தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
காத்திடுவோம் வாருங்கள் !
உத்தமமாம் நிராதார யோகம் இயற்றி உய்யும்வழி தனைத்தேர்ந்து சிவனடி சேர்வாம்! xx
இயற்றியவர் –‘சிவஞானச் சுடர்’ பல்மருத்துவக் கலாநிதி பாரதி இளமுருகனார்
‘ஊனுடம்பு ஆலயமாம் ஒப்புயர் விலாச்சிவன்
உவந்துறையும் உள்ளம்பெருங் கோயில்’என்று
மானுடர்க்கு உணர்த்தியதே தமிழ்த்திரு மந்திரம்!
‘ மகத்தான பிறப்பான மனிதப் பிறப்பை’
‘வானுறையும் தேவருக்கும் கிட்டா தொன்றை ’
வையகத்து மனிதனவன் பெற்றி ருந்தும்
தானுணர்ந்து பிறப்பினது இலக்கை எய்தத்
தவறியவன் இறந்துபிறந் துழல்கின் றானே!
அழிவற்றவெம் உயிருக்குத் தந்த உடலுடன்
அறவாழ்வில் வாழ்வாங்கு வாழ்ந்து வினைகள்
அழிவுற்ற நிலைகாண அகவழி பாட்டை
ஆற்றியிறை பணியியற்றித் தியான வழியால்
அழிவில்லாப் பேரின்பந் தன்னை வேண்ட
அனைத்துப்பா சங்களெல்லாம் அகற்றி ஈற்றில்
அழிவோபிறப் பிறப்போவிலாப் பேற்றை ஈய்ந்து
அந்திவண்ணன் அடைக்கலந்தந் தணைப்பா னன்றோ?
திருவெம்பாவையை எம் சிந்தையில் இருத்துவோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண்…. அவுஸ்திரேலியா
உலகில் பல மொழிகள் ஒவ்வொரு விதத்திலும் சிறப்பினை உடை யதாய் விளங்குகின்றன என்பதுதான் பொதுமையான கருத்தாகும். இவற்றுள் எங்கள் தாய் மொழியான தமிழ் ஒன்றேதான் பக்தியைப் பாடிக் கொண் டாடிய மொழி என்பதும் மிக மிகச் சிறப்புடையதாகும். தமிழ் என்றால் பக்தியின் மொழி என்று துணிந்து கூற லாம். அந்தளவுக்கு பக்தியை இலக்கியம் ஆக்கிய பெருமை எங்கள் தமிழ் மொழிக்கு மட்டுமே உரித்தான தாகும் என்று உரத்தே உரைக்கலாம். பக்தியை இலக்கியம் ஆக்கியமையால் பண்கசிந்த தமி ழும் , பக்குவத் தமிழும் , பாடிப் பரவிடும் தமிழும் , இன்னிசைத் தமிழும் , இயைய வைக்கும் இங்கிதத் தமிழும் எமக்கு பெரும் பொக்கிஷமாகக் கிடைத்தன என்பதை மனமிருத்துவது மிகவும் முக்கியமாகும்.சைவமும் , வைணவமு
மணிவாசகப் பெருமான் தமிழ் மனத்தை உருக்கிட வைக்கும் தமிழ் .சினத்தை அகற்றிட வைக்கும் தமிழ். சிந் தனையைத் தூண்டுந் தமிழ். சிவனை நினைந்து நெக்குருக வைக்குந் தமிழ். தாழ்வாய் உரைத்து தலை வணங் குந் தமிழ். இத்தகு தமிழால் எட்டா நிலையில் இருக்கும் எம்பொருமானை இயம்பிடும் வகை யில் எட்டாந் திரு முறையாய் அமைந்து ஏற்றிப் போற்றப்பட்டுக் கொண்டிருக்குந் தமிழ். திருவாசகம் என்னும் தேன்தான் அந்தத் திருமுறைத் தமிழ்.அந்தத் திருவாசகத்தில் ஒன்றாய் அமைந்திருப்பதுதான் மார்கழியில் மனமமரும் வாசகரின் திருவெம்பாவை என்னும் திவ்விய தமிழாகும். திருவண்ணாமலையில் மணிவாசகரால் மனமுருகிப் பக்திப் பெருவெளியில் உற்ற துணையாக வந்தமைந்த தமிழ்தான் திருவெம்பாவை என்னும் சிறப்புடைத் தமிழ் என லாம்.
" ஆதியும் அந்தமும் இல்லா அரும் பெருஞ் சோதி " - என்றுதான் மணிவாசகர் திருவெம்பாவையினைத் தொட ங்குகிறார். " போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே " என்று நிறைவு செய்கின்றார். இருபது பாடல்கள் இறையினைப் பற்றியும் , அவரின் இயல்பினைப் பற்றியும் , இறையினைத் தொழுதிடும் அடியவர் மனநிலை பற்றியும் , இறையடியார்கள் எப்படி இருக்க வேண்டும் , எப்படி இருக்கக் கூடாது , என்பதைப் பற்றியும் பக்குவ மாய் காட்டுகின்றார். அதற்காக அவர் பாவைப்பாட்டு என்னும் சங்கத்தமிழ் வழியில் பயணப்படுவதையும் காண்கின்றோம்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 8…..சங்கர சுப்பிரமணியன்.
வாகன ஓட்டியின் தவறால் குறித்த நேரத்துக்குள் போய்விடுவோமா என்ற சந்தேகம் வலுத்தது. நான் கடவுளையும் வேண்டமுடியாது. இவ்வளவு நாளாக கடவுள் இல்லையென்று சொல்லிவிட்டு காரியம் ஆக கடவளை வேண்டினால் வச்சு செஞ்சுடுவார். கடவுள் நம்பிக்கை இருப்பவர்களையே செல்வந்தர்களை ஒருமாதிரியும் ஏழைகளை ஒருமாதிரியும் தானே கடவுள் பார்க்கிறார்.
ஒருத்தருக்கா கொடுத்தான்? இல்லை ஊருக்காக கொடுத்தான் என்ற பாடலை எல்லாம் கேட்டுவிட்டு தேவைப்படாத ஒருத்தருக்கு கொடுப்பதில் என்ன நியாயம்? இது யார் குற்றம்? படைத்தவன் மேல் பழியுமில்லை. பசித்தவன் மேல் பாவமில்லை. கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார். உழைத்தவர்கள் தெருவில் நின்றார் என்று படகோட்டி படத்தில் எம். ஜி. ஆர் பாடிய
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
20 - 02 - 2026 Fri: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் திருவிழா ஆரம்பம்
21 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் கொடியேற்றம்
28 - 02 - 2026 Sat: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் சப்பரத் திருவிழா
01 - 03 - 2026 Sun: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் தேர்த் திருவிழா
02 - 03 - 2026 Mon: சிட்னி துர்க்கை அம்மன் திருக்கோயில் மாசி மக தீர்த்தத் திருவிழா
07 - 03 - 2026 Sat: அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா
at 6 PM Bryan Brown Theatre, Bankstown NSW 2200
`நிர்மலன் VS அக்சரா’ சிறுகதை - கே.எஸ்.சுதாகர்
முன்னே எதிராகவிருந்த ஆசனங்களில் ஆணும் பெண்ணுமாக,
ஈஸ்வரியின் இரண்டு பிள்ளைகளும் இருந்தார்கள். வயதில் மிகவும் சிறியவர்களான அவர்கள்
நிர்மலனின் முகத்தையும் கோழிக்காலையும் மாறிமாறிப் பார்த்தபடி இருந்தார்கள்.
தகுதியறிந்து…!
-சங்கர சுப்பிரமணியன்.
தன் வீட்டிலிருந்து சில கல் தொலைவில் இருந்த நெடுஞ்சாலையில் உதவலாமா வேண்டாமா என்று நினைப்பவர் போல நிழல் கொடுக்கலாமா வேண்டாமா என்ற நிலையிலுள்ள ஒரு மரத்தடியில் அந்த மூதாட்டி அமர்ந்திருந்தாள். அவள் அங்கு அமர்ந்து நெடுஞ்சாலையில் பயணிப்போரை எதிர்பார்த்து முட்டை வியாபாரம் செய்து கொண்டிருந்தாள்.
இலங்கைச் செய்திகள்
புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்
இலங்கையில் படுகொலை செய்யப்பட்ட முதல் ஊடகவியலாளர் தேவராசா - மட்டக்களப்பில் நினைவேந்தல்!
இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடை விதிப்புக்கள் தொடரும்; பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் வெற்றே கூப்பர் அறிவிப்பு
பதுளையின் 68% நிலம் நிலச்சரிவு அபாயத்தில் உள்ளது - தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிணை!
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்த அழுத்தம் வழங்குங்கள் ; இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் கூட்டாக வலியுறுத்தல்
வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துரையாடல்
புதிய அரசியலமைப்பு உருவாக்க தேசிய மக்கள் சக்திக்கு வரலாற்று வாய்ப்பு ; அதுவரை 13ஆவது திருத்தம் முழுமையாக அமுலாக்க வேண்டும் - சர்வதேச சிறுபான்மையினக்குழு வலியுறுத்தல்
Published By: Vishnu
25 Dec, 2025 | 06:46 PM
(நா.தனுஜா)
தேசிய மக்கள் சக்திக்கான சிறுபான்மையினத்தவரின் ஆதரவு என்பது இதுவரை சிறுபான்மையின அரசியலை வடிவமைத்த அவர்களது நீண்டகாலக் கோரிக்கைகளான மனித உரிமைகள், நீதி மற்றும் அரசியல் சுயாட்சி என்பவற்றிலிருந்து விலகிச் செல்வதற்கு சமமானதா? என 'சர்வதேச சிறுபான்மையினக்குழு' எனும் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
அதேவேளை இலங்கையின் சகல இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அவசியமான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப்பலத்துடன் கூடிய வரலாற்று முக்கியத்துவம் மிக்க வாய்ப்பு தேசிய மக்கள் சக்தி வசமிருப்பதாகவும், அதனை உருவாக்கும் வரை அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவேண்டும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தியுள்ளது.
உலகச் செய்திகள்
வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா
பங்களாதேஷில் வெடிக்கும் வன்முறை - பிஎன்பி கட்சித் தலைவரின் வீடு தீக்கிரை : ஏழு வயது மகள் படுகொலை
அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான்
வெனிசுவெலா எண்ணெய்க் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா
Published By: Digital Desk 2
22 Dec, 2025 | 01:47 PM
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவின்படி, வெனிசுவெலாவில் மற்றொரு எண்ணெய்க் கப்பல் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்க கடலோரக் காவல் படையினர் குறித்த கப்பல் சிறைபிடித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெனிசுவெலா உள்ளிட்ட தென் அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாகக் குற்றஞ்சாட்டி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘போதைப் பொருள் பயங்கரவாதத்துக்கு எதிரான போா்’ என்ற பெயரில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.
திருவெம்பாவை திருவிழா & ஆருத்ரா தரிசனம் வியாழக்கிழமை, 25 டிசம்பர் 2025 முதல் சனிக்கிழமை, 3 ஜனவரி 2026 வரை
திருவெம்பாவை :
மாணிக்கவாசகரின் படைப்பான ‘திருவெம்பாவை’ என்பது இருபது பாடல்களின் தொகுப்பாகும். இதில், ‘பாவை நோன்பு’ அனுஷ்டிக்கின்ற ஒரு பெண்ணாக தம்மை கற்பனை செய்து, சிவபெருமானை போற்றிப் பாடியுள்ளார்.
திருவெம்பாவை பாடல்கள், திருமணமாகாத இளம் பெண்கள் மார்கழி மாதத்தின் அதிகாலை நேரங்களில் விளக்கேற்றி, சிவபெருமானை போற்றிப் பாடும் ஒரு பண்டைய மரபின் பகுதியாகும். திருவெம்பாவையின் 20 செய்யுள்களும் தினமும் பாராயணம் செய்யப்படுகின்றன. இவ்விதமான வழிபாடுகள் பெண்களுக்கு செழிப்பு, நல்வாழ்வு மற்றும் நல்ல கணவரை அளிக்கும் என்று நம்பப்படுகிறது.
2025 வைகுண்ட ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி என்பது இந்துக்களுக்குப் பெரிதும் முக்கியத்துவமும் புனிதத்தன்மையும் கொண்ட நாளாகும். இது விஷ்ணுபகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்த நாள் இந்து நாட்காட்டியின்படி மார்கழி மாதத்தில் (டிசம்பர்–ஜனவரி இடைப்பட்ட காலத்தில்) வருகிறது. இந்த நாளில் வழிபாடு மேற்கொள்ளப்படும்போது, பிறப்பு–மறுபிறப்பு என்ற சுழற்சியிலிருந்து விடுதலை அளிக்கிறது என்று நம்பப்படுகிறது.
பத்ம புராணத்தின் படி, விஷ்ணுவின் பெண் சக்தி “முரன்” என்ற அரக்கனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தாள். இது சூரியன் தனுசு ராசியில் பயணம் செய்யும் காலத்தில், சந்திர மாதத்தின் பதினொன்றாம் நாளான ஏகாதசி திதியில் நிகழ்ந்தது. இந்த வீரச்செயலால் மகிழ்ந்த விஷ்ணு, அந்த சக்திக்கு “ஏகாதசி” என்று பெயரிட்டு, முரனை வென்ற அந்த நாளில் ஏகாதசியை வழிபடும் அனைவரும் அவரது இருப்பிடமான “வைகுண்டம்” அடைவார்கள் என்ற வரத்தை அளித்தார்.
மேற்கு சிட்னி தமிழ் கல்வி நிலையம் பரிசளிப்பு விழாவும், ஒன்று கூடலும் - பரமபுத்திரன்
மேற்குசிட்னி தமிழ் கல்வி நிலையம் அவுத்திரேலிய நாட்டின் நியூ சவுத் வேல்சு பெருநிலப்பரப்பில் பிள்ளைகளுக்கு தமிழ்கல்வி வழிகாட்ட செயற்படுகின்றது. இக்கல்வி நிலையம், இவ்வாண்டு 18/10/2025 சனிக்கிழமை அன்று புதிதாக தொடங்கப்பட்ட ஒன்று. தற்போது ‘பங்காரிபீ’ சமூக வள நடுவத்தில் (Bungarribee Community Resource Hub) இயங்கி வரும் கல்வி நிலையத்தில் நடப்பாண்டில் தமிழ் கற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும், ஒன்று கூடலும் கடந்த (14/12/2025 ஞாயிற்றுக்கிழமை) “Blacktown Boys High School Hall” அரங்க மண்டபத்தில், மாணவர்களின் அரங்க ஆற்றுகைகள், ஆசிரியர் மதிப்பளிப்பு, சிறப்புரைகள் போன்ற நிகழ்வுகளுடன் சிறப்புற நடந்தேறியுள்ளது.
பரிசளிப்பு விழாவினை தொடக்கி வைக்க பள்ளி முதல்வர் செல்வராஜி இரங்கநாதன், பள்ளியின் உதவி முதல்வர் தயாழினி முரளீதரன் ஆகியோர் மங்கள விளக்கினை ஏற்றி வைத்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்கள் அவுத்திரேலிய தேசிய கீதம், தமிழ்மொழி வாழ்த்து, பாடசாலைக் கீதம் என்பவற்றினை இசைத்தனர். அதனைத்தொடர்ந்து அவுத்திரேலிய நிலத்தின் உரிமையாளரான பழங்குடி மக்களுக்கு நன்றி சமர்ப்பித்தல், தாயக விடுதலைக்கு உயிர் ஈய்ந்த மக்களுக்கு அகவணக்கம் செலுத்தல் என்பன இடம்பெற்றன. இதனத் தொடர்ந்து நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பள்ளி ஆசிரியர் சரஸ்வதி நாராயணன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அடுத்து அதிபர் உரை இடம்பெற்றது
கோதையின் தமிழைக் கொண்டாடி மகிழ்வோம் !
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா
மாதங்களிலே மார்கழி மகத்தான மாதம். சைவமும் ,வைணமும் சங்கமிக்கும் மாதம். திருவெம்பாவை யும் திருப்பாவையும் ஆலயங்களில் பக்தி பூர்வமாய் பாடப்படுகின்ற மாதம். ஆண்டாளின் அமுதத் தமி ழும் , மணிவாசகரின் உருக வைக்கும் தமிழும் பக்தியுடன் சேர்ந்து இசையாய் எழுந்து நிற்கும் மாதம். இந்த மாதம் இறையினை ஏற்றிப் போற்றி நிற்க அமைந்திட்ட மாதம். தெய்வீக மாதமாய் விளங்குவதால் - குடும்ப விழா க்களுக்கோ வீட்டு நிகழ்வுகளுக்கோ இடம் கொடுப்பதில்லை. தெய்வீக மாதத்தில் தெய்வ த்தை நினை என்று எங்கள் முன்னோர்கள் சொல்லி வைத்து விட்டார்கள். தெய்வீகம் முன்னிற்பதால் மார் கழி பீடை உடைய து அல்ல - பீடுடைய மாதம் என்பதே மிகப் பொருத்தமானதாகும். கண்ணனும் கீதை யில் " மாதங்களில் நான் மார்கழி " என்று மொழிந்ததாய் அறிகின்றோம். சிவனும் , திருமாலும் ஏற்றிப் போற்றப்பட்டு - சிவன் அடியாரும் , திருமால் அடியாரும் தீந்தமிழால் பாமாலை சூட்டினார்கள். அப்படி அவர்கள் பாமாலை சூட்டி யதும் மார்கழியிலேதான். அந்த வழியில் ஒரு அடியார் பெண்ணாய் அமைந்து திருமாலுக்குப் பாமாலை யோடு , பூமாலையையும் சூட்டி மகிழ்கின்றார். அவர்தான் - சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான கோதை நாச் சியார். சைவசமய குரவர்போல் - வைணவ சமயத்தில் ஆழ்வார்கள் வருகிறார்கள். அவர்கள் பன்னிருவர். அவர்களில் ஒரே ஒரு பெண்ணாய் வாய்த்தவர்தான் கோதை நாச்சியார். பெரியாழ்வாரின் மகளாய் திரு மாலின் அருளினால் வாய்த்தவர்.
திருமாலினால் ஆட்கொள்ளப்பட்டவர்கள்.திருமாலின் பக்தியில் ஆழ்ந்தவர்கள்.ஆதலால் ஆழ்வார்கள் என்று போற்றப்படும் உன்னத நிலைக்கு ஆழானவர்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அப்படியான ஆழ் வார்களில் ஒரு பெண்ணாய் இருக்கும் நிலையில் ஆண்டாள் நாச்சியார் விளங்குகிறார். ஆண்டாளைத் தவிர மற்றைய ஆழ்வார்கள் அனைவரும் ஆண்களாய் இருப்பதால் - அவர்கள் திருமாலை நோக்கும் வித மும் திருமாலை ஏற்றிப்போற்றிப் பாடும் விதமும் ஆண்டாள் போல் இருக்கவில்லை. அவர்கள் யாவரும் ஆண்கள் என்பதால் அவர்கள் நோக்கும் ,போக்கும் அவர்களுக்கே உரித்தானதாய் ஆகியே இருந்தது எனலாம். அவர் களும் திருமாலைக் காதலித்தார்கள். அந்தக் காதலும் பல நிலையிலே அமைந்திருந்தது. அவர்கள் அனை வரும் தம்மைப் பெண்ணாக உருவகித்தே தம்முணர்வுகளை வெளிப்படுத்தும் நிலை இருந்தது. ஆனால் பெண்ணாகவே இருந்த காரணத்தால் ஆண்டாள் நாச்சியாரின் வெளிப்பாடும் , உணர்வுகளும் , பெண் மைக்குரிய பாங்கிலேயே அமைந்திருந்தது. இதனால் ஏனைய ஆழ்வார்களின் தமிழைவிட ஆண்டாள் நாச் சியாரின் தமிழ் - அமுதத் தமிழாய் , சங்கத் தமிழாய் , காதல்த்தமிழாய் , கற்கண்டுத் தமிழாய் , அணைக்கும் தமிழாய் , ஈர்க்குந்தமிழாய் , படிக்கப் படிக்க சுவைக்கும் தமிழாய் - பல்பரிணாம் கொண்டதாய் விளங்கியது - விளங்குகிறது என்பதை மறுத்துரைத்து விடல் இயலாது.
இயல்பும் எண்ணிக்கையும்!
எண் வாழ்க்கையை கணிக்கிறதென்கிறார்
வரும் எண்கள் வாழ்க்கையை கணிப்பதால்
பெரும் எண்கள் தரத்தை குறித்து நிற்குமா
வாக்கு இயந்திரங்களிலும் எண்கள் உள்ளன
அந்த எண்ணிக்கையே ஆட்சி அமைக்கிறது
உயர்ந்த நாடுகள் முற்றாகவே மறுக்கின்றன
உயரிய முறையல்ல எனவும் வெறுக்கின்றன
எண்ணிக்கையை ஏற்றலாம் குறைக்கலாம்
பெரும்பாலும் இதை எல்லோரும் செய்வதே
எண்ணிக்கையின் விளையாட்டு புரிகிறதா
எண்ணிக்கை மக்கள் எண்ணத்தை கூறுமா
நூறுபேர் இருந்தும் கௌரவர்கள் நல்லவரோ
ஐந்துபேர் என்பதால் பாண்டவர் கெட்டவரோ
எண்ணிக்கை எல்லாவற்றையும் காட்டிடாது
ஆயிரம் மின்மினிக்குள் ஆதவன் மிளர்கிறான்
புற்றீசல் பெருகிவந்து எண்ணிக்கை காட்டும்
மற்றொரு கணம் மாயமாய் எல்லாம் மறையும்
பெற்றது அத்தனையும் உண்மை என்றாகுமா
உற்றதை சொல்லாத எண்ணிக்கையும் ஏன்!
-சங்கர சுப்பிரமணியன்.
தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 7…..சங்கர சுப்பிரமணியன்.
பீஜிங்கிற்கும் ஷியானுக்கும் இடைப்பட்ட தூரத்தில் பல நகரங்களை தொடர்வண்டி ஓடும்போது கடந்து செல்வதை பார்க்கலாம். எங்கு பார்த்தாலும் அடுக்குமாடி குடியிருப்புக்கள் வானுயர்ந்து நின்கின்றன. தனியாக மாடியில்லா கட்டிடங்களைக் காண்பது அரிது. அப்படியே இருந்தாலும் அவை விவசாய நிலங்களுக்கு அருகில் ஓரிரு கட்டிடங்களாக இருக்கும். வழி நெடுக பச்சைப் பசேலன பசுமையாக இருக்கும்.
தென்னிந்திய சினிமாவில் முதல் நூற்றாண்டு நட்சத்திர நாயகி பி. பானுமதி - ச . சுந்தரதாஸ்
தென் இந்திய திரையுலகம் என்றாலே அது ஆணாதிக்கம் நிறைந்தது
என்ற அபிப்பிராயம் இன்றும் நிலவி வருகிறது. ஆனால் அந்த அபிப்பிராயத்தை தகர்க்கும் விதமாக சில பெண்களின் அதிக்கமும் அங்கு நிலை நாட்டப்பட்டு வந்துள்ளது. அப்படி நிலை நாட்டியவர்களில் முதன்மையானவர் நூற்றாண்டு நாயகியான பி. பானுமதி.
பிரபல தெலுங்கு டைரக்டர் பி .என் .ரெட்டி தான் எடுக்கும் ஸ்வர்க்க சீமாவில் பானுமதிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருந்தார். இறுதியில் கட்டியக் கணவன் விட்டுக் கொடுக்க பானுமதியின் திரைப் பயணம் சிறகடித்து பறக்கலானது.
இலங்கைச் செய்திகள்
மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!
திருகோணமலை – கொழும்பு இரவுநேர ரயில் சேவை இல்லாததால் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பயணிகள் பாதிப்பு!
கண்டியின் வத்தேகம – கபரகல பிரதான வீதி மீண்டும் மூடப்பட்டது!
யாழ். தையிட்டி விகாரை தொடர்பில் புதிய தீர்மானம்!
யாழ். கோட்டையை சுற்றியுள்ள பகுதியில் எல்லைக் கல் நடும் தொல்லியல் திணைக்களம்!
தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் - மத தலைவர்கள் , அரசியல்வாதிகள் கைது ; தொடரும் அராஜகம்
மலையக ரயில் மார்க்கத்திற்கு பாரிய சேதம் - வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும்!
16 Dec, 2025 | 05:01 PM
நாட்டில் இடம்பெற்ற புயல் மற்றும் மண்சரிவு, வெள்ள அனர்த்தம் காரணமாக கொட்டகலையிலிருந்து அம்பேவெல இடையில் புகையிரதங்களை இயக்குவது மிகவும் கடினம் எனவும் புகையிரத வீதிகள் புனரமைக்கப்பட்டு வழமைக்கு திரும்புவதற்கும் குறிப்பிட்டளவு காலம் செல்லும் என ரயில்வே வீதி பராமரிப்பு பொறியாளர்கள் தெரிவிக்கிறனர்.
இதில் கிரேட் வெஸ்டர்ன் பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவு மற்றும் ஏனைய இடங்களில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு மற்றும் வீதி தாழிறங்கி உள்ளதால் கொட்டகலையிலிருந்து அம்பேவெல வரையிலான ரயில் பாதையை மீட்டெடுப்பது மிகவும் கடினம் எனவும் நாட்டில் ஏனைய இடங்களில் பாலங்கள் மற்றும் வீதிகள் புனரமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன எனினும் அவை தற்காலிக புனரமைப்புக்களுக்கே உட்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கின்றனர்.
உலகச் செய்திகள்
6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா
அமெரிக்க க்றீன் கார்ட் விசா லொட்டரி திட்டம் இடைநிறுத்தம் - ட்ரம்ப் அதிரடி உத்தரவு
பிபிசிக்கு எதிராக ட்ரம்ப் 10 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இழப்பீடு கோரி வழக்கு
ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பல் மீது முதன் முறையாக நீருக்கடியிலான ட்ரோன் தாக்குதலை நடத்தியது உக்ரைன்!
நேட்டோவில் இணையும் முயற்சியை கைவிட தயாராக உள்ளோம் - உக்ரைன் ஜனாதிபதி
6 நாடுகளுக்கு உள் நுழைய தடையும், 15 நாடுகளுக்கு பகுதியளவில் கட்டுப்பாடுகளையும் விதித்தது அமெரிக்கா
Published By: Digital Desk 3
17 Dec, 2025 | 10:16 AM
ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்காவின் பயணத் தடையை விரிவுபடுத்தியுள்ளது. அதன்படி, சிரியா மற்றும் பாலஸ்தீன உத்தியோகபூர்வ ஆவணங்களைக் கொண்ட பயண ஆவணங்களை வைத்திருப்பவர்கள் உட்பட, நாட்டிற்குள் உள் நுழைய பயண தடை விதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மேலும் ஆறு நாடுகளைச் சேர்த்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, ஆப்கானிஸ்தான், பர்மா, சாட், கொங்கோ குடியரசு, ஈக்குவடோரில் கினியா, எரித்திரியா, ஹெய்ட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்களுக்கு ஏற்கனவே இருந்த முழுமையான பயணத் தடைகள் தொடர்கின்றன.
.jpeg)
.jpeg)



.jpeg)




.jpg)
.jpg)
.jpg)


-page-001.jpg)











.jpg)
