இலங்கைச் செய்திகள்


மழை காரணமாக கடும் வாகன நெரிசல்

சுன்­னாகம் பகு­தி­யில் நிலத்­தடி நீர் பெற்­றோ­லியம்இபார உலோ­கங்­க­ளினால் மாச­டைந்­த­மைக்கு சான்­றுகள் இல்­லை 

பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி

பொலிஸாரின் உதவியுடன் காணி ஆக்கிரமிப்பு :  மட்டு.வில்  மறியல் போராட்டம்

 117 நீதி­ப­தி­க­ளுக்கு ஜன­வரி முதல் இட­மாற்­றம்

கொழும்பில் மழையால் ஒருவர் பலி ; இளைஞரைக் காணவில்லை
வாஸ் உள்ளிட்ட அறுவர் மனுத் தாக்கல்
கோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம் 


மழை காரணமாக கடும் வாகன நெரிசல்



08/12/2015 தொடரும் அசாதாரண காலநிலை காரணமாக நாடலாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக  கொழும்பு - தும்முல்ல சந்தி பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

கடும் மழை காரணமாக சில வீதிகளில் வெள்ள நீர் தேங்கியுள்ளமையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.  நன்றி வீரகேசரி 





சுன்­னாகம் பகு­தி­யில் நிலத்­தடி நீர் பெற்­றோ­லியம்இபார உலோ­கங்­க­ளினால் மாச­டைந்­த­மைக்கு சான்­றுகள் இல்­லை 

08/12/2015 சுன்­னாகம் பகு­தியில் நிலத்­தடி நீர் பெற்­றோ­லிய பொருட்­க­ளாலோ அல்­லது பார உலோ­கங்­க­ளாலோ மாச­டைந்­துள்­ளன என்­ப­தற்­கான சான்­றுகள் எதுவும் இல்லை. எனினும் இந்த ஆய்வு சுன்­னாகம் முழு­வ­து­முள்ள நிலத்­தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்­ட­வட்­ட­மாகக் கூற­மு­டி­யாது என வட­மா­காண சபையால் சுன்­னாகம் நிலத்­தடி நீர் ஆய்வு தொடர்­பாக நிய­மிக்­கப்­பட்ட நிபுணர் குழுவின் அறிக்­கையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சுன்­னாகம் நிலத்­தடி நீரில் எண்ணெய் கலந்­துள்­ளமை தொடர்பில் வட­மா­காண சபையால் நிபு­ணர்­குழு நிய­மிக்­கப்­பட்டு அந்த நிபு­ணர்­கு­ழு­வினால் சுன்­னாகம் நிலத்­தடி நீர் ஆய்­வுக்­குட்­ப­டுத்தி அதன் அறிக்கை யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் நேற்­றைய தினம் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரிடம் கைய­ளிக்­கப்­பட்­டது.
கைய­ளிக்­கப்­பட்ட அறிக்­கை­யிலே மேற்­கண்ட விடயம் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. குறித்த அறிக்­கையில் மேலும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது,
சுன்­னாகம் பகு­தியில் இயங்கும் மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளான நொதர்ன் பவர், உதுரு ஜனனி என்­பவை கார­ண­மாக நிலத்­த­டிநீர், எண்ணெய் கலப்­பினால் மாச­டைந்­தி­ருக்­கின்­றதா என்­பதை அறி­வ­தற்­காக ஒரு ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.
குறிப்­பிட்ட பகு­தி­களை நேர­டி­யா­கச்­சென்று பார்­வை­யிட்டு சம்­பந்­தப்­பட்ட மக்கள் சமூக நீதிக்­கு­ழுக்கள் உட்­பட பல தரப்­பி­ன­ருடன் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்ட பின்னர் கிர­ம­மாக செய்­வ­தற்­கு­ரிய ஆய்­வுகள் திட்­ட­மி­டப்­பட்­டன.
இத­னி­டையே பொது மக்­க­ளினால் தொட­ரப்­பட்ட வழக்­கை­ய­டுத்து நீதி­மன்ற தடை­யுத்­த­ரவின் படி நொதர்ன் பவர் மின் உற்­பத்தி நிலையம் மின் உற்­பத்தி நட­வ­டிக்­கை­களை இடை­நி­றுத்­தி­யது.
மின் உற்­பத்தி நிலை­யங்­களை மைய­மாகக் கொண்டு 200 மீற்றர் இடை­வெ­ளியில் ஒன்­றுக்கு வெ ளியே இன்­னொன்­றாக அடுத்­த­டுத்து வரை­யப்­பட்ட2 கிலோ மீற்றர் வரை­யி­லான வட்­டங்­களை தொடர்­பு­ப­டுத்தி எட்­டுத்­தி­சை­க­ளிலும் நேர்­கோ­டாக வரை­யப்­பட்ட ஆரை­களில் வட்ட _ ஆரை சந்­தி­களில் கிணற்று நீர் மாதி­ரிகள் ஆய்­வு­கூட சோத­னை­க­ளுக்­காக எடுக்­கப்­பட்­டன. மேலும் மின்­பி­றப்­பாக்கி நிலை­யங்­களை அண்­மித்த பகு­தி­களில் சந்­தே­கிக்­கப்­பட்ட ஏழு இடங்­களில் மண் மாதி­ரிகள் ஆரா­யப்­பட்­டன.
இம்­மா­தி­ரி­களில் கொழுப்புஇ எண்ணெய்இ திரள்­கொ­ழுப்பு (கிறீஸ்) ( FOG (Fat, Oil, Grease) முத­லிய பதார்த்­தங்கள் இருப்­பதை அறி­வ­தற்­காக யாழ்.பல்­க­லைக்­க­ழ­கத்­திலும் ஐ.ரி.ஐ. (ITI) நிறு­வ­னத்­திலும் ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. மேலும் பார உலோ­கங்கள் மற்றும் நீரின் தரத்தை வெளிப்­ப­டுத்தும் அள­வீ­டு­களும் மேற்­கொள்­ளப்­பட்­டன.
இதற்­காக நீரின் மேல் பகு­தி­க­ளிலும் அடிப்­ப­கு­தி­யிலும் உள்ள பென்சீன், தொலியின், ஈதைல் பென்சீன் சைலீன் (BTEX பீரெக்ஸ்) இர­சா­யன பதார்த்­தங்­களைக் கண்­ட­றி­வ­தற்­காக ப்றொக் _ 4000 (FROG _ 4000) எனும் கரு­வியும் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டது. நீரின் மாதி­ரிகள் முன்பு குறிப்­பிட்ட வட்ட_ ஆரை சந்­தி­களில் இருக்கும் கிண­று­க­ளி­லி­ருந்தே எடுக்­கப்­பட்­டன.
மேலும் தேசிய கட்­ட­ட­ஆய்வு நிறு­வ­னத்தின் (NBRO) உத­வி­யுடன் நிலக்கீழ் ஊடு­ருவும் கதிர் வீச்சு (GPR -_ Ground Penetrating Radar) ஆய்­வுகள் மூலம் நிலப்­ப­ரப்பின் கீழ் மட்­டங்­களில் எண்ணெய்க் கலப்பு சாத்­தி­யங்­களைக் கண்­ட­றியும் புவியின் பௌதீகத் தன்மை குறித்த ஆய்­வுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன.
மேலும் நிலத்­திலும் நீரிலும் கண்­ட­றி­யப்­பட்ட எண்ணெய் தொகு­தி­க­ளுக்கும் மின் உற்­பத்தி நிலை­யங்­களில் பாவிக்­கப்­படும் உராய்வு எண்ணெய், எரி­பொருள் மற்றும் வெளி­யேற்­றப்­படும் கழிவு எண்ணெய் முத­லி­ய­வற்­றுக்கும் இடை­யே­யான தொடர்பைக் கண்­ட­றி­வ­தற்­காக ஐ.ரி.ஐ. (ITI)  நிறு­வ­னத்தால் வாயு நிறப்­ப­கு­வியல் (GC (GAS Chromatography)  ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.
ஆரம்ப பரி­சோ­த­னை­களில் மிக அதி­க­ளவில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) காணப்­பட்ட பன்­னி­ரண்டு கிண­று­களில் நீர்­மா­தி­ரிகள் அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்கும் இலங்­கை­யர்­களால் எடுத்துச் செல்­லப்­பட்டு மொத்த ஐதரோ காபன்கள் அடங்­கிய நீரின் பல்­வேறு தன்­மைகள் ஆரா­யப்­பட்­டன.
ஐ.ரி.ஐ. (ITI) நிறு­வன முடி­வு­க­ளின்­படி ஆய்வு செய்­யப்­பட்ட 82 மாதி­ரி­களில் 13 மாதி­ரி­களில் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) அளவு ஆகக்­கூ­டிய அனு­ம­திக்­கப்­பட்ட அள­வான 2 மி.கி.ஃ லீட்டர் ஐ விட அதி­க­மாக காணப்­பட்­டது.
ஆனால் யாழ். பல்­க­லைக்­க­ழக மற்றும் ஐ.ரி.ஐ. நிறு­வ­னங்­களால் ஆய்வு செய்­யப்­பட்ட மேற்­கு­றிப்­பிட்ட கிணற்று நீர் மாதி­ரி­களை ஆய்வு செய்த அவுஸ்தி­ரே­லிய அமைப்பின் ஆய்­வு­க­ளின்­படி எந்த மாதி­ரி­க­ளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG)கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. யாழ். குடாவின் தென்­ம­ராட்சி, வட­ம­ராட்சி பகு­தி­களில் எடுக்­கப்­பட்ட நீர் மாதி­ரி­க­ளிலும் கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) நியம அள­விலும் அதி­க­மாகக் காணப்­பட்­ட­தாக யாழ்ப்­பாண ஆய்வில் தெரி­ய­வந்­தது குறிப்­பி­டத்­தக்­கது. இவ் கொழுப்பு, எண்­ணெய்­திரள் கொழுப்பு(கிறீஸ்) (FOG) பரி­சோ­த­னை­களில் அவுஸ்­தி­ரே­லிய ஆய்­வு­முறை மிகவும் துல்­லி­ய­மா­னது.
எந்­த­வொரு மாதி­ரி­யிலும் பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன், சைலீன் (BTEX) அனு­ம­திக்­கப்­பட்ட ஆகக்­கூ­டிய அள­விலும் பார்க்க அதி­க­மாக காணப்­ப­ட­வில்லை. எனவே எந்த ஒரு கிணற்று நீர் மாதி­ரி­யிலும் தீங்கு விளை­விக்­கக்­கூ­டிய அளவில் பெற்­றோ­லிய பொருட்கள் இல்லை என்­பது புல­னா­கி­றது. அவுஸ்தி­ரே­லிய அறிக்­கையின் படி எந்த ஒரு நீர் மாதி­ரி­யிலும் பெற்­றோ­லிய மொத்த ஐத­ரோ­கா­பன்கள் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. மேற்­கூ­றப்­பட்ட பரி­சோ­தனை முடி­வு­களில் இருந்து நீர் மாதி­ரி­களில் காணப்­பட்ட கொழுப்பு, எண்ணெய், திரள் கொழுப்பு (கிறீஸ்) (FOG) ஆனது பெற்­றோ­லிய பொருட்­க­ளுடன் சம்­பந்­த­மில்­லாத வேறு மூலங்­களில் இருந்து வந்­தி­ருக்­கலாம் என்­பது தெளி­வா­கின்­றது.
பார உலோ­கங்­களில் நாகம் மட்­டுமே அதுவும் அனு­ம­திக்­கப்­பட்ட அள­விலும் பார்க்க மிகவும் குறைந்த அள­வி­லேயே ஒரே ஒரு நீர் மாதி­ரியில் கண்­ட­றி­யப்­பட்­டது. ஐம்­பது வீத­மான நீர் மாதி­ரி­களில் நைத்­தி­ரேற்­றுகள் அனு­ம­திக்கக் கூடிய அள­வான 50 மி.கி.ஃ லீற்றர் அளவை விட அதி­க­மாக காணப்­பட்­டது. அவுஸ்தி­ரே­லிய ஆய்­வு­களின் படி 100மூ நீர் மாதி­ரி­க­ளிலும் கொலிபோம்இ ஈ.கோலை நுண்­ணு­யிர்கள் காணப்­பட்­டன. இது எல்லா கிணற்று நீரிலும் மலக் கழி­வுகள் கலந்­தி­ருக்­க­லா­மென குறிக்­கின்­றது.
நீரின் வன்மைத் தன்­மை­யா­னது 100% மான கிணற்று நீர் மாதி­ரி­க­ளிலும் நியம அளவை விட அதி­க­ரித்துக் காணப்­ப­டு­கின்­றது. குடா­நாட்டு புவி­யியல் தன்­மையில் சுண்­ணாம்புப் பாறைகள் செறிந்து காணப்­ப­டு­வதால் இம்­மு­டி­வுகள் ஆச்­ச­ரி­யப்­ப­டக்­கூ­டி­ய­தொன்­றல்ல.
நிலக்கீழ் ஊடு­ருவும் கதிர்­வீச்சு (GPR) ஆய்வின் படி நிலத்தின் கீழ் பெற்­றோ­லிய மாசுகள் அண்­மைக்­கா­லங்­களில் ஏற்­பட்­ட­தற்­கான சாத்­தியம் குறை­வாக இருப்­ப­தா­கவே காட்­டு­கின்­றது. எனினும் விரி­வான ஆய்வு தேவை என பரிந்­து­ரைக்­கப்­ப­டு­கின்­றது.
நொதர்ன் பவர் மின்­நி­லை­யத்தை அண்­மித்த நில மேற்­ப­ரப்பில் கழிவு நீர் எண்ணெய் விடப்­பட்­டதால் அவ்­வி­டத்தில் நிலம் எண்­ணெ­யினால் மாச­டை­வதை வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) ஆய்­வு­களும் சுற்­றாடல் கணக்­காய்­வு­களும் உறுதி செய்­கின்­றன. சில இடங்­களில் மண் மாதி­ரி­களில் காணப்­பட்ட எண்­ணெயின் நிறப்­ப­கு­வியல்  (GC) வரை­வுகளும் மின்­பி­றப்­பாக்­கியில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட எண்ணெய் மற்றும் உராய்வு எண்­ணெய்­களின் வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) வரைவு­களும் ஒத்­தி­ருக்­கின்­றன. சந்­தே­கிக்­கப்­பட்ட ஒயில் குளம், எண்ணெய் சேமிப்பு தாங்­கிகள் முத­லான வேறு இடங்­க­ளிலும் 1- 2மீற்றர் வரை ஆழத்தில் நிலத்தில் எண்ணெய் கலந்து காணப்­ப­டு­கின்­றது. எனினும் ஆழ­மான பகு­தி­களில் காணப்­பட்ட எண்­ணெய்க்கும் தற்­போ­தைய மின்­பி­றப்­பாக்­கி­களில் இருந்து வெளிப்­படும் எரி­பொருள் எண்ணெய், உராய்வு காப்பு எண்­ணெய்க்கும் இடையே ஒற்­றுமை காணப்­ப­ட­வில்லை.
நில மட்­டத்­தி­லி­ருந்து 30 செ.மீ கீழ் மாச­டைந்­த­தாக கரு­தப்­பட்ட பகு­தி­களில் எடுத்த மண் மாதி­ரி­க­ளி­னதும் 2 மி.கி/ லீற்றர் அள­வுக்கு அதி­க­மாக எண்ணெய் இருந்து கிணற்று நீர் மாதி­ரி­க­ளி­னதும், ஜீ.சி. (G.C maps) வரை­வுகளில் 24.5 நிமிட சோதனை நேரத்தில் ஒத்த உயர்­வினை காட்­டின. இது இரு இடங்­க­ளிலும் ஒரே பதார்த்தம் இருப்­ப­தையோ அல்­லது வெவ்­வேறு மூலங்­களில் இருந்து அதே பதார்த்தம் உரு­வா­கி­யி­ருப்­ப­தையோ குறிக்­கலாம்.
எனினும் இவ்­வு­யர்வு (Peak) மின் பிறப்­பாக்­கி­களில் இருந்து வெளி­யே­றிய எரி­பொருள், உராய்­வுக்­காப்பு எண்ணெய், கழிவு எண்ணெய் என்­ப­வற்றை ஒத்து காணப்­ப­ட­வில்லை.
இவற்­றுக்கு உதுரு ஜன­னியை அண்­மித்த வெளி­க­ளிலும் கிணற்று நீரிலும் காணப்­பட்ட காபன் துகள்கள் ஒரு கார­ணி­யாக இருக்­கலாம். இவை மின்­பி­றப்­பாக்­கி­களின் புகை­யுடன் வெளி­வ­ரு­கின்ற நோர்வே நிபு­ணர்­களின் அறிக்­கையில், கிணற்று நீர் பரப்­புக்­களில் மிதந்த மினு­மி­னுப்­பான படலம் சுண்­ணாம்பு சார்ந்­தது என கூறப்­ப­டு­கின்­றது.
சந்­தே­கப்­பட்ட இடங்­க­ளி­லி­ருந்து எடுத்த மண் மாதி­ரி­களில் எண்ணெய் உயர்ந்த அளவில் காணப்­பட்­ட­தோடு மின்­பி­றப்­பாக்­கி­களின் எண்ணெய் மாதி­ரி­க­ளுடன் ஒத்­தி­ருந்­தது. எனினும் இவற்றில் பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன், சைலீன் (BTEX)  மிகக் குறைந்த அள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. எனவே, ஆய்வுக் கட்­டு­ரை­களில் குறிப்­பிட்­டி­ருந்­த­படி பென்சீன், தொலியின், ஈதைல்­பென்சீன் சைலீன் பீடெக்ஸ் (BTEX)  ஆனது எளிதில் ஆவி­யா­கு­மென்றோ எமது கால­நி­லை­களில் வெகு­வாக சிதை­விற்­குட்­படும் என்றோ ஏற்­க­வேண்­டி­யுள்­ளது.
இதி­லி­ருந்து பீடெக்ஸ் (BTEX) மண்­ணூ­டாக நிலத்­தடி நீரை சென்­ற­டையும் வாய்ப்­புக்கள் அரிது என்­பது தெளி­வா­கின்­றது. வாயு நிறப்­ப­கு­வியல்  (GC) மொத்த ஐதரோ கார்­பன்கள், பார உலோ­கங்கள், பீடெக்ஸ் அனைத்தும் இணைந்த ஆய்­வா­னதே நிலத்­திலும் நீரிலும் பெற்­றோ­லிய மாசை நிர்­ண­யிப்­ப­தற்கு பொருத்­த­மா­ன­தெனக் கூறலாம்.
இவ்­வாய்­வுகள் சுன்­னாகம் பகு­தியில் கிணற்று நீர் பெற்றோலிய பொருட்களாலோ அல்லது பார உலோகங்களாலோ மாசடைந்துள்ளன என்பதற்கான சான்றுகள் இல்லை என்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. எனினும் சுன்னாகம் நிலத்தடி நீரின் ஓட்டம் வேறுபட்ட தன்மைகள், பரப்பளவு என்பவற்றைக் கருத்தில் எடுக்கும் போது இந்த ஆய்வு சுன்னாகம் முழு நிலத்தடி நீரிற்கும் பொருந்தும் என்று திட்டவட்டமாகக் கூறமுடியாது.
முழுக்குடாநாட்டிற்கும் நிலத்தடி நீர் நிலைகள் குறித்த ஒரு முழுமையான விரிவான ஆய்வு திட்டமிடப்பட வேண்டும் என்பது முன்மொழியப்படுகின்றது. தொடர்ச்சியான நீர் ஆய்வுகள் செய்யக்கூடிய ஆய்வு நிலையங்கள் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவேண்டியது அவசியம் என்று பரிந்துரைக்கப்படுகின்றது. நிலம், நீர் மாசடைவதை தவிர்க்கும் வகையில் பொது மக்களினதும் அரசஇ தனியார் நிறுவனங்களினதும் செயற்பாடுகள் இருக்கவேண்டியது முறைமையான நீர்முகாமைத்துவத்திற்கு அவசியமாகும். விரைந்து வருகின்ற காலநிலை மாற்றங்களுக்கும் கடல் மட்ட உயர்விற்கும் முகம் கொடுக்கக் கூடிய விதமாக இன்னும் சிறப்பான நீர் முகாமைத்துவம் இன்றைய அவசியமாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி வீரகேசரி 







பெண்கள் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை நிறுத்துமாறு கோரி ஆர்ப்பாட்ட பேரணி
07/12/2015 பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்றைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு நகரில் இன்று பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் என்பன இடம் பெற்றன. வீதி நாடகம், விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டுதல் என்பனவும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.என்.எச்.நிறுவனத்தின் அனுசரணையுடன் மெதடிஸ்த திருச்சபை புகலிடம் ஏற்பாடு செய்த இவ் ஆர்பாட்டம் மட்டக்களப்பு கோட்டைமுனையிலிருந்து ஆரம்பமாகி காந்தி பூங்காவில் நிறைவடைந்தது.
அங்கு வீதி நாடகமும் இடம்பெற்றன. அத்துடன் வன்முறையற்ற சமுகத்தை உருவாக்க ஒன்றிணைவோம் என்பதை அடையாளப்படுத்தி கைகளில் பட்டிகள் அணிவிக்கப்பட்டதுடன் செம்மஞ்சள்நிற பலூன்களும் பறக்கவிடப்பட்டன. நன்றி வீரகேசரி 





பொலிஸாரின் உதவியுடன் காணி ஆக்கிரமிப்பு :  மட்டு.வில்  மறியல் போராட்டம்


09/12/2015 மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தர்மபுரம் கிராமத்தில் காணிகள் திட்டமிட்டு பொலிசாரின் உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டித்து பிரதேச வாசிகள் இன்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட செயலக பிரதான வாயிலின் முன்னால் மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த கிராமத்திலிருந்து பஸ் வண்டி மூலம் மாவட்ட செயலகத்திற்கு வந்த கிராம வாசிகளை பொலிஸார் மாவட்ட செயலகத்தினுள் செல்லவிடாது பொலிஸார் தடுத்தபோது கதவிற்கு வெளியிலிருந்து அரசாங்க அதிபரை சந்திக்க சந்தர்ப்பம் தருமாறு கோரி போராட்டம் நடாத்தினர்.
இருப்பினும் பொலிஸார் உள்ளே செல்ல அனுமதி மறுத்தமையால் வெளியில் நின்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொலிசாரின் உதவியுடன் தங்களது காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாகவும் அவற்றை தடுத்து நிறுத்துமாறு கோரியுமே இப்போராட்டம் நடாத்தப்படுவதாக ஆர்ப்பாட்டகாரர்கள் தெரிவித்தனர்.
பெரும் பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நன்றி வீரகேசரி 








117 நீதி­ப­தி­க­ளுக்கு ஜன­வரி முதல் இட­மாற்­றம்


09/12/2015 சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு ஊடாக வழங்­கப்­பட்­டுள்­ளது.
இவ்­வாறு இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ள­வர்­களில் முக்­கி­ய­மான பல வழக்­குகள் தொடர்பில் விசா­ர­ணை­களை நடத்­து­வோரும் உள்­ள­டங்­கு­கின்­றனர்.
நீதிச் சேவை ஆணைக்குழு வழங்­கி­யுள்ள குறித்த இட­மாற்­றங்­களின் பிர­காரம்,
தற்­போது மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதி­ப­தி­யாக கட­மை­யாற்றும் டி.எல்.ஏ.மனாப் வவு­னியா மாவட்ட நீதி­ப­தி­யாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார். கல்­முனை மாவட்ட நீதிவான் எம்.பி.மொஹிதீன் மட்­டக்­க­ளப்பு மாவட்ட நீதி­வா­னாக இட­மாற்­றப்­பட்­டுள்ளார். மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி அப்­துல்லாஹ் திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­வா­னா­கவும், பருத்தித் துறை மாவட்ட நீதிவான் கணே­ச­ராஜா மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்றப்பட்­டுள்­ளனர்.
அத்­து­டன் ­வ­வு­னியா மாவட்ட நீதி­ப­திவீ.ராம­க­மலன் கல்­முனை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும், திரு­கோ­ண­மலை மாவட்ட நீதி­பதி டி.ஜே.பிர­பா­கரன் கிளி­நொச்சி மாவட்ட நீதி­ப­தி­யா­கவும், கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதிவான் ஜூட்சன் மல்­லாகம் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றின் மேல­திக நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் ஊர்­கா­வற்­றுறை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் வாழைச்­சேனை மாவட்ட நீதி­பதி எம்.ஐ.எம்.றிஸ்வி மட்­டக்­க­ளப்பு நீதிவான் நீதி­மன்றின் மேல­திக நீதி­வா­னா­கவும், மல்­லாகம் மாவட்ட நீதி­பதி சதீஷ்­தரன் யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும், யாழ். நீதிவான் நீதி­மன்ற நீதிவான் பி. சிவ­குமார் பருத்தித் துறை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.
அத்­து­டன் ­மல்­லாகம் மேல­திக மாவட்ட நீதி­ப­தி­யாக உள்ள திரு­மதி ஜே.கருப்­பையா யாழ். சிறுவர் நீதி­மன்றின் நீதி­ப­தி­யா­கவும் பொத்­துவில் மாவட்ட நீதி­பதி ஐ.பி.ரஸாக் கல்­முனை நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும் ஊர்­கா­வற்­றுறை மாவட்ட நீதி­பதி எஸ்.லெனின்குமார் வவு­னியா மேல­திக நீதிவான் நீதி­மன்ற நீதி­ப­தி­யா­கவும் மாற்­றப்­பட்டுள்­ளனர்.
அத்­துடன் வவு­னியா மேல­திக மாவட்ட நீதி­பதி ஏ.சி.ரிஸ்வான் வாழைச்சேனை மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­பதி எச்.எம்.எம்.பசீல் சம்­மாந்­து­றை நீதிவான் நீதி­மன்ற நீதி­வா­னா­கவும் கிளி­நொச்சி மாவட்ட நீதி­பதி எம்.ஐ.நஹாப்தீன் பொத்­துவில் மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் நீதிவான் பயிற்சிக் நிறுவ­னத்தின் நீதி­பதி என். கந்­த­சாமி அக்­க­ரைப்­பற்று மாவட்ட நீதி­ப­தி­யா­கவும் இட­மாற்­றப்­பட்­டுள்­ளனர்.
இவர்­க­ளுக்கு மேல­தி­க­மாக 5 மாணவர் கடத்தல், வஸீம் தாஜுதீன் கொலை விவ­காரம் மற்றும் நிதிக் குற்­றங்கள் தொடர்­பி­லான பல்­வேறு முக்­கிய வழக்­கு­களை விசா­ரணை செய்யும் நீதி­ப­தி­க­ளுக்கும் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது.
அதன்­படி கொழும்பு மேல­திக நீதிவான் நிரோஷா பெர்னாண்டோ கொழும்பு பிர­தான நீதி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எனினும் தற்­போ­தைய கொழும்பு பிர­தான நீதிவான் கிஹான் பிலப்­பிட்­டிய கொழும்பு மேல­திக மாவட்ட நீதி­வா­னாக நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். அத்­துடன் கொழும்பு மேல­திக நீதிவான் ஏ.டி.என்.பெர்னாண்டோ நீர்கொழும்பு மாவட்ட நீதிவானாகவும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் மாத்தறை மாவட்ட நீதிபதியாகவும் கோட்டை மேலதிக நீதிவான் பிரியந்த லியனகே பாணந்துறை நீதிவானாகவும் இடமாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றங்கள் யாவும் ஜனவரி மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 நன்றி வீரகேசரி 








கொழும்பில் மழையால் ஒருவர் பலி ; இளைஞரைக் காணவில்லை

10/12/2015 சீரற்ற காலநிலை கார­ண­மாக கொழும்பு மற்றும் அதனை அண்­டிய பகு­தி­களில் கடு­மை­யான மழை பெய்­து­வரும் நிலையில், கிராண்ட்பாஸ் பகு­தியில் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கடும் மழை­யினால் கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவின் மாதம்­பிட்­டி பகு­தியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்து பெண்­ணொ­ருவர் உயி­ரி­ழந்­துள்ளார். அத்­துடன் கிராண்ட்பாஸ் கெத்­தா­ராம விளை­யாட்டு மைதானப் பகு­தியில் உள்ள மெல்­வத்த கால்­வாயில் அடித்துச் செல்­லப்­பட்டு 19 வய­தான இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று முன்தினம் பிற்­பகல் மூன்று மணி முதல் கொழும்பில் கடும் மழை பெய்­தது. இதன் போது மாதம்­பிட்­டி பகு­தியில் வீடொன்றின் மதில் உடைந்து வீழ்ந்­துள்­ளது. இதன்­போது இடி­பா­டு­க­ளுக்குள் சிக்­குண்ட 57 வய­தான பெண்­ணொ­ருவர் உட­ன­டி­யாக கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ளார். எனினும் அனு­லா­வதி எனப்­படும் குறித்த பெண் வைத்­தி­ய­சா­லையில் வைத்து உயி­ரி­ழந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
இத­னி­டையே கிராண்ட்பாஸ் கெத்­தா­ராம விளை­யாட்டு மைதா­னத்­துக்கு அருகில் மெல்­வத்த கால்­வாயில் விழுந்த பந்­தினை எடுக்க முயற்­சித்த 19 வய­தான இளைஞர் ஒரு­வரும் கால்வாயில் அடித்துச் செல்­லப்­பட்டு காணாமல் போயுள்ளார். சம்பவம் இடம்­பெறும் போது மழை­யுடன் கூடிய காலநிலை இருந்­துள்­ள­துடன் கால்­வாயின் நீர் மட்­டமும் அதி­க­ரித்து காணப்­பட்­டுள்­ளது. மொஹம்மட் பதுர்தீன் மொஹம்மட் அபீல்ட் என்ற இளை­ஞரே இவ்­வாறு காணாமல் போயுள்­ள­தா­கவும் நேற்று மாலை 5.00 மணி­யாகும் போதும் அவர் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
காணாமல் போனவரைத் தேடி பொலிஸ் மற்றும் கடற்படையின் சுழியோடிகள் தேடுதல்களை நடத்தி வருகின்றனர்.     நன்றி வீரகேசரி 









வாஸ் உள்ளிட்ட அறுவர் மனுத் தாக்கல்

10/12/2015 வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவரும் தமக்கு வழங்கப்பட்ட மரண தண்டனைக்கு எதிராக இன்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 27 ஆம் திகதி வர்த்தகர் முஹமட் சியாம் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன மற்றும் அவரது புதல்வர் உள்ளிட்ட அறுவருக்கு, கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 






கோயில், மதுபான சாலையில் திருட்டு : மன்னாரில் சம்பவம் 
10/12/2015 தலைமன்னார் பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பேசாலையில் கோவில், மதுபானசாலை ஆகிய இடங்களில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 

குறித்த கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பாக தலைமன்னார் பொலிசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேசாலையிலுள்ள சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானக் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் கோயில் மூலஸ்தானத்தில் இருந்த முருகன், வள்ளி, தெய்வானை ஆகிய சிலைகளில் இருந்த அம்மன் தாளி, இயந்திரங்கள் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளனர்.
அத்துடன் மூலஸ்தான பகுதிக்குள் இருந்த அலுமாரியையும் உடைத்து அதற்குள் இருந்த பொருட்களையும் களவாடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. களவாடப்பட்ட பொருட்களின் பெறுமதி எவ்வளவு என்று கணக்கிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் இன்று வியாழக்கிழமை அதிகாலையில் நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இன்று வியாழக்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு கோவில் குருக்கள் பூசை செய்ய சென்றவேளையிலே இவ் சம்பவத்தைக் கண்டு தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் முறையீடு செய்துள்ளார்.
இதேவேளை, கோவிலுக்கு சற்றுத் தூரத்தில் இருக்கும் மதுபான விற்பனைசாலை ஒன்றில் முன் கதவை உடைத்து உட்புகுந்த திருடர்கள் மதுபான போத்தல்கள் மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் களவாடிச் சென்றுள்ளதாகவும் களவாடப்பட்ட மதுபான போத்தல்களின் பெறுமதி தெரியவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக தலைமன்னார் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தலைமன்னார் மற்றும் பேசாலை பொலிசாரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது விடயமாக இதுவரைக்கும் எவரையும் கைது செய்யல்லையென பொலிசார் தெரிவிக்கின்றனர்.    நன்றி வீரகேசரி