புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு

.
புலம்பெயர் எழுத்தாளர் நடேசனுடன் ஒரு சந்திப்பு : 'தவறான விமர்சனங்கள் நூலுக்கான வரவேற்பை குறைத்துவிடுகின்றது'

ஒரு புத்­­தகம் நன்­றாக இருந்­தாலும் எல்­லோ­ரும் விரும்பும் அளவுக்கு இருக்கப்போவதில்லை.

  அதாவது  எல்லோரும் விரும்பும் வகையில் அனைத்தும் முழு­மையாக இருக்­கு­மென கூற  ­மு­டி­யா­து. ஒரு புத்­தகம் பலரின் கைகளில் சேர்ந்த  பின்பு அதனை விமர்­சிக்­க­லாம்.

அதுவும் குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக் கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

இது காலங்­கா­ல­மாக வலி­யு­றுத்­த­ப்­பட்­டு­ வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.

பிழை­யான விமர்­ச­னங்கள் மூலம் புத்­த­கத்­திற்­கான வர­வேற்பு முற்­றாக தடைப்­பட்டுவிடுகிறது.

இலங்­கையில் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது  என்கிறார் புலம்­பெ­யர்ந்து அவுஸ்­தி­ரே­லி­யாவில் வாழும் எழுத்­தாளர் நடே­சன்.


வாழும் சுவ­டுகள் , அசோகனின் வைத்­தி­ய­சாலை , மலே­சியன் ஏர்லைன் 370  ஆகிய நூல்­களின் வெளியீட்டு விழா அண்­மையில் வெள்ளவத்தை   தேசிய கலை இலக்­கிய பேர­வையில் மூத்த எழுத்­தாளர் சாகித்ய­ரத்னா தெளிவத்தை ஜோசப் தலை­மையில்  இடம்­பெற்­றது.



இந்நிகழ்வுக்காக இலங்கை வந்திருந்த எழுத்தாளர் நடேசனை சந்திக்கும் வாய்ப்பொன்று கிடைத்தது.   இதன்போது அவர் எம்முடன் பகிர்ந்துகொண்ட விடயங்களை இங்கு வாசகர்க ளுக்காக தருகின்றோம். 
மிருக வைத்திய துறையில் தேர்ச்சிபெற்ற நீங்கள் எவ்வாறு எழுத்துத்துறைக்குள் பிரவேசித் தீர்கள்?
ஆரம்ப காலங்களில் நான் அதிகமாகவே புத்தகங்கள் வாசித்திருக்கிறேன். விடுதலைப் போராட்டங்கள் இடம்பெற்ற காலங்களில் 90 வீதமானவர்கள் விடுதலைப் ணபுலிகளுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

ஆனால், புலம்பெயர்ந்த காலத்தில் நம்மில் சிலர் இதனை சற்று வித்தியாசமாக சிந்தித்திருந்தோம். அதாவது 20 பேர் இணைந்து ஒரு பத்திரிகையை ஆரம்பித்தோம். அப்பத்திரிகையை திருத்த வேலைப்பாடு செய்யும் பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.

     தமிழ், ஆங்கில மொழிகளை உள்ளடக்கிய 24 பக்கங்களைக்கொண்டதாக அமைந்திருந்தது. உதயன் எனும் பெய­ரி­லா­ன இப்­பத்­தி­ரிகை பணியை 15  வருடமாக செய்து வந்தேன்.

இதனை செய்யும் போது நான் தமிழ் மொழியை நன்றாக கற்றுக்கொள்ளக்கூடியதான வாய்ப்புக்கிட்டியது.

 அத்தோடு அப்பத்திரிகையில் எழுத வேண்டிய தேவையும்  எனக்கு ஏற்பட்டது.  இவ்வாறான தொடர் செயற்பாடுகள் என்னை எழுத்துத் துறைக்குள் ஆர்வமாக பிரவேசிக்க ஏதுவாக அமைந்திருந்தது.
ஒரு எழுத்­தா­ள­ராக நீங்கள் எழுதிய  சிறுகதை நாவல்களுக்கும் ஏனைய இலக்கியவாதிகளின் படைப்புகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? அவ்வாறு ஏதேனும் உணர்ந்ததுண்டா?
புலம்பெயர்ந்தவர்களில் மிகவும் அரி­தா­ன­வர்­க­ளே  புலம்பெயர் நாட்டு விடயங்களை எழுதுகின்றனர்.

புலம் பெயர்ந்த வர்களில்  ஆரம்ப காலத்தில் லண்ட னிலிருந்து  எழு­திய இராஜேஸ்வரி பாலசுப்பிர மணியத்தை குறிப்­பிட்­டுக்­காட்­டலாம். சில விடயங்களில் முத்துலிங்கம், கருணாகரமூர்த்தி ஆகியோரும் எழுதியுள்ளனர்.

புலம்பெயர்ந்த காலத்தில் நானும் பல நூல்களை எழுதினேன். எனது நூல் அவுஸ்திரேலிய  கலாசாரம், அந்நாட்டின் பிரச்சினைகளை மையப்படுத்தியதாக இருந்தது.



 நாய், பூனை போன்­ற மிருகங்கள் வாயிலாக சமூகத்துக்கு பல விடயங்களை கொண்டு வரும் முகமாக  பல நூல்களை எழுதினேன்.

ஒரு புத்­தகம் மாத்திரமே இலங்­கையை பற்றி எழு­தி­னேன்.

இலங்கை குறி­த்த பெரும்­பா­லான விட­யங்­களை நான் எழு­தி­யிரு­ந்­தாலும் 85 வீதமான விடயங்கள் புலம்பெயர்ந்தவர்கள் தொடர்பாகவே அமைந்துள்ளது.

நான் இலங்கையில் பிறந்தவன் 29 வருடங்கள் இலங்கையிலும் மூன்று வருடங்கள் இந்தியாவிலும் இருந்தேன்.

ஆகையால், முற்று முழுதாக என்னுடைய சிந்தனை தமி­ழா­கத்தான் இருந்­த­­து.  நான் ஓரளவு அரசியல் கட்டுரைகளை ஆங்கிலத்தில் எழுதினாலும்  இலக்கியங்களை என்னால் தொடர்ச்சியாக ஆங்கிலத்தில் எழுத முடியாத நிலைமையே ஏற்பட்டது.

 மேலும்  என் சார்ந்த செயல்­க­ளுக்கும்  என்­னோடு தொடர்புபட்­ட­வர்­க­ளுக்கும் ஒரு இணைப்பை பேண நான் தமிழை உப­யோ­கிக்­கி­றேன்.  

அவுஸ்­தி­ரே­லி­யாவிலுள்­ள இளம் தலைமுறையினர் தமிழ்மொழி மீது எவ்வாறான ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்?

மிகவும் ஆர்வமாக இருக்கின்றனர் என்று கூறிவிட முடியாது. தமிழ் மொழியை வீட்டில் வைத்து கற்றுக்கொடுத்து பேசினாலும் முழுமையாக அதனுள் அவர்கள் உள்வாங்கப்படவில்லை.

ஏனெனில் அந்நாட்டை பொறுத்த வரையில்  ஆங்கில மொழியிலேயே உரையாடுகின்றார்கள்.

ஆங்கிலக் கல்வியையே கற்கின்றனர். இந்நிலையில் தமிழ் மொழியை எந்தளவு ஆர்வத்துடன் கற்பார்கள் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
பொதுவாக தமிழ் மொழியில் பேசுவதை அவர்களால் புரிந்துகொள்ள முடியுமே தவிர முழுமையாக அதனை கற்றுக்கொள்ள முடியாது. எந்த மொழி இயல்பாக வருகின்றதோ அந்த மொழியில் பேச இடமளிப்பது தான் சிறந்தது. 



உங்களது வைத்திய துறை எவ்வாறு இலக்கியத்திற்கு துணை நின்றது?

வைத்தியத்துறையில் நான் பார்த்த சில விடயங்களை  என்னால் இலக்கியமாக்கக் கூடிய ஒரு தன்மை இருந்தது.

 இலக்­கிய  விருப்பம் இருந்த படியால் இவ்வாறான முயற்சிகளில் ஈடு­பட்­­டேன்.

இதற்கு முன்னர்   ஆங்கிலத்தில் அதிகமானோர் இவ்­வா­றான முயற்சி­களை செய்துள்ளனர். அதாவது மிருகங்களை இலக்கியத்துறையோடு சம்பந்தப்படுத்தி இலக்கியம் படைத்திருப்பதை காணலாம். அவ்வாறான ஒரு தன்மை தமிழில் இருக்கவில்லை.

அவுஸ்திரேலியாவை பொறுத்தவரை அங்குள்ள மக்கள்  மிருகங்களை தம் உறவாகவே  அதாவது தமது குடும்பத்தில் ஒரு அங்கத்தினராகவே பார்க்கும் நிலை காணப்­ப­டு­கின்­ற­து.

ஆதலால், அவர்களுக்கு நாய், பூனை என மிருகத்துடனான பிணைப்பு அதீதமான தோழமையோடு காணப்பட்டது.

இவையெல்லாம் அவர்களுடைய கலாசாரத்திற் குள்ளே ஒன்றித்துவிட்டது என்­பதால் பெரும்­பா­லான கதை­கள் மிரு­கங்­க­ளின் உணர்­வு­களை பற்றி பேசு­கி­றன.

 மனி­தர்­களின் குறை­பா­டு­களை நாய், பூனை மூல­மாக வெளிப்ப­டுத்­து­வதை ஒரு யுக்­தி­­யாக நான் கையாண்­­டேன். 

நீங்கள் எழுதிய புத்தகமொன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றது. இந்த புத்தகம் அவுஸ்­தி­ரே­லி­யர்­க­ளிடம்  எவ்வாறான வரவேற்பைப் பெறும்
என எதிர்பார்க்கின்றீர்கள்?

ஆம்! மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

ஆனால், இன்னும் வெளியிடப்படவில்லை. பொதுவாகவே அங்குள்ளவர் களுக்கு மிருகங்கள் தொடர்பான ஆர்வம் அதிகம் என்பதால், ஈடுபாட்டோடு வாசிப்பார்கள்.

மேலும் நான் பார்க்கும் கோணத்தில் அவர்கள் பார்ப்பார்களா இல்லையா என்பதை என்னால்  கூற இயலாது. நான் எழுதிய அதிகமான விடயங்கள் இணையத்தளங்களில் வெளி வந்துள்ளன.

அதை பெரும்பாலானவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

என்னு­டைய முதல் நாவல் ''வண்ணாத்திக்குளம்'' ஆங்கிலத்திலும் மொழி­பெ­யர்க்­க­ப்பட்­டி­ருக்­கி­ற­து. அத­னை­யெல்லாம் வாச­கர்கள் அதி­க­மா­கவே வாசித்­துள்­ள­னர்.
ஈழத்து இலக்கிய வளர்ச்சி பற்றி ஒரு எழு­த்தா­ள­ராக உங்­களின்  கருத்­து?
ஈழத்தில் உள்ள பெரும் பிரச்­சினை தான் ஈழத்தில் ஒரு­வரும் எழுதி ஜீவிக்க இய­லாது.

அத­ன­டிப்­ப­டையில் அவர்­க­ளு­டைய ஜீவ­னோ­பா­யத்­து­க்கு இல்லாத பட்­ச­த்தில் எழுத்து என்­பது ஒரு பொழுது போக்­கா­கத்­தா­ன் இ­ருக்கும். இவ்­வாறு பொழுதுபோக்­காக எழு­துப­­வ­ர்க­ள் எவ்வ­ளவு  ஈடு­பாட்­டோடு எழு­து­வார்கள் என்று கூற முடியாது.

 நான் எனது மகிழ்­ச்­சிக்­கா­க­த்தான் எழுது­கி­றேன். மேலும்  ஈழத்தில் இடம்­பெற்ற போர் ஈழத்து இலக்­கியத்துறையை பல வழிகளில்  பாதித்­துள்­ளது.

இலக்­கியம் இன வேறு­பா­டின்றி இருந்­தாலும் போரா­ல் முஸ்லிம் தமி­ழர்­­க­ளி­டையே ஒரு பிரிவு ஏற்­பட்­டது.



இது சிந்­தனை ரீதி­யாகவும்  உறவு ரீதி­யா­கவும் ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அது­மட்­­டு­மல்­லாமல் நன்­றாக எழு­தக் கூ­டி­யர்­வர்கள் சிலர் நாட்டை விட்டு வெளியேறி சென்­று­விட்­டனர். அதுவும் ஒரு பாதிப்பு.
அவுஸ்­திரே­லி­யா­வில் உள்ள தமி­ழ் எழுத்­தா­ளர்­களின் ஆர்வம் எவ்வாறு உள்­ள­து? அங்கு தமிழ் மொழிக்கென ஏதேனும்  சங்­கங்கள் இருக்கின்றனவா?
நான் அவுஸ்­தி­ரே­லிய கலை கலா­சார சங்­கத்தில் செய­லா­ள­ரா­க உள்­ளேன். டாக்டர் ஸ்ரீ காந்­த­ராஜா தலை­வ­ராக உள்­ளார். எங்களால் முடியுமானவரை  செய­லாற்­றிக்­கொண்­டி­ருக்­கி­றோம்.

ஆனால், நாம் ஒரு புத்­த­கத்­தை இங்கு  வெளியிட்­டாலும்  அவுஸ்­தி­ரே­­லி­யாவின் சிட்னி மெல்போன் போன்ற நக­ரங்­களில்  வாசிப்பு என்­பது குறை­வாக­த்தான் உள்­ள­து.
தற்போ­து எழுத்­தா­­ளர்க­ளி­டையே போட்டி அதி­க­மாக  உள்­ளது. அதனை பற்­றி?
இப்­பி­ரச்­சி­னை தமி­ழ் நாட்­டிலும்  இலங்­கை­யிலும்  உள்­ள­து.

இலங்­கையில் தனித்­தனி தீவு­­க­ள் போன்­­ற நவக்­கி­ர­கங்­களாக எழுத்­தா­ளர்­கள் உள்ளனர்.  ஒரு எழுத்­தா­ள­ரு­டைய புத்­த­கத்தை படித்­து­விட்டு அதன் அனு­கூலங்­க­ளை கூறு­வது குறை­வாக உள்­ளது.

இதில் பெரும்­பா­லா­ன­வர்கள் ஒரு புத்­­தகம் நன்­றாக இருந்­தாலும் கூட, எல்­லோ­ருக்கும் 100  வீதமாக இருக்­கப்­போ­வ­தில்லை.

அத்­தோடு  எல்லோருக்கும் பிடித்­ததாக எல்லாம் முழு­மையாய் இருக்­கு­மென கூற­மு­டி­யா­து. ஒரு புத்­தகம் பலரின் கைகளில் சேர்ந்த  பின்பு அதனை விமர்­சிக்­க­லாம்.

அது மாத்திரமன்றி குறிப்பிட்ட புத்தகத்தில் உள்ள விடயங்களை மாத்திரம் விமர்சிக்கலாமே தவிர அதற்கு அப்பாற்பட்ட விடயத்தை விமர்சிப்பதைத் தவிர்ப்பது சிறந்தது.

இது காலங்­கா­ல­மாக வலி­யு­றுத்­த­ப்­பட்­டு­ வந்தாலும் நடைமுறைப்படுத்தப் படுவதில்லை.

 பிழை­யான விமர்­ச­னங்கள் மூலம் புத்­த­கத்­திற்­கான வர­வேற்பு முற்­றாக தடைப்­பட்டுவிடுகிறது.  இலங்­கையில் இவ்வாறானதொரு நிலைமையே தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. 
உங்களை நீங்கள் வாசிக்கப்படுப வராக எவ்வாறு மாற்றிக் கொண்டீர்கள்?
நான் தமி­­ழ் புத்­த­­கங்­க­ளை வாசித்ததை விட  ஆங்­கில புத்­த­கங்­களிலி­ருந்­தே இலக்­கிய அறி­வி­னை பெற்றுக்கொண்டேன்.

உண்­­மையை கூறு­வ­தா­னா­ல் நான் ஆழ­மாக தமி­ழ் கற்­ற­வ­னல்ல. நான் கற்­றது விஞ்ஞானம்.  அதனால் சாதா­ர­ண­மான வார்த்­தைகள் தான் என்­னி­ட­மி­ருந்து வெளிப்ப­டும். அதனால் இலகு தமி­ழில் எழு­துவேன்.

அந்த காலத்தில் ஆறு­மு­க­­நா­வலர் போன்­ற­வர்­களின் இறுக்­க­மா­ன ஆழ­மா­ன தமி­ழ் என்னிடம் கிடை­யா­து. அ­துவும் ஒரு கார­ண­மாக இருக்­க­லாம் இல­கு­வாக வாசிக்­கப்ப­டுவதற்­கு.

தற்­போது எகிப்­திய பயண கட்­டுரை ஒன்­றை இவ்­வ­­ரு­டத்­­துக்குள் வெளியிட ஆயத்­த­மாகிக்­கொண்­டி­ருக்­கி­றோம்.

இவ்­வாறு தமது இலக்­கி­யத்­து­றை மற்றும் மரு­த்துவத்­துறை குறித்த அனு­பங்­களை பகி­ர்ந்து கொண்ட எழுத்­தாளர் அவுஸ்­தி­­ரே­லிய நடே­­ச­னுக்கு  வீர­­கே­சரி சங்கமம் சார்பில் எமது நன்­றி­யை தெரி­வித்­துக்­கொண்­டோம்.

நேர்­கா­ணல்: எஸ்.ஜீவா  

நன்றி http://kalaikesari.lk/