தண்ணீர் மூழ்கிவிட்டது - கவிக்கோ அப்துல் ரகுமான்

.


வானத்துக்கு
வாந்தி பேதியா?
வருணனுக்குப்
பைத்தியம் பிடித்துவிட்டதா?
மேகக் கூந்தலை
அவிழ்த்துப் போட்டு
வானம்
பேயாடியதோ?
சூரியனுக்கே
புவி வெப்பமானதால்
வானத்திற்கு உடலெல்லாம்
அபரிமித வேர்வையோ?
வானம்
பாக்கி வைத்திருந்ததை எல்லாம்
வட்டியோடு
சேர்த்துக் கொடுத்துவிட்டதோ?
வானத்தின்
சல்லடை
என்னவாயிற்று?
அப்படியே
ராட்சஸ அண்டாக்களைக்
கவிழ்த்துக்
கொட்டிவிட்டதே.
மேகங்கள்
பயங்கரவாதிகளாகிவிட்டனவோ
சரமாரியாக
நீர்க் குண்டுகளை
வீசுகின்றனவே?
தண்ணீர்
‘தண்ணி’ அடித்ததோ?





கடலுக்குத்
தலயாத்திரை செய்யும்
ஆசை வந்துவிட்டதோ?
இந்த யாத்திரை
அதிசயமானது
தீர்த்தமே செய்யும்
யாத்திரை
வழக்கமாக
மேகப் பஞ்சிலிருந்து
தாரைகள்
நூலைப் போல் இறங்கும்
இப்போதோ
தூண்கள் இறங்குகின்றன
கடமுட கடவென இடியிடிக்கச்
சடச் சடச் சடவென மழையடிக்கத்
தடதடதடவெனப் பெருவெள்ளம்
மடமடமடவென ஏறியதே
மேக விமானங்களிலிருந்து
குண்டு மழையா?
வழக்கமாக
வானம் அழுதால்
மனிதன் சிரிப்பான்
இப்போதோ
மனிதனும் அழுகிறான்
வானம்
பூமிக்கு
ஆரத்தி எடுத்தது
சூரியக் கற்பூரம்
எரிக்காமல்
பொறாமையால்
மின்னல்
மின்சாரத்தைத் தடுத்தது
வெள்ளம்
விளக்குகளனைத்தையும்
அணைத்துவிட்டது
நீர்
பஞ்ச பூதங்களில் ஒன்று
என்று
நினைத்திருந்தோம்
அது உண்மையிலேயே
பூதமாகிவிட்டது
நீர் மென்மையானது என்று
நினைத்திருந்தவர்களுக்கு
அது
தன் சக்தியைக்
காட்டிவிட்டது
‘நான்தான் பெரியவன்’
என்று பீற்றும்
மனிதனின் அகங்காரத்தை
அடக்கப் பெய்ததோ?
பயிர்கள் மூழ்கிவிட்டன
உயிர்கள் மூழ்கிவிட்டன
ஏரி குளம் மூழ்கிவிட்டன
ஆறுகள் மூழ்கிவிட்டன
வீடுகள் மூழ்கிவிட்டன
தண்ணீர் மூழ்கிவிட்டது
மயிலின் நடனம் மூழ்கிவிட்டது
மேக மல்ஹார் ராகம்
மூழ்கிவிட்டது
கண்ணீர் மூழ்கிவிட்டது
எங்கும் தண்ணீர்
எதிலும் தண்ணீர்
ஆனால் மக்களோ
தண்ணீருக்கு அலைகிறார்கள்
இறைவன் இறுதியில்
இந்த உலகத்தை
இருட்டடிப்பா?
நீரால் அழிப்பான்
என்கிறார்கள்
அவன்
ஒத்திகை பார்க்கிறானோ?
கூவம் கூடக்
குளித்துக் கொண்டது
கடலூர்
தன் பெயரைக்
காப்பாற்றிக்கொண்டது
வெள்ளம்
எல்லாக் காலத்து
நோவா காலத்து
வெள்ளம்தான்
ஆனால்
நல்லவர்களைக் காப்பாற்ற
நோவாவும் இல்லை
அவர் கப்பலும் இல்லை
ஏதேனும் அழுக்கானால்
தண்ணீரால் கழுவுவோம்
தண்ணீரே அழுக்காகிவிட்டது
எதனால் கழுவுவது?
எல்லாப் பெண்களின்
பால் விலை உயர்ந்தது
தண்ணீர் விலை உயர்ந்தது
ஆனால்
மனித உயிரின்
விலை மட்டும்
குறைந்துபோய்விட்டது
துஷ்ட நிக்கிரகம் செய்ய
இறைவன்
மழையாக
அவதாரம் எடுத்தானோ?
கண்ணீரெல்லாம்
ஆனால்
சிஷ்ட பரிபாலனத்தைக்
காணோமே
இது தண்ணீரின்
சுதந்திரப் போராட்டம்
தன்னைப் பிடித்து
அடைத்து வைத்த
சிறைகளை எல்லாம் தகர்த்து
விடுதலையைக்
கொண்டாடுகிறது
ஒன்றாகச் சேர்ந்து
மக்கள் வசிக்கும்
இடங்களை எல்லாம்
வெள்ளம் பிடித்துக்கொண்டது
என்று சொல்லாதீர்கள்
நீரின் வசிப்பிடங்களையெல்லாம்
அநியாயமாய் ஆக்கிரமித்துக்
கட்டிடங்கள் கட்டியவன்
மனிதன்
பொறுத்துப் பொறுத்துப்
பார்த்த நீர்
கொட்டியதோ?
படையெடுத்து வந்து
தன் சொத்துக்களை
மீட்டுக்கொண்டது
செல் கோபுரங்கள்
சிட்டுக் குருவிகளைத்
துரத்தின
சிட்டுக் குருவிகளின் சாபம்
செல்கள்
செத்துப்போய்விட்டன
ஆடு செத்தது
மின்னல் தந்தங்கள் ஒளிர
மாடு செத்தது
மனிதன் செத்தான்
அரசும் செத்துப்போனது
வீடுகளுக்குள்
வெள்ளம் வந்தது
சாக்கடை வந்தது
ஆனால்
எந்த அதிகாரியும்
வரவில்லை
‘கட் அவுட்’ தெய்வங்களுக்குப்
இடி முரசு முழங்க
பாலாபிஷேகம் செய்யும்
பக்தர்களே!
உங்களிடமிருந்து
கோடி கோடியாகச்
சம்பாதித்தவர்கள்
உங்களுக்காக
என்ன செய்தார்கள் என்று
இப்போதாவது யோசிப்பீர்களா?
இந்த அரசு
மக்களுக்கு
மேக யானைப் படைகள்
எதுவுமே செய்யவில்லை
என்கிறார்கள்
செத்தவர்களுக்குப்
பணம் கொடுப்பதாய்
அறிவித்தார்களே
இந்நாட்டில்
சகிப்புத் தன்மை
இல்லையென்று
யார் சொன்னது?
அது இந்தியர்களின்
மோதினவோ?
தேசிய குணம்
அவர்களுக்கு
எவ்வளவு துன்பம் நேர்ந்தாலும்
சகித்துக் கொள்வார்கள்
ஒருவேளை
யாரேனும் முணுமுணுத்தால்
இதெல்லாம்
விதியின் விளைவு
என்று சொல்ல
இங்கே உபதேசிகள்
அவற்றின் ரத்தம்
இருக்கிறார்கள்
இவ்வளவு பயங்கரப்
பேரழிவு நடந்திருக்கிறது
யாரும் உதவவில்லையென்று
மக்கள் மனதில்
கோபம் இருக்கிறது
இது அரசியல் மாற்றத்தை
ஏற்படுத்தலாம் என்கிறார்கள்
அப்படியெல்லாம் நடக்காது
நம் மக்களுக்கு
சொரிகிறதோ?
மறதி அதிகம்
இதையும் மறந்துவிடுவார்கள்
அதுமட்டுமல்ல
அவர்கள் வழக்கம்போல்
சாதிக்காக
மதத்துக்காக
அல்லது கட்சிக்காக
ஓட்டுப் போடுவார்கள்
இல்லையென்றால்
காசுக்காகப் போடுவார்கள்.
- இன்னும் முத்துக் குளிக்கலாம்…

Nantri http://tamil.thehindu.com/