உலகச் செய்திகள்


.
சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!

ஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் ஸ்னைபர் தாக்குதல்!

சிரியாவில் ஐ.நா. கண்காணிப்பாளர்கள்!

சிரியாவில் அந்நாட்டு அரச படைகளால் இரசாயன ஆயுதத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் பிரதேசத்திற்கு ஐ.நா. கண்காணிப்பாளர்கள் விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.
அந்நாட்டு ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் ஆதரவுப் படையினர் மோதல் நிறுத்தத்துக்கு இணக்கம் தெரிவித்தமையை அடுத்தே ஐ.நா. கண்காணிப்பாளர்கள் அங்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர்.
எனினும் சிரிய அரசாங்கத்தின் மேற்படி முடிவுக்கு சர்வதேசம் சந்தேகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.நா. கண்காணிப்பாளர்களுக்கு சிரிய கிளர்ச்சியாளர்கள் தங்களது வரவேற்பைப் தெரிவித்துள்ளனர்.


சிரி­யாவின் டமஸ்கஸ் நகரின் புற­ந­கர் ­ப­கு­தியில் அந்­நாட்டுப் படை­யினர் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி கடந்த புதன்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் 1700 இற்கும் மேற்பட்டோர் பலி­யா­கியுள்­ள­தாக அந்­நாட்டு அர­சாங்க செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­விக்கின்றனர்.
கோயுடா பிராந்­தி­யத்தில் புற­நகர் பகு­தியில் இர­சா­யன வெடி­குண்­டு­களை கொண்ட ஏவு­க­ணை­களை ஏவி தாக்­குதல் நடத்­தப்­பட்­ட­தாக கூறப்­ப­டு­கி­றது.
தாம் இர­சா­யன ஆயு­தங்­களைப் பயன்­ப­டுத்தி தாக்­கு­தல்­களை நடத்­தி­ய­தாக கூறு­வது எது­வித அடிப்­ப­டை­யு­மற்ற குற்­றச்­சாட்­டு என சிரிய அர­சாங்கம் தெரி­விக்கின்றது.
மேற்படி தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டம் வெளியிட்டுள்ளன.நன்றி வீரகேசரி 











ஐ.நா. அதிகாரிகள் பயணித்த வாகனம் மீது சிரியாவில் ஸ்னைபர் தாக்குதல்!

26/08/2013 

சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பில் பரிசோதனைகளை மேற்கொள்ள அங்கு சென்ற ஐ.நா.வைச் சேர்ந்த ஆயுத நிபுணர்கள் பயணித்த வாகனங்கள் ஸ்னைபர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தலைநகரான டமஸ்கஸ்ஸில் வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் பயணித்த வாகனம் மீது தொடர்ச்சியாக ஸ்னைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து அவ்வாகனத்தை உபயோகிக்க முடியாமல் போயுள்ளதுடன்வேறு வாகனமொன்று பெற்றுக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இத்தாக்குதலுக்கு கிளர்ச்சியாளர்களே காரணமென சிரிய படையினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.    நன்றி வீரகேசரி



No comments: