தமிழ் முரசு வாரம் ஒருமுறை திங்கட் கிழமைகளில் மலரும் என்பதை வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம். மரண அறிவித்தல்கள், பிறந்தநாள் வாழ்த்துக்கள், விளம்பரங்கள் போன்றவைகளை அனுப்பி வைத்தால் இலவசமாக பிரசுரிக்கப்படும். ஆசிரியர் குழு
கழுமல வளநகர் மலரென மலர்ந்தார் !
வாழ்நாள் எல்லாம் வருந்தியே நிற்போம் !
ஆஸி தமிழ்க் கல்விச் சமூகத்தில் இருந்து திருமதி புவனா இராஜரட்ணம் பேசுகிறார் பேட்டி கண்டவர் : கானா பிரபா
கடந்த மூன்று தசாப்தங்களாக இயங்கி வரும் மெல்பர்ன் பாரதி
பள்ளியின் பாரதி பள்ளியின் துணை அதிபராகப் பணியாற்றிய புவனா இராஜரட்ணம் அவர்களால் ஆக்கப்பட்ட
பார்த்தேன்! இரசித்தேன்! பகிர்கிறேன்! - ---யசோதா
மங்கல விளக்கு ஏற்றும் நிகழ்வின் போது கலாவித்தகர் பல்வைத்திய கலாநிதி சிவரதி கேதீஸ்வரன் அவர்கள் இல்லக விளக்கது இருள் கெடுப்பது .. என்று தொடங்கும் தேவாரத்தைப் பண்ணுடன் இசைத்தார். இதைத் தொடர்ந்து விழா அமைப்பாளர் பாரதி இளமுருகனார் இயற்றிய தமிழ்த் தாய் வாழ்த்தையும் இசையுடன் அழகாக இசைத்தார். விழாவிலே பாடப்பெற்ற தமிழ் மொழி வாழ்த்து
கல்வியும் கருணையும்
-சங்கர சுப்பிரமனியன்
என் வீட்டு மேஜை மீது பலரின் வாழ்வில் விளக்கேற்றிய அந்த உயர்ந்தவரின் புகைப்படம் அழகு சேர்த்துக் கொண்டிருந்தது. இவர் யார்? என்று ஒன்றிரண்டு தடவை என் மகன் சிவா என்னிடம் கேட்டிருக்கிறான். அவ்வளவு எளிதில் சில வார்த்தைகளில் அந்த புண்ணியவானைப் பற்றி சொல்லிவிட முடியுமா? அவரைப்
பற்றிச் சொல்லவெண்டும் என்றால் அவரது பின்னணி அவரால் என்னைப் போன்றவர்கள் அடைந்த பலன் என்று எல்லாவற்றையும் சொன்னால்தான் அவரைப் பற்றி நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். எனவே எனக்கு நேரம் கிடைக்காததால் இன்னொரு நாள் சொல்வதாகச் அவனிடம் சொல்லியிருந்தேன்.
"அப்பா, போலாமா? நான் தயார்" பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக சிவா கூப்பிட்டான்.
சிவா பிராட் மீடோஸ் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாவது படித்துக் கொண்டிருக்கிறான். தினமும் காலையில் அவனை பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டு வருவது என் வேலை.
"சரி, போலாம் வா" என்று சொல்லி ட்ரைவ் வேயில் நின்ற கார் பக்கம் சென்றேன்.
கார் ரயில்வே கிரசண்ட் ரோட்டில் அனிச்ச செயலாய் ஓடிக்கொண்டிருக்க என் மனமோ முப்பது ஆண்டு பின்னே சென்று ரயில்வே கிரசண்டை ஒற்றையடிப் பாதையாக கண் முன்னே விரியச் செய்தது. அந்த ஒற்றையடிப் பாதையில் மலங்க மலங்க விழித்தபடி நின்றிருந்தேன். என்னைத் தன்னந்தனியாக தாத்தா வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என் பெற்றோர்கள்.
கீழப்பாவூரில் ஒரு வறுமையான குடும்பம் தான் என் குடும்பம். அம்மா, அப்பா, நான், மற்றும் என் தம்பி என நான்கு பேர் தான் எங்கள் குடும்பம். அதிகப் படிப்பில்லாததால் சொற்ப சம்பளத்தில் நெல் அரவை மில்லில் அப்பாவுக்கு வேலை. காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு வருவார். அவர் சம்பளம் வீட்டுச் செலவுக்கு பற்றாது. ஆதலால் அம்மாவும் தன்னால் முடிந்த அளவுக்கு குடும்பத்திற்காக உழைத்தார்கள்.
நீ - ஸ்வீட் சிக்ஸ்டி - ச. சுந்தரதாஸ்
திரையுலகில் கிசுகிசுக்களுக்கும், வதந்திகளுக்கு என்றுமே பஞ்சம்
இருந்ததில்லை. இத்தகைய கிசுகிசுவில் ஒரு சீசனில் அடிபட்ட நட்சத்திரங்கள் தான் ஜெய்சங்கர், ஜெயலலிதா இருவரும். இன்று கூட இவர்களை இணைத்து, தொடர்புபடுத்தி பல கதைகள் அவ்வப்போது உலா வந்த வண்ணம் உள்ளன. அவ்வாறு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விட்ட இவர்கள் இருவரும் இணைந்து நடித்த முதல் படம்தான் நீ. அறுபது ஆண்டுகளுக்கு முன் இந்தப் படம் வெளி வந்தது. தமிழ் சினிமாவில் ஒற்றை எழுத்தில் வெளிவந்த முதல் படமும் இந்தப் படம்தான்.
அதே போல் முதல் படத்திலேயே நட்சத்திர நடிகையாகி விட்ட ஜெயலலிதாவையும் படத்தில் முதலில் இணைத்த பெருமை டைரக்டர் டி . ஆர் . ராமண்ணாவை சாரும். தனது பட நிறுவனமான விநாயகா பிக்சர்ஸ் மூலம் இதற்கு பிள்ளையார் சுழி போட்டார் ராமண்ணா. அது மட்டுமன்றி அது வரை காலமும் தன்னுடைய உதவி இயக்குனராக பணியாற்றிய கனக சண்முகத்தையும் டைரக்டராக்கி அழகு பார்த்தார் அவர்.
தமிழ் - கன்னட "தக் லைவ்" புயலின் மையத்தில் கமல்ஹாசன்
13 Jun, 2025 | 10:28 AM
டி.பி.எஸ். ஜெயராஜ்
முன்னணி தமிழ் நடிகரான கமல்ஹாசன் தற்போது மூன்று காரணங்களுக்காக செய்திகளில் பெரிதாக அடிபடுகிறார். முதலாவதாக, நடிகரும் அரசியல்வாதியுமான அவர் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபையான ராஜ்ய சபாவுக்கு தெரிவு செய்யப்படவிருக்கிறார். இரண்டாவதாக, சிறந்த திரைப்பட இயக்குநரான மணிரத்தினம் இயக்கிய - ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு அண்மையில் உலகம் பூராவும் வெளியிடப்பட்டிருக்கும் " தக் லைவ் " ( Thug Life ) திரைப்படத்தின் கதாநாயகன் கமல் ஹாசன். அந்த படத்துக்கு அவர் கூட்டாக திரைக்கதையை எழுதியதுடன் கூட்டு தயாரிப்பாளருமாவார். மூன்றாவதாக, கமல்ஹாசன் பகிரங்கமாக வெளிப்படுத்திய கருத்துக்களின் விளைவாக மூண்ட ஒரு சர்ச்சைக்குள் அவர் சிக்கிக்கொண்டுள்ளார்.
தமிழ் மொழிக்கும் கன்னட மொழிக்கும் இடையில் சண்டை ஒன்று மூண்டிருப்துடன் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் அந்த திரைப்படம் வெளியிடப்படவுமில்லை. சுருக்கமாக சொல்வதானால் கமல்ஹாசன் அரசியல் -- சினிமா புயல் ஒன்றின் மையத்தில் சிக்கியிருக்கிறார்.
இத்தகைய பின்புலத்தில், இந்த கட்டுரை கமல்ஹாசன் மீது கவனத்தை திருப்புகிறது.கமல் என்று பிரபல்யமாக அறியப்பட்ட கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் இன்று தலைசிறந்த நடிகர் என்பதில் சந்தேகமில்லை. இந்தியாவின் மிகவும் சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் அவர் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்.
சிட்னி / மெல்பேர்ன் / கன்பரா / பிரிஸ்பேனில் நடைபெறும் நிகழ்ச்சிகள் 2025
.
உங்கள் நிகழ்ச்சிகளை இலவசமாக பிரசுரிக்க tamilmurasu1@gmail.com or paskiho@hotmail.com , murasuau@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளவும்
சிட்னியில் நடைபெறும் நிகழ்வுகள்
22-06-2025 Sun: வராஹி அம்மன் கும்பாபிஷேகம் - சிட்னி துர்க்கை அம்மன் கோயில்
28-06- 2025 Sat: ETA presents Charity Night 2025 - Dinner Dance - Roselea Community Centre, Carlingford
13-07-2025 Sun: Laughing Go Laughing - comedy drama - Bryan Brown Theatre, cnr of Chapel and Rickard Roads, 80 Rickard Road, Bankstown NSW 2200 at 6 PM.
27-09- 2025 Sat: சிட்னி சிலோன் லயன்ஸ் கிளப் வழங்கும் நடன, இசை நிகழ்ச்சி at The Bryan Brown Hall, Bankstown 6pm.:'
காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள்.அவளுக்கு மூளை இல்லைஎண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.-டாக்டர் எஸ்ஸிடீன் ஷேஹாப்
Published By: Rajeeban
11 Jun, 2025 | 04:43 PM
வடக்கு காசாவின் அல்-அவ்தா மருத்துவமனையில் ஒரு பெண் குழந்தை பிறந்தாள், ஆனால் இந்த உலகம் அவளை ஏற்கவில்லை. அவளுக்கு மூளை இல்லை. அவள் அப்பாவித்தனமானவள் என்;ற அர்த்தத்திலோ அல்லது கவிதையாகவோ நான் இதனை தெரிவிக்கவில்லை.- உடற்கூறியல் ரீதியாக இதனை தெரிவிக்கின்றேன்.
அனென்செபலி. மூளைப்பகுதி இல்லாத பிறவி. எண்ணங்கள் இல்லை கனவுகள் இல்லை நினைவுகள் இல்லை. ஒரு குறிக்கோளில்லா சடலம்.
அவள் முழுமையாக கருவுற்று பிறந்தாள். அவளது தாய் ஒன்பது மாதங்கள் அவளை சுமந்தாள்—தீக்காய்ந்த இரவுகள் அழும் காலைகள் தூசிஇ துக்கம்இ மற்றும் சைரன்களின் இடையேஅவளை சுமந்தாள். பிறந்தாள் ஆனால் காப்பாற்றுவதற்கு உயிர் இல்லை. மௌனமே மிச்சம்.மருத்துவர்கள் எதுவும் செய்ய முடியாதவர்களாக காணப்பட்டார்கள். தங்கள் கைகளின் எல்லைகள் அவர்களை ஏமாற்றியது.
நான் மிகவும் திறமையான மருத்துவநிபுணர்களின் சுத்தமான விரல்கள் நடுங்கியதை பார்த்தேன்.. குழப்பத்தால் அல்ல உணர்வால்.
ஊனமுற்ற வளர்ச்சி. பிறவியியல் தோல்வி. இதுவும் ஒரு விபத்தால் இல்லை போர் காரணமாக.
குண்டுகள் கட்டிடங்களை மட்டுமல்லமரபணுக்களையும் தாக்கின.
இலங்கைச் செய்திகள்
நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம்
யாழ். தையிட்டியில் ஆர்ப்பாட்டம் - தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு
இலங்கை வருகிறார் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர்
தையிட்டிக்கு தென்பகுதியிலிருந்து செல்லவுள்ள இனவாத குழுக்கள் ; மக்கள் குரோத கருத்துக்களையும் புரிந்துணர்வின்மையையும் தவிர்க்கவேண்டும் - காணி உரிமைகளிற்கான மக்கள் கூட்டமைப்பு
வவுனியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள் நடைபவனி
யாழ் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு : துணை முதல்வரானார் தயாளன்
நல்லூர் கந்தசுவாமி கோயில் முன்பாக பால் புதுமையினரின் நடைபவனி - இது தமிழ்க் கலாசார சீர்கேடு என கீதநாத் கண்டனம்
10 Jun, 2025 | 07:03 PM
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், குறித்த செயற்பாடு தமிழ் கலாசாரம் மற்றும் சமய நெறிகளை மீறும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்துள்ள அவர்,
இவ்விடயத்தில் தனி நபர்களோ அமைப்புகளோ தமது உரிமைகளுக்காக குரல் எழுப்ப முடியும். எனினும் அவர்கள் தமிழ் மக்களின் கலாசாரம் மற்றும் நம்பிக்கைகளை, குறிப்பாக புனிதத் தலங்களுக்கான இடங்களில் மதிக்கவேண்டியது கட்டாயமானதாகும்.
உலகச் செய்திகள்
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
லொஸ் ஏஞ்சல்ஸில் ஊரடங்கு வேளையிலும் ஆர்ப்பாட்டங்கள் - பலர் கைது
உலகின் மிக உயரமான இரும்பு வளைவுப் பாலம் பிரதமர் நரேந்திர மோடியால் திறப்பு !
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்
ஈரானின் புரட்சிகர காவல்படையின் தலைவர் இஸ்ரேலின் தாக்குதலில் பலி
இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு !
Published By: Digital Desk 2
14 Jun, 2025 | 01:41 PM
இந்தியாவில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 274 ஆக உயர்வடைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவின், அமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம் கடந்த 12 ஆம் திகதி நண்பகல் புறப்பட்டது.
அந்த விமானத்தில் இந்தியா, இங்கிலாந்து, கனடா மற்றும் போர்த்துக்கல் நாடுகளை சேர்ந்த 230 பயணிகள் மற்றும் 2 விமானிகள், 10 பணியாளர்கள் என 242 பேர் இருந்தனர்.
ஆஷாதன நவராத்திரி மற்றும் மஹா சண்டி ஹோமம் 26/06/2025
சிட்னி துர்கா தேவி தேவஸ்தானத்தில் ஜூன் 26, 2025வியாழக்கிழமை முதல் ஜூலை 04, 2025 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும் சிறப்பு 9 நாள் ஆஷாதன நவராத்திரி விழாவிற்கு துர்கா தேவியின் ஆசிகளையும் அருளையும் பெற பக்தர்களை அன்புடன் அழைக்கிறோம்.
ஜூன் 29, 2025 ஞாயிற்றுக்கிழமை சிறப்பு மகா சண்டி ஹோமம் நடத்தப்படும்.
மஹா சண்டி யாகத்தில் கலந்து கொண்டு துர்கா அன்னையின் அருளைப் பெற ஸ்ரீ துர்காதேவி தேவஸ்தானம் உங்களை அன்புடன் அழைக்கிறது.
இலக்கியவெளி நடத்தும் இணையவழி ஆய்வரங்கு – 51 “நூல்களைப் பேசுவோம்”
நாள்: சனிக்கிழமை 28-06-2025
நேரம்:
இந்திய நேரம் - மாலை 7.00
இலங்கை நேரம் - மாலை 7.00
கனடா நேரம் - காலை 9.30
இலண்டன் நேரம் - பிற்பகல் 2:30
வழி: ZOOM
Join Zoom Meeting:
Meeting ID: 389 072 9245
Passcode: 12345
https://us02web.zoom.us/j/
நூல்களைப் பேசுவோம்:
இரா. வீரமணியின் “வாழ்க்கை எனும் மொழி விளையாட்டு” (தமிழில் நவீனத் திறனாய்வுக் கோட்பாட்டு வாசிப்பு”
வைகாசி விசாகம் மகத்துவம் மிக்கது !
வாழ்க வளமுடன் மந்திரச் சொல்லே !
மகிழ்ச்சி மலரும் மனமும் சிறக்கும்
நட்பு தொடரும் நல்லன விளையும்
ஆனந்தம் அகத்தில் அமர்ந்தே இருக்கும்
கண்ட உடனே களிப்புடன் பேசு
காலையில் கண்டால் வணக்கம் சொல்லு
புதிதாய் கண்டால் மலர்ச்சியைக் காட்டு
புத்துணர் வுன்னுள் புறப்பட்டு நிற்கும்
பேச்சினில் இகழ்ச்சியைத் தவிர் – அன்பு ஜெயா பா வகை: வஞ்சிப் பா (குறளடி).
வஞ்சிப்பா:
எப்போதுமே
எவ்விடத்திலும்
தப்பாமலே
தவறினைத்தவிர்!
உன்நினைவில்
உயரெண்ணமே
என்றுமெழவே
இயன்றதைச்செய்!
மற்றமாந்தரும்
மாண்புடையரே
உற்றயிடமும்
உவந்தளித்திடு!
இனம்தனையே இகழ்வோரையும்
மனம்மாற்றவே
முயன்றுவென்றிடு!
தனிச்சொல்:
என்றும்,
ஆசிரியச்
சுரிதகம்:
உன்றன் எண்ணம்
உயர்வாய் வைத்திரு,
நன்மை பெருகும்
நாட்டிலே,
அன்று இன்பம்
ஆறாய்ப் பெருகுமே!
மங்கையும் மயக்கமும்
-சங்கர சுப்பிரமணியன்
அந்தி சாயும் அற்புதமான அந்த வேளை
ஆற்று மணலில் கைகோர்த்து நடந்தோம்
என் இடக்கையும் அவள் வலக்கையும்
ஆயுள் ரேகைகள் இனையும்படி சேர்ந்தன
இணைந்திருப்போம் ஆயுள்வரை என்றோ
ஆற்று மணல் எங்களுக்கு பாய் விரிக்க
அருகிருந்த படகில் அவள் தோள் சாய்க்க
அவள் மடியில் நான் தலை சாய்த்தேன்
கண்ணதாசனும் என் நினைவில் வந்தான்
சிறு நெல்லின் மணிதனைப் போலவே
எந்தன் நிழலைக் கண்டேன் அவள் கண்ணில்
பகலோ மெல்ல மெல்ல இரவை நெருங்கியது
அவள் முகமும் என் முகத்தை நெருங்கியது
பகலை முழுதாய் விழுங்கியே இருள் சூழ்ந்தது
என் முகத்தை அவள் கார்குழலும் சூழ்ந்தது