.
பரதத்தில் கோலோச்சும் ஆண்களும் பெண்களும் உலகெங்கும் பலருளர்.
ஆனால், உமையை இடபாகம் தரித்தவராய், ஆணுமாய்ப் பெண்ணுமாய் அமைந்தவராய், ஆடலில் உன்மத்தம் கொண்ட சிவனாரைப் போலவே, ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் உணர்ந்து பரதத்தில் கரைதொட்டிருக்கும் கலைமாமணி திருநங்கை நர்த்தகி நடராஜ் ஒரு தாழிப்பனை! (100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் பூவினம்)
சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தை உலக அரங்குகளில் சர்வதேச சமூகத்தினரின் விழிகளுக்கும் செவிகளுக்கும் இனிய வகையில் காட்சிப்படுத்தி உலகத் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்துவரும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் கேசரி சங்கமத்திற்கு வழங்கிய செவ்வி....
ஆனால், உமையை இடபாகம் தரித்தவராய், ஆணுமாய்ப் பெண்ணுமாய் அமைந்தவராய், ஆடலில் உன்மத்தம் கொண்ட சிவனாரைப் போலவே, ஆணாய்ப் பிறந்து பெண்ணாய் உணர்ந்து பரதத்தில் கரைதொட்டிருக்கும் கலைமாமணி திருநங்கை நர்த்தகி நடராஜ் ஒரு தாழிப்பனை! (100 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் பூவினம்)
சங்கம் வளர்த்த மதுரையில் பிறந்து, தமிழர்களின் கலைப் பாரம்பரியத்தை உலக அரங்குகளில் சர்வதேச சமூகத்தினரின் விழிகளுக்கும் செவிகளுக்கும் இனிய வகையில் காட்சிப்படுத்தி உலகத் தமிழ் நெஞ்சங்களை மகிழ்வித்துவரும் கலைமாமணி நர்த்தகி நடராஜ் கேசரி சங்கமத்திற்கு வழங்கிய செவ்வி....
'பரதம்' என்ற வெளிச்சம் மூலம் இன்று உங்களது பாதையை ஒளிமயமாக்கியிருக்கிறீர்கள். உலகெங்கும் உள்ள கலாரசிகர்கள் அனைவரும் உங்களை அறிவர். ஆனால், திருநங்கை என்ற பண்பு உங்களது பால்யப் பருவத்தைப் பாதித்திருக்குமே?
மதுரை அனுப்பானடியில் பிறந்தவள் நான்.
மதுரையில் மிகப்பெரிய அந்தஸ்துள்ள குடும்பத்தை நான் சார்ந்திருந்தாலும், என்னுடைய பால்நிலை குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாத குழந்தைப் பருவத்திலேயே என்னுடைய பெண்மையை உணரத் தொடங்கினேன்.
ஏனைய திருநங்கைகளைப் போலவே ஆரம்பத்தில் குழப்பம், கவலை எனப் பல உளவியல் சிக்கல்களுக்கு முகங்கொடுத்தேனாயினும், அவையனைத்தையும் தாண்டி வந்துவிட்டேன்.
மதுரை அனுப்பானடியில் பிறந்தவள் நான்.
மதுரையில் மிகப்பெரிய அந்தஸ்துள்ள குடும்பத்தை நான் சார்ந்திருந்தாலும், என்னுடைய பால்நிலை குறித்து எந்த ஒரு விழிப்புணர்வும் இல்லாத குழந்தைப் பருவத்திலேயே என்னுடைய பெண்மையை உணரத் தொடங்கினேன்.
ஏனைய திருநங்கைகளைப் போலவே ஆரம்பத்தில் குழப்பம், கவலை எனப் பல உளவியல் சிக்கல்களுக்கு முகங்கொடுத்தேனாயினும், அவையனைத்தையும் தாண்டி வந்துவிட்டேன்.
நடனத்தின் மீதான ஆர்வம் எப்போது, எப்படி ஏற்பட்டது?
மேலே நான் கூறியதைப்போல, என்னுடைய பள்ளிப் பருவம் பல நெருக்கடிகளின் மத்தியிலும் உரிமை மறுப்பு மற்றும் உணர்வு மறுப்புகளைக் கடந்தே வந்தது.
அந்தச் சிறுவயதுகளில், இந்த நெருக்கடிகளிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள பொழுதுபோக்கு அம்சமான டூரிங் கொட்டகையில் பத்மினி, வைஜெயந்திமாலா, குமாரி கமலா, சாவித்திரி இவர்களின் நாட்டியங்களைக் கண்டு களித்தேன்.
அதில் வரும் காட்சிகளைக் கண்டு என்னுடைய தோழி சக்தி பாஸ்கரனோடு இணைந்து எனக்கு நடனத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கி, மதுரை அரசமரம் விநாயகர் கோவிலில் முதன்முதலில் ஆடினேன்.
அப்போது எனக்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பினை வெறும் வார்த்தையினால் சொல்லி விளக்க முடியாது.
அதன் பிரதிபலனாக நடனகோபால ஸ்ரீ நாயகி மந்திரில், ‘நாயகி பாலரத்தினம்’ என என்னுடைய நடனம் அங்கீகரிக்கப்பட்டு முதல் விருது கிடைத்தது.
மேலே நான் கூறியதைப்போல, என்னுடைய பள்ளிப் பருவம் பல நெருக்கடிகளின் மத்தியிலும் உரிமை மறுப்பு மற்றும் உணர்வு மறுப்புகளைக் கடந்தே வந்தது.
அந்தச் சிறுவயதுகளில், இந்த நெருக்கடிகளிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ள பொழுதுபோக்கு அம்சமான டூரிங் கொட்டகையில் பத்மினி, வைஜெயந்திமாலா, குமாரி கமலா, சாவித்திரி இவர்களின் நாட்டியங்களைக் கண்டு களித்தேன்.
அதில் வரும் காட்சிகளைக் கண்டு என்னுடைய தோழி சக்தி பாஸ்கரனோடு இணைந்து எனக்கு நடனத்தை வளர்த்துக்கொள்ளத் தொடங்கி, மதுரை அரசமரம் விநாயகர் கோவிலில் முதன்முதலில் ஆடினேன்.
அப்போது எனக்கு மக்களிடமிருந்து கிடைத்த வரவேற்பினை வெறும் வார்த்தையினால் சொல்லி விளக்க முடியாது.
அதன் பிரதிபலனாக நடனகோபால ஸ்ரீ நாயகி மந்திரில், ‘நாயகி பாலரத்தினம்’ என என்னுடைய நடனம் அங்கீகரிக்கப்பட்டு முதல் விருது கிடைத்தது.
அன்றைய சூழ்நிலையில் நடனத்தினை மாத்திரம் வைத்தே உங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளை சமாளிக்க முடிந்ததா?
நான் மதுரை தியாகராசர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பொழுது என்னுடைய அங்கீகரிக்கப்படாத பால்நிலை குறித்து பல இக்கட்டுகளை நான் சந்தித்துக்கொண்டிருந்தாலும், அங்கிருந்த தமிழாசிரியர்கள் என்னுடைய கலையை அதிகமாக வளர்த்தார்கள்.
அது எனக்கு அதிகமாக தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அச்சமயங்களில் மக்களின் மத்தியில் என்னைப்போன்றவர்கள் ஒரு கேலிப்பொருளாக கிண்டலாக அழைக்கப்படும் பொழுது எனக்குள் பல விடயங்கள் தோன்றின.
மூன்றாம் பாலினமாய்ப் பிறந்ததில் எங்களின் தவறு ஒன்றும் இல்லை. எங்களுக்கும் சுயமரியாதை, உணர்வுகள் உண்டு என்பதை மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஒரு தாக்கம் இருந்துகொண்டே இருந்தது.
இதனால் நான் தமிழ் இலக்கியங்கள் மற்றும் இலக்கியங்கள் சார்ந்த விடயங்களைக் கற்றுத்தேர்ந்தேன். அந்த அறிவைக் கொண்டு, இன்று உலகம் முழுவதும் உள்ளவர்கள் மூன்றாம் பாலினைத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒரு அடையாளமாகக் குறிப்பிடும் 'திருநங்கை’ என்னும் வார்த்தையை உருவாக்கினேன். அதை அரசாங்கமும், பொதுமக்களும், சக திருநங்கைகளும் ஏற்று வழக்கமாக்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அப்போதிருந்தே எனக்கு கிடைத்த கௌரவமாக நான் என்னை மற்றவர்களிடம் திருநங்கை நர்த்தகி நடராஜ் என்று என்னுடைய நங்கைத் தன்மைக்கு 'திரு' என்று மரியாதை அளித்து அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.
தற்போதைய பரதநாட்டிய அம்சங்களான அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா போன்றவற்றை வடிவமைத்த தஞ்சாவூர் நால்வர் வழித்தோன்றலான இசைப் பேரறிஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் மாணவியாக எப்படி இணைந்தீர்கள்?
சிறு வயதில் சினிமாவை மட்டும் பார்த்து ஆடிக்கொண்டிருந்த என்னிடம் பலரும் வந்து உன்னுடைய நடன குரு யார் என்று கேட்கத் தொடங்கினார்கள்.
அந்த வயதில் எனக்கு பரதநாட்டியத்தின் ஒப்பனைகளோ அல்லது அது குறித்த சாரம்சங்களோ எதுவுமே தெரியாமல் இருந்தது.
நான் மதுரை தியாகராசர் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற பொழுது என்னுடைய அங்கீகரிக்கப்படாத பால்நிலை குறித்து பல இக்கட்டுகளை நான் சந்தித்துக்கொண்டிருந்தாலும், அங்கிருந்த தமிழாசிரியர்கள் என்னுடைய கலையை அதிகமாக வளர்த்தார்கள்.
அது எனக்கு அதிகமாக தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அச்சமயங்களில் மக்களின் மத்தியில் என்னைப்போன்றவர்கள் ஒரு கேலிப்பொருளாக கிண்டலாக அழைக்கப்படும் பொழுது எனக்குள் பல விடயங்கள் தோன்றின.
மூன்றாம் பாலினமாய்ப் பிறந்ததில் எங்களின் தவறு ஒன்றும் இல்லை. எங்களுக்கும் சுயமரியாதை, உணர்வுகள் உண்டு என்பதை மக்களும் அறிந்துகொள்ள வேண்டுமென்ற ஒரு தாக்கம் இருந்துகொண்டே இருந்தது.
இதனால் நான் தமிழ் இலக்கியங்கள் மற்றும் இலக்கியங்கள் சார்ந்த விடயங்களைக் கற்றுத்தேர்ந்தேன். அந்த அறிவைக் கொண்டு, இன்று உலகம் முழுவதும் உள்ளவர்கள் மூன்றாம் பாலினைத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒரு அடையாளமாகக் குறிப்பிடும் 'திருநங்கை’ என்னும் வார்த்தையை உருவாக்கினேன். அதை அரசாங்கமும், பொதுமக்களும், சக திருநங்கைகளும் ஏற்று வழக்கமாக்கியிருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
அப்போதிருந்தே எனக்கு கிடைத்த கௌரவமாக நான் என்னை மற்றவர்களிடம் திருநங்கை நர்த்தகி நடராஜ் என்று என்னுடைய நங்கைத் தன்மைக்கு 'திரு' என்று மரியாதை அளித்து அறிமுகப்படுத்திக்கொள்ளத் தொடங்கினேன்.
தற்போதைய பரதநாட்டிய அம்சங்களான அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், வர்ணம், தில்லானா போன்றவற்றை வடிவமைத்த தஞ்சாவூர் நால்வர் வழித்தோன்றலான இசைப் பேரறிஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையின் மாணவியாக எப்படி இணைந்தீர்கள்?
சிறு வயதில் சினிமாவை மட்டும் பார்த்து ஆடிக்கொண்டிருந்த என்னிடம் பலரும் வந்து உன்னுடைய நடன குரு யார் என்று கேட்கத் தொடங்கினார்கள்.
அந்த வயதில் எனக்கு பரதநாட்டியத்தின் ஒப்பனைகளோ அல்லது அது குறித்த சாரம்சங்களோ எதுவுமே தெரியாமல் இருந்தது.
சினிமாவில் நான் அதிகமாக வைஜெயந்திமாலாவின் நடனத்தினை விரும்புவதுண்டு.
அப்போது நான் வைஜெயந்திமாலாவின் குரு இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாமல் யதார்த்தமாக நான் இசைப் பேரறிஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையிடம் தான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என கூறினேன்.
அதன்பின் ஒரு வாரத்தில் சென்னை தமிழ் இசைச் சங்கம் கே.பி.கிட்டப்பா பிள்ளை க்கு இசைப் பேரறிஞர் விருது வழங்கியுள்ளது என்பதை ஒரு பிரபலமான பத்திரிகையில் கண்டு மகிழ்வுற்றேன்.
பரதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் நால்வர் வம்சத்தில் பிறந்த கே.பி.கிட்டப்பா பிள்ளை தஞ்சையில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து உடனே தஞ்சைக்கு விரைந்தேன்.
அவரிடம் கற்றுக்கொண்டு இன்று உலகளவில் பிரபலமாகியிருக்கிறேன் என்பது மிகவும் பெருமையளிக்கிறது.
அப்போது நான் வைஜெயந்திமாலாவின் குரு இருக்கிறாரா, இல்லையா என்பது கூடத் தெரியாமல் யதார்த்தமாக நான் இசைப் பேரறிஞர் கே.பி.கிட்டப்பா பிள்ளையிடம் தான் கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என கூறினேன்.
அதன்பின் ஒரு வாரத்தில் சென்னை தமிழ் இசைச் சங்கம் கே.பி.கிட்டப்பா பிள்ளை க்கு இசைப் பேரறிஞர் விருது வழங்கியுள்ளது என்பதை ஒரு பிரபலமான பத்திரிகையில் கண்டு மகிழ்வுற்றேன்.
பரதத்தின் தந்தை என்று அழைக்கப்படும் நால்வர் வம்சத்தில் பிறந்த கே.பி.கிட்டப்பா பிள்ளை தஞ்சையில் தான் இருக்கிறார் என்பதை அறிந்து உடனே தஞ்சைக்கு விரைந்தேன்.
அவரிடம் கற்றுக்கொண்டு இன்று உலகளவில் பிரபலமாகியிருக்கிறேன் என்பது மிகவும் பெருமையளிக்கிறது.
ஒரு கலைஞருக்கு அவரது கலைப்பயணத்தில் கிடைக்கும் மாபெரும் அங்கீகாரம் மற்றும் ஊக்கம் அவருக்குக் கிடைக்கும் விருதுகள் தான். உங்களை கலைப்பயணத்தில் ஊக்குவித்த விருதுகள் பற்றிக் கூறுங்கள்?
உலகளவில் எனக்கு எண்ணற்ற பட்டங்களும் விருதுகளும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமாக தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' பட்டத்தை வழங்கியுள்ளது.
மேலும், பரதநாட்டியத்தில் இப்பட்டத்தை பெற்ற முதல் திருநங்கை நான் தான் என்று தமிழக அரசு தனது அரசு குறிப்பேடுகளில் இட்டு வைத்துள்ளது எனக்கு மேலும் மகிழச்சியளிக்கும் ஒன்று. இத்தோடு கூட கலைஞர்கள் மிகவும் பெருமையாகக் கருதும் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருதும் எனக்கு கிடைத்துள்ளது.
அத்தோடு சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபாவின் நிருத்ய சூடாமணி விருதும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த நடனக்கலைஞர் எனும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது எனக்கு மேலும் பெருமையளிக்கும் ஒன்று.
உலகளவில் எனக்கு எண்ணற்ற பட்டங்களும் விருதுகளும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமாக தமிழக அரசு எனக்கு 'கலைமாமணி' பட்டத்தை வழங்கியுள்ளது.
மேலும், பரதநாட்டியத்தில் இப்பட்டத்தை பெற்ற முதல் திருநங்கை நான் தான் என்று தமிழக அரசு தனது அரசு குறிப்பேடுகளில் இட்டு வைத்துள்ளது எனக்கு மேலும் மகிழச்சியளிக்கும் ஒன்று. இத்தோடு கூட கலைஞர்கள் மிகவும் பெருமையாகக் கருதும் இந்திய அரசின் சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருதும் எனக்கு கிடைத்துள்ளது.
அத்தோடு சென்னை ஸ்ரீ கிருஷ்ணகான சபாவின் நிருத்ய சூடாமணி விருதும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் சிறந்த நடனக்கலைஞர் எனும் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றிருப்பது எனக்கு மேலும் பெருமையளிக்கும் ஒன்று.
இன்றைய தலைமுறையினருக்கு கம்பராமாயணம் படிப்பதற்கோ அல்லது புராணங்களைக் கற்றுத்தேர்வதற்கோ அதிகப்படியாக ஆர்வம் இல்லை. அவர்களுக்கு இதை எவ்வாறு கொண்டு போய் சேர்க்க முடியும்? அதற்கு நீங்கள் என்ன வழிமுறைகள் செய்திருக்கிறீர்கள்?
இன்று இசைஞானி இளையராஜாவின் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை - இவையெல்லாம் கடந்து மிகவும் மாறுபட்ட ஒரு இசையையே இன்றைய தலைமுறையினர் அதிகப்படியாக விரும்புகிறார்கள்.
அதேபோல, இன்றைய குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியபிரபந்தம் போன்றவற்றை எடுத்துச்செல்வது மிகவும் கடினமான ஒன்று.
இருப்பினும் இன்று இதை மக்களிடையே எடுத்துச்செல்ல பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக நான் என்னுடைய நடனத்தை எளிமைப்படுத்தி பழம்பெரும் செய்யுள்களில் பாடல்களை எடுத்து நடனமாடுகிறேன்.
என்னுடைய நடனத்தை ரசிப்பவர்கள் நிச்சயம் அந்தப் பாடல்களையும் ரசிப்பார்கள்
. அப்படி ரசிப்பவர்கள் அது என்ன பாடல் என்று நிச்சயம் தேடுவார்கள். அதுவே எனக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகிறேன்.
இன்று இசைஞானி இளையராஜாவின் இசை, மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் இசை - இவையெல்லாம் கடந்து மிகவும் மாறுபட்ட ஒரு இசையையே இன்றைய தலைமுறையினர் அதிகப்படியாக விரும்புகிறார்கள்.
அதேபோல, இன்றைய குழந்தைகளுக்கு தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்வியபிரபந்தம் போன்றவற்றை எடுத்துச்செல்வது மிகவும் கடினமான ஒன்று.
இருப்பினும் இன்று இதை மக்களிடையே எடுத்துச்செல்ல பலரும் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இதற்காக நான் என்னுடைய நடனத்தை எளிமைப்படுத்தி பழம்பெரும் செய்யுள்களில் பாடல்களை எடுத்து நடனமாடுகிறேன்.
என்னுடைய நடனத்தை ரசிப்பவர்கள் நிச்சயம் அந்தப் பாடல்களையும் ரசிப்பார்கள்
. அப்படி ரசிப்பவர்கள் அது என்ன பாடல் என்று நிச்சயம் தேடுவார்கள். அதுவே எனக்குக் கிடைத்த ஒரு வெற்றியாக நான் கருதுகிறேன்.
இலங்கையில் வாழும் தமிழர்கள் கலை சார்ந்த விடயங்களை அதிகம் விரும்புவதுண்டு. அவர்களுக்கு நீங்கள் உங்கள் பங்காகச் செய்துகொண்டிருப்பது என்ன?
இலங்கைத் தமிழர்கள் தமிழின் வேர்களான பல விடயங்களை இன்று இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் சார்ந்த உதவிகளை என்னுடைய கலையின் வாயிலாகவும், நடனத்தின் வாயிலாகவும் அளிக்கிறேன்.
தமிழருக்கு தமிழ் உணர்வு என்று ஒன்று உள்ளது. எனவே, அங்கே இருக்கும் தமிழர்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும் என்று எண்ணித்தான் இலங்கையில் இருக்கும் குழந்தைகளுக்கு எனது நடனப்பாடசாலையாகிய வெள்ளியம்பலத்தின் கீழ் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளேன்.
கலைஞர் டாக்டர். அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பேராசிரியர் மௌனகுரு, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆகியோரின் ஆதரவினால் தமிழ் இசைக்கான பயிற்சிப் பட்டறைகள், நடன வகுப்பு நிகழ்ச்சிகள் எனப் பலவற்றை அளித்து வருகிறேன்.
இலங்கையில் பல மாணவிகள் இருக்கிறார்கள்.
அனைத்து இலங்கை கம்பன் கழகத்தின் தாய்க் கழகமாய் விளங்கும் கொழும்பு கம்பன் கழகத்தில் ஒவ்வொரு வருடமும் என்னுடைய நடனம் நடைபெறும்.
இந்த வருடமும் கூட என்னுடைய நடனம் அங்கே நிகழவிருக்கிறது.
இலங்கைத் தமிழர்கள் தமிழின் வேர்களான பல விடயங்களை இன்று இழந்திருக்கிறார்கள். அவர்களுக்கு தமிழ் சார்ந்த உதவிகளை என்னுடைய கலையின் வாயிலாகவும், நடனத்தின் வாயிலாகவும் அளிக்கிறேன்.
தமிழருக்கு தமிழ் உணர்வு என்று ஒன்று உள்ளது. எனவே, அங்கே இருக்கும் தமிழர்களுக்கு என்னால் உதவி செய்யமுடியும் என்று எண்ணித்தான் இலங்கையில் இருக்கும் குழந்தைகளுக்கு எனது நடனப்பாடசாலையாகிய வெள்ளியம்பலத்தின் கீழ் பயிற்சிப் பட்டறை அமைத்துள்ளேன்.
கலைஞர் டாக்டர். அருந்ததி ஸ்ரீரங்கநாதன், பேராசிரியர் மௌனகுரு, கம்பவாரிதி இ.ஜெயராஜ் ஆகியோரின் ஆதரவினால் தமிழ் இசைக்கான பயிற்சிப் பட்டறைகள், நடன வகுப்பு நிகழ்ச்சிகள் எனப் பலவற்றை அளித்து வருகிறேன்.
இலங்கையில் பல மாணவிகள் இருக்கிறார்கள்.
அனைத்து இலங்கை கம்பன் கழகத்தின் தாய்க் கழகமாய் விளங்கும் கொழும்பு கம்பன் கழகத்தில் ஒவ்வொரு வருடமும் என்னுடைய நடனம் நடைபெறும்.
இந்த வருடமும் கூட என்னுடைய நடனம் அங்கே நிகழவிருக்கிறது.
இன்று உலகளவில் பல்வேறு இடங்களில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். அவர்களின் மத்தியில் பரத நாட்டியத்திற்கு எந்தளவிலான வரவேற்பு இருக்கிறது?
புலம்பெயர் தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் பரவியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம்முடைய கலாசாரம் மீது அதிக தாகம் இருந்து வருகிறது. இதனால் அங்கு இருப்பவர்களும் இக்கலையைக் கற்றுக்கொள்வதில் அதிகப்படியாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்காக நான் பிறந்து வளர்ந்த மதுரையில் கால்மாறி நடனமிடும் நடராசரை மனதில் கொண்டு வெள்ளியம்பலம் என்னும் நடனப் பாடசாலை மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவியருக்கும் பயிற்சியளிக்கத் தொடங்கியிருக் கிறேன்.
அழகான திட்டமிட லோடு அதில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரை ஆலோசனைகள் சொல்லவும் கற்பிக்கவும் இணைத்திருக்கிறேன்.
மேலும், இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் கலைஞர்களாகட்டும், கர்நாடக இசைக் கலைஞர்களாகட்டும், அல்லது என்னைப் போன்ற பரதநாட்டியக் கலைஞர்களாகட்டும் வெளிநாடுகளில் சென்று நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்றால், அதற்கு முழுக் காரணமும் உலகம் முழுவதும் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தான்.
அவர்களின் ஆதரவினால் தான் வெளிநாடுகளில் எங்களால் நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது.
அந்தளவிற்கு அவர்களின் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
புலம்பெயர் தமிழர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் உலகத்தின் பல்வேறு இடங்களில் பரவியிருக்கிறார்கள்.
அவர்களுக்கு நம்முடைய கலாசாரம் மீது அதிக தாகம் இருந்து வருகிறது. இதனால் அங்கு இருப்பவர்களும் இக்கலையைக் கற்றுக்கொள்வதில் அதிகப்படியாக ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இதற்காக நான் பிறந்து வளர்ந்த மதுரையில் கால்மாறி நடனமிடும் நடராசரை மனதில் கொண்டு வெள்ளியம்பலம் என்னும் நடனப் பாடசாலை மூலம் இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாட்டு மாணவியருக்கும் பயிற்சியளிக்கத் தொடங்கியிருக் கிறேன்.
அழகான திட்டமிட லோடு அதில் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் எனப் பலரை ஆலோசனைகள் சொல்லவும் கற்பிக்கவும் இணைத்திருக்கிறேன்.
மேலும், இன்றைக்கு சினிமாத் துறையில் இருக்கும் கலைஞர்களாகட்டும், கர்நாடக இசைக் கலைஞர்களாகட்டும், அல்லது என்னைப் போன்ற பரதநாட்டியக் கலைஞர்களாகட்டும் வெளிநாடுகளில் சென்று நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள் என்றால், அதற்கு முழுக் காரணமும் உலகம் முழுவதும் இருக்கும் இலங்கைத் தமிழர்கள் தான்.
அவர்களின் ஆதரவினால் தான் வெளிநாடுகளில் எங்களால் நிகழ்ச்சிகளை நடத்த முடிகிறது.
அந்தளவிற்கு அவர்களின் வரவேற்பும் ஆதரவும் இருந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விடயமே.
nanntri
http://kalaikesari.lk/article.php?category=dance&num=808