தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

கீதையைப் படிப்போம் பாதையை அறிவோம் !

 



 
     






















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா





எண்ணாய் இருப்பான் எழுத்தாய் இருப்பான்
கண்ணாய் இருப்பான் மணியாய் இருப்பான்
உண்ணும் உணவாய் பருகும் நீராய்
எல்லாம் ஆகி இருப்பான் கண்ணன்

கடலாய் இருப்பான் அலையாய் எழுவான்
முகிலாய் இருப்பான் மழையாய் பொழிவான்
வயலாய் இருப்பான் பயிராய் இருப்பான்
வளமாய்க் கண்ணன் நிறைந்தே இருப்பான்

ஆக்கும் சக்தியாய் அழிக்கும் சக்தியாய்
காக்கும் சக்தியாய் கண்ணன் இருப்பான்
நோக்கும் இடமெலாம் இருப்பான் கண்ணன்
வாக்கும் கண்ணனே வரமும் கண்ணனே 

வன்னி ஹோப்பிற்கு வரவேற்கிறோம்


 

வன்னி ஹோப் 👉 இணையதளம்:

Vanni Hope – Be The Reason Someone Smiles Today!

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சி 30/08/2025

 

தமிழ் மூத்த குடிமக்கள் சங்கத்தின் பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை நீங்கள் அனைவரும் விருப்பமாக அனுபவித்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.  

முதலில்,  சங்கத் தலைவர் திரு. ஆருமுகம் பெருமையனார் மற்றும் திருமதி பெருமையனார், மற்றும் இணை அமைப்பான தமிழ் மூத்த குடிமக்கள் நலச்சங்கத்தின் (Tamil Senior Citizens' Benovolent Society) தலைவர் திரு. சபாரத்னம் கேதாரநாதன் மற்றும் திருமதி சிவகௌரி கேதாரநாதன் ஆகியோரும் பங்கேற்று, நமது தென்னாசிய பாரம்பரியத்தினமான விளக்கேற்றத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இந்த நிகழ்ச்சியை நடைமுறைப்படுத்த உதவிய ஆஸ்திரேலிய அரசாங்கத்தின்


Community Grants Hub அமைப்பின் Multicultural Grassroots Initiatives Funding Program வழியாக வழங்கிய பொருளாதார ஆதரவிற்கும்  நன்றி. 

பல்முகபண்பாட்டு நிகழ்ச்சியை உணர்வுபூர்வமாக உயிர்ப்புடன் கொண்டுவர உதவிய அனைத்து கலைஞர்கள்:

  • திருமதி வரலக்ஷ்மி ஸ்ரீதரன் மற்றும் அவருடைய இசைக் குழுவினருக்கு, சுருதி மற்றும் லயத்தில் அற்புதமான வீணை இசை.


  • நேபாள நண்பருடைய உணர்ச்சி பூர்வமான புல்லாங்குழல் இசை.

  • மூத்த உறுப்பினர் திரு. சிவசூரியர் அவருடைய கர்நாடக இசை பாணியில் மௌத் ஆர்கன்.

  • திருமதி அமேஷா மற்றும் அவருடைய அர்ப்பணிப்பு கொண்ட குழு, ஐந்து தன்மைகள் — நீர், மண், ஆகாயம், நெருப்பு, காற்று — ஆகியவற்றை பிரதிபலிக்கும்  choreographyக்கு இளம் கலைஞர்கள் மிகச் சிறப்பான பரதநாட்டியம்.

  • இலங்கை நடனக் குழு, கண்டிய நடனம் மற்றும் பரதநாட்டியம் ஆகிய இரண்டையும் இணைத்து அரங்கேற்றிய மறக்க முடியாத சிறப்புப் பெறும் நிகழ்வு.

சிறப்பு விருந்தினராக Reid தொகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினராக விளங்கும் கௌரவ MP Sally Sito அவர்கள் கலந்து கொண்டது  மிகவும் பெருமைப்படுத்துகிறது. 

சிறப்பு ழகரமான சீராளர்!

 


-சங்கர சுப்பிரமணியன்.



கண்ணுக்கு மையழகு கவிதைக்கு சொல்லழகு என்பதைப் போன்று தமிழிக்கு சிறப்பு ழகரம் அழகு. எத்தனை மொழிகள் இருந்தாலும் தமிழ் மொழிபோல் சிறப்பு ழகரம் போன்ற எழுத்து எம்மொழியிலும் இல்லை. அதன் எழுத்து வடிவமின்றி அதனை நாவைச் சுழற்றி உச்சரிக்கும் முறையும் இணைந்துதான் சிறப்பு ழகரம் என்ற தகுதியை அதற்கு வழங்கியுள்ளது.

தமிழ் என்று எழுதும்போது சிறப்ப ழகரத்தை எழுதினாலும் அதன் மேல் புள்ளி வைக்காது போனால் அது பொருளற்றே நிற்கும். தமிழ்பால் கொண்ட ஈர்ப்பால் தமிழை வாழ்வதற்கு ஏற்ற பணியாகத் தேர்வு செய்தவர் வாழும் பணியாகவும் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

அவர் வேறு யாருமல்ல உலகத் தமிழர் யாவரும் அறிந்த பல நூல்களுக்குச் சொந்தக்காரரான அன்பரும் நண்பருமான எழுத்தாளர் திரு.  லெட்சுமணன் முருகபூபதி அவர்கள்தான். ஒரு ஆறு என்றால் அது சீராக ஓடிக்கொண்டிராது. அகன்றும் குறுகியும் வேகமாகவும் மெதுவாகவும் சுழல்கள் நிறைந்தும் சுழல்கள் அற்றும் ஓடிக் கொண்டிருப்பதுதான் ஆறு.

கிட்டத்தட்ட நட்பு அவ்வாறே. விருப்பு வெறுப்புக்கள் இருக்கும். கருத்து முரண்பாடுகள் இருக்கும் குற்றம் குறைகள் இருக்கும். வாழ்வில் மேடு பள்ளங்கள் இருப்பது போல் நட்பிலும் இவையெல்லாம் இருக்கத்தான் செய்யும்.

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

27-09- 2025  Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'

25-10-2025 Sat: சிட்னி துர்கா கோவிலில்  நிதி திரட்டும் இரவு விருந்து

26-10-2025 Sun: சிட்னி துர்கா கோவில்  மண்டபத்தில் தமிழர் விழா - துர்கா போட்டிகள் மற்றும் திருக்குறள் போட்டிகளுக்கான பரிசளிப்பும் நடைபெறும்

26-10-2025 Sun: ஈழத் தமிழர் கழகம் கலைக்கதம்பம் 2025 நிகழ்வு 6.00 PM at Redgum Centre, Wentworthville

09-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

வைர நெஞ்சம் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தன்னுடைய படங்களுக்கு வசீகரிக்கும்


பெயர்களையே வைப்பதுண்டு. அந்த வரிசையில் 1972ன் ஆண்டு படத்தை வெளியிடுவேன் என்ற வைர நெஞ்சம் கொண்டு அவர் உருவாக்கிய படத்துக்கு வைத்த பெயர் தான் ஹீரோ 72. 


சிவாஜியை ஹீரோவாகப் போட்டு தயாரான இந்தப் படம் ஸ்ரீதரின் திரை வாழ்வில் மறக்க முடியாத வடுவாக நெஞ்சத்தில் நிலைத்தது. காரணம் துரித தயாரிப்பாக உருவாகி வெளிவரும் என்று எதிர்பார்த்த படம் மூன்றாண்டுகள் தயாரிப்பில் இருந்து இழுபட்டு இறுதியில் படத்தின் பெயரும் மாற்றப் பட்ட பின்னரே திரைக்கு வந்தது. 

தமிழ், ஹிந்தி என்று இரு மொழிகளிலும் ஒரே சமயத்தில் படம்

தயாரானது. ஹிந்தியில் ஜித்தேன்திரா, ஹேமமாலினி, அமிதாப்பச்சன் ஆகியோர் நடிக்க , தமிழில் சிவாஜி, முத்துராமன் , பத்மப்ரியா ஆகியோர் வேடம் ஏற்றனர். தமிழிலும் ஹேமாமாலினி நடிப்பதாக இருந்தும் பின்னர் அது நடக்காமல் , ஹேமாவின் முக சாயலை கொண்ட புது முகம் பத்மபிரியா ஹீரோயினாக நடித்தார். இவர்களுடன் பாலாஜி, சி ஐ டி சகுந்தலா , தூலிபாலா ஆகியோரும் நடித்தனர். 

ரசிகர்களின் ரசனை மாறி விட்டது , ஆக்சன் படங்களைதான் விரும்புகிறார்கள் என்ற அபிப்பிராயத்தில் ஓர் அடிதடி படத்தை சிவாஜியின் நடிப்பில் உருவாக்க முனைந்தார் ஸ்ரீதர். ஏற்கனவே ஹிந்தியில் எடுத்த தர்த்தி , அவளுக்கென்று ஓர் மனம் , அலைகள் படங்களின் தோல்வியால் பொருளாதார ரீதியில் பாதிக்கப் பட்டிருந்த ஸ்ரீதர் இந்தப் படத்தின் மூலம் பொருளாதார சரிவில் இருந்து மீளலாம் என்ற நம்பிக்கையில் இப் படத்தை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் கிடைத்த சிவாஜியின் கால்ஷீட் நாளடைவில் கிடைக்காமல் போகவே படம் இழுபடத் தொடங்கியது. 1973ல் ஹிந்திப் படம் தயாராகி வெளியான நிலையில் தமிழ் படம் பாதி தான் முடிந்திருந்தது. 

விரிசலும் உறவும்

 

31 Aug, 2025 | 02:43 PM

லோகன் பரமசாமி

பூகோள அரசியலில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இறக்குமதி வரி நெருக்கடிகள் பெரும் பொருளாதார நெருக்குதல்களை உருவாக்கி இருக்கும் இந்த நேரத்தில், அமெரிக்க - இந்திய உறவில் ஏற்பட்ட தளம்பல் நிலை சீன-  இந்திய உறவை சுமூகமாக்கும் நிலைக்குத் தள்ளி உள்ளது.  

இந்திய - சீன உறவில் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரிசல்கள் புதிய சமாதான புரிந்துணர்வு நோக்கி நகர்ந்து வருகிறன்றன. அண்மையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, புது டெல்லிக்கு மேற்கொண்ட பயணம் புதிய திருப்பு முனையை உருவாக்கி உள்ளது.  புதிய வர்த்தக உடன் படிக்கைகள் எட்டப்பட்டுள்ளன ,  சீன, இந்திய நகரங்கள் மத்தியில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிக்கவும் ஏற்பாடாகி உள்ளது. 

மேலும், ஊடகவியலாளர்களுக்கான பயண அனுமதி வழங்கல், கலாசார பரிமாற்றம், வியாபார வசதிகள் செய்து கொடுத்தல் போன்ற  பல புதிய உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான  செயற்பாடுகள் ஆரம்பிக்க ஏற்பாடாகி உள்ளது .  அத்துடன், இன்று சீனா செல்லும் பிரதமர் மோடியும் சீன அதிபர் ஷீ  ஜின்பிங்கும் சந்திக்கவுள்ளனர்.

அமெரிக்காவின் உற்ற நண்பனாக கடந்த காலங்களில் இந்தியா  கணிக்க பட்டது. குறிப்பாக, சீனாவின் பிராந்திய விஸ்தரிப்பிற்கு எதிரான ஒரு பதில் பலம் தரக்கூடிய கூடிய ஒரு ஆசிய வல்லரசாக அமெரிக்காவினால் இந்தியா நகர்த்தப்பட்டு வந்தது.  இதற்கு ஏதுவாக ‘நாற்கர நாடுகள் கூட்டு’ என்ற ‘குவாட்’ அமைப்பில் இந்தியா சேர்த்து கொள்ளப்பட்டதற்கு சீன எதிர்ப்பில் இந்தியா துனை நிற்கும் என்ற எண்ணப்பாடே காரணமாக இருந்தது. 

ஆனால், இந்த நிலை இன்று பெரும் மாற்றம் காணும் நிலையை எட்டி உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  இந்தியப் பொருட்கள் மீதான தீர்வை வரியை 50 சத வீதமாக அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்கா மீது இந்தியா  அதிருப்தி வெளியிட்டது. 50 சதவீத வரி விதிப்பிற்கு அமெரிக்காவால் தரப்பட்ட காரணங்களாக  ரஷ்யாவிடம் இருந்து ஆயுத தளபாடங்களை பெருமளவில் இந்தியா கொள்வனவு செய்வதையும், ரஷ்ய மசகு எண்ணையை இந்தியா அதிகளவில் கொள்வனவ செய்வதையும் அமெரிக்கா குறிப்பிட்டது. 

இலங்கைச் செய்திகள்

 வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

கிளிநொச்சியில் மனித புதைகுழிகள், இனவழிப்புக்கு சர்வதேச விசாரணையை வலியுறுத்தி கையெழுத்து போராட்டம்

வவுனியாவில் சர்வதேச நீதி கோரி கையெழுத்து போராட்டம்

ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்!

ஒரு இலட்சத்து 30 ஆயிரம் தமிழ் மக்களின் கையொப்பத்துடன் ஐ.நா செல்கின்றது "நீதியின் ஓலம்"

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு குற்றப் புலனாய்வு திணைக்களம் அழைப்பு




வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம் வட, கிழக்கு மனிதப்புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலைக்குமாக நீதிகோரி முல்லையில் கையெழுத்து போராட்டம்

29 Aug, 2025 | 02:05 PM

செம்மணி உட்பட இலங்கையின் வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலைகளுக்கும் நீதியைக் கோருவதற்காக தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு வடக்கு, கிழக்க மாகாணங்களின் பல பகுதிகளிலும் இடம்பெற்றுவருகின்றன. 

அந்தவகையில் குறித்த கையெழுத்துச் சேகரிக்கும் செயற்பாடு முல்லைத்தீவு நகரில் வெள்ளிக்கிழமை (29) கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் ஞா.ஜுட்சன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. 

உலகச் செய்திகள்

 யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

காசா வைத்தியசாலை மீதான தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் உயிரிழப்பு : தவறுதலான விபத்து என நெதன்யாகு கவலை !

ஜம்மு காஷ்மீரில் மண்சரிவு : உயிரிழந்தோர் எண்ணிக்கை 31 ஆக உயர்வு

 “சிறுவர்கள் மயானமாக” மாறிவிட்ட காசா! ; பாலஸ்தீனம் போரை நிறுத்துவதற்காகவும் குரல் கொடுங்கள்! - மெலனியா ட்ரம்புக்கு துருக்கியின் முதல் பெண்மணி கடிதம்

சீன ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய பிரதமர் மோடி  


யூதர்களுக்கு எதிரான தாக்குதல்கள் : ஈரானியத் தூதுவரை நாடுகடத்தியது அவுஸ்திரேலியா

Published By: Digital Desk 3

27 Aug, 2025 | 12:36 PM

அவுஸ்திரேலியாவில் யூத சமூகத்திற்கு எதிராக நடந்த தாக்குதல்களுக்கு ஈரான் அரசுதான் காரணம் என அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சிட்னி மற்றும் மெல்போர்னில் இடம்பெற்ற இரண்டு யூத விரோதத் தாக்குதல்களை ஈரான் அரசு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. இந்த குற்றச்சாட்டின் பின்னணியில், அவுஸ்திரேலியா ஈரானியத் தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியுள்ளது. 

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒரு வெளிநாட்டு தூதரை அவுஸ்திரேலியா நாடு கடத்துவது இதுவே முதல் முறை என அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி 27/09/2025



முத்தமிழ் மாலை 29/11/2025

 


இருக்கும் வரைக்கும் ஏற்றதைச் செய்வோம்!




   

















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் …. அவுஸ்திரேலியா 


குடும்பம் என்றால் குதூகலம் வேண்டும்
தாத்தா பாட்டியைத் தாங்கிட வேண்டும்
மூத்தோர் வார்த்தை கேட்டிட வேண்டும்
முடியும் வரைக்கும் உதவிட வேண்டும்

உறவுகள் ஒன்றாய் இணைந்திட வேண்டும்
மறைவுகள் நமக்குள் அகன்றிட வேண்டும்
கரவுடன் பழகுதல் மறந்திட வேண்டும்
கனிவுடன் உறவினைப் பேணிட வேண்டும்

செல்வம் பார்க்கா சேர்ந்திட வேண்டும்
சிறந்த பண்பை மதித்திட வேண்டும்
பொய்மை நட்பை உதறிட வேண்டும்
பொங்கும் சினத்தைப் பொசுக்கிட வேண்டும்

தமிழாய் இசையாய் மலர்ந்த கீதை


உலகளாவிய சின்மயா இயக்கம் தனது 75 - ஆவது ஆண்டினை 

கொண்டாடி வருகின்றது.   அதனொரு செயல்பாடு பகவத் கீதை  முழுவதையும் தமிழ்
ப் படுத்துவது. சுவாமி  மித்ரானந்தா அவர்களின் வழிகாட்டுதலின்படி பகவத் கீதை ஏழுபேர் கொண்ட குழுவினரால்  சிறப்பாக  தமிழ்ப்படுத்தப்பட்டது.   பதினெட்டு அத்தியாயமும் தமிழ்ப் படுத்தப்பட்டு , இசைஞானி இளையராஜா அவர்களால் 
இசையமைக்கப்பட்டது

.

மாண்புமிகு பாரத  பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் தமிழ்கீதை கங்கைகொண்ட சோழபுரத்தில் 27. 8 . 25 அன்று  வெளியிடப்பட்டது.

மக்களின் மேலான புரிதலுக்கு ஒரு சான்று:

பரித்ராணாய சாதுனாம் வினாஷாய ச துஷ்க்ரிதம்
தர்ம-ஸன்ஸ்தாபனார்தாய ஸம்பவாமி யுகே யுகே

எப்போதெல்லாம் தர்மம் குன்றி அதர்மம் தழைத்தோங்குமோ                     அப்போதெல்லாம் என்னை நானே தோற்றுவிக்கிறேன் பாரதா!

 இந்த மாபெரும் பணியில் எழுவரில் ஒருவராய் நானும் இணைந்திருந்தது எனக்கு பெருமகிழ்வையும் நிறைவையும் தருகிறது.

 

பா. மா. சாயிலட்சுமி

சின்மயா இயக்கம்

'மிஸ்டர் கிளீனின்' கைது வரலாற்றுத் தடம்

 

24 Aug, 2025 | 10:31 AM


ஆர்.ராம்

இலங்­கையின் 8ஆவது நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யா­க­வி­ருந்­தவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. அர­சியல் சாணக்­கி­யங்கள் நிறைந்த அவ­ருக்கு 'மிஸ்டர் கிளீன்' என்ற பெய­ரு­முண்டு. இலஞ்ச, ஊழல், மோச­டிகள் உள்­ளிட்ட  கறை­களை அவ­ரது கரங்கள் கொண்­டி­ருக்­கா­மையால் கிடைத்த பெரும் கௌரவம்.

அத்­த­கைய ஒருவர் மீது, அண்­மைய காலத்தில் அர­சாங்க நிதியை தவ­றாக பயன்­ப­டுத்தி தனிப்­பட்ட வெளி­நாட்டுப் பய­ணங்­களை மேற்­கொண்டார் என்ற குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டன. விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வெள்­ளிக்­கி­ழமை குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­னரால்  ரணில் அழைக்­கப்­பட்டார்.

அவ்­வாறு வாக்­கு­மூலம் பெறு­வ­தற்­காக அழைக்­கப்­பட்ட நிலையில் 9 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வுத் திணைக்­க­ளத்தில் ஆஜ­ரா­னவர் சுமார் 4 மணி நேரம் வாக்­கு­மூ­லங்­களைப் பதிவு செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து, பிற்­பகல் 1.15 மணி­ய­ளவில் குற்றப் புல­னாய்வு திணைக்­க­ளத்தின் நிதி விசா­ரணை பிரிவின் மூன்றாம் இலக்க பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் நளின் ஹேரத்­தினால் கைது செய்­யப்­பட்டார்.

பின்னர் அவர் பிற்­பகல் 3 மணி­ய­ளவில் கோட்டை நீதிவான் நீதி­மன்­றத்தில் நீதிவான் நிலு­புலி லங்­கா­புர முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு பிணைக் கோரிக்­கைக்­கான வாதப்­பி­ர­தி­வாங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.

ஈற்றில் பிணை அனு­ம­தியை வழங்­கு­வதா இல்­லையா என்­பதை தீர்­மா­னிப்­ப­தற்­காக 6.15 இலி­ருந்து 9.50 வரையில் விசா­ர­ணைகள் ஒத்­தி­வைக்­கப்­பட்டு இறு­தியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை 26ஆம் திகதி வரையில் விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.  

நீதி­மன்ற உத்­த­ர­வை­ய­டுத்து ரணி­லுக்கு கைவி­லங்­கி­டப்­பட்டு சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்டு, அங்கே மருத்­து­வர்­களின் ஆலோ­ச­னையில் தற்­போது சிறைச்­சாலை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருக்­கிறார்.  

ரணிலின் கைதும் தடுத்­து­வைப்பும், இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் அழிக்­க­மு­டி­யாத தடத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  1815இல் ஸ்ரீ விக்­கி­ரம இரா­ஜ­சிங்கன் ஆங்­கி­லேய ஆட்­சி­யா­ளர்­களால் சிறைப்­பி­டிக்­கப்­பட்டார். அவர் சிறையில் தடுத்து வைக்­கப்­பட்டார்.

மீதியை மனத்திரையில் காண்க! 

 

மோகனசுந்தரம் மனைவியிடம் மிகவும் அன்பு காட்டுபவர். அந்த அன்பு எப்படி என்றால் மனைவி கற்பகம் ஒரு கன்னத்தில் அறைந்தால் பிரியசகியே இதோ இன்னொரு கன்னம் என்று மற்றொரு கன்னத்தையும் காட்டும் வள்ளல் பெருமான்.

ஒரு நாள் மிகவும் சிரமப்பட்டு மனைவி காலால் இட்ட கட்டளையை தலைமேல் வைத்து செய்து கொண்டிருந்தார். அது அப்படி என்ன தலைபோகிற வேலை என்கிறார்களா? கற்பகம் சொல்வதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்கள்.

“என்னங்க சொல்லி இரண்டு நாளாச்சு அந்த ரவிக்கையில கொக்கியை தைத்து கொடுங்கன்னா ஒன்னுமே கண்டுக்க மாட்டுக்குறீங்க” என்று அங்கலாய்த்தாள் கற்பகம்.

“மணி ஏழு ஆறது. இன்னும் பெட் காபி வந்தபாடில்லை”

“முதல்ல கொக்கியை சரி படுத்துங்க. அப்புறம்தான் காபி”

எங்கே காபி கிடைக்காமல் போய்விடுமோ என்ற நினைப்பில் கருமமே கண்ணாகி ஊசியால் கொக்கியை தைத்துக் கொண்டிருந்தார். கணவன் மேலிருந்த அன்பின் மிகுதியால் காபியை எடுத்து வந்தாள். வேலைவாங்கவே கொக்கியை சரிசெய்தால்தான் காபி என்று சொன்னாள்.

காபி கொண்டு வந்தவள் இந்தாங்க காபி என்று தோள்பட்டையை அழுத்தவே ஊசி விரலில் குத்திய வலியால் துடித்துப்போய் அவர் அவளைத் தள்ளிவிட காபியை மோகனசுந்தரத்தின் தலையில் கொட்டியதோடு பக்கத்தில் இருந்த அலமாரியிலும் இடித்துக் கொண்டாள்.

கீழே விழுந்தவள் ஏங்க ஆசையா காபி கொண்டு வந்தா இப்படியா தள்ளிவிடுவீங்க என்றாள். ஊசிகுத்திய வலியால் தள்ளிவிட்டேன். அதற்குத்தான் எனக்கு காபியாபிசேகம் பண்ணிட்டியே என்றார். நான் மட்டும்தான் தள்ளிவிட்டேன் என்று எண்ணாதே உனக்கும் எனக்கும் கல்லினுள் தேரைக்கும் கருப்பை உயிருக்கும் படியளக்கும் பரமசிவனே பார்வதியைத் தள்ளி விட்டுருக்கிறார் என்றார். அதைக்கேட்டதும்,

மனத்தினை விரிவாக்கி வைத்திடுவாய் – அன்பு ஜெயா (பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).

  

 

சிந்தடி:

எல்லோர்க்குமே இடங்கொடுத்திடும் இயற்கையதுவும்

பொல்லாதயிம் மாந்தனுமதைப் போற்றவேண்டுமே!

இல்லாதவர் நிலைகண்டவன் இரங்கவேண்டுமே,

எல்லோர்க்குமே உதவிநல்கிட  இசையவேண்டுமே!

உள்ளவாழ்வுதான் சிலகாலமே, உவந்துநீயுமே

உள்ளமதிலே கனிவுபொங்கிட உதவிநல்கிடு!

மெல்லயாவரும் உலகமதிலே மேன்மைபெற்றுதான்

வல்லமையுடன் ஏற்றம்பெற வாழ்ந்திடுவமே!

 

தனிச்சொல்: அதற்கு

 

சுரிதகம்:

மனத்தை விரித்திடு, மாண்பைப் பெருக்கிடு,

கனவைப் போன்ற காட்சியும்

நனவாய் மாறிடும் நல்லவை பெருகுமே!

------

சொந்தங்கள் வாழ்க - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 தமிழில் வெளிவரும் சிறந்த இலக்கிய மாத இதழ் கலைமகள்.


நூற்றாண்டை நோக்கி நடை போடும் கலைமகளில் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த சிறுகதை காணிநிலம். பூவை எஸ் . ஆறுமுகம் எழுதிய இந்த கதை 1975ம் வருடம் சொந்தங்கள் வாழ்க என்ற பேரில் படமாக வெளியானது. 




படத்துக்கு திரைக்கதை ,வசனம் எழுதி இயக்கியவர் மதுரை திருமாறன். இவர் இயக்கிய சூதாட்டம், வாயாடி, திருடி, ரோஷக்காரி ஆகிய படங்களில் நிரந்தர நாயகியாக கே. ஆர் விஜயா நடித்து வந்த கால கட்டத்தில் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் அவருக்கு பதில் கதாநாயகியாக ஜெயசித்திரா நடித்திருந்தார். காரணம் படத்தின் ஹீரோயின் ஒரு கல்லூரி மாணவி! 


கிராமத்தில் அரசியல் தலைவராக கோலோச்சுகிறார் நாகலிங்கம்.

ஆலயத் தலைவராக செல்வாக்குடன் விளங்குகிறார் கோயில் தர்மகர்த்தா. இருவரும் நெருங்கிய நண்பர்கள். மனைவியை இழந்த தர்மகர்த்தா மறுமணம் செய்யாமல் தன் ஒரே பெண் குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்க்கிறார். அவரின் மகளான பூங்கொடி பிடிவாதம் மிக்கவள். ஊர் மக்கள் தன் தந்தைக்குத் தான் முதல் மரியாதையை செய்ய வேண்டும் என்று எல்லா இடத்திலும் வற்புறுத்துகிறாள். நாகலிங்கத்தின் மகன் குமாரோ தன் தந்தைக்குத்தான் முதல் மரியாதையை என்று வலியுறுத்துகிறான். பெரியவர்கள் இருவரும் இதில் ஆர்வம் காட்டாத போதும் பிள்கைகளின் தொல்லை பெரும் பாடாக மாறுகிறது. பூங்கொடியின் வற்புறுத்தலால் தேர்தலில் நாகலிங்கத்தை எதிர்த்து தர்மகர்த்தா போட்டியிடுகிறார். ஆனால் அரசியல்வாதியான நாகலிங்கம் சூழ்ச்சி செய்து தர்மகர்த்தா மீது திருட்டு பட்டமும், தாசி தாசன் என்ற பழியையும் சுமத்தி அவரை தேர்தலில் இருந்து ஒதுங்க செய்கிறார். இதற்கு பழி வாங்கும் முகமாக குமார் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக பூங்கொடி பஞ்சாயத்தில் குற்றம் சாட்டுகிறாள். இதன் காரணமாக குமார், பூங்கொடி திருமணம் நடக்கிறது. ஆனால் இருவரும் தாம்பத்திய உறவின்றி விலகியே இருக்கிறார்கள். இவர்கள் இணைந்தார்களா என்பதே மீதிக் கதை. 

இலங்கைச் செய்திகள்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரணிலை பார்வையிட சென்றார் மஹிந்த ராஜபக்ஷ!

 மன்னாரில் 20வது நாளாக தொடரும் போராட்டம் - ஜும்ஆ தொழுகையின் பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம் வர்த்தகர்கள்

சத்துருக்கொண்டான் படுகொலை : மட்டக்களப்பு மாநகர சபை அமர்வில் மௌன அஞ்சலி ; புதைகுழி தோண்டக் கோரி பிரேரணை நிறைவேற்றம்

யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன் 


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

Published By: Digital Desk 3

22 Aug, 2025 | 02:19 PM

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) கைது செய்யப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்தபோது, அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட ரணில் விக்ரமசிங்கவை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 

உலகச் செய்திகள்

சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !

இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் : 29 பேர் படுகாயம்

இந்தியா மீதான அமெரிக்காவின் வரிவிதிப்புக்கு சீனா கண்டனம்

பாகிஸ்தான் வான் வெளியில் இந்திய விமானங்களுக்கு தடை நீடிப்பு

கராச்சியும் வெள்ளத்தில் மூழ்கியது; 10 பேர் பலி



சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு !

Published By: Priyatharshan

19 Aug, 2025 | 07:18 AM

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில்,  உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 52 “நூல்களைப் பேசுவோம்”


நாள்:         சனிக்கிழமை 30-08-2025       

நேரம்:  

இந்திய நேரம் -        மாலை 7.00      

இலங்கை நேரம் -   மாலை 7.00      

கனடா நேரம் -         காலை 9.30      

இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30 

வழி:  ZOOM

Join Zoom Meeting:

Meeting ID: 389 072 9245

Passcode: 12345

https://us02web.zoom.us/j/3890729245?pwd=a1ZERVVXY1VBZjV3SnVCUEh1bEVUZz09

நூல்களைப் பேசுவோம்:

தாமரைச்செல்வியின் “சின்னாசிக் கிழவனின் செங்காரிப் பசு” சிறுகதைத்தொகுப்பு

 

உரை: இரா. பிரேமா

பா.இரகுவரனின் “காத்தவராயன் வழிபாடு காத்தவராயன் நாடகம்” ஆய்வு நூல் 

உரை: சு.குணேஸ்வரன்

ப.சண்முகத்தின் “தென்னிந்தியப் பொருளாதாரம் - சில பரிமாணங்கள் ஆய்வு நூல் 

உரை: எம்.எம்.ஜெயசீலன்

ஒருங்கிணைப்பு: அகில்  சாம்பசிவம்

விநாயகர் சதுர்த்தி & விநாயகர் கலைவு - 31/08/2025

 


வி


நல்லூரான் தேர் நமக்கென்றும் பாக்கியமே !






















மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் … அவுஸ்திரேலியா




வேலவனின் தேர் வீதியெலாம் பக்தர்
காதலுடன் கந்தனைக் கைகூப்பி நிற்கின்றார்
தீராத வினையகற்ற தேரேறி வருகின்றான்
வாருங்கள்  தேரிழுத்து வணங்கியே நிற்போம் 

அந்தணர் மந்திரம் அரிய திருமுறை
ஆனந்த இசை கேட்டபடி  கந்தன்
தேரேறி வருகின்றான் திருமுகத்தைக் காண
ஓடோடி வாருங்கள் உளமுருக வேண்டுங்கள் 

வீதியிலே பக்தர் வெண்மணலில் இடமில்லை
சோதியென கந்தன் சுடர்விட்டு தெரிகின்றான்
மாதவத்தின் காரணத்தால் வந்தமர்ந்தான் நல்லூரில்
நல்லூரான் தேரேறி வருகின்றான் காணுங்கள்