உலகச் செய்திகள்


நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்

அனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்

போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்

ஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்

ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி

 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கிய படகு 11 சிறு­வர்கள் உட்­பட 27 குடி­யேற்­ற­வா­சிகள் பலி

சிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர்  இடம் பெயர்வு




நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மரணம்



09/02/2016 நேபாள நாட்டின் முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா (79) இன்று அதிகாலையில் அவரது வீட்டில் மரணம் அடைந்தார். 
நுரையீரல் அழற்சி நோயால் மரணம் அடைந்த கொய்ராலாவின் உடல் காத்மாண்டு நகரில் உள்ள நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பனாரஸ் நகரில் பிறந்த கொய்ராலா நேபாள அரசியலில் 1954ம் ஆண்டு கால்பதித்தார். 
2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் திகதி பிரதமராக தேர்வுசெய்யப்பட்ட கொய்ராலா 2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரை நேபாள நாட்டு பிரதமராக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 









அனு­ம­தி­யின்றி பிர­வே­சிக்கும் வெளி­நாட்டு படை­யினர் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும்



08/02/2016 சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யில்­லாமல் அந்­நாட்­டுக்குள் பிர­வே­சிக்கும் வெளிநாட்டுப் படை­வீ­ரர்கள் சவப்­பெட்­டி­களில் திரும்ப நேரிடும் என சிரிய வெளி­நாட்டு அமைச்சர் வாலித் அல் – முயல்லம் எச்­ச­ரித்­துள்ளார்.
சனிக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் உரை­யாற்­று­கையில் சவூதி அரே­பி­யா­வுக்கு எச்­ச­ரிக்கை விடுக்கும் வகையில் அவர் இவ்­வாறு தெரி­வித்­துள் ளார்.
சிரி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான மோதலில் ஈடு­பட்­டுள்ள அமெ­ரிக்கா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­களும் கிளர்ச்சிக் குழுக்­களும் அனு­ம­தி­ய­ளித்தால் தான் சிரி­யா­வுக்கு தனது தரைப்­ப­டையை அனுப்பத் தயா­ராக இருப்­ப­தாக சவூதி அரே­பியா அறி­வித்­த­மைக்கு இரு நாட்­க­ளி­லேயே சிரிய வெளி­நாட்டு அமைச்­சரின் இந்த எச்­ச­ரிக்கை வெளி­யா­கி­யுள்­ளது.
"சிரிய அர­சாங்­கத்தின் அனு­ம­தி­யின்றி தரை வழி­யாக மேற்­கொள்­ளப்­படும் எந்­த­வொரு தலை­யீடும் ஆக்­கி­ர­மிப்பு நட­வ­டிக்­கை­யா­கவே கரு­தப்­படும். அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ப­வர்கள் சவப்பெட்டியிலேயே தமது நாடுகளுக்குத் திரும்ப நேரிடும் என்பதை நான் இங்கு வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என அவர் கூறினார்.   நன்றி வீரகேசரி 











போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யாவுக்குள் நுழைந்தேன்; உளவும் பார்த்தேன்



09/02/2016 மும்­பையில் தாக்­குதல் நடத்­து­வ­தற்கு முன்னர் போலி கட­வுச்­சீட்டு மூலம் இந்­தி­யா­வுக்கு பல­முறை சென்று மும்­பையை முழு­மை­யாக உளவு பார்த்தேன் என்று லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்­தினை சேர்ந்த டேவிட் ஹெட்லி தெரி­வித்­துள்ளார்.
மும்பை தாக்­குதல் சம்­பவம் தொடர்­பாக அமெ­ரிக்க சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள டேவிட் ஹெட்லி அர­ச­த­ரப்பு சாட்­சி­யாக மாறிய நிலையில் ‘வீடியோ கான்­ப­ரன்சிங்’ மூலம் மும்பை நீதி­மன்­றத்­திற்கு நேற்று வாக்­கு­மூலம் அளித்­த­போதே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் இதன் போது மேலும் தெரி­வித்­ததா­வது,
டேவிட் ஹெட்லி என்ற நான் லஷ்­கர்-­ இ -­தொய்பா தீவி­ர­வாத இயக்­கத்தின் உண்­மை­யான ஆத­ர­வா­ள­ராக இருந்தேன்.
அமெ­ரிக்­காவில் இருந்து இந்­தி­யா­விற்குள் நுழைய எனது பெயரை மாற்றிக் கொண்டேன். 2006ஆம் ஆண்டு டேவிட் ஹெட்லி என்ற பெயரை தாவூத் கிலானி என்று மாற்றிக் கொண்டேன். என்­னு­டைய பெயரை மாற்றிக் கொண்­டது தொடர்­பாக லஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிரிடம் தகவல் தெரி­வித்தேன். என்­னு­ டைய பெயரை மாற்­றிய ஒரு சில வாரங்­களில் பாகிஸ்தான் சென்றேன். இந்­தி­யா­விற்குள் செல்­ல­வேண்டும் என்­ப­தற்­காக பெயரை மாற்­றினேன். இந்­தி­யாவில் தொழில் ஏதா­வது செய்­ய­வேண்டும் என்று சாஜித் மிர் என்­னிடம் கூறினார்.
என்­னு­டைய புதிய கட­வுச்­சீட்டு கிடைத்­ததும் இந்­தி­யா­விற்கு 8 முறை பயணம் செய்தேன். இதில் 7 முறை மும்­பைக்கு சென்றேன்.
லஷ்­கர்-­ இ-­ தொய்பா தீவி­ர­வாதி சாஜித் மிர் மும்­பையை வீடியோ எடுக்க கூறினார். பாகிஸ்­தானில் இருந்து 7 முறை இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். ஒரு­முறை மட்­டுமே ஐக்­கிய அரபு எமி­ரெட்சில் இருந்து இந்­தி­யா­விற்கு பயணம் செய்தேன். மும்­பையில் தாக்­குதல் நடத்­திய பின்னர் 2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் திகதி பாகிஸ்­தானின் லாகூரில் இருந்து இந்­தி­யா­விற்கு சென்றேன். இந்­தி­யா­விடம் விசா கேட்டு விண்­ணப்­பித்த போது அளித்த தக­வல்கள் அனைத்தும் பொய்­யா­னவை. விண்­ணப்­பித்த போது அளித்த பிறந்த திகதி, பிறந்த இடம், தாய் தேசம் மற்றும் கட­வுச்­சீட்டு எண்கள் அனைத்தும் தவ­றா­னதே. என்று கூறி­ உள்ளார்.
பாகிஸ்­தானை தலை­மை­யி­ட­மாக கொண்டு செயல்­பட்டு வரும் லஷ்­கர் –­ இ–­தொய்பா அமைப்பை சேர்ந்த தீவி­ர­வா­தி கள், கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி மும்­பையில் பயங்­க­ர­வாத தாக்­குதல் நடத்­தினர். இதில் வெளி­நாட்­டினர் உட்­பட 166 பேர் உயி­ரி­ழந்­தனர். 300க்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­தனர்.
இந் நிலையில் அமெ­ரிக்­காவில் வசித்து வரும் பாகிஸ்தான் வம்­சா­வ­ளியை சேர்ந்­த­வ­ரான டேவிட் ஹெட்லி என்ற லஷ்கர் தீவி­ர­வா­தியும் மும்பை தாக்­கு­த­லுக்கு திட்டம் வகுத்­த­வர்­களில் ஒருவர் என கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அவர் 2009ஆம் ஆண்டு அமெ­ரிக்­காவில் கைது செய்­யப்­பட்டார். அவ­ரிடம் இந்தியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தினர். இதில் மும்பை தாக்குதலில் அவருடைய தொடர்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவருக்கு 35 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி 













ஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் மோதி விபத்து; 9 பேர் பலி; 100 பேர் காயம்

10/02/2016 ஜேர்­ம­னியில் இரு பய­ணிகள் புகை­யி­ர­தங்கள் ஒன்­றுடன் ஒன்று மோதி செவ்­வாய்க்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 9 பேர் பலி­யா­ன­துடன், 100 பேருக்கும் அதி­க­மா னோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
அதே­ச­மயம் விபத்­துக்­குள்­ளான புகை­யி­ர­தங்­களின் சிதை­வு­க­ளி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கானோர் பாது­காப்­பாக மீட்­கப்­பட்­டுள்­ளனர். முனிச் நகரின் தென் கிழக்கே சுமார் 60 கிலோ­மீற்றர் தொலை­வி­லுள்ள பாட்­­ எயிபிலிங் நகரில் இடம்­பெற்ற மேற்­படி விபத்தின்போது புகை­யி­ர­தப்­பெட்­டி­களில் பல தடம்புரண்­டுள்­ளன.
இந்­நி­லையில் புகை­யி­ரதப் பெட்­டி­களில் வெளியேற முடி­யாது சிக்­கி­யுள்ள பய­ணி­களை மீட்கும் நட­வ­டிக்கை தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கி­றது.
ரோஸென்­ஹெயிம் பிராந்­தி­யத்­துக்கும் ஹொல்ஸ்­கிர்சென் பிராந்­தி­யத்­துக்கும் இடை­யி­லுள்ள புகையிரதப் பாதையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துக்கான காரணம் கண்ட றியப்படவில்லை.


நன்றி வீரகேசரி










ஐ.எஸ்.தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான கனேடிய வான் தாக்­கு­தல்­க­ளுக்கு 22 ஆம் திக­தி­யுடன் முற்­றுப்­புள்ளி

10/02/2016 கன­டா­வா­னது சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களை இலக்­கு­வைத்து மேற் கொள் ­ளப்­படும் தாக்­கு­தல்களை எதிர்­வரும் 22 ஆம் திகதி முதல் முடி­வுக்கு கொண்டுவர­வுள்­ள­தாக அந்­நாட்டுப் பிர­த மர் ஜஸ்டின் ரூடோ தெரி­வித்தார்.
மேற்­படி வான் தாக்­கு­தல்­களால் மட்டும் உள்­நாட்டு மக்­க­ளுக்கு பாது­காப்பை பெற்றுத் தர முடி­யாது என அவர் திங்­கட்­கி­ழமை ஒட்­டாவா பிராந்­தி­யத்தில் ஆற்­றிய உரையின் போது கூறினார்.
கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் பிர­த­ம­ராக தெரிவுசெய்­யப்­பட்ட ஜஸ்டின், அந்தப் பிராந்­தி­யத்தில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான தாக்­குதல் நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டுள்ள 6 போர் விமா­னங்­களை வாபஸ் பெறு­வ­தற்கு உறு­தி­ய­ளித்­துள்ளார்.
எனினும் கன­டாவின் இரு கண்­கா­ணிப்பு விமா­னங்கள் தொடர்ந்து அங்கு கண்­கா­ணிப்பு நட­வ­டிக்­கை­களில் ஈடு­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

மேலும் விமா­னங்­க­ளுக்­கான மீள் எரி­பொ­ருளை வழங்கும் விமானம் அந்தப் பிராந்­தி­யத்தில் செயற்­ப­ட­வுள்­ள­துடன் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக போராடும் பிராந்­திய படை­க­ளுக்கு பயிற்சி வழங்கும் நட­வ­டிக்­கையில் ஈடு­ப­டுத்­தப்­படும் கனே­டிய படை­வீரர்­களின் தொகையும் அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளது.
"அந்தப் பிராந்­தி­யத்­தி­லான வான் தாக்­குதல் நட­வ­டிக்­கைகள் குறு­கிய கால இரா­ணுவ மற்றும் பிராந்­திய ஆதா­யங்­க­ளுக்கு மிகவும் பய­னுள்­ள­வை­யா­க­வுள்­ளதை புரிந்து கொள்­வது அவ­சி­ய­மா­க­வுள்­ளது. ஆனால் உள்­நாட்டு சமூ­கங்­களின் நீண்ட கால ஸ்திரத்­தன்­மையை அவர்கள் சொந்­த­மாக அடை­வ­தற்கு அது வழி­வகை செய்­யாது" என ஜஸ்டின் கூறினார்.
"ஆப்­கா­னிஸ்­தா­னி­லான ஒரு தசாப்த சிர­ம­மான போர் நட­வ­டிக்­கை­யி­லி­ருந்து கனே­டி­யர்கள் இந்தப் பாடத்தை முதன்முதலாக கற்றுக்கொண்­டனர். அங்கு எமது படை­யினர் நிபு­ணத்­துவம் பெற்ற இரா­ணுவ பயிற்­சி­யா­ளர்­க­ளாக உலகப் பிர­பலம் பெற்­றனர்" என்று கூறிய ஜஸ்டின், அதனால் கனே­டிய ஆயுதப் படை­யினர் ஈராக்­கிய படை­யி­ன­ருக்கு பயிற்­சி­ய­ளிப்­ப­தற்கு மேலும் இரா­ணுவ வளங்­களை ஒதுக்­கீடு செய்­ய­வுள்­ள­தாக கூறினார்.
இந்­நி­லையில் கனே­டிய பிர­த­மரின் அறி­விப்­புக்கு அந்­நாட்டு எதிர்க்­கட்சி கடும் கண்­டனம் தெரி­வித்­துள்­ளது.
கன­டாவின் நேச நாடுகள் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை முன்­னெ­டுத்து வரு­கின்ற நிலையில், கனே­டிய அர­சாங்கம் அந்தப் போரி­லி­ருந்து பின்­வாங்கிச் செல்­வ­தாக எதிர்க்கட்சித் தலைவரான ரொனா அம்புரோஸ் தெரி வித்தார்.
"நாம் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் கனடாவின் புதிய அணுகுமுறை தொடர்பில் குறிப்பிட்டால், அது பின் னோக்கிச் செல்கிறது என்றே கூறவேண்டி யுள்ளது” என அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குற்றஞ்சாட்டினார்.   நன்றி வீரகேசரி












துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் மூழ்­கிய படகு 11 சிறு­வர்கள் உட்­பட 27 குடி­யேற்­ற­வா­சிகள் பலி

10/02/2016 துருக்­கி­யி­லி­ருந்து கிரேக் கத் தீவான லெஸ்­பொஸை நோக்கி குடி­யேற்­ற­வா­சிக­ளு டன் பய­ணித்த படகொன்று ஏஜியன் கடலில் திங்­கட்­ கி­ழமை மூழ்­கி­யதில் 11 சிறு­வர்கள் உட்­பட குறைந்­தது 27 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
பாலி­கெஸிர் மாகா­ணத்­தி­லி­ருந்து சுமார் 40 குடி­யேற்ற­ வா­சி­க­ளுடன் புறப்­பட்ட இந்தப் படகு மூழ்­கி­ய­தை­ய ­டுத்து அதில் பயணம் செய்த நால்வர் உயி­ருடன் மீட்­கப் ­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம் 9 பேர் காணா மல்போயுள்­ளனர்.
அந்தப் படகில் பய­ணித்­த­வர்கள் எந்த நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் என்ற விபரம் அறி­யப்­ப­ட­வில்லை.
அதே­ச­மயம் அன்­றைய தினம் இடம்­பெற்ற பிறி­தொரு படகு அனர்த்­தத்தில் சிக்கி குறைந்­தது 8 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
இந்த வரு­டத்தில் ஐரோப்­பாவை சென்­ற­டையும் முயற்­சியில் சுமார் 400 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.
அவர்­களில் பலர் வட ஐரோப்­பாவைச் சென்­ற­­டையும் முக­மாக கிரேக்­கத்­திற்கு பய­ணத்தை மேற்­கொண்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது
ஐரோப்­பாவை வந்­த­டையும் குடி­யேற்­ற­வா­சி­களின் தொகையைக் குறைப்­பது தொடர்பில் கலந்­து­ரை­யாடும் முக­மாக ஜேர்­ம­னிய அதிபர் அஞ்­ஜெலா மெர்கெல் துருக்­கிக்கு விஜயம் செய்­துள்ள நிலை­யி­லேயே இந்த சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளது.
துருக்­கிய பிர­தமர் டவு­டோக்­லு­வுடன் பேச்­சு­வார்த்தை நடத்­திய ஜேர்­ம­னிய அதி பர், குடி­யேற்­ற­வா­சி­களால் ஏற்­பட்­டுள்ள நெருக்­க­டியைக் கையாள நேட்டோவின் உதவியை நாடி தாம் இருவரும் இணக்கம் கண்டுள்ளதாக தெரிவித்தார்.
ஜேர்மனியும் துருக்கியும் நேட்டோ அங் கத்துவ நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி










சிரியா மோதல் ; அலப்போ மாகாணத்தில் 50 ஆயிரம் பேர்  இடம் பெயர்வு

11/02/2016 அலப்போ மாகாணத்தில் மாத்திரம் 50 ஆயிரம் பேர் சிரியாவில் இடம் பெற்று வரும் மோதல்கள் காரணமாக இடம் பெயர்ந்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுகை சங்கம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, குறித்த மாகாணத்தில் அதிகளவிலான மனித உரிமை மீறல் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக  குடிநீர் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் இச்சங்கம் தெரி வித்துள்ளது.   நன்றி வீரகேசரி