இலங்கைச் செய்திகள்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி

வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்

யாழ். பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தை 14 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானம்

யாழ். பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பாக நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் கலைப்பீடத்தை இம்மாத நடுப்பகுதியில் ஆரம்பிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. நேற்றுக் காலை கலைப் பீடத்தை மீள ஆரம்பிப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.


இக் கலந்துரையாடலியே இம் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவினை பல்கலைக்கழகத்தின் மூதவையினருக்கு அவர்களது முடிவுக்கமைய இப் பீடத்தினை ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மாணவர்களில் நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இப்பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி வீரகேசரி






2012 இல் 40460 வாகன விபத்துக்கள்: 2263 பேர் பலி

By M.D.Lucias
2013-01-03 14:37:41

2012 ஆம் ஆண்டில் 40 ஆயிரத்து 460 வாகன விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 160 விபத்துக்களில் 2 ஆயிரத்து 263 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துக்கள் மூலம் 6 ஆயிரத்து 635 பேர் படுகாயமடைந்ததுடன் 14 ஆயிரத்து 66 பேர் சாதாரன காயமடைந்துள்ளனர்.

இதேவேளை தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த வருடத்தில் மாத்திரம் 450 விபத்துக்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.    நன்றி வீரகேசரி




வயலில் பெண்களை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்டுபடுத்த முயற்சித்த குழுவினர்

By General
2013-01-03

திருக்கோவில் - வட்டமடு வயல் பிரதேசத்தில் வயல் வேலைக்குச் சென்ற மூன்று பெண்களை ஒழு குழுவினர் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர். இதிலிருந்து மூவரும் காயங்களுடன் தப்பியோடிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று முன்தினம் காலை இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

ஆலையடி வேம்பு மகா சக்தி புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகளான மூன்று பெண்கள் வழமைப்போல சம்பவ தினமான நேற்றுமுன்தினம் காலையில் வட்டமடு வயல் பிரதேசத்தில் வயலில் களை பிடுங்கிக்கொண்டிருந்தவேளை நான்கு பேர் கொண்ட குழுவினர் மூன்று பெண்களையும் தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்துள்ளனர்.

இதனையடுத்து பெண்கள் கத்தி கூச்சலிட்டதையடுத்து வயல் பிரதேசத்தில் வேளாண்மை நடவடிக்கையில் இருவர் உடன்வந்த போது அவர்களை தாக்கிய நிலையில் அந்த குழுவினர் தப்பியோடியுள்ளனர்.

இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்திருந்த மூன்று பெண்களும் திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த குழுவினர் மது போதையில் வந்து தம்மை தாக்கி பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முற்பட்டதாக இந்தப் பெண்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
    நன்றி வீரகேசரி




No comments: