உலகச் செய்திகள்

 அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

இத்தாலியில் அகதிகள் படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல், ஐவர் பலி!

சீனாவில் பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழப்பு


அமெரிக்க ஜனாதிபதிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த நபர் சுட்டுக்கொலை!

August 10, 2023

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அதிகாரிகள் சிலருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்த நபர், அமெரிக்க புலனாய்வு பிரிவான எப்.பி.ஐயினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேநபர், தமது சமூக வலைத்தளங்களின் ஊடாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்தும் பதிவேற்றி வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கு தாம் பயன்படுத்தவுள்ள ஆயுதங்கள் குறித்தும் சந்தேகநபர் தகவல் வெளியிட்டிருந்தாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, அவர் தொடர்பான விசாரணைகளை அமெரிக்க புலனாய்வு பிரிவு ஆரம்பித்திருந்தநிலையில், உட்டா நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றுள்ளனர்.
இதன்போது, அமெரிக்க புலனாய்வு பிரிவின் அதிகாரிகளால் சந்தேகநபர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.  நன்றி தினகரன் 





இத்தாலியில் அகதிகள் படகு விபத்தில் 41 பேர் உயிரிழப்பு

August 9, 2023


இத்தாலியின் லம்பேடுசா தீவில் அகதிகள் படகு ஒன்று விபத்துக்குள்ளானதில் குறைந்தது 41 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துனிசியாவில் உள்ள ஸ்ஃபாக்ஸில் இருந்து புறப்பட்ட குறித்த படகு இத்தாலியின் கரைக்கு செல்லும் வழியில் மூழ்கிய நிலையில், அந்த படகிலிருந்து தப்பிய நான்கு பேர் மீட்புப் படையினரிடம் விபத்து குறித்த விபரங்களை கூறியதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன.

லம்பேடுசா இத்தாலியின் தெற்கே உள்ள தீவு. 2000 களின் முற்பகுதியில் இருந்து, முக்கியமாக லிபியாவிலிருந்து வந்து, குடியேறுபவர்களுக்கான முக்கிய ஐரோப்பிய நுழைவுப் புள்ளியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி தினகரன் 





கிழக்கு உக்ரைன் மீது ரஷ்யா எறிகணை தாக்குதல், ஐவர் பலி!

August 8, 2023













கிழக்கு உக்ரைன் நகரமான, பொக்ரோவ்ஸ் (Pokrovsk) பகுதியில், குடியிருப்பு தொகுதியினை இலக்கு வைத்து ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் 3 பேர் வரையில் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதிகாரி ஒருவரும், பொதுமக்களில் 4 பேரும் உயிரிழந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

அதேநேரம், அங்கு தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மக்கள் தங்கியுள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யா தொடர்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களை, உக்ரைன் ஜனாதிபதி வன்மையாக கண்டித்துள்ளார்.   நன்றி தினகரன் 





சீனாவில் பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழப்பு

August 10, 2023


























சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, 33 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சீனாவில் டோக்சுரி புயலின் கோர தாண்டவத்தால் கனமழை பெய்தது.

ஒரு சில நாட்களில் 70 சென்ரி மீற்றருக்கும் அதிகமாக மழைப்பொழிவு பதிவானது.

பீஜிங், ஹெபெய், தைஜான் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளக்காடாகின.

பல வீடுகள் அடித்து செல்லப்பட்டன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ரயில் தண்டவாளங்கள் நீரில் மிதந்தன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 10 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.

கனமழையில் சிக்கி இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக, அந்த நாட்டின் பேரிடர் மேலாண்மை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்புத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  நன்றி தினகரன் 





No comments: