தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில்

 தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை  அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு

வேற்றுமை தெரியா வெள்ளை மனமே !




மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா 
மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர்
மெல்பேண் ..... அவுஸ்திரேலியா 
























குழந்தைகள் இருந்தால் குதூகலம் நிறையும்
குதூகலம் குழந்தைகள் கூடவே வந்திடும்
கூடவே வந்தால் வீடெலாம் ஒளிரும்
வீடெலாம் ஒளிர்ந்தால் வேதனை ஓடிடும் 

வேதனை ஓடிட வைப்பது குழந்தையே
குழந்தையே குடும்பத்தின் மாபெரும் சொத்து
மாபெரும் சொத்து மகிழ்வினைப் பொழியும்
ஆனந்த மழையாய் ஆகியே இருக்கும் 

மழலையின் மழையில் நனைவது சுகமே
மழலையை மடியில் வைப்பதும் சுகமே
மழலையைக் கேட்டால் மனக்குறை பறக்கும்
மனக்குறை பறந்தால் வாழ்வது சிறக்கும்

கவிதை..."எம்மை ஆளவா!"... மெல்போர்ன் அறவேந்தன்

 



கிளிக்கண்ணிகள் -- ( பழித்தறிவுறுத்தல்)

                                                                                                           









மகாகவி சுப்பிரமணிய பாரதி அவர்கள் இயற்றியவை  

நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,

வஞ்சனை சொல்வா ரடீ! - கிளியே!

வாய்ச் சொல்லில் வீரரடி.

 

கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,

நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே!

நாளில் மறப்பா ரடீ

 

சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்

அந்தகர்க் குண்டாகு மோ? - கிளியே!

அகலிகளுக் கின்ப முண்டோ ?

 

கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற

பெண்களின் கூட்டமடீ! - கிளியே!

பேசிப் பயனென் னடீ

 

யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,

மந்திரத் தாலே யெங்கும் - கிளியே!

மாங்கனி வீழ்வ துண்டோ !

 

உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவா ரடீ! - கிளியே!

செய்வ தறியா ரடீ!

 

தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்

நாவினாற் சொல்வ தல்லால் - கிளியே!

நம்புத லற்றா ரடீ!

 

மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்

பேதைகள் போலு யிரைக் - கிளியே

பேணி யிருந்தா ரடீ!

கலாபூஷணம் திருமதி. கோகிலா மகேந்திரன் அகவை 75

இன்று நவம்பர் மாதம் 17 ஆம் திகதி நமது ஈழத்துப் பன்முகப் படைப்பாளி திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்கள் தனது 75 ஆவது அகவையில், பவள விழா ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றார்.


அவரின் பவள விழா நிகழ்வுகள் டிசெம்பர் மாதம் 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நிகழ ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஈழத்துப் படைப்பாளிகளில், சமூக சிந்தனை கொண்ட களப் பணியாளராகத் திருமதி கோகிலா மகேந்திரன் அவர்களின் செயற்பாடுகள் பன்முகப்பட்டவை. எழுத்தாளர் என்ற எல்லையைத் தாண்டி, உள வள ஆலோசகராக அவரின் பணி இன்னும் காத்திரமானது. தான் கொண்ட எழுத்துக் களத்தில் ஒரு எல்லைக்குள் நிற்காமல் பல்வேறு கூறுகளைத் தொட்டு அவரின் எழுத்துகள் பரந்து விரிந்தது போலவே அவரின் சமூக இயக்கமும் நிகழ்கிறது.

இந்த வேளை திருமதி. கோகிலா மகேந்திரன் அவர்களின் பன்முகப்பட்ட செயற்பாடுகளை நான்கு கூறுகளில் ஒலிப் பகிர்வுகளாக எடுத்திருந்தேன்.

அவற்றைக் கேட்க


எழுத்தாளர் லெ.முருகபூபதி





எழுத்தாளர் பாடும் மீன் சு.ஶ்ரீகந்தராசா




தமிழன் அன்று சீனாவில் வணிகம்! தமிழன் இன்று சீனாவில் பயணம்!! தொடர்-2…..சங்கர சுப்பிரமணியன்.


சீனவின் பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலையத்தை விமானம் நெருங்கிக் கொண்டிருந்தது. வானிலிருந்து பார்க்கும்போது இதுவரை நான் பார்த்திராத பிரம்மாண்டமான நகரமாகத்தான் தெரிந்தது. பட்டிக்காட்டான் மிட்டாய்க் கடையை பார்ப்பதுபோல் வைத்தகண் வாங்காமல் கழுத்து சுளுக்கும்வரை நான் பார்த்ததற்கு காரணம் வேறு.


வானில் இருந்து பார்க்கும்போது இரவு நேரத்தில் மின்னும் விளக்குகளுடன் ஒரு டிராகன் படுத்திருப்பதுபோல் தெரியுமாம். அப்படி வடிவமைத்திருக்கிறார்களாம். ஆனால் திருப்பதி கோவிலில் ஜருகண்டி கதையாகத்தான் அது முடிந்தது. ஒருவேளை விமானம் வெகு உயரத்தில் பறக்கும்போதே பார்த்திருக்க வேண்டுமோ? அல்லது விமானம் சீனாவைக் கடந்து டேக் ஆப் ஆகிசெல்லும் பொழுது தெரியுமோ ? தெரியவில்லை.

சரி, சீனாவை விட்டுக் கிளம்பும் போது பார்க்கலாம் என்று எண்ணினேன். விமானம் கிளம்பியது சீனாவின் டாக்ஸிங் பன்னாட்டு விமானத்தில் இருந்து. 17 பில்லியன் டாலர் செலவில் கட்டப்பட்ட இந் விமான நிலயத்தை பார்த்த பிரமிப்பில் மாம்பழம் போய் கத்த வந்தது டும் டும் கதையாக டிராகன் போய் இந்த விமான நிலையத்தின் நட்சத்திர வடிவமைப்பு டிராகனை மறக்கடித்தது.

பீஜிங் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தைப் பற்றிச் சொன்னேன் அல்லவா? விமானம் தரையிறங்கியதும் அதைப் பற்றிய வியப்பு இன்னும் அதிகமானது. இதைவிட வியப்படையக்கூடிய விமான நிலையத்தை நீங்கள் பார்த்திருக்கலாம். ஏழைக்கு ஏற்ற எள்ளுருண்டையாக என் அனுபவத்தை மட்டும் கூறுகிறேன். இதுவரை நான் பயணித்து தரை இறங்கிய விமனங்கள் ஓடுதளத்தில் நிற்காமல் ஓடி நிற்கவேண்டிய இடத்தில் பத்து நிமிடங்களில் வந்து நிற்கும்.

சிலசமயங்களில் ஓடுபாதையில் தடையேற்பட்டு ஓடாமல் நின்று

அதன் பின் நிற்கவேண்டிய இடத்தில் வந்தடைவதில் அதிக நேரம் எடுக்கலாம். ஆனால் விமானம் தரையிறங்கியதிலிருந்து எங்கும் நிற்காமல் ஓடுபாதையில் சென்றபடியே நிற்கும் இடத்தை வந்தடைய அரைமணி நேரமானதென்றால் சீனாவின் தலைநகர் பன்னாட்டு விமான நிலயத்தின் பரப்பளவை உங்கள் பார்வைக்கே விடுகிறேன்.

விமானத்திலிருந்து இறங்கியதும் விமானத்தில் இருந்தபோதும் கவனித்ததில் வேறு நாட்டவர்களின் எண்ணிக்கை என்பது மிக மிக குறைவே. விமானத்தில் இருந்து இறங்கியதும் சிம் கார்டு வாங்கவேண்டியிருந்தது. சில சீன நண்பர்களின் ஆலோசணையின்படி சீனாவில் சிம் கார்டு வாங்க முடிவு செய்தேன். நான் பயணித்த விமானம் டெர்மினல் மூன்றில் வந்தடைந்தது.

டெர்மினல் மூன்றில் உள்ள சைனா மொபைல்
கடை இரவு பதினொரு மணிவரை மட்டுமே திறந்திருக்கும். ஆதலால் அங்கு என்னால் சிம் கார்டு வாங்கமுடியவில்லை. டெர்மினல் இரண்டில் மட்டுமே இருபத்திநான்கு மணி நேரமும் சைனா மொபைல் திறந்திருக்கும். குடிவரவைக் கடந்து கரோசலில் பயணப்பொதிகளப் பெற கீழ்த்தளம் சென்று தொடர்வண்டியில் செல்லவேண்டும். தொடர்வண்டிக்காக காத்திருந்தபோது எப்படியாவது புகைப்படம் எடுக்கவேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை.

மாறுபட்ட ஹைக்கூவில் வேறுபட்ட ஒரு ஐ க்யூ!!

உடல் இந்த மண்ணுக்கு என்றான்

உயிர் இன்பத் தமிமிழுக்கு என்றான்
உடனிருந்து தீங்கையே செய்கிறான்

என்அம்மாவை அப்பாவை மாற்றுகிறான்
தன் பெற்றோராய் தப்பாய் சொல்கிறான்
பேரில்லாதோரை என் பெற்றோரென்றான்

தமிழர் வீரம் தமிழர் பண்பென்றான்
தமிழர் நாகரிகம் என்றும் புகழ்ந்தவனே
இன்று அதையே திருத்தவும் பார்க்கிறான்

என் கடவுளுக்கு வேறு பெயர் வைத்தான்
விரும்பியே திரைமறைவில் மகிழ்ந்தான்
என்கடவுளையே தன் கடவுள் என்கிறான்

கோயில் கொடியவர் கூடாரமென்றான்
அப்படிச் சொல்லியே வாழ்ந்து வந்தான்
இன்று கோயில் கோயிலாக போகிறான்

இலங்கைச் செய்திகள்

நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

யாழில் சட்டவிரோத சொத்துக்குவிப்பு குற்றச்சாட்டு - வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸ்

மாவீரர் நாள் நிகழ்வுகள் : முல்லைத்தீவில் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

19 இலட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழில் விழிப்புணர்வு நடைபவனி  



நாட்டில் ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் - சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை 

Published By: Digital Desk 1

13 Nov, 2025 | 03:41 PM

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் தற்போது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  இது நாட்டில் அதிகரித்துவரும் பொது சுகாதார கவலையை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய கண் வைத்தியசாலையின் ஆலோசகர் கண் அறுவை சிகிச்சை நிபுணர் கபில பந்துதிலக, நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் கண் நோய்களாலும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

உலகச் செய்திகள்

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப்

இராணுவ விமானம் மலையில் மோதி விபத்து - 20 பேர் உயிரிழப்பு

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் - ட்ரம்ப்

டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


டெல்லியில் பதற்றம்: செங்கோட்டை அருகே  கார் வெடிப்பு - ஒருவர் பலி, பலர் காயம் ? உயிரிழப்பு அதிகரிக்கலாமென அச்சம்


மெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு முடக்கம் முடிவு - சட்டமூலத்தில் கையெழுத்திட்டார் ட்ரம்ப் 

13 Nov, 2025 | 05:56 PM

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்ட நிதி சட்டமூலத்தில் ட்ரம்ப் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து, 43 நாள் அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்துள்ளது. 

இதன்போது ட்ரம்ப் தெரிவிக்கையில், சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்காக நூற்றுக்கணக்கான பில்லின் டொலர்களைப் பறிக்கும் முயற்சியில் உள்ள ஜனநாயகக் கட்சியினர் கடந்த 43 நாட்களாக அமெரிக்க அரசாங்கத்தை முடக்கினர். இன்று மிரட்டி பணம் பறிப்பதற்கு நாங்கள் ஒருபோதும் அடிபணிய மாட்டோம் என்றார். 

சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025

 .

உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க   tamilmurasu1@gmail.com  or  paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில்  தொடர்பு கொள்ளவும்



                              

சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்                    

29-11- 2025  Sat: Australian Medical Aid Foundation proudly presents முத்தமிழ் மாலை

30-11-2025  Sunமாத்தளைசோமுவின்  100 சிறுகதைகள் நூல் வெளியீடு   ANTHONY CATHOLIC CHURCH-TOONGABBIE-4-00 pm to 6-30 pm.

14-12-2025  Sun: தமிழ் இலக்கிய கலை மன்றம் - திருக்குறள் போட்டிகள் -பரிசளிப்பு நிகழ்ச்சி- 5 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

14-12-2025  Sunஸ்ரீ  துர்க்காதேவி தேவஸ்தான அறிவுத் திறன் போட்டிக்கான பரிசளிப்பு  5:30 PM   ஸ்ரீ துர்க்கை அம்மன்ஆலய வளாகத்தில் அமைந்துள்ள  மண்டபம்

சுவாமி ஐயப்பன் - பொன் விழா ஆண்டில் இந்த படங்கள் - ச. சுந்தரதாஸ்

 பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டு தோறும் விரதம் இருந்து


சுவாமி ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு யாத்திரை செல்வது தொடர்ந்து இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் இவ்வாண்டும் கார்த்திகை முதல் தேதி மாலையிட்டு பக்தர்கள் தங்களின் விரதத்தை தொடங்குகிறார்கள். இவ்வாறு இலட்சக்கணக்கான பக்தர்களின் மனதில் குடியிருக்கும் ஐயப்ப சாமியின் மகிமையை உணர்த்தும் விதமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் படம் ஒன்று தயாரானது. கலரில் தயாரான அப் படத்தின் பேர் சுவாமி ஐயப்பன் . படத்தை தயாரித்து, இயக்கியவர் மெரிலாண்ட் சுப்பிரமணியம். 



ஆரம்ப காலத்தில் இளைஞனான சுப்பிரமணியம் ஒரு கேனில்

பெட்ரோல் எடுத்துக் கொண்டு பிரதான வீதியில் நின்று , பெட்ரோல் இல்லாமல் நின்று விடும் வாகனங்களுக்கு சற்று கூடுதல் விலைக்கு பெட்ரோலை விற்று கொண்டிருந்தார். அதே போல் பஞ்சராகி வழியில் நின்று விடும் கார்களின் டயரையும் மாற்றிக் கொடுப்பார். ஒரு முறை ஒரு வெள்ளைக்காரரின் கார் பெற்றோல் இல்லாமல் வழியில் நின்று விட சுப்பிரமணியம் அவருக்கு பெற்றோல் கொடுத்து உதவியுள்ளார். அந்த வெள்ளைக்காரர் டன் லோப் டயர் கம்பெனியின் ஜெனரல் மானேஜர் என்று அறிந்து தன்னால் டயர் விற்று தர முடியும் என்றும் அவரிடம் கூறியுள்ளார்.வீதியில் நிற்கும் 18 வயது இளைஞனால் எப்படி டயர் விற்க முடியும் என்று அதிசயப்பட்ட வெள்ளைக்காரர் இரண்டு டயர்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளார். 

 அவற்றை உடனடியாகவே சுப்பிரமணியம் விற்று பணத்தை அனுப்பி வைக்கவே , வெள்ளைக்காரர் அசந்து போய் சுப்ரமணியத்தையே தனது டயர் நிறுவனத்தின் முகவராக அந்த பிராந்தியத்துக்கு நியமித்து விட்டார். அதில் இருந்து முன்னேறிய சுப்பிரமணியம் பின்னர் மெரிலாண்ட்ஸ் ஸ்டுடியோவை உருவாக்கி, படத் தயாரிப்பில் இறங்கி , பல படங்களையும் இயக்கினார். இரண்டு தடவை திருவனந்தபுரம் மேயராகவும் பதவி வகித்தார்! இவர் தயாரித்த யானை வளர்த்த வானம்பாடி படம் வெற்றி பெற்றது. அதே போல் எம் ஜி ஆர், பத்மினி, வீரப்பா நடிப்பில் ராஜராஜன் படத்தையும் இவர் தயாரித்தார். அந்த வரிசையில் 1975ல் இவர் உருவாக்கிய படம் சுவாமி ஐயப்பன். 



வன்னியின் கண்ணீர் அமைப்புக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சி 23/11/2025

 


மாத்தளை சோமுவின் நூல் வெளியீட்டு விழா 30.11.2025

 .



முத்தமிழ் மாலை 29/11/2025

 


தமிழ் மொழி /யாப்பு இலக்கண வகுப்புகள் (29/10/2025 முதல்)

 


படித்ததில் பிடித்த கவிதை " சிதறும் நிறங்கள்"

 .

சிதறும் நிறங்கள்


தவறுகள் செய்வது
உயிர் இன்னும்
இயங்குகிறதென்பதற்கான
அடையாளம்
விழும்
ஒவ்வொரு முறையும்
புதிய நடையைக்
கற்றுக் கொள்கிறேன்
சரியான நிறம்
கண்டுபிடிக்குமுன் நிறங்கள்
சிதறட்டும்
அதில் தான் தெளிவாகிறது
உண்மை
வாழ்க்கை
என்பது
நிறைவே அல்ல
மெதுவாக
முழுமையைக் கற்றுக்கொள்ளும்
பயிற்சி.
பிரியா பாஸ்கரன் I 11.6.25.

தி.ஞானசேகரன் எழுதிய `அவுஸ்திரேலியப் பயணக்கதை’ - கே.எஸ்.சுதாகர்

 .

பயணங்கள் போவது பலருக்கும் பிடித்தமானது. புதிய இடங்களைத் தரிசிப்பதிலும், அங்கு வாழும் மனிதர்களின் கலை, கலாசாரம், பண்பாடு, வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வதிலும், அவற்றிற்குப் பின்னால் உள்ள வரலாறுகளைத் தெரிந்து கொள்வதிலும் பலருக்கும் ஆர்வம் உண்டு. ஆனால் அவற்றை ஏனையவர்களும் அறிந்து கொள்ளும் வகையில், மிகவும் சுவையாகப் பதிவு செய்து கொள்பவர்கள் மிகவும் குறைவு. அந்த வகையில் தி.ஞானசேகரன் அவர்கள் - இலண்டன் பயண அனுபவங்கள், ஐரோப்பிய பயண அனுபவங்கள், கனடா பயண அனுபவங்கள், வட இந்திய பயண அனுபவங்கள், அவுஸ்திரேலியப் பயணக்கதை என ஐந்து பயண அனுபவப் புத்தகங்களை வரவாக்கியிருக்கின்றார். இந்தச் சந்தர்ப்பத்தில், நான் வியந்து வாசித்த `அவுஸ்திரேலிய பயணக்கதைஎன்னும் நூல் பற்றிப் பார்க்கலாம்.


இந்த நூல் 1999 ஆம் ஆண்டு ஞானம் பதிப்பகத்தில் இருந்து வெளிவந்திருக்கின்றது. நூலின் அணிந்துரையை பேராசிரியர் சி.தில்லைநாதன் அவர்களும், முன்னுரையை திரு லெ.முருகபூபதி அவர்களும் எழுதியிருக்கின்றார்கள்.

நூலின் ஆரம்பக் கட்டுரைகளில் அவுஸ்திரேலியா பற்றிய புள்ளிவிபரங்களைக் காணக்கூடியதாக இருந்தது. இவை 1999 ஆம் ஆண்டுக்குரிய தகவல்கள் என்பதால், தற்போதையை தகவல்களை இங்கே பதிவு செய்வது சாலவும் பொருத்தமாக இருக்கும்.

அவுஸ்திரேலியாவில் பூர்வீக மக்கள் சுமார் 60,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றார்கள். அதன் பின்னர் பிரித்தானியாவில் இருந்து, 1788 ஆம் ஆண்டளவில் வந்த கைதிகள் மற்றும் அவர்களுடன் கூட வந்தவர்களினால் உருவாக்கப்பட்ட நாடே இன்றைய நவீன அவுஸ்திரேலியா ஆகும். இன்று அவர்களின் பரம்பரையினர் சீரும் சிறப்புமாக வாழ்ந்துகொண்டு, புதிதாகக் குடியேறியவர்களையும் வாழ வைத்திருக்கின்றார்கள். அவுஸ்திரேலியா 270 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் இணங்கி வாழும் ஒரு பல்லின நாடாக மிளிர்வதுடன், அதன் வளர்ச்சி ஏனைய நாடுகளைக் காட்டிலும் பல மடங்கு முன்னேற்றத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம்.

இந்நூலாசிரியர், சுமார் 225 ஆண்டுகளைக் கொண்ட நவீன அவுஸ்திரேலியாவை, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வு முறைகளுடன் ஒப்பிட்டு முடிச்சுப் போடுவதைப் பார்த்து நான் வியந்து நிற்கின்றேன். இந்தியத் தோட்டத் தொழிலாளர்களின் வருகையும் ஏறக்குறைய 225 ஆண்டுகளைக் கொண்டதுதான். ஆனால் அவர்களின் கடும் உழைப்பும், சிந்திய இரத்தமும் அவர்களின் வாழ்வை உயர்த்தப் பயன்படவில்லை, நாட்டிற்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரவே பயன்பட்டிருக்கின்றது என்பதை அறியும்போது ஏதோ ஒரு நெருடல் மனதில் வந்து போகின்றது.

அவுஸ்திரேலியா, இலங்கையை விட 120 மடங்கு பெரிதானது. ஆனால் சனத்தொகையில் இலங்கையை விட சிறிதளவே (அவுஸ்திரேலியா - 27 மில்லியன்கள், இலங்கை – 22 மில்லியன்கள்) கூடுதலாகவுள்ளது. மேலும் அவுஸ்திரேலியாவுக்குச் சொந்தமான ட்ஸ்மேனியா என்னும் தீவு, இலங்கையின் பரப்பளவைக் கொண்டது என்பதும் ஆச்சரியமான தகவல் ஆகும். தற்போது அவுஸ்திரேலியாவின் சனத்தொகையில் 57% ஐரோப்பியர்கள் வாழ்கின்றார்கள். அதில் 33% ஆங்கிலம் பேசும் வெள்ளையர்கள். இந்த நாட்டிற்கு சொந்தமான பூர்வீக குடிகள் 3.8%. இவற்றை ஒப்பிட்டுப் பார்த்து குடியேற்றம் எவ்வளவு வேகமாக நடைபெற்றுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.