பனங்கொட்டை முளைவிட்டு வடலியென... கவிதை


.



அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

பிணம் தின்னிக் கரும்பறவை
கரைந்தழுது
தேனொழுகப் பேசும்.
பொய்யான உறுதி பலவுதிர்த்து
உள்ளரங்கில்
தலை நுளைக்கப் பார்க்கும்.
தரை தின்ன கறையானாய்
அரித்தரித்துப் பரவும்.
பிறர் மண்ணை ஏப்பமிடும்
வழியனைத்தும் நாடும்.

துயர் சிந்தி வாழ்வொடுங்கி
தலை சாய்க்கும்
சேற்றெருமை அல்ல.
துளிநீரும் கடலாகப்
பரந்தெழுப் படகாகி மிதப்பர்.


பனங்கொட்டை முளைவிட்டு
வடலியென வளரும்.
இவர் வாழ்வு கருகாது
வளவெங்கும் நிமிரும்.



எம்.கே.முருகானந்தன் 

nantri:suvaithacinema.blogspot

No comments: