தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

உயர்வுடைக் கார்த்திகைத் தீபத் திருநாள் !

 























 


மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 

மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா



கார்த்திகை தீபம் கதைகளைக் கொண்டது
கதைகளைக் கதையாய் எடுத்திடல் வேண்டாம்
கற்கண்டை மருந்தில் சேர்ப்பது போன்று
தத்துவம் விளக்கிடக் கதைகளைப் பகிர்ந்தார்

விளக்கு என்றால் விளக்கம் தருவது
வெளிச்சம் வந்தால் விளங்கிடும் அனைத்தும்
விளக்கை ஏற்றுதல் வெற்றியைக் கொடுக்கும்
விளக்கை ஏற்றுவார் அனைத்தையும் காணுவார்

கல்வியும் வேண்டும் செல்வமும் வேண்டும்
இரண்டும் இணைந்தால் இன்பமே ஆகும்
இணையும் வேளை இறுமாப்பு வந்தால்
இரண்டின் பயனும் இல்லாமற் போகும்

பாப்பாப் பாடல்கள்

 



 

 

 

 

 





மாகாகவி சுப்ரமணியபாரதியார்  பாடிய

பாப்பாப் பாடல்கள்

 

ஓடி விளையாடு பாப்பா! - நீ

ஓய்ந்திருக்க லாகாது பாப்பா!

கூடிவிளையாடு பாப்பா! - ஒரு

குழைந்தையை வையாதே பாப்பா!     1


சின்னஞ் சிறுகுருவி போலே - நீ

திரிந்து பறந்துவா பாப்பா!

வன்னப் பறவைகளைக் கண்டு - நீ

மனதில் மகிழ்ச்சிகொள்ளு பாப்பா!      2


கொத்தித் திரியுமந்தக் கோழி - அதைக்

கூட்டி விளையாடு பாப்பா!

எத்தித் திருடுமந்தக் காக்காய் - அதற்கு

இரக்கப் படவேணும் பாப்பா!             3

"காத்தல் உந்தன் கடனே"... மெல்போர்ன் அறவேந்தன்

 










சுமைதாங்கி !




     


























மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர் 
மெல்பேண்…. அவுஸ்திரேலியா 



சுமை தாங்கியாக இருப்பார்கள் சிலபேர்
சுகம் பாரதுழைத்து கொடுப்பார்கள் அவரும்
எதிர் பாராதிருந்து எல்லாமே செய்வார்  
சுகம் பெற்றாரெல்லாம் திரும்பியே பாரார் 

உண்ணாம லிருப்பார் உறங்காம லிருப்பார்
கண்ணயராது இருப்பார் கையணைத்து மிருப்பார் 
மண்மீது மற்றவர் படுந்துன்பம் தாளார்
எண்ணியே எண்ணியே எல்லாமும் செய்வார்

இல்லறத்தி லிருப்பார் நல்லறமே நினைப்பார்
சொல்லாலும் செயலாலும் துயரகற்றி நிற்பார்
இல்லறத்தி லிணையாமல் இருந்தாலும் இருப்பார்
இடர்கண்ட போதவர்கள் இரங்கியே நிற்பார்

ஆரம்பமும் முடிவும்!


-சங்கர சுப்பிரமணியன்.



என்பது வயதில் ஒருவர் ஆலயத்திலிருக்க
இருபது வயது இளைஞன் அங்கு வந்தான்
ஐயா ஒன்று கேட்கலாமா என்று கேட்டான்
கேள் தெரிந்தால் சொல்கிறேன் என்றார்

இவ்வயதில் என்ன உணர்கிறீர்கள் என்றான்
இருபதை உணர்கிறேன் என்றார் முதியவர்
ஒன்றும் புரியவில்லை என்றான் இளைஞன்
புரியும்படி சொல்கிறேன் கேளென்றார் அவர்

ஒருவரின் ஆயுள் நூறெனக் கொண்டால்
இருபதில் இருப்பவன் ஆரம்பத்திலிருக்க
என்பதில் இருப்பவன் முடிவில் நிற்கிறான்
இதைத்தான்  இருபது என்றேன் என்றார்

இருபதிலிருப்பவன் என்பதை எதிர்நோக்க
என்பதைக் கண்டவனும் எதிர்நோக்குகிறான்
ஒருவன் ஆரம்பதலிருந்து எதிர்நோக்கி நிற்க
மற்றவன் முடிவை நோக்கி காத்து நிற்கிறான்

தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்- 4


 சங்கர சுப்பிரமணியன்.





இங்கு நோயாளி யார் தெரியுமா? டெஸ்க்கில் இருந்த சைனா

மொபைல் கடையின் விலாசத்தைக் காட்டும் வரைபடம்தான். ஓட்டலில் இருந்து 1.2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. படத்தைப் பார்த்தபடி சுமார் ஒரு கிலோ மீட்டர் சென்று வலதுபக்கம் திரும்பினால் இருபது அல்லது இருபத்தைந்து நிமிடத்தில் நடந்தே போய்விடலாம்.


ஆனால் மூன்றுபேர் வரைபடத்தோடு முட்டிமோதி மல்லுக்கட்டிக் கொண்டிருந்தார்கள். இதைக் கண்டதும் தமிழண்டா என்ற தற்பெருமை தலைதூக்கியது. இதே தற்பெருமைதான் நம்மை உருப்படாமலும் ஆக்கியுள்ளது. கடலில் நீரோட்டத்தை வைத்தே பர்மாவிவிருந்து தேக்குமரக் கட்டைகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.


அதுவும் ஆள் துணையின்றி இது நடந்தேறியுள்ளது. தேக்குமரங்களை வெட்டி பர்மாவில் போட்டால் அவை கடலில் மிதந்தபடியே தமிழ்நாட்டை வந்துசேருமாம்.
இதற்கு காரணம் காற்றின் வேகத்தை வைத்து அது பயணிக்கும் திசையில் செல்ல உலகிலேயே பாய்மரக்கப்பலை கண்டு பிடித்திருந்த மதிநுட்பம்தான்.

கடலில் ஆமைகள் கடல் நீரோட்டதில் மிதந்தபடியே பல நாடுகளுக்கு பயணிக்குமாம். நோம்பு கொண்டாடுவதைப் பற்றி பாடம் எடுப்பவர்களே நோவாமல் இங்கு நோம்பெடுப்பார்கள். தீபாவளி நோம்பைத்தான் சொல்கிறேன்.

இது இவர்களுக்கு எப்படித் தோன்றியது என்று ஆராய்ந்தால் எல்லாம் மரபணு செய்கின்ற வேலைதான். நோவாமல் நோம்பெடுப்பதற்கும் மரபணுவுக்கும் என்ன சம்பந்தம் என்று மாடசாமி அண்ணாச்சி கேட்கிறார். இருக்கிறது சொல்கிறேன் கேளுங்கள். கடலில் ஆமை பயணித்ததை சொன்னேன் அல்லவா? ஆமை சிரமப்படாமல் கடல் நீரோட்டத்தில் மிதந்தபடியே ஊரான் வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே என்றபடி பல இடங்களுக்கு செல்லுமாம்.

இதைப் பார்த்த தமிழன் கடலில் வரைபடம் ஏதுமின்றி படகில் துடுப்பைப் போடாமலேயே உடல் உழைப்பின்றி அந்த ஆமையைத் தொடர்ந்து உலகின் பலபாகங்களுக்கு பயணித்திருக்கிறான். இப்போது தெரிகிறதா? நோவாமல் நோம்பு கும்பிடும் பழக்கம் எங்கிருந்து எப்படி வந்ததென்று.

சிவன் அருள் அறக்கட்டளையின் வெள்ள நிவாரண வேண்டுகோள்

 

அன்புடையீர் சிவன் அருள் நண்பர்களும் ஆதரவளிப்போரும்,

இலங்கை வெள்ளப் பாதிப்பிற்கான அவசர நிவாரண வேண்டுகோள்

உங்களில் பலருக்குத் தெரிந்தபடி, இடையறாத கனமழையும் அண்மையில் ஏற்பட்ட சூறாவளியும் இலங்கையின் பல பிரதேசங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. எண்ணற்ற குடும்பங்கள் தங்களுடைய வீடுகளையும் சொத்துகளையும் இழந்து, தற்காலிக தங்குமிடங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

சிவன் அருளில், நாம் உள்ளூர்மையான அமைப்புகளுடன் நெருங்கிப் பணியாற்றி உடனடி நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம், குறிப்பாக பசியையும் தொற்றுநோய்கள் பரவுதலையும் தடுப்பதில் கவனம் செலுத்துகிறோம். கிழக்கு மாவட்டம் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் அவசர உதவி மிகவும் தேவைப்படுகிறது.

இந்த முக்கியமான வெள்ள நிவாரண முயற்சிக்காக உங்கள் தாராளமான ஆதரவைக் கனிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.

நன்கொடைக்கான வங்கி விவரங்கள்
Account Name: Sivan Arul Foundation Inc
Bank: Westpac Bank
BSB: 032164
Account Number: 228016

நன்கொடை வழங்கும் போது, “Flood Appeal” என குறிப்பிட்டு உள்ளீடு செய்யவும்.

உங்கள் முழுப் பெயருடன் sivanarulillam@gmail.com முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பவும், இதன் மூலம் நாங்கள் உங்களுக்கு வரி ரசீது வழங்க முடியும்.

இந்த கடினமான காலத்தில் நீங்கள் வழங்கும் பெருந்தன்மைக்கும், கருணைக்கும், தொடர்ந்த ஆதரவிற்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.

டாக்டர் ஜே ஜெயமோகன் மற்றும் சிவன் அருள் குழு

இலங்கையில் ஏற்பட்ட சைக்க்ளோன் டிட்வாவைத் தொடர்ந்து அவசர வேண்டுகோள்

 


சைக்க்ளோன் டிட்வா இலங்கையின் பல பகுதிகளில் பரவலான வெள்ளப்பெருக்கும் அழிவையும் ஏற்படுத்தி, பல குடும்பங்களை வீடுகள், உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றித் தள்ளிவிட்டுள்ளது. முழு சமூகங்கள் தற்போது உறுதியற்ற நிலையும், பாதுகாப்பற்ற வாழ்விடங்களும், கடுமையான சிரமங்களையும் எதிர்கொண்டு வருகின்றன.

வன்னி ஹோப் எங்கள் அவசர உதவி நடவடிக்கைகள் மூலம் பதிலளித்து வருகிறது. எங்கள் குழுவினர் ஏற்கனவே தரையில் செயல்பட்டு வருகின்றனர்; அதிகம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிடங்களையும் அத்தியாவசிய உலர் உணவுப் பொதிகளையும், மற்றும் பிற தேவையான பொருட்களையும் வழங்கத் தயாராகி வருகின்றோம்.

உங்கள் ஆதரவு எங்களுக்கு உதவும்:
• இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு பாதுகாப்பான தற்காலிக மற்றும் நிரந்தர தங்குமிடங்களை வழங்க.
• குடும்பங்கள், குழந்தைகள் மற்றும் மூத்தவர்களுக்கு உணவு கிடைக்க உலர் உணவுப் பொதிகளை வழங்க.
• பேரிடரின் உடனடி பின்னடைவை சமாளிக்க தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க.

இந்த அவசர உதவி முயற்சிக்காக நாங்கள் $10,000 என்ற இலக்கை நிர்ணயித்துள்ளோம். நீங்கள் ஏதேனும் விதத்தில் உதவ முடிந்தால், கீழே உள்ள இணைப்பின் மூலம் நன்கொடையளிக்கவோ, அல்லது இந்த வேண்டுகோளை உங்கள் தொடர்பு வலையமைப்பில் பகிரவோ தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்:

https://vannihope.org/cyclone-ditwah-emergency-appeal

இந்த நேரத்தில் உங்கள் ஆதரவு நெருக்கடியிலுள்ள குடும்பங்களுக்கு பாதுகாப்பையும், மரியாதையும், நம்பிக்கையையும் மீட்டெடுக்க உதவும்.

இப்போது நன்கொடை அளிக்கவும்

உறவு சொல்ல ஒருவன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 


நட்சத்திர நடிகர்களின் படங்களுக்கு மத்தியில் , சிறிய பஜெட்டில் , குறைத்த ஊதியத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து படம் எடுத்து வெற்றி காணும் புது இயக்குநர்கள் தேவராஜ் மோகன். இவர்கள் இருவரும் பெரும்பாலும் முத்துராமன், சிவகுமார் இருவர் நடிப்பில் தான் படங்களை டைரக்ட் செய்து கொண்டிருக் கொண்டிருந்தார்கள். பிரபல டைரக்டர் பி. மாதவனிடம் நீண்ட காலம் உதவியாளர்களாக இருந்த இவ்விருவரும் அவர் தயாரிப்பில் இயக்கிய பொண்ணுக்கு தங்க மனசு படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்து இயக்கிய படம் உறவு சொல்ல ஒருவன். 


 1975ம் ஆண்டு வெளிவந்த சிறந்த படங்களுள் ஒன்றாக இப் படம் கணிக்கப்பட்டது. குறிப்பாக எல்லாப் படங்களையும் கிண்டல் பண்ணி, குறை சொல்லி விமர்சனம் செய்யும் குமுதம், கல்கி போன்ற வார இதழ்களே இந்தப் படத்தை பாராட்டி எழுதியது வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்பதாயிற்று. 


நர்ஸ் வேலை பார்க்கும் இந்திராவுக்கு வாழ்வில் செல்வமும்,

செல்வாக்கும் நிறைந்த ஒருவனை மணந்து ஆடம்பரமாக வாழ வேண்டும் என்ற ஆசை. இதனால் தன்னை விரும்பி காதலிக்கும் கிளார்க் வேலை செய்யும் பாஸ்கரின் காதலை துச்சமென நிராகரிக்கிறாள். போலி வாழ்க்கை நடத்தும் மோகனின் காதலை ஏற்கிறாள். ஆனால் அவன் ஒரு செல்லாக் காசு என்பதை அறிந்ததும் அதிர்ச்சியடைகிறாள். ஆனாலும் அவளின் ஆசை அடங்குவதாக இல்லை. தன் பராமரிப்பில் இருக்கும் நோயாளியான கோடீஸ்வரி சுமதியை தன் காதலன் மோகனுக்கு மணம் முடித்து கொடுக்கத் திட்டமிடுகின்றாள். சுமதி நோயால் இறந்ததும் சொத்துகள் யாவும் மோகனுக்கு வரும், அவனை மணந்து இன்ப வாழ்வு காணலாம் என்று மனக் கோட்டை கட்டுகிறாள். இதற்காக தன் காதலனையே பணயம் வைத்தது சூதாடுகிறாள். மோகன், சுமதி கல்யாணம் நடக்கிறது. ஆனால் இந்திராவின் ஆசை நிறைவேறியதா என்பதுதான் மீதி படம். 


அனைத்துக்கும் ஆசைப் படு என்பது போல் ஆசைப்படும் இந்திரவாக பத்மப்ரியா நடித்திருந்தார். அழகு, கவர்ச்சி இரண்டும் சேர அவரின் நடிப்பும் பாத்திரத்துடன் பொருந்தியது. இந்தப் படத்தில் தான் பத்மப்ரியாவின் பாத்திரமும், நடிப்பும் சோபித்தது எனலாம். ஆனால் சுமதியாக வரும் சுஜாதா பாத்திரமாகவே மாறி விட்டார். நோயாளி என்றால் இப்படித்தான் இருப்பாள் என்பதை நிரூபிக்கும் விதத்தில் அவரின் நடிப்பு உச்சம் தொட்டது. நோயாளியாக அவர் தோன்றும் காட்சிகள் எல்லாம் நெகிழ்ச்சியும், பச்சாதாபமும் ஏற்படுகிறது. அவள் ஒரு தொடர்கதை , மயங்குகிறாள் ஒரு மாது படங்களைத் தொடர்ந்து இந்தப் படம் சுஜாதாவுக்கு மற்றுமோர் மைல் கல்லானது . 

இலங்கைச் செய்திகள்

 சீரற்ற வானிலை ; கிளிநொச்சியில் வெள்ள அபாயம்

பேராதனைப் பல்கலைக்கழக விடுதிகள் வெள்ளத்தில் மூழ்கியன – பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது!

இளம்பருவத்தினரின் எச்.ஐ.வி தொற்று எண்ணிக்கை வெகுவாக அதிகரிப்பு; 2024 ஆண்டு 724 ஆண்கள் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

யாழ். கோப்பாயில் கொட்டும் மழையிலும் பல்லாயிரக்கணக்கானோர் கூடி நினைவேந்தல் !

கொடிகாமம் துயிலுமில்லத்தில் உணர்வுபூர்வமாக மக்கள் அஞ்சலி !


சீரற்ற வானிலை ; கிளிநொச்சியில் வெள்ள அபாயம்

28 Nov, 2025 | 01:37 PM

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

குறிப்பாக, கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகமான காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால், மாவட்டத்தின் பிரதான குளமான இரணைமடு குளம் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. 

இதனால் இன்று வெள்ளிக்கிழமை (28) காலை முதல், இரணைமடு குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன.

உலகச் செய்திகள்

 ஹொங்கொங்கில் பாரிய தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு ; 26 பேர் கவலைக்கிடம் ; 279 பேரை காணவில்லை!

12 ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் முதல்முறையாக வெடித்தது எரிமலை ; இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு பரவும் சாம்பல்

இம்ரான் கான் கொல்லப்பட்டாரா? - அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம்

ஜப்பானின் எச்சரிக்கையையடுத்து டிரம்ப் – ஜின்பிங் அவசர தொலைபேசி உரையாடல்

இந்தோனேஷியாவில் அனர்த்தங்களில் சிக்கி 174 பேர் பலி 



ஹொங்கொங்கில் பாரிய தீ : உயிரிழந்தோர் எண்ணிக்கை 44ஆக அதிகரிப்பு ; 26 பேர் கவலைக்கிடம் ; 279 பேரை காணவில்லை!

27 Nov, 2025 | 11:48 AM

சீனாவின் ஹொங்கொங்கின் தை போ நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பொன்றில் நேற்று (26) பகல் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 44ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் இத்தீ விபத்தில் சிக்கி 26 பேர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாகவும் 279 பேரை காணவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. 

குறித்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத் தொகுதியில் கடந்த சில மாதங்களாக கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று பகல் திடீரென தீ பரவியது. 

கட்டடத் தொகுதியில் படுவேகமாக தீ பரவியதில் 5 கட்டடங்கள் முழுவதுமாக எரிந்ததில் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்திருந்தது. 

13வது ஆண்டு திருத்தொண்டர் திருவிழா - ஞாயிறு 07/12/2025

 

காலை 8.00 மணிக்கு ஆரம்பம்:

சங்கல்பம், கும்ப ஸ்தாபன பூஜை மற்றும் ருத்ர பாராயணம்
நிருதி வளம்புரி விநாயகர் துதி மற்றும் திருத்தொண்டர்களுக்கு விசேஷ அபிஷேகம்
அலங்காரம், தீபாராதனை மற்றும் அர்ச்சனை
விநாயகர் , பன்னிரு திருமுறைத் தேர்வுகள் மற்றும் திருத்தொண்டர் வாழ்த்துப் பாடல்கள்
(செக்கிழாரின் பெரியபுராணத்தில் இருந்து தொகுக்கப்பட்ட பாடல்கள்)

கோயில் வளாகத்திற்குள் நால்வர் ஊர்வலம்
மகா தீபாராதனை அதன் பிறகு
மஹேஸ்வர பூஜை (அன்னதானம் / மதியஉணவு)

தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)

 


அபயகரம் வழங்கும் 34வது ஆண்டு நிதிசேகரிப்பு விழா

 


ஸ்ரீசத்திய சாய் பாபா அவதாரஞ் செய்து நூற்றாண்டு நிறைவை நினைவுகூரும் ஞான்று மலரும் நினைவுகள்!

சிவமயம்

 

மும்மைமா மலப்பற்றின் தளைய கற்றி

   மூவுயிரும் ஈடேறத் தோன்றாத் துணையாய்

இம்மையிலும் தொடர்ந்துவரும் எழுமையி லுமடியர்

   எடுத்திடுமெப் பிறப்பினிலும் அருள்பா லித்தே

செம்மைவாழ் வளித்தெமக்குப் பதஞ்சே விக்கும்

   சிவனவனின்; தேவதூதனாய்ப் புட்ட பதியில்

தம்மையுமிப் புவியிலுள்ளோர் தரிசித்தே உய்யத்

   தவப்பேற்றால் உதித்தவரே சத்யசாய் பாபா!

 


 

 

 





பத்தர்கள் நினைவுகூர்ந்து விழா வெடுத்துப்

   பாபாவின் நூற்றாண்டு பிறந்த நாளை

எத்திக்குங் கொண்டாடி மகிழும் வேளை

   இறைதூதன் எமக்கருளிப் போந்த நல்ல

தித்திக்கும் அருளுரையைச் சிந்தைக் கெடுத்துச்

   சீராக அறுகுணசீ ரமைப்பைச் செய்து

அத்தனருள் கூர்ந்தெம்மை வழிந டத்தி

  அருள்வரென நம்பியவர் அடிகள் தொழுவாம்  ! 

மனமகிழும் வகையினிலே மற்றவரை வைத்துவிடு !

 





         














மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா




பசி சென்றபின்னர் சாப்பிட அழைக்காதே 
மனம் உடைந்தபின்னர் மன்னிப்பு கேட்காதே
தாகம் இருப்பாரின் தாகத்தைத் தணித்துவிடு
தலையையினைத் தடவி தண்ணளியைக் காட்டு

பரிசுகள் கொடுத்து பரிகாசம் செய்யாதே
பசிக்கின்ற  வேளை உணவளிக்க தயங்காதே
ஏங்குவார் யாவரையும் ஏளனம் செய்யாதே
இரக்கமே எல்லோர்க்கும் இறையீந்த சொத்தாகும் 

உறவாடி உறவாடி  உயிரெடுக்க முனையாதே
உள்ளொன்று வைத்துப் புறமொன்று உரையாதே
கள்ளநிறை மனத்தோடு கட்டியே அணைக்காதே
கருணையுடன் யாவரையும் கட்டியே அணைத்துவிடு

கிளிக் கண்ணிகள் (சென்றவாரத்தொடர்ச்சி)

 



இயற்றியவர்

பல்மருத்துவ கலாநிதி

பாரதி இளமுருகனார்

 



பழந்தமிழ்ப் பெருமையைப் பறைசாற்றி வருவோர்தம்

வழக்கத்தில்; ஓம்பாரடி - கிளியே

வாய்ச்சொல்லில் தீரரடீ!

 

 



 

 




நடைமுறையில் ஓம்பிடாத நனிசிறந்த விழுமியங்கள்

நாளடைவில் நலியுமன்றோ? கிளியே

நாளும்புழங் கச்சொல்லுவாய்!

 

வாய்பேசாச் சீவன்களை வேள்வியென்ற பாவனையில்

கோயிலில் உயிர்ப்பலியா?  - கிளியே

கொடுமையிற் கொடுமையடீ!

 

மனதைச் சலவைசெய்தே சைவர்களை மதம்மாற்றத்

தினமும் முயலுகிறார் கிளியே

சிறுநெறி ஈனரடீ!