சிட்னியில் இலக்கிய சந்திப்பு


.
இலக்கிய சந்திப்பு ஒன்று சிட்னி பரமட்டா பூங்காவில் 26.02.2012 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி 6.30 மணிக்கு நிறைவடைந்தது. இந்த முதலாவது இலக்கிய சந்திப்பை யசோதா பத்மநாதன் முன் எடுத்து ஒழுங்குபடுத்தியிருந்தார். சிட்னியில் உள்ள சில ஆர்வலர்கள் கலந்த கொண்டு சங்க இலக்கியம் தற்கால இலக்கியம் நல்ல கவிதைகள் பற்றிய அலசல் போன்றவற்றை மேற்கொண்டிருந்தார்கள்
அடுத்த இலக்கிய சந்திப்பு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையான பங்குனி 25 அன்று 25.03.2012 பரமட்டா பூங்காவில் இடம்பெறும் . இலக்கிய ஆர்வலர்கள் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப் படுகின்றார்கள்.

No comments: