இலங்கைச் செய்திகள்

பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்

காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்

முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்கொரியா உதவி

5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்


=========================================================================
பத்திரகாளியம்மன் ஆலயம் இரவோடு இரவாக தரைமட்டம்

29/10/2013    மாத்தளை மாவட்டம் தம்புள்ள நகர பிரதேசத்திலுள்ள மகா பத்திரகாளியம்மன் ஆலயம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடிக்கப்பட்டு முற்றாக தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக அங்கு வாழ் தமிழர்கள் தெரிவிப்பதாக பிபிசி செய்தி சேவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழ்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலையில் அமைந்திருந்த இந்த ஆலயம் அந்த பிரதேசத்திலுள்ள இந்துக்களுக்கான ஒரேயொரு வழிபாட்டுத் தலமாக அமைந்திருந்தது.

பல வருடங்களாக தங்களது வழிபாட்டு தலமாக விளங்கிய ஆலயம் தற்போது முற்றாக அகற்றப்பட்டுள்ளமை தொடர்பாக அவர்கள் கவலையடைந்துள்ளார்கள்.

அந்தப் பிரதேசத்திலுள்ள பௌத்த விகாரையொன்றை மையப்படுத்தி நாடு நகர அபிவிருத்தி வாரியத்தினால் புனித பூமியாக அடையாளப்படுத்தப்பட்ட எல்லைக்குள் இந்த ஆலயம் அமைந்திருந்தது.

அந்தப் பகுதிக்குள் வாழ்ந்த தமிழ் குடும்பங்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர் வெளியேற்றப்பட்ட போதிலும் ஆலயத்தில் தொடர்ந்தும் பூசை வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

ஆலயத்தை அந்த இடத்திலிருந்து அகற்றுமாறு பௌத்த விகாரையின் பிரதம பிக்குவினால் ஆலய பரிபாலகர்களுக்கு அழுத்தங்களும் நெருக்குதல்களும் இருந்ததாக அங்கு வாழும் தமிழர்கள் தெரிவிக்கின்றார்கள்.

ஆலயத்தை வேறு இடத்தில் அமைப்பதற்கு பொருத்தமான காணி வழங்குமாறு மத விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதம மந்திரி தி.மு ஜயரத்ன, காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் உட்டபட பலருக்கும் தங்களால் நேரில் கேரிக்கை முன்வைக்கப்பட்டும் சாதகமான பெறுபேறுகள் தங்களுக்கு கிடைக்க வில்லை என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

ஆறு மாத காலத்திற்குள்வே 3-4 தடவைகள் தாக்கப்பட்ட இந்த ஆலயம் இறுதியாக கடந்த புதன்கிழமையும், தாக்கப்பட்டு ஆலயத்தின் கூரைகள் தூக்கி வீசப்பட்டு முன்பாக பறக்கவிடப்பட்டிருந்த நந்திக் கொடி கொடிக் கம்பத்துடன் பிடுங்கி வீசப்பட்டிருந்தது.

தற்போது ஆலயம் முற்றாக இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஆலய பரிபாலகரான கே.லட்சுமி, ஆலயத்திலுள்ள உடமைகளை அகற்றுவதற்கு நாளை புதன்கிழமை வரை கால அவகாசம் தான் கேட்டிருந்ததாகக் கூறுகின்றார்.

நேற்று திங்கட்கிழமை குறித்த விகாரையின் பிரதம பிக்குவினால் இது தொடர்பாக தமக்கு அறிவிக்கப்பட்ட போது அதனை அகற்றுவதற்கு முன்னதாக சமய கிரியைகளைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை விளக்கி இந்தக் கால அவகாசத்தை தான் கேட்டிருந்தாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

ஏற்கனவே அம்மன் விக்கிரகம் அகற்றப்பட்டு சேதமாக்கப்பட்டதையடுத்து, புதிய விக்கிரகமொன்று பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜனினால் வழங்கப்பட்டிருந்தது.

அதனைக் கூட வைத்து வழிபாடு செய்ய முடியாத நிலை தற்போது தங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கவலையுடன் சுட்டிக்காட்டினார். நன்றி வீரகேசரி  









அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 7 ஆம் திகதி கொழும்பில் போராட்டம்

29/10/2013   பிர­தான எதிர்க்­கட்­சி­யான ஐக்­கிய தேசிய கட்சி எதிர்க்­கட்­சி­களின் எதிர்ப்பு கூட்டின் பங்­காளிக் கட்­சி­க­ளையும் சிவில் அமைப்­புக்­க­ளையும் தொழிற்­சங்­கங்­க­ளையும் இணைத்­துக்­கொண்டு அர­சாங்­கத்­துக்கு எதி­ராக மாபெரும் போராட்டம் ஒன்றை எதிர்­வரும் ஏழாம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்­பாக நடத்­த­வுள்­ள­தாக ஐக்­கிய தேசிய கட்­சியின் பொதுச் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான திஸ்ஸ அத்­த­நா­யக்க தெரி­வித்தார்.
கசினோ சட்­ட­மூ­லத்தை முழு­மை­யாக அகற்­றுதல், வரவு-செல­வுத்­திட்­டத்தில் மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­குதல் ரத்­து­பஸ்­வல மக்­க­ளுக்கு நியா­யத்தை பெற்­றுக்­கொ­டுத்தல் மற்றும் 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் கொண்­டு­வ­ருதல் போன்ற விட­யங்­களை வலி­யு­றுத்­தியே இந்த அர­சுக்கு எதி­ரான போராட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.
கட்­சியின் தலை­­மைய­க­மான ஸ்ரீகொத்­தாவில் நேற்று நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்­து­கொண்டு கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் அங்கு மேலும் கூறு­கையில்
ஏழாம் திகதி பி.பகல் மூன்று மணிக்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்­பாக இந்த மாபெரும் ஆர்ப்­பாட்டம் நடை­பெ­ற­வுள்­ளது. இந்த ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொள்­ளு­மாறு சிவில் அமைப்­புக்கள் மற்றும் தொழிற்­சங்­கங்கள் மற்றும் அர­சியல் கட்­சி­க­ளுக்கு திறந்த அழைப்பை விடுக்­கின்றோம்.

இந்த ஆர்ப்­பாட்­டத்தை நான்கு முக்­கிய விட­யங்­களை அடிப்­ப­டை­யா­கக்­கொண்டு முன்­னெ­டுக்­கின்றோம். குறிப்­பாக கசினோ சட்­ட­மூலம் தற்­போது தற்­கா­லி­க­மா­கவே அகற்­றப்­பட்­டுள்­ளது. எனவே அதனை முழு­மை­யாக நீக்­கு­மாறு இந்த ஆர்ப்­பாட்­டத்தின் ஊடாக கோரிக்கை விடுக்­க­வுள்ளோம். குறித்த வர்த்த­மானி அறி­வித்­தலை திருத்­தி­ய­மைத்து மீண்டும் கொண்­டு­வ­ர­வுள்­ள­தாக முத­லீட்டு ஊக்­கு­விப்பு அமைச்சர் குறிப்­பிட்­டுள்ளார்.
அந்­த­வ­கையில் அபாயம் இன்னும் நீங்­கி­வி­ட­வில்லை. எனவே இதனை முழு­மை­யாக நீக்­கு­மாறு ஆர்ப்­பாட்­டத்தில் வலி­யு­றுத்­துவோம். எதிர்­வரும் வரவு செல­வுத்­திட்­டத்தின் ஊடாக மக்­க­ளுக்கு நிவா­ர­ணங்­களை வழங்­க­வேண்டும் என்று கோரிக்கை விடுக்­கின்றோம். குறிப்­பாக அரச ஊழி­யர்­க­ளுக்கு சம்­பள உயர்வு வழங்­கப்­ப­ட­வேண்டும். எனவே ஆர்ப்­பாட்­டத்தில் இத­னையும் வலி­யு­றுத்­த­வுள்ளோம்.
அடுத்­த­தாக அர­சி­ய­ல­மைப்பின் 17 ஆவது திருத்தச் சட்­டத்தை மீண்டும் கொண்­டு­வ­ர­வேண்டும். அதற்­க­மைய சுயா­தீன ஆணைக்­கு­ழுக்கள் நியமிக்கப்படவேணடும்.
மேலும் ரத்துபஸ்வல மக்களுக்கு நியாயத் தைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்துவோம். இந்த நான்கு விடயங்களை வலியுறுத்தியே அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம்.                  நன்றி வீரகேசரி










காட்டுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட சோகம்: விடுதலை கேட்கும் தமிழ்த் தொழிலாளர்கள்


26/10/2013    "எட்டு வரு­டங்­க­ளாக காட்­டுக்குள் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கிறோம். பட்­டப்­ப­கலில் நடந்து செல்­வ­தற்குக் கூட பய­மாக இருக்­கி­றது. எந்தக் குற்­றமும் செய்­யாமல் திறந்த வெளியில் சிறை­ப் ப­டுத்­தப்­பட்­டது போலத்தான் எங்­க­ளது வாழ்க்கை" - இது களுத்­துறை மாவட்­டத்தில் அரம்­ப­ஹே­னவில் வசிக்கும் மக்­களின் சோகக்­குரல்.
ஹொரணை பெருந்­தோட்டக் கம்­ப­னியின் ஹில்ஸ்ட்றீம் தோட்­டத்தின் ஒரு பிரிவே அரம்­ப­ஹேன. அங்­குள்ள மக்கள் காட்­டுக்குள் வாழ்­வ­தா­கவும் அடிப்­படை வச­திகள் எது­வு­மின்றி பெரும்­பி­ரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுத்து வரு­வ­தா­கவும் 'கேச­ரி'க்கு கடிதம் மூலம் அறி­வித்­தி­ருந்­தனர்.
ஆம்! புளத்­சிங்­ஹல நக­ரி­லி­ருந்து சுமார் 15 கிலோ­மீற்றர் தூரத்தில் கர­டு­மு­ர­டான பாதையில் அரம்­ப­ஹே­ன­வுக்கு பய­ணித்தோம். சுமார் 10 கிலோ­மீற்றர் பய­ணத்தின் பின்னர் இரு­பு­றமும் அடர்ந்த காடுகள் நிறைந்­தி­ருக்க வேறெங்கோ தேசத்­துக்கு வந்­து­விட்­ட­து­போன்ற உணர்வு.

ஆங்­காங்கே காணப்­படும் இறப்பர் மரங்­க­ளுக்கு நடுவே மனி­தர்கள் உள்ளே போக முடி­யா­த­ள­வுக்கு உயர்­வான காட்டு மரங்­களும், செடி­கொ­டி­களும் நிறைந்­தி­ருந்தன.
அடர்ந்த காடு­க­ளுடன் கூடிய சிறு மலைக்­குன்­று­க­ளுக்­கி­டையே அமைந்­தி­ருக்­கி­றது லயன் குடி­யி­ருப்பு. அங்கு 14 தமிழ்க் குடும்­பங்­களைச் சேர்ந்த 50 பேர் வசித்து வரு­கி­றார்கள்.
இந்தத் தோட்டம் மூடப்­பட்டு 8 வரு­டங்கள் ஆகின்­றன. அன்று முதல் தொழி­லா­ளர்­க­ளுக்கு வேலை இல்லை. தோட்ட நிர்­வா­கத்­தினால் வழங்­கப்­பட வேண்­டிய கொடுப்­ப­ன­வுகள் தரப்­ப­ட­வில்லை. மேலும் இதர வச­திகள் எதுவும் செய்­து­கொ­டுக்­கப்­ப­ட­வில்லை.
இக்­கட்­டான சூழ்­நி­லைக்குத் தள்­ளப்­பட்ட அந்த மக்கள் அன்­றாட தேவை­களை பூர்த்தி செய்­வ­தற்­காக கூலித் தொழில் செய்து வரு­கின்­றனர்.

வள­மான தோட்­ட­மாக இருந்த அரம்­ப­ஹேன, நிர்­வா­கத்தின் கவ­ன­யீனம் கார­ண­மாக காடாகிப் போனது. அந்தத் தோட்டம் 165 ஹெக்­ரெயர் நிலப்­ப­ரப்பை கொண்­ட­தா­கவும் இறப்பர் மரங்கள் மீள்­ந­டுகை செய்­யப்­ப­டாத கார­ணத்­தினால் தோட்டம் முழு­வதும் காடாகிப் போன­தா­கவும் அங்­குள்ள மக்கள் கூறு­கி­றார்கள்.
அரம்­ப­ஹே­னவில் தனித்­து­வி­டப்­பட்­டுள்ள இந்த மக்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்து வச­திகள் இல்லை, வைத்­தி­ய­சாலை இல்லை, மல­ச­ல­கூ­டங்கள் இல்லை, தண்­ணீரைக் கூட காத தூரத்தில் உள்ள கிணற்­றி­லி­ருந்­துதான் பெற்­றுக்­கொள்­கி­றார்கள்.
"யாருக்­கா­வது சுக­யீனம் என்­றால்­கூட நோயா­ளியை காட்­டு­வ­ழியே தூக்­கிக்­கொண்­டுதான் போக வேண்டும். மலைப்­பாம்­புகள் அதி­க­மாக நட­மாடும் இந்தக் காட்­டுப்­ப­கு­தியில் எங்கே கால் வைப்­பது என்ற அச்­சமே மர­ணத்தின் விளிம்­பு­வரை எம்மைக் கொண்டு சென்­று­விடும்" என்­கிறார் சங்கர் என்ற குடும்­பஸ்தர்.
பி.பால்ராஜ் (53) என்ற குடும்­பஸ்தர் தமது பிரச்­சி­னை­களை இவ்­வாறு விப­ரிக்­கிறார்.

"நாம் பரம்­பரை பரம்­ப­ரை­யாக இங்கே வசிக்­கிறோம். 1924 ஆம் ஆண்டு இந்த தோட்­டத்­துக்கு எங்­க­ளு­டைய குடும்­பத்தார் வந்­தி­ருக்­கி­றார்கள். நல்ல இலா­பத்­துடன் தோட்டம் இயங்­கி­வந்­தது.
2005 ஆம் ஆண்­டி­லிருந்­துதான் இந்த நிலைக்கு நாம் தள்­ளப்­பட்டோம். இறப்பர் மரங்­களை பிடுங்­கி­விட்­டார்கள். கிட்­டத்­தட்ட 1600 மரங்கள் இருந்­தன. இப்­போது 500 மரங்கள் கூட இல்லை. மற்­றைய இடங்­க­ளெல்லாம் காடா­கி­விட்­டது.
தோட்ட முகா­மை­யா­ள­ரிடம் பல தட­வைகள் முறை­யிட்டோம். ஆனால் எமது அழு­கு­ர­லுக்கு யாருமே செவி­சாய்க்­க­வில்லை. திடீ­ரென வேலை நிறுத்­தி­விட்­டார்கள். சம்­பளம் தரா­ததால் வரு­மா­னத்­துக்கு வழியும் இல்­லாமல் திண்­டா­டினோம். இறப்பர் மரத்தின் உச்­சி­வரை பால் வெட்டி தோட்­டத்­துக்குக் கொடுத்தோம். ஆனால் எந்தப் பிர­தி­ப­லனும் கிடைக்­க­வில்லை.
நாம் தமி­ழர்கள் என்­ப­தால்தான் ஒடுக்­கப்­ப­டு­கிறோம். இங்­குள்ள சிங்­கள அர­சி­யல்­வா­தி­க­ளிடம் போனால், நீங்கள் தமி­ழர்­க­ளுக்­குத்­தானே வாக்­க­ளித்­தீர்கள், அவர்­க­ளி­டமே போய் கேளுங்கள் என்­கி­றார்கள்.
நாம் ஏமாற்­றப்­பட்­டு­விட்டோம். கட­வுளும் எம்மை கைவிட்­டு­விட்­ட­தா­கத்தான் தோன்­று­கி­றது" என்றார்.
எஸ்.சரோ­ஜினி(66) என்பவர் கூறு­கையில்,

"நாங்கள் இந்தத் தோட்­டத்­துக்கு சேவை­யாற்­றி­யி­ருக்­கிறோம். வியர்வை சிந்தி உழைத்த இட­மெல்லாம் இப்­போது காடா­கிப்­போய்­விட்­டது. காட்டு வழி­யா­கத்தான் எங்­க­ளு­டைய லய­னுக்கு வர­வேண்டும் என்­பதால் யாரும் இங்கே வர­மாட்­டார்கள்.
வேலை இல்­லா­ததால் கால்­வ­யிறு,அரை­வ­யிறு என்­றுதான் வாழ்ந்­து­வ­ரு­கிறோம். ஒவ்­வொரு நாளும் நித்­தி­ரை­யின்றித் தவிக்­கிறோம்" என்றார்.
அரம்­ப­ஹே­ன­யி­லுள்ள சிறு­வர்கள் அரு­கி­லுள்ள குட­கங்கை என்ற தோட்­டத்­தி­லுள்ள பாட­சா­லைக்குச் செல்­கி­றார்கள். அந்தப் பாட­சாலை தரம் 9 வரை மாத்­திரமே கொண்டு இயங்­கு­கி­றது.
அதற்கு மேல் கல்வி கற்­ப­தற்கு மத்­து­கமை நக­ருக்கு மாண­வர்கள் செல்ல வேண்டும். அவ்­வா­றெனின் பல கிலோ­மீற்றர் தூரம் காட்­டு­வ­ழியே நடந்து சென்­றுதான் பஸ்ஸில் பய­ணிக்க வேண்டும்.
அவ்­வாறு பாட­சா­லைக்கு செல்வோர் வீடு திரும்பும் வரை நிம்­ம­தி­யின்றிக் காத்­தி­ருப்­ப­தாக பெற்றோர் கூறு­கின்­றனர். நீண்­ட­தூரம் நடக்க வேண்­டி­யதால் பாட­சாலைக் கல்­வியை இடை­நி­றுத்­தி­யோரும் உள்­ளனர்.
தோட்ட மக்கள் பகலில் நட­மா­டு­வ­தற்கும் அச்சம் கொண்­டி­ருக்­கி­றார்கள். குடி­யி­ருப்பைச் சூழ சிறு­குன்­று­களில் காட்டுப் பன்­றி­களும் மலைப்­பாம்­பு­களும் விஷப்­பூச்­சி­களும் இருப்­ப­தா­கவும் இரவில் நட­மாட முடி­யாத நிலை உள்­ள­தா­கவும் மக்கள் கூறு­கின்­றனர்.
தோட்­டத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு யாரா­வது கடிதம் அனுப்­பினால் கூட அது உரி­ய­வர்­களை சென்­ற­டை­வ­தில்லை. தபால்­கா­ரரே இல்­லாத தோட்­டத்தில் எப்­படி கடிதம் கிடைக்கும் எனக் கேள்வி எழுப்­பு­கி­றார்கள்.
அரம்­ப­ஹேன தோட்டம் மூடப்­ப­டு­வ­தற்கு முன்னர் இறப்பர் மரங்கள் குத்­தகை அடிப்­ப­டையில் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டன. எனினும் தோட்ட மக்கள் புறக்­க­ணிக்­கப்­பட்டு பெரும்­பான்­மை­யி­னத்­த­வ­ருக்கே வழங்­கப்­பட்­ட­தாக மக்கள் குற்றம் சுமத்­து­கின்­றனர்.
தோட்டக் குடி­யி­ருப்­பி­லி­ருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் பால் சேக­ரிக்கும் நிலையம் இருக்­கி­றது. உள்ளே போக­மு­டி­யாத அள­வுக்கு காடுகள் வளர்ந்துள்ளதுடன் உடைந்தும் சேத­ம­டைந்தும் பாழ­டைந்­தி­ருக்­கி­ருக்­கி­றது அந்த நிலையம்.

அரம்­ப­ஹேன தோட்ட மக்கள் தாம் எதிர்­கொண்­டுள்ள அபாயம் மற்றும் சிர­மங்கள் குறித்து தமிழ் அர­சி­யல்­வா­திகள் பல­ரி­டமும் முறை­யிட்­டி­ருக்­கி­றார்கள். இது­வரை விமோ­சனம் கிடைக்­க­வில்லை.
அர­சி­யல்­வா­திகள் பலர் தேர்தல் காலங்­களில் மாத்­திரம் வந்து போயி­ருக்­கி­றார்கள். இந்த மக்­களின் குறை­களை தீர்ப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருக்­கி­றார்கள். ஆனாலும் இது­வரை எந்த நட­வ­டிக்­கையும் எடுக்­கப்­ப­ட­வில்லை.
அரம்பஹேன தோட்டத்திலுள்ள தொழிலாளர்களுக்கு வேலை இல்லாத காரணத்தினால் அவர்களுக்குரிய கொடுப்பனவுகள் எதனையும் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவிப்பதாக பாதிக்கப்பட்டோர் கூறுகிறார்கள்.
தோட்ட நிர்வாகத்தின் அசமந்தப் போக்கினால் முழுத் தொழிலாளர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குரல் வெளியு லகுக்கு கேட்காவண்ணம் திட்டமிட்ட வகையில் இச்செயற்பாடு இடம்பெற்றுள்ளதாகவே எண்ணத் தோன்றுகிறது.
ஏனென்றால் தோட்டத்தில் தொழில் வழங்கப்படாத தருணத்தில் நிர்வாகம், வேறு தோட்டங்களில் இவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுத்திருக்க முடியும். அல்லது ஏதாவது மாற்றீடான திட்டங்களை அமுல்படுத்தியிருக்கலாம். ஆனபோதும் தொழிலாளர்கள் குறித்த எந்த அக்கறையும் இங்கு வெளி க்காட்டப்படாமை கவலையளிக்கிறது.
பெரும்பான்மையினத்தோர் அதிகமாக வசிக்கும் பகுதிக்கு மத்தியில் இத்தோட்டம் அமைந்திருக்கிறது. இந்நிலையில் இந்தத் தோட்டத்தையும் பெரும்பான்மையினருக்கு விற்கும் முயற்சி இடம்பெற்று வருவதாகவும் ஒருபுறம் குற்றம் சுமத்தப்படுகிறது.
தாங்கள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதால் தங்களுடைய கலை,கலாசார,விழுமியங்களையும் பாதுகாக்க முடியாத சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிடுகின்றனர்.
தோட்டம் மறுசீரமைக்கப்பட்டு மீண்டும் தொழில் வழங்கப்பட வேண்டும் அல்லது வேறு இடத்தில் தமக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
ஆக,தோட்டம் முழு­வதும் காடாக மாறி­ய­மைக்கு யார் பொறுப்பு? ஒவ்­வொரு நிமி­டத்­தையும் அச்­சத்­துடன் கழித்­துக்­கொண்­டி­ருக்கும் மக்­களை இந்த நிலைக்கு ஆளாக்­கி­ய­வர்கள் யார்? பெரும்­பான்மை இனத்தோர் வாழ்­கின்ற தோட்­டங்கள் சரி­யாக நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்ற போது, இந்தத் தோட்டம் மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கப்­பட்­டது ஏன்? போன்ற கேள்­விகள் இயல்பாய் எழுகின்றன.

உண்மையில் வெளியுலகத் தொடர்புகள் இல்லாமல் காட்டுக்கு நடுவே தனிமைப்படுத்தப்பட்டுள்ள இந்த மக்களுக்கு தோட்ட நிர்வாகம் உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதேபோன்று பருவத்தில் பூக்கும் காளான்கள் போல தேர்தல் காலங்களில் மாத்திரம் மக்களிடம் சென்று வாக்கு கேட்டுக் கெஞ்சும் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இனிமேலும் மௌனம் சாதிக்கக் கூடாது.
ஒரு சமூகம் உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் ஒதுக்கப்பட்டிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உலகம் நொடிக்கு நொடி மாற்றம் கண்டுகொண்டிருக்க இங்கே ஒரு சமூகம் அடுத்த நிமிடத்தை நினைத்து ஏங்கிக்கொண்டிருக்கிறது. ஆதலால் உரிய தரப்பினர் இணைந்து தீர்வினை பெற்றுக்கொடுக்க முன்வரவேண்டும்.
-இராமானுஜம் நிர்ஷன், எம்.டி.லூசியஸ்
படப்பிடிப்பு: ஜே.சுஜீவகுமார்

நன்றி வீரகேசரி




முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் வைத்தியசாலையில் அனுமதி

30/10/2013    வடமாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் இன்று பிற்பகல் ஒரு மணியளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடல் உபாதை காரணமாக மருத்துவப் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்குச் சென்ற முதலமைச்சரை விசேட வைத்தியப் பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலையேற்பட்டதால் வைத்தியர்கள் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சைகளை மேற்கொள்ளுமாறு வேண்டியுள்ளனர்.

இதேவேளை முதலமைச்சரை பார்வையிட வைத்தியசாலைக்கு சென்றவர்களுடன் அவர் சரளமாக உரையாடியதுடன் தனக்கு ஏற்பட்டிருப்பது சாதாரண உபாதை எனவும் மாதாந்தம் மேற்கொண்டு வருகின்ற பரிசோதனைகளுக்காக தான் வைத்தியசாலைக்கு வந்தபோது தன்னை வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக குறித்த சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்கள் அனுமதித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் தனக்கு குறிப்பிட்டுச் சொல்லக்கூடியளவுக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி

 

 

 

 

வடக்கு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தென்கொரியா உதவி

30/10/2013   வடக்குமாகாண மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்களாலான உதவிகளை வழங்க தமது நாடு தயாராகயிருப்பதாக இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு தென்கொரியாவிற்கு மேற்படிப்புக்காக வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த எவரும் வருகை தருவதில்லை இது எமக்கு மிகுந்த மனவேதனையளிக்கின்றது எனவும் அந்நாட்டு உயர்ஸ்தானிகர் அர்யுன யோங்மூன் சொய் யாழ்ப்பாணத்தில் வைத்து தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கோவில் வீதியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்றைய தினம் காலை சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான தென்கொரிய உயர்ஸ்தானிகர் இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நன்றி வீரகேசரி

 

 

 

 
5 ஆயிரம் குடும்பங்களுக்கு அமெரிக்கா நிதியுதவிவழங்கும் : சிசனுடனான சந்திப்பின் பின் விக்னேஸ்வரன்
30/10/2013   வடக்கில் போரினால் பாதிக்கப்பட்ட நிலையில் வறுமைக் கோட்டின் வாழும் 5 ஆயிரம் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அமெரிக்கா நிதியுதவிவழங்கும் என அந்நாட்டின் உயர்ஸ்தானிகர் வடக்கு மாகாண சபையின் முதலமைச்சரிடம் நேரில் உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை யாழ்.நல்லூர் கோவில் வீதியிலுள்ள அவரது வாசஸ்தலத்தில் இன்றைய தினம் சந்தித்து கலந்துரையாடிய இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் மிச்சேல் ஜே சிசன் இவ்வாறு உறுதிபடத்தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உயர்ஸ்தானிகர் மிச்சேல் ஜே சிசனுடனான சந்திப்பினையடுத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்:

அமெரிக்க மக்கள் சார்பாக உயர்ஸ்தானிகர் அம்மையார் என்னைவந்து சந்தித்துள்ளார். அவர் இங்கு வந்தமை எமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது. அமெரிக்க மக்கள் எங்களுடைய பிரச்சினைகளைப் புரிந்து வைத்துள்ளார். அதன் அடிப்படையில் எப்பேற்பட்ட உதவிகளை மக்களுக்கு வழங்க முடியும் என்றும் ஆராய்ந்தார். எங்களுடைய சகல விதமான பிரச்சினைகளையும் அவருக்கு தெளிவாக எடுத்துக்கூறினேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


நன்றி வீரகேசரி


 

No comments: