உலகத் தமிழ் இலக்கிய மாநாடு 2013

.

இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திசையெட்டும் போற்றும்நற் தேன்தமிழ் அன்னையின்
திறம்பாடும் விழாவன்றோ தோழர்களே!
இசைபாட இயல்பேச நாடகத் தமிழொடு
எழில் கூட்டும் விழாவன்றோ தோழர்களே!

திருவள்ளு வர்தந்த பொதுமறை போற்றியே
சிலைநாட்டும் விழாக்கண்டு சிறப்புச் செய்வோம்
அருந்தமிழ் வளர்த்திட்ட பெருமை விளக்கிடும்
அற்புத விழாவன்றோ தோழர்களே!

உலகிற் பரந்திட்ட தமிழின் பெருமையை
உணர்த்துமோர் கண்காட்சி காணவாரீர்
பலநாட்டு அறிஞர்கள் கலந்திடும் விழாவினைப்
பார்த்துச் சுவைப்பீரே தோழர்களே!

எங்கெங்கும் தமிழ்மணம் எதிலுந் தமிழ்மணம்
என்றென்றும் தமிழினை வளர்ப்போ மென்று
இங்குவாழ் தமிழர்நாம் கூடிச்சூ ழுரைப்பமே
இளைஞர்காள் விழாவிற்குத் திரண்டு வாரீர்!

(இயற்றியவர் - பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி)

No comments: