யோசித்தவுக்கு பிணை : வெளிநாடு செல்ல மறுப்பு
சி.எஸ்.என் தொலைகாட்சி விவகாரம் : நிஷாந்தவுக்கு பிணை மறுப்பு
தெஹிவளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் ; இருவருக்கு சிறைத்தண்டனை
பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி
நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது
நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை
பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு
யோசித்தவுக்கு பிணை : வெளிநாடு செல்ல மறுப்பு
14/03/2016 சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணை உத்தரவிட்டுள்ளது.
மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
14/03/2016 சி.எஸ்.என் தொலைகாட்சி ஊடாக இடம்பெற்ற பாரிய முறைகேடுகள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட நால்வருக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர், நிஷாந்த ரணதுங்கவுக்கு பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது.
மேலும், யோசித்த உள்ளிட்ட நால்வருக்கு ஒரு இலட்சம் ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டில் விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அனுமதியின்றி சந்தேகநபர்கள் வெளிநாடு செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
தெஹிவளை ரயில் நிலையத்தில் குண்டுத் தாக்குதல் ; இருவருக்கு சிறைத்தண்டனை
15/03/2016 1996ஆம் ஆண்டு இடம்பெற்றதாக கூறப்படும் தெஹிவளை ரயில் நிலைய குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், தமிழீழ விடுதலைப் புலி அமைப்பின் சந்தேகநபர்கள் இருவருக்கு 2 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேகநபர்கள் தமது குற்றத்தை நீதிமன்றில் ஒப்புக் கொண்டுள்ளனர்.
விடயங்களை ஆராய்ந்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஐராங்கனி பெரேரா குற்றம்சாட்டப்பட்டவர்கள் முன்னதாக சுமார் 20 வருடங்கள் விளக்கமறியலில் இருந்துள்ளதால், 2 வருடங்கள் தளர்த்தப்பட்ட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், தண்டனைக் காலம் முடிந்ததும் ஒரு வருடம் வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமுக்கு இவர்கள் அனுப்பப்பட வேண்டும் எனவும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் சிலருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பிணையில் விடுதலையான தம்பியுடன் செல்பி
14/03/2016 தனது சகோதரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டு வீடு திரும்பியதை செல்பி எடுத்து தனது முகப்புத்தக பக்கத்தில் தரவேற்றி, மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ.
இதேவேளை, தனது சகோதரன் கடந்த 44 நாட்கள் கஷ்டப்பட்ட வேளையில் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக நாமல் ராஜபக்ஷ எம்.பி. அதில் கருத்து தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
நாடு கடத்தப்பட்ட இலங்கையர் கைது
15/03/2016 இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்று நாடு கடத்தப்பட்ட இலங்கையர் ஒருவர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதான சந்தேகநபரை நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை
16/03/2016 நிஷாந்த ரணதுங்கவிற்கு கடுவெல நீதிமன்றம் இன்று பிணை வழங்கி விடுதலைசெய்துள்ளது.
சீ.எஸ்.என். தொலைக்காட்சியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய ஊழல் மோசடி தொடர்பில் கடந்த ஜனவரி 30ஆம் திகதி கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யோஷித ராஜபக்ஷ உட்பட நால்வருக்கு நேற்று முன்தினம் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்த நிலையில் இன்று நிஷாந்த ரணதுங்கவிற்கு பிணை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்
17/03/2016 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
இந்தியாவின் பிரபல நிறுவனம் ஒன்று கொழும்பில் நிர்மாணித்த இல்லம் மற்றும் கடைத் தொகுதி தொடர்பில் ஆரம்ப அனுமதியை பெற்றுக் கொடுக்க ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் குறித்து வாக்குமூலம் அளிக்கவே அவர் இன்று பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராகியுள்ளார். நன்றி வீரகேசரி
பாரிய நிதி குற்ற விசாரணைப் பிரிவில் நாமல் ஆஜர்அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: மஹிந்த உட்பட 48 எம்.பி.க்கள் பங்கேற்பு
17/03/2016நல்லாட்சி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக இன்றைய தினம் பொது எதிரணியினரால் ஹைட் பார்க் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 48 எம்.பி.க்கள் களமிறங் கியிருந்தனர்.
அத்துடன் சுதந்திரக்கட்சியின் 30 இற்கும் மேற்பட்ட எம்.பி.க்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த போராட்டத்தில் பல்லாயிரக் கணக்கான கட்சி ஆதரவாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சியின் தலைவர்களும் கலந்து கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது. இன்று நடைபெற்ற போராட்டத்தின் காரணமாக கொழும்பில் பல பகுதிகளிலும் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இதன்போது வடக்கு கிழக்கு மாகாணங்களை இணைக்காதே , எட்காவை உடனடியாக நிறுத்து போன்ற கோஷங்களை எழுப்பிய வண்ணமும் மஹிந்த ராஜபக்ஷவின் புகழ்பாடிய வண்ணமும் ஆதரவாளர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பல்வேறு காரணங்களை முன்வைத்து மஹிந்த அணியினர் இன்று இந்த கூட்டத்தை நடத்தியிருந்தனர்.
கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ , முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ஷ, மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமாவன்ஸ அமரசிங்க, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா , முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ, தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன , வாசுதேவ நாணயக்கார , சந்திரசிறி கஜதீர, உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான திஸ்ஸ விதாரன, ஆகியோரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ஷ, கெஹலிய ரம்புக்வெல, சி.பி ரத்நாயக்க, லோஹான் ரத்வத்தை ,குமார வெல்கம, காமினி லொக்குகே, சுசந்த புஞ்சி நிலமே, திலும் அமுனுகம, கீதா குமாரசிங்க ,எஸ்.சந்திரசேன, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன ,டலஸ் அழகப்பெரும ,மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமையை அவதானிக்க முடிந்தது.
இந்த போராட்டத்தில் பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது போராட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
இந்த போராட்டத்தின் காரணமாக கொழும்பின் நகர மண்டபம், மருதானை, கொம்பனிதெரு ,பொரளை, நாராஹேன்பிட்டிய ,கொள்ளுப்பிட்டி மற்றும் கோட்டை பகுதிகளில் பாரிய வாகன நெரிசல் காணப்பட்டது. இதன்காரணமாக மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர்கொண்டமையை அவதானிக்க முடிந்தது. நன்றி வீரகேசரி