மரண அறிவித்தல்


இராஜசுந்தரம் ராஜ்குமார்




இலங்கையில் சங்கானையில் பிறந்து, அவுஸ்திரேலியாவில் சிட்னியில் வாழ்ந்தவரும் துபாயில் கணக்காளராக பணியிலிருந்தவருமாக திரு இராஜசுந்தரம் ராஜ்குமார் (Accountant, Gibca Limited, Dubai, UAE) கடந்த செவ்வாய்க்கிழமை 03-09-2013 ஆம் திகதி சிட்னியில் காலமானார்.

அன்னார், ரஞ்சினியின் அன்புக்கணவரும், ரதீபன்(NSW Business Link), ரூபினி(McGrath Nicol) ஆகியோரின் அருமைத் தந்தையாரும் சங்கானையைச் சேர்ந்த காலஞ்சென்ற திரு திருமதி இராஜசுந்தரம் தம்பதியரின் செல்வமகனும், காலஞ்சென்ற திரு விஜயரத்தினம், திருமதி விஜயரத்தினம் தம்பதியரின் அருமை மருமகனும், ரஞ்சித் கனகசபை(சிட்னி) ராஜேஸ்வரா (சிட்னி) சிவகுமார் (மெல்பன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும், ரஞ்சன் (துபாய்) சுமார் (தலவாக்கலை, இலங்கை) சுரேஷ் (மலவாக்கலை, இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.

இறுதிச்சடங்கு விபரம்:
எதிர்வரும் 9 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு சிட்னியில்  Liberty  Funerals, 101 South Street, Granville NSW2142 இல் நடைபெறும். இறுதி அஞ்சலி நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பிற்பகல் 1.30 மணிக்கு சிட்னி ருக்வூ;ட் மயானத்தில் (Rookwood Cemetry, Memorial Avenue, Rookwood NSW2135) தகனக் கிரியைகள் நடைபெறும்.
நண்பர்களும் உறவினர்களும் இவ்வறித்தலை ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: திரு ரஞ்சித் கனகசபை +61 423 577 715
முகவரி: 50 Long Street, Strathfield NSW 2135, Australia

No comments: