மரண அறிவித்தல்

.
              எழுத்தாளர் திருமதி.அருணகிரி விஜயராணி ( அருண் விஜயராணி )
                             

அன்னையின் மடியில் 16.03.1954 ஆண்டவன் மடியில் 13.12.2015
யாழ்ப்பானம் உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா மெல்பேணை வசிப்பிடமாகவும் கொண்ட எழுத்தாளர் அருண் விஜயராணி என்று அறியப்பட்ட அருணகிரி - விஜயராணி இன்று 13.12.2015 மெல்பேணில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற கே.ரி.செல்லத்துரை - சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ் சென்ற நாகலிங்கம் - நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமளும் ஆவார்.
அவர் நாகலிங்கம் அருணகிரியின் அன்பு மனைவியும், ஆதித்தன், அஜந்தன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், கலைச்செல்வியின் அன்பு மாமியாரும் ஆலனின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.
அன்னார் லண்டனைச் சேர்ந்த இந்திராணி, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரவீந்திரன், செல்வராணி, புவீந்திரன், சக்திராணி, விக்கினேஸ்வரன் (தம்பி) ஆகியோரின் அன்புச் சகோதரியும், லண்டனைச் சேர்ந்த நித்தியானந்தன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த நளாயினி,(ஜெசி), இராஜரட்ணம், தர்மினி, அரசரட்ணம், சிவராஜதேவி மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஜெயானந்தராஜா, பஞ்சலிங்கம் ஆகியோரின் மைத்துனியும், இலங்கையைச் சேர்ந்த நாகபஞ்சேஸ்வரி மற்றும் ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோரின் அண்ணியும் ஆவார்.

 
ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்வருமாறு 


18 12 2015 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அன்னாரின் பூதவுடல் 513 Greensborough road, Greensborough வில் அமைந்துள்ள Le Pine மன்றில் மலரஞ்சலிக்காக வைக்கப்படும் 

20 12 2015 ஞாயிற்றுக்கிழமை மதியம்  12  மணிக்கு 1187 Sydney Road  Fawkner இல் அமைந்துள்ள   Fawkner  Memorial Park இல் தகனக்கிரிகைகள்  நடைபெறும். 

உற்றார் உறவினர் நண்பர்கள் தயவுசெய்து இவ் அறிவித்தலை ஏற்றுக்கொள்ளவும். 

தொடர்புகளுக்கு -
அருணகிரி - + 61 416 255 363
ஆதித்தன் - + 61 432 714 719
ஆரூரன் - + 61 423 799 802