ணைப் பார்ப்பணத்தி என்று கல்யாணம்செய்தான்சிலநாட்கள் சென்றதன் பின் சுற்றம் எல்லாம் அவனைஇகழ்ந்துதள்ளிவிட்டதுஅதன் பின்புதான் அவனுக்கு விஷயம் புரிந்ததுதான்வெள்ளாளப் பெண்ணைக் கட்டிவிட்டான் என்று உணர்ந்ததும் மெல்லஅவளைக்கைவிட்டான்.

பெண்வழியால் லாபமும் இல்லைஇனசனமும் இல்லைஇன்றுவரையும்தனியேதான் காலந்தள்ளினான்இன்றைக்கு வியாதியாய்ப் போனான்கவனிப்பார்இல்லைதர்ம ஆசுப்பத்திரியிலே கிடக்கிறான்.

அவனுக்கு மேலும் மேலும் மூச்சுவாங்கத் தொடங்கியதுதண்ணீர் விடாயெடுத்தது.அடிநாவிலே ஈரலிப்பில்லைஇருமி இருமி வரண்டு போயிற்றுதாகவிடாய் வரவரஅதிகரித்ததுபேச்சுக் கொடுத்தாலோ இருமல் வாட்டுகிறது.

'அம்மாதண்ணீர்நாவை வறட்டுகிறதுஎன்று சொன்னான் அந்தக் கிழவன் கெஞ்சும்குரலில்பதிலே இல்லைஅடுத்த அறையில் இருந்து ஒரு இருமல் அதற்குப் பதில்,கொஞ்சநேரம் நிசப்தம்.

'அம்மாஎன்னால் சகிக்க முடியவில்லைதண்ணீர் விடாயால் செத்துப்போய்விடுவேன்தண்ணீர் கொடுங்களம்மாயாருமே மூச்சு விடவில்லைதாதிகள்எல்லாம் ஒரே உறக்கம் போலும்.

ஒரு பெண்ணுருவம் அந்த மூளையருகே வந்ததுஆமாம் அவளும் ஒரு தாதிப்பெண்தான்அந்த ஆஸ்பத்திரியில்காலதேவன் கீறிய கோடுகள் பதிந்த அவன்முகத்தை உற்றுப் பார்த்ததுஆனாலும் அந்த முகம் அவளுக்குச் சட்டென்று ஞாபகம்வந்ததுகிழவன் தண்ணீருக்காக வாயைத் திறந்தான்.

'ஐயாபறைச்சி தொட்டுத் தண்ணீர் தந்தால் குடிப்பீர்களாதாங்கள் பிராமணரல்லவா?'என்றாள் அவள்.

'அம்மாஅம்மாகுழந்தாய் பிராமணனானாலென்;பறையனானாலென்னஎன்தாகத்திற்கு நீர் கொடம்மாகொடியமரணதாகம் நெஞ்சை அடைக்கிறது.'

அவள் ஒரு சின்னப் பாத்திரத்தில் இளஞ்சூடான நீரைக் கொண்டு வந்தாள்கிழவன்விடாய் அவதியால் வாயைத் திறந்தான்ஆகாஉள்ளம் பூரிக்க ஆத்மா சாந்தியடையமெல்ல மெல்ல நீரை வார்த்தாள் பெண்மணி.

'அம்மாஇந்த மரணவிடாயில் என்னைக் காப்பாறினாய் உன் குலம் நன்றாகவாழட்டும்நீ யாரம்மா?'

'ஐயாஎன்னைத் தெரியாதாநன்றாக உற்றுப் பாருங்கள்என்று குனிந்தாள் அந்தத்தாதி.

'ஞாபகம் இல்லையே?'

தன் நெற்றியை அவன் முகத்திற்கு நேரே பிடித்தாள். 'இதோ பாருங்கள் இந்த மறுவை.தண்ணீர் விடாய்த்து அன்றொருநாள் உங்கள் வீட்டில் வந்தேனல்லவாதாகவிடாய்தாங்காமல் சிறுபிள்ளைத்தனத்தால் ஏதோ அனுஷ;டானச் செம்பைத்தொட்டுவிட்டேனென்று நீங்கள் செம்பால் எறிந்த காயம் இதுதான்அவள்நெற்றியைக் காட்டினாள் கிழவனுக்கு.

கிழவன் முகம் காட்டிய குறியின் உணர்ச்சிஏதோ புதிதாய் இருந்தது. 'ஆமாம்,கதிரவன் மகளல்லவாஎப்படியம்மா இங்கே வந்தாய்தாதியாவும் வேலைபார்க்கிறாயே?'

'ஆம்ஐயாஎல்லாம் அந்தக் கிறிஸ்தவப் பெரியாரின் கிருபைதான்அன்றைக்குநீங்கள் தீர்க்காத தாகத்தை அந்தப் பெரியார்கள் தீர்த்தார்கள்கல்வியுமளித்து இந்தநிலையில் வைத்தார்கள்.'

கிழவன் உள்ளம் வெடித்துவிட்டது. 'என் மரணதாகத்தை நீக்கிய கரங்களுக்கா அன்றுஇரத்தக்கறை ஏற்படவேண்டும்இந்த விடாய் தானே அந்தப் பசலைக்கும் அன்று'

'அம்மா என்னை மன்னிஜாதிக் கர்வத்தால் அன்று உன்னை எறிந்த என்னைமனப்பூர்வமாய் மன்னி!'

கிழவன் அவள் காலடியில் விழ எழுந்தான்பாவம்அப்படியே தொப்பென்றுவிழுந்தான்விடாய் அடங்கியதோடுஅவன் கண் திறக்கவேயில்லை.

No comments: