இலங்கைச் செய்திகள்



கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!

முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!

பஷில் பிணையில் விடுதலை.!

அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள சந்­தேக நபரை சர்­வ­தேச பொலிஸார் மூலம் கைது செய்­யவும் ; கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

ஆசிரியர் நியமனம்  1029 பேருக்கு வழங்கி வைப்பு

மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்...



கிளிநொச்சி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் போராட்டம் இன்று 24 வது நாளாகவும் தொடர்கின்றது.!

15/03/2017 கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.



கடந்த 20.02,2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு 24 வது நாளாகவும் இன்று திங்கட்கிழமை தொடர்கின்றது.
எனினும், இதுவரை அவர்களுக்கான தீர்வு இன்னமும் எட்டப்படவில்லை.  நன்றி வீரகேசரி 








முன்னாள் புலி உறுப்பினர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்..!

15/03/2017 முன்னாள் விடுதலை புலிகள் உறுப்பினர் உள்ளிட்ட நால்வர் வெள்ளவாய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதோடு, விளக்கமறியலில் வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 
வெள்ளவாய பொலிஸ் நிலையத்திற்கு 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தினுடாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, அண்மையில் இரண்டு பெண்கள் உட்பட நால்வர் இவ்வாறு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினரான பெண், புனர்வாழ்வின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஒருவரும், இலங்கை இராணுவத்தை சேர்ந்த கோப்ரல் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது. 
அத்தோடு கைது செய்யப்பட்டவர்கள் வெல்லாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய வேளை, எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 











பஷில் பிணையில் விடுதலை.!

15/03/2017 முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ சற்றுமுன்னர் நீதிமன்றத்தால் ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில், விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
Image result for பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை virakesari
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்திற்குச் சொந்தமான இரண்டு கோடியே 90 இலட்சம் ரூபா நிதியை பயன்படுத்தி, மஹிந்த ராஜபக்ஷவின் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு இலட்சம் பஞ்சாங்க கலண்டர்களை அச்சிட்டமை உள்ளிட்ட 5 குற்றச்சாட்டுக்களின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 
இந்நிலையில், குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நீதிபதி கிஹான் குலதுங்க உத்தரவிட்டுள்ளார்.   நன்றி வீரகேசரி 












அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள சந்­தேக நபரை சர்­வ­தேச பொலிஸார் மூலம் கைது செய்­யவும் ; கிளிநொச்சி நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ரவு

14/03/2017 பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனை படு­கொலை செய்ய முயற்­சித்­ததாக கைது செய்­யப்­பட்ட ஐந்து சந்­தேக நபர்­க­ளையும் எதிர்­வரும் 22ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறும் அவுஸ்தி­ரே­லி­யாவில் உள்ள ஆறா­வது சந்­தேக நபரை சர்­வ­தேச பொலிஸார் மூலம் கைது செய்­யு­மாறும் கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது.
பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனை படு­கொலை செய்ய முயற்­சித்­தமை மற்றும் சட்­ட­வி­ரோத ஆயு­தங்கள், போதைப்­பொருள் என்­ப­வற்றை வைத்­தி­ருந்­த­தாக குற்றம் சாட்­டப்­பட்டு கைது செய்­யப்­பட்ட ஐந்து சந்­தேக நபர்­களும் தொடர்ந்து விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.
விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்த ஐந்து பேரும் நேற்­றைய தினம் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றில் நீதிவான் ஏ.ஏ.ஆனந்­த­ராஜா முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டனர். அப்­போது ஆறா­வது சந்­தேக நப­ரான கண்ணன் அல்­லது அனோ ஜன் அல்­லது வெற்றி என அழைக்­கப்­ப­டு­பவர் தற்­போது அவுஸ்தி­ரே­லி­யாவில் இருப்­ப­தா­கவும் இவரை விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தற்கு சர்­வ­தேச பொலிஸார் மூலம் கைது செய்­வ­தற்­கான அனு­ம­தி­யினை பயங்­கர­வாத தடுப்­புப் ­பொ­லிஸார் நீதி­மன்­றத்தில் கோரி­யி­ருந்­தனர்.
இந்­நி­லையில் குறித்த ஆறா­வது சந்­தேக நபரை சர்­வ­தேச பொலிஸ் மூலம் கைது செய்­யு­மாறு கிளி­நொச்சி மாவட்ட நீதிவான் நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டுள்­ளது. இதே­வேளை குறித்த சந்­தே­க­ ந­பர்கள் தொடர்ந்தும் அநு­ரா­த­பு­ரத்தில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருப்­ப­தா­கவும் இவர்­களை வவு­னியா சிறைச்­சா­லைக்கு மாற்­று­மாறும் சந்­தேக நபர்கள் சார்­பாக ஆஜ­ரான சட்­டத்­த­ர­ணி­க­ளான எஸ்.விஜ­ய­ராணி மற்றும் அர்ச்­சுனா ஆகியோர் கோரி­யி­ருந்­தனர்.
இதற்கு பயங்­க­ர­வாத தடுப்பு பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணைகள் மேற்­கொள்ள வேண்­டி­யி­ருப்­பதால் அநு­ரா­த­பு­ரத்­தி­லேயே வைத்திருக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஒரு மாத காலத்திற்குள் விசாரணைகளை முடி வுறுத்தி குறித்த நபர்களை வவுனியா சிறைச் சாலைக்கு மாற்றுமாறும் நீதிமன்றம் கட்ட ளையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










ஆசிரியர் நியமனம்  1029 பேருக்கு வழங்கி வைப்பு

13/03/2017 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய கலாசாலையில்  பயிற்சிகளைப் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் நியமனம் வடமாகாண சபையால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 
யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டது.
வடமாகாண சபையின் அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இந்த நியமனங்களை வழங்கி வைத்ததுடன் வடமாகாண சபையின் கல்வியமைச்சர் குருகுலராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களுக்காக 1029 பேருக்கு ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி 










மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் மெளன பேரணியில்...

13/03/2017 மட்டக்களப்பு வேலையற்ற பட்டதாரிகள் 21 ஆவது நாளாக இன்று தங்களது சத்தியாகிரக போரட்டத்தை மௌன போராட்டமாக தற்போது முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மையில் பட்டதாரிகள் நால்வருக்கு எதிராக  வழக்கு தாக்கள் செய்ததை அடுத்து இன்றைய தினம்  மெளனமான முறையில் இந்த கவனயீர்ப்பு பேரணியை நடத்தி வருகின்றனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் மெளன கவனயீர்ப்பு பேரணியானது இன்று  காலை 10 மணியளவில் காந்தி பூங்காவில் இருந்து ஆரம்பித்து, மட்டக்களப்பு பஸ் நிலையம் வரைக்கும் சென்று  அங்கிருந்து வெள்ளை பாலத்தால் உப்புக் கராச்சி வழியாக, யங்சன் சென்று பிரதான வீதி வழியாக மீண்டும் காந்தி பூங்காவை வந்தடைந்தமை குறிப்பிடதக்கது.
நன்றி வீரகேசரி