உலகச் செய்திகள்


நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம்

 ‘மேக் இன் இந்தியா’வில் பயங்கர தீ

போதை­வஸ்து கடத்­தல்­கா­ர­ருக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் போன்று உக்­ரே­னிய கிளர்ச்­சி­யா­ளர்­களால் தண்­டனை

இந்­து­க்க­ளுக்கு திரும­ணத்தைப் பதி­வு­செய்­வ­தற்கு பாகிஸ்­தானில் முதல் தட­வை­யாக அங்­கீ­காரம்

நியூஸிலாந்தில் 5.9 ரிச்டர் அளவில் பூமி அதிர்ச்சி : வானளாவ பாரிய தூசு மண்டலம்




15/02/2016 நியூஸிலாந்தின் கிறைஸ்ட் சேர்ச் பிராந்தியத்தை 5.9 ரிச்டர் அளவான பூமியதிர்ச்சி இன்று தாக்கியுள்ளது.
நகரின் கிழக்கே 15 கிலோமீற்றர் தொலைவில் 31 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியாநியூஸிலாந்ல் கட்டங்களிலுள்ள பொருட்கள் சிதறி விழுந்ததுடன் வானளாவ பாரிய தூசு மண்டலம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் பீதி காரணமாக கட்டடங்களை விட்டு வெளியேறி திறந்த வெ ளிகளை தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த பூமியதிர்ச்சியின் போது அந்நகரில் அபாய எச்சரிக்கை செய்யும் வகையில் ஒலி எழுப்பப்பட்டுள்ளது.
எனினும் மேற்படி பூமியதிர்ச்சியால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்து இதுவரை அறிக்கையிடப்படவில்லை.
இந்த பிரதான பூமியதிர்ச்சியையடுத்து 3.5 ரிச்டர் அளவான பிறிதொரு பூமியதிர்ச்சி அந்தப் பிராந்தியத்தை தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 








‘மேக் இன் இந்தியா’வில் பயங்கர தீ



16/02/2016 மும்பையில் நடைபெற்றுவரும் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மேடை யில் நேற்றுமுன்தினம் இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 
மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் மற்றும் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ், நடிகர்கள் அமிதாப் பச்சன், அமிர்கான் ஆகியோர் இதன்போது மேடையில் இருந்தனர். ஆயினும், அவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல் லப்பட்டனர்.
மும்பையில் பாந்த்ராகுர்லா கொம்ப் ளெக்ஸில் உள்ள எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ‘மேக் இன் இந்தியா’ வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி சில நாட்களுக்கு முன் ஆரம்பித்து வைத்தார். இது எதிர்வரும் 18 ஆம் திகதி வரைநடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 










போதை­வஸ்து கடத்­தல்­கா­ர­ருக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் போன்று உக்­ரே­னிய கிளர்ச்­சி­யா­ளர்­களால் தண்­டனை



17/02/2016 உக்­ரே­னி­லுள்ள ரஷ்ய ஆத­ரவுக் கிளர்ச்­சி­யா­ளர்கள் போதை­வஸ்து கடத்­தலில் ஈடு­பட்ட நப­ரொ­ரு­வ­ருக்கு ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் போன்று சித்­தி­ர­வதை செய்து மர­ண­தண்­ட­னையை நிறை­வேற்­றி­யுள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
தென் உக்­ரேனில் டொனெட்ஸ்க் ஒப்லாஸ்ட் பிராந்­தி­யத்­தி­லுள்ள கொமுனர் நகரில் குறிப்­பிட்ட போதை­வஸ்து கடத்­தல்­காரர் சித்­தி­ர­வ­தைக்­குள்­ளாக்­கப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் காணொளிக் காட்சி வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.
அந்தக் காணொளிக் காட்­சியில் மரக் கம்­ப­மொன்றில் கட்­டப்­பட்­டி­ருக்கும் குறிப்­பிட்ட நபர், தன்னை விட்­டு­வி­டு­மாறு கதறி அழு­து­கொண்­டி­ருக்க கிளர்ச்­சி­யாளர் ஒருவர் மின்­சாரக்கம்பி இணைப்பு பட்­டியால் அடிக்­கிறார்.
மேற்­படி தண்­டனை நிறை­வேற்றும் கிளர்ச்­சி­யாளர் மத்­திய ரஷ்ய நக­ரான நோவொ­ஸி­பிர்ஸ்க்­கி­லி­ருந்து உக்­ரே­னி­லுள்ள ரஷ்ய ஆத­ரவுக் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்கும் முக­மாக கொமுனர் நக­ருக்கு வந்த ஒல்கொன் என அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளது.
இந்­நி­லையில் அடித்து சித்­தி­ர­வதை செய்யப்பட்ட அந்த நபர், பின்னர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என நம்புவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.    நன்றி வீரகேசரி  











இந்­து­க்க­ளுக்கு திரும­ணத்தைப் பதி­வு­செய்­வ­தற்கு பாகிஸ்­தானில் முதல் தட­வை­யாக அங்­கீ­காரம்



17/02/2016 இந்­துக்­க­ளுக்கு தமது திரு­ம­ணத்தைப் பதிவு செய்து கொள்­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்த பெரு­ம­ளவு முஸ்­லிம்­களைக் கொண்ட முத­லா­வது நாடு என்ற பெயரை பாகிஸ்தான் பெறு­கி­றது.
மேற்­படி திரு­மணப் பதி­வுக்கு அங்­கீ­காரம் அளிக்கும் சட்டம் திங்­கட்­கி­ழமை 3 மில்­லியன் இந்­துக்கள் வசிக்கும் சிந்து மாகா­ணத்தைச் சேர்ந்த பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களால் நிறை­வேற்­றப்­பட்­டது.
பாகிஸ்­தானில் வாழும் இந்­துக்கள் திரு­மணப் பதி­வுக்­கான உரி­மையை வழங்­கு­மாறு நீண்ட கால­மாக கோரி வந்­துள்­ளனர். அவர்கள் கட்­டாய திரு­ம­ணங்கள், பரா­ய­ம­டை­யா­தோரின் திரு­ம­ணங்கள் மற்றும் கைம்­பெண்­க­ளுக்­கான உரி­மைகள் குறைவு என்­ப­வற்றால் துன்­புற்று வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் அந்­நாட்டு பாரா­ளு­மன்றம் இதை­யொத்த சட்­டத்தை நாட­ளா­விய ரீதியில் நடை­மு­றைப்­ப­டுத்த உத்­தே­சித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
பாகிஸ்­தானில் வாழும் கிறிஸ்­த­வர்கள் தமது திரு­ம­ணத்தைப் பதிவு செய்­வ­தற்­கான உரி­மையைப் பெற்­றுள்ள போதும் இந்­துக்கள் இது­வரை காலமும் அந்த உரி­மையைப் பெறாது இருந்­துள்­ளனர்.
இந்­நி­லையில் புதிய சட்­ட­மூ­லத்தின் பிர­காரம் சிந்து மாகா­ணத்­தி­லுள்ள 18 வய­துக்கு மேற்­பட்ட இந்­துக்கள் தமது திரு­ம­ணத்தை பதி­வு­செய்து கொள்ள முடியும்.
எனினும் மேற்­படி சட்­ட­மூலம் திரு­ம­ணத்தில் இணை­ப­வர்­களில் ஒருவர் மதம் மாறும் பட்­சத்தில் திரு­ம­ணத்தை இரத்துச் செய்ய அனு­ம­திக்கும் சர்ச்­சைக்­கு­ரிய ஏற்­பாட்டை உள்­ள­டக்­கி­யுள்­ளது.
பாகிஸ்­தா­னி­லுள்ள பல இந்­துக்கள் வங்கி கணக்­கு­களைத் திறக்­க­வும் விசா­வுக்கு விண்­ணப்­பிக்­கவும் அடையாள அட்டைகளைப் பெறவும் சொத்துக்களிலான பங்குகளைப் பெறவும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். பாகிஸ்தானிய சனத்தொகையில் 2 சதவீதத்துக்கும் சிறிது அதிகமாக இந்துக்கள் உள்ளனர்.   நன்றி வீரகேசரி