யுத்த குற்றங்கள் தொடர்பான மீள் விசாரணைக்கு ஆஸி. கோரிக்கை



[ செவ்வாய்க்கிழமை, 05 யூலை 2011]

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய தொலைக்காட்சியொன்று இலங்கை மக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை ஒளிபரப்பு செய்துள்ளது.

தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன். இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனித உரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் என தான் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் குறிப்பிட்டார்
நன்றி தமிழ்வின்

கொல்லப்பட்டவர்களின் தொகையை மீளாய்வு செய்ய ஜெனீவாவை கோரவுள்ளோம்: கெவின் ரூட்


5/7/2011
கொல்லப்பட்டவர் தொகை தொடர்பிலான ஆதாரங்கள் தொடர்பில் மீழ் ஆய்வு செய்யுமாறு ஜெனீவாவை கோரவுள்ளதாக அவுஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர்ரும் முன் நாள் அதிபருமான கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.

சனல் 4 தொலைக்காட்சியினால் காண்பிக்கப்பட்ட இலங்கையின் கொலைக்களம் காணொளி அவுஸ்ரேலியாவில் ஒளிபரப்பப்பட்டது. இது தொடர்வில் கெவின் ரூட் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்படி குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சர்யப்பட வைப்பதாகவும் தங்களுக்கு தனியானதொரு மாநிலம் கோரிய தமிழர்களுக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையில் கடந்த 26 வருடங்களுக்கும் மேலாக இடம்பெற்று வந்த போர் கடந்த 2009ஆம் ஆண்டு முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் இந்த யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது. இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார். அவர்களின் கருத்தை நான் நம்புகின்றேன்.

இருப்பினும் போர்குற்றம் குறித்த விசாரணைக்கு குறித்த காணொளி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை எனவும் அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது. எனவும் கூறியுள்ளார்

நன்றி வீரகேசரி

No comments: